search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Unauthorized building"

    • விற்பனையாகாத மனைகளை வரன்முறை செய்து, அங்கீகாரம் பெறவும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.
    • .விண்ணப்பங்களை அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் சமர்ப்பித்து அதிகாரிகள் பரிந்துரையுடன்அங்கீகார சான்று பெற்றுக்கொள்ளலாம்.

    திருப்பூர் :

    தமிழக அரசு 2016ம் ஆண்டுக்கு முன் கிரயம் செய்த வீட்டுமனைகளை அங்கீகாரம் செய்து கொள்ள அவகாசம் வழங்கியது. விற்பனையாகாத மனைகளை வரன்முறை செய்து, அங்கீகாரம் பெறவும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.

    கடந்த ஐந்து ஆண்டுகளாக வீட்டுமனை வரன்முறை செய்யப்படுகிறது. இருப்பினும் கிராமப்புறத்தில் உள்ள வீட்டுமனைகளைவரன்முறை செய்வதில் இன்னும் இழுபறி நீடிக்கிறது. மனை உரிமையாளர்கள் எவ்வித அங்கீகாரம் செய்வது குறித்து விழிப்புணர்வு இல்லை.

    திருப்பூர் மாவட்டத்தில் நகரையொட்டியுள்ள ஊராட்சிகளில் வீட்டுமனை வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்துவிட்டது. இதனால் சற்று தொலைவில் உள்ள கிராமங்களுக்கு சென்று, அங்கு வீட்டுமனை வாங்கினர்.கடந்த 2016க்கு பின் அங்கீகாரம் பெற்ற மனைகள் மட்டுமே விற்கப்படுகிறது. முறையான அங்கீகாரம் பெறாமல் இருக்கும் மனைகளை, மனை உரிமையாளர்கள் வரன்முறை செய்து கொள்ளலாம் என ஊரக வளர்ச்சித்துறை அறிவுறுத்தியுள்ளது.

    வீட்டுமனை உரிமையாளர், மனை ஒன்றுக்கு பரிசீலனை கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும். வளர்ச்சி கட்டணமாக சதுர மீட்டருக்கு 25 ரூபாய் வீதம் கணக்கிட்டு, வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். அரசுக்கு சேர வேண்டிய வரன்முறை கட்டணமாக சதுர மீட்டருக்கு, 45 ரூபாய் வீதம் கணக்கிட்டுகருவூலத்தில் செலுத்த வேண்டும்.

    இதுகுறித்து திருப்பூர் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    அங்கீகாரமற்ற வீட்டுமனையை வரன்முறை செய்துகொள்ளலாம். ஊராட்சிகளில் அதற்கான சலான்களை பெற்றுபூர்த்தி செய்து அந்தந்த வங்கிகளில் செலுத்த வேண்டும்.விண்ணப்பங்களை அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் சமர்ப்பித்து அதிகாரிகள் பரிந்துரையுடன்அங்கீகார சான்று பெற்றுக்கொள்ளலாம். பொதுமக்கள் வசதிக்காக பல்வேறு நடைமுறைகள் எளிதாக மாற்றப்பட்டுள்ளன. மனை உரிமையாளர்இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கொடைக்கானலில் அனுமதியற்ற 258 கட்டிடங்களை சீல் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் அனுமதியற்ற மற்றும் வீதி மீறிய 1400-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும், இது குறித்து மார்ச் 11-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்மாறும் மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது.

    இதனையடுத்து கொடைக்கானல் நகராட்சி 1415 கட்டிடங்களை பட்டியலிட்டு நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. கொடைக்கானலில் மார்ச் 6-ந் தேதிக்குள் புதிய மாஸ்டர் பிளான் அமல்படுத்தப்பட்டு விதிமீறிய கட்டிடங்கள் நெறிமுறைப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

    தமிழக நகர, ஊரமைப்பு, வீட்டுவசதித்துறை முதன்மை செயலாளர் கிருஷ்ணன், இயக்குனர் ராஜேஷ்லக்காணி உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்து வரும் 6-ந் தேதிக்குள் புதிய மாஸ்டர் பிளான் அமல்படுத்தப்படும். எனினும் இதற்கும் கோர்ட்டு நடவடிக்கைக்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது என கூறினர்.

    இதனையடுத்து கோர்ட்டு நடவடிக்கையை தமிழக அரசு தடுத்து நிறுத்தகோரி கொடைக்கானல் நகர் முழுவதும் ஓட்டல்கள், விடுதிகளில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டு போராட்டம் நடந்தது.

    நேற்று விதி மீறிய கட்டிடங்கள் மீது சீல் வைக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் கட்டிட உரிமையாளர்கள், வியாபாரிகள் குவிந்தனர். அவர்கள் ஆணையர் முருகேசனை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.

    இது குறித்து பதில் அளித்த ஆணையர் உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து வியாபாரிகள் நீண்ட நேரம் நகராட்சி அலுவலகத்தில் காத்திருந்து பின்னர் வெளியேறினர்.

    மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கொடைக்கானலை சேர்ந்த சிலர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் நேற்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி விதிமுறை மீறிய, அனுமதிக்கு மாறாக கட்டப்பட்ட 258 வணிக கட்டிடங்களை பூட்டி சீல் வைக்க வேண்டும். இன்று முதல் இப்பணி தொடங்க வேண்டும். பள்ளி வளாகங்கள், வழிபாட்டு தலங்கள், சிறு வணிக வளாகங்கள் போன்ற கட்டிடங்களை மறு உத்தரவு வரும்வரை சீல் வைக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து போடி, தேனி, கம்பம், கொடைக்கானல் ஆகிய நகராட்சிகளை சேர்ந்த நகரமைப்பு அலுவலர்கள் தலைமையில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டு சீல் வைக்கும் நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். இன்று காலை 10 முதல் இப்பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் கொடைக்கானலில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். #tamilnews
    ×