search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rural"

    • 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் பல் மருத்துவர் படிப்பதற்காக இடம் கிடைத்துள்ளது.
    • நான் மருத்துவராகி கிராமப்புறத்தில் மக்களுக்கு இலவசமாக சேவை செய்வேன்

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பன்னாள் கிராமத்தில் உப்பள கூலி தொழிலாளி ராஜேந்திரன் மகள் சண்முகபிரியா.

    இவர் நடந்து முடிந்த நீட் தேர்வில் 355 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

    இவர் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவர் படிப்பதற்காக இடம் கிடைத்துள்ளது.

    மாணவி சண்முகபிரியா ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளியில் பயின்று பல மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடதக்கது.

    இதையடுத்து சண்முகப்பிரியாவை ஆசிரியர்கள், சக மாணவ-மாணவிகள் பாராட்டினர்.

    இது பற்றி சண்முகப்பிரியா கூறும்போது, நான் மருத்துவராகி கிராமப்புறத்தில் மக்களுக்கு இலவசமாக சேவை செய்வேன் என்றார்.

    • ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில், திருச்சி தோட்டக்கலை கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் ஊரக தோட்டக்கலைப் பணி அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
    • 4 ஆண்டாக நடத்தி வரும் இயற்கை வேளாண் பண்ணையில், நேற்று பணி அனுபவப் பயிற்சி பெற்றனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில், திருச்சி தோட்டக்கலை கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் ஊரக தோட்டக்கலைப் பணி அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இக்குழுவினர், வாழப்பாடி அருகே மத்தூரில் விவசாயிகள் பழனிசாமி, சக்திவேல் மற்றும் குடும்பத்தினர் 4 ஆண்டாக நடத்தி வரும் இயற்கை வேளாண் பண்ணையில், நேற்று பணி அனுபவப் பயிற்சி பெற்றனர்.

    இயற்கை முறையில் கரும்பு, பப்பாளி, வாழை, பீர்க்கங்காய், பாகற்காய், மிளகாய், வெண்டை, வெங்காயம் போன்ற பயிர் சாகுபடி குறித்து கேட்டறிந்தனர். இயற்கை முறை வேளாண்மை , ஊடுபயிர் மேலாண்மை, பல அடுக்கு முறை விவசாயம், இயற்கை வளர்ச்சியூக்கிகள், பூச்சி விரட்டிகள் குறித்தும் அனுபவ பயிற்சி பெற்றனர்.

    • பரமத்தி வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை குடுமியான் மலை, சமிதி-ஸ்டாமின் இயக்குநர் சங்கரலிங்கம் ஆய்வு மேற்கொண்டார்.
    • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இருட்டணை கிராமத்தில் செயல்படுத்தப்படும் தரிசு நிலத்தொகுப்பு ஆய்வு செய்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை குடுமியான் மலை, சமிதி-ஸ்டாமின் இயக்குநர் சங்கரலிங்கம் ஆய்வு மேற்கொண்டார். ச.செருக்கலை, இருட்டணை, மேல்சாத்தம்பூர், குன்னமலை வருவாய் கிராமங்களில் இந்த ஆய்வு நடந்தது. அப்போது செருக்கலை கிராமத்தில் தரிசு நில மேம்பாடு தொகுப்பில் பருத்தி, சோளம், ஆமணக்கு பயிர்களின் வளர்ச்சி அதன் மூலம் விவசாயிகள் பெற்ற பலன்களை ஆய்வு செய்தார்.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இருட்டணை கிராமத்தில் செயல்படுத்தப்படும் தரிசு நிலத்தொகுப்பு ஆய்வு செய்தார். ஆய்வின் போது விவசாயி சுமதி தனது நிலத்தில் உள்ள சீமை கருவேல் மரங்களை வயலில் இருந்து வெட்டி எடுத்து மீண்டும் பயிர் செய்ய உள்ளதை எடுத்துக்கூறினார்.

    விதை கிராம திட்டத்தின் கீழ் மேல்சாத்தம்பூர் கிராமத்தில் நிலக்கடலை டி.எம்.வி-14 (சான்று விதை) விவசாயி சந்திரசேகர் பயிர் செய்துள்ளார் அவரது வயலில் ஆய்வு மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட தொழில் நுட்பங்களான விதை நேர்த்தி செய்தல், அடியுரம், மேலுரம், களவன்கள் களைதல், நுண்ணூட்டம் இடுதல், விதை கிராம திட்டத்தின் கீழ் பதிவுகள் செய்யும் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

    விவசாயிகளுக்கு கோடைஉழவு, விதைசான்று பெற்ற விதைகளை பயன்படுத்துவது, விதை நேர்த்தி செய்தல், நுண்ணூட்டங்கள், பயறு வகை பயிர்களுக்கு டி.ஏ.பி கரைசல் தெளிப்பு, பருவத்திற்கேற்ற பயிர், பயிர் சுழற்சி, பயிர் இடைவெளியினை பராமரிப்பது, ஊற்றமேற்றிய தொழு உரமிடுதல், உயிர் உரங்களை பயன்படுத்துதல், நுண்ணீர் பாசனம், மழை நீரை சேமித்தல் போன்றவைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். ஆய்வின்போது நாமக்கல் வேளாண்மை இணை இயக்குநர் அசோகன், வேளாண்மை துணை இயக்குநர்கள் ஜெகதீசன் (மத்தியத்திட்டம்),.ராஜ கோபால் (மாநிலத்திட்டம்) மற்றும் பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி, வேளாண்மை அலுவலர் பாபு, துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல், உதவி விதை அலுவலர்கள் மோகன்ராஜ், ராதாகிருஷ்ணன், உதவி வேளாண்மை அலுவலர்கள் நாகராஜன், பிரபு, பூபதி, கவுசல்யா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ஆண்கள் 3720,பெண்கள் 3796, இதர பிரிவினர் 2 ஆக மொத்தம் 7518 வாக்காளர்கள் உள்ளனர்.
    • தேர்தலில் 2425 ஆண் வாக்காளர்களும், 2316 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 4741 வாக்காளர்கள் வாக்களித்தனர்.

    பல்லடம் :

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகளில் காலியாக உள்ள ஊரக,நகர,உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி பல்லடம் ஒன்றியத்தில் 1வது வார்டு உறுப்பினர் பதவி காலியாக உள்ளது.இதற்கான வேட்புமனு தாக்கல் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த ஜூன்.20ந்தேதி துவங்கியது.

    இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல்படி தி.மு.க. கூட்டணி சார்பில் ஈஸ்வரமகாலிங்கம் (காங்கிரஸ்), குமாரவேல்( அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்), சுயேட்சை வேட்பாளர்களாக சதீஸ்குமார்( சாலை உருளை),சின்னசாமி( தண்ணீர் குழாய்),ராஜ்(மறை திருக்கி),,ஜெயபிரகாஷ்( தீப்பெட்டி) உள்ளிட்ட 6 பேர் இடைத்தேர்தலில் போட்டியிட்டனர். இதில் ஆண்கள் 3720,பெண்கள் 3796, இதர பிரிவினர் 2,ஆக மொத்தம் 7518 வாக்காளர்கள் உள்ளனர்.இந்த நிலையில் கடந்த 9 ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தேவராயன்பாளையம்,அரசு துவக்கப்பள்ளி, கோம்பக்காட்டுபுதுார் ஆர்.சி. துவக்கப்பள்ளி, பெத்தாம்பூச்சிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளி, இச்சிப்பட்டி அரசு துவக்கப்பள்ளி ஆகிய 4 பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள 11 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.தேர்தலில் 2425 ஆண் வாக்காளர்களும், 2316 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 4741 வாக்காளர்கள் வாக்களித்தனர்.இந்த நிலையில் இன்று பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில், வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது.

    தேர்தல் நடத்தும் அலுவலர் அகமது, உதவி அலுவலர் அய்யாசாமி, பல்லடம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சன், உள்ளிட்ட அதிகாரிகள் வாக்கு எண்ணும் பணியை ஒருங்கிணைத்து நடத்தினர். பல்லடம் போலீஸ் டி.எஸ்.பி. வெற்றி செல்வன் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    • இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
    • கொரோனோ தொற்று உள்ளவர்கள் 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    பல்லடம் :

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகளில் காலியாக உள்ள ஊரக,நகர,உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

    அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் அவினாசியில் 16-வது வார்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் உப்பிலிபாளையம், ராமநாதபுரம் ஆகிய இடங்களிலும், பல்லடத்தில் 1-வது வார்டுக்கு இச்சிப்பட்டியிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    ஊத்துக்குளி ஒன்றியத்தில் இச்சிப்பாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அவினாசி ஒன்றியத்தில் அய்யம்பாளையம் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர், குடிமங்கலம் ஒன்றியம் குடிமங்கலம் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் டாஸ்மாக் மதுபான கடைகள், பார்கள், மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் உரிமம் பெற்ற பார்கள் மூடப்பட்டன.

    பல்லடம் ஒன்றியம் 1-வது வார்டில் ஆண்கள் 3720,பெண்கள் 3796, இதர பிரிவினர் 2 ஆக மொத்தம் 7518 வாக்காளர்கள் உள்ளனர். இறுதி வேட்பாளர் பட்டியல்படி தி.மு.க. கூட்டணி சார்பில் ஈஸ்வரமகாலிங்கம் (காங்கிரஸ்), குமாரவேல்( அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்), சுயேட்சை வேட்பாளர்களாக சதீஸ்குமார்( சாலை உருளை),சின்னசாமி( தண்ணீர் குழாய்),ராஜ்(மறை திருக்கி),ஜெயபிரகாஷ்( தீப்பெட்டி) உள்ளிட்ட 6 பேர் இடைத்தேர்தலில் போட்டியிட்டனர்.

    கடந்த 4 நாட்களாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன்படி 4 மையங்களில் 11 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

    இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். கொரோனோ தொற்று உள்ளவர்கள் 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என தேர்தல் நடத்தும் அலுவலர் அகமது தெரிவித்தார். அப்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அய்யாசாமி, பல்லடம் ஒன்றிய ஆணையாளர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சன்உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் சேலம் மாவட்டத்தில் 15 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
    • வருகிற ஜூலை 9-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட ஊரக உள்ளாட்சியில் காலி பதவி இடங்களுக்கு வருகிற ஜூலை 9-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

    இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இதில் சேலம் ஒன்றிய 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    ஊராட்சி பதவிகளில் பூவனூர் 3-வது வார்டுக்கு ஒருவர், நடுப்பட்டி 7-வது வார்டு, கூனாண்டியூர் 7-வது வார்டு, கீரிப்பட்டி 6-வது வார்டு ஆகியவற்றிற்கு தலா 2 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.புல்லா கவுண்டம்பட்டி 7-வது வார்டு ஒருவர், தேவியாக்குறிச்சி 2-வது வார்டுக்கு ஒருவர், கிழக்கு ராஜபாளையம் 9-வது வார்டில் ஒருவர், இளவம்பட்டி 5-வது வார்டு ஒருவர், நீர்முள்ளிகுட்டை 6-வது வார்டு ஒருவர் என 12 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

    மின்னாம்பள்ளி 3-வது வார்டு பொட்டனேரி, 6-வது வார்டு ஒருவர் கூட இன்னும் மனு தாக்கல் செய்யவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.A

    • 27-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் நடக்கிறது.
    • வேட்புமனு விவரம், உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

    திருப்பூர் :

    தமிழகத்தில் காலியாக உள்ள பதவிகளுக்கு உள்ளாட்சி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரகத்தில் 498 பதவிகள், நகர்ப்புறத்தில் 12 என 510 பதவிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி ஒன்றியம் -16வது வார்டு, பல்லடம் ஒன்றியம் - 1வது வார்டு, ஊத்துக்குளி ஒன்றியம் - இச்சிபாளையம் ஊராட்சி தலைவர், அவினாநி- அய்யம்பாளையம் ஊராட்சி (6வது வார்டு), குடிமங்கலம் ஊராட்சி - 1வது வார்டு, காங்கயம் -ஆலாம்பாடி 9வது வார்டு, பொங்கலூர் - வடக்கு அவிநாசிபாளையம் 7 வது வார்டு, உடுமலை - அந்தியூர் 2வது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.நகர உள்ளாட்சியில் பதவிகள் காலியில்லை. மொத்தம் 8பதவிகளுக்கான தேர்தலுக்கு 30 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வார்டு வாரியாக, வாக்காளர் பட்டியலும் தயார்நிலையில் உள்ளன.

    தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணியாளர் என 50 பேர் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி, தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.இடைத்தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து பல்லடம், அவிநாசி ஒன்றியங்கள், ஊத்துக்குளி இச்சிப்பாளையம் ஊராட்சி, வார்டு தேர்தல் நடக்கும் ஊராட்சி முழுமைக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மாவட்ட அதிகாரிகளின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

    தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கூறுகையில், 27-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் நடக்கிறது. வரும் 28ந்தேதி பரிசீலனை, 30ந் தேதி வரை வாபஸ் பெற அவகாசம் வழங்கப்படும். ஓட்டுப்பதிவு ஜூலை 9ந் தேதி காலை,7மணி முதல், மாலை,6மணி வரை நடக்கும். ஓட்டு எண்ணிக்கை, 12-ந் தேதி நடைபெறும். கிராமங்களில் இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி ஒன்றிய அலுவலகம் மற்றும் வார்டு உறுப்பினருக்கு, அந்தந்த ஊராட்சி அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் நடக்கும். வேட்புமனு விவரம், உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றனர்.

    ×