search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை ஒன்றிய ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
    X

    கண்ணம்மநாயக்கனூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் நடைபெற்ற காட்சி.  

    உடுமலை ஒன்றிய ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

    • 38 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
    • கிராம ஊராட்சி நிர்வாகம் ,பொது செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    உடுமலை

    சுதந்திர தினத்தை முன்னிட்டு உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட 38 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் , பொதுமக்கள் பங்கேற்றனர். சுதந்திர தினத்தையொட்டி கொடியேற்று விழா நடைபெற்றது.அதைத்தொடர்ந்து கிராம ஊராட்சி நிர்வாகம் ,பொது செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    38 ஊராட்சிகளில் பல்வேறு நிகழ்வுகள் அடங்கிய 839 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. உடுமலை ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி முருகன் தலைமை வகித்தார். உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே. மெய்ஞானமூர்த்தி முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள் பால சுப்பிரமணியம், துணைத்தலைவர் விஸ்வநாதன், செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ராகல்பாவி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் உடுமலை தாசில்தார் கண்ணாமணி தலைமை வகித்தார். ஆண்டியகவுண்டனூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மோகனவள்ளி ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியம் (கி.ஊ) கலந்து கொண்டார்.

    இதே போன்று சின்னவீரன் பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி பழனிச்சாமி தலைமையிலும் பூலாங்கிணறு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா இளங்கோவன் தலைமையிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    இதில் வருவாய்த்துறை மற்றும் ஒன்றிய அதிகாரிகள், தலைவர்கள், துணைத்தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், செயலாளர்கள், உடுமலை வட்ட சட்ட பணிகள் குழுவை சேர்ந்த நிர்வாகிகள், வக்கீல்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×