search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dr"

    • 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் பல் மருத்துவர் படிப்பதற்காக இடம் கிடைத்துள்ளது.
    • நான் மருத்துவராகி கிராமப்புறத்தில் மக்களுக்கு இலவசமாக சேவை செய்வேன்

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பன்னாள் கிராமத்தில் உப்பள கூலி தொழிலாளி ராஜேந்திரன் மகள் சண்முகபிரியா.

    இவர் நடந்து முடிந்த நீட் தேர்வில் 355 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

    இவர் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவர் படிப்பதற்காக இடம் கிடைத்துள்ளது.

    மாணவி சண்முகபிரியா ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளியில் பயின்று பல மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடதக்கது.

    இதையடுத்து சண்முகப்பிரியாவை ஆசிரியர்கள், சக மாணவ-மாணவிகள் பாராட்டினர்.

    இது பற்றி சண்முகப்பிரியா கூறும்போது, நான் மருத்துவராகி கிராமப்புறத்தில் மக்களுக்கு இலவசமாக சேவை செய்வேன் என்றார்.

    • பறக்கும் படைகளை உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
    • தமிழ்நாடு அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது.

    சென்னை :

    கோவை அரசு மருத்துவமனையில் அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகள் காலாவதியானதால், அந்த ஆஸ்பத்திரியின் மருந்து காப்பக பொறுப்பாளர் முத்துமாலை ராணிக்கு பணி ஓய்வு பலன்கள் வழங்க அரசு மறுத்து விட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அவர் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், காலாவதியான மருந்துகள் அரசு ஆஸ்பத்திரியில் வினியோகம் செய்யப்படுகிறதா? அரசு ஆஸ்பத்திரிகளில் இருந்து விலை உயர்ந்த மருந்து கடத்தப்படுகிறதா? புதுப்புது நோய்கள் பரவ என்ன காரணம்? என்று சரமாரியான கேள்விகளை கேட்டு, அதற்கு தமிழ்நாடு அரசு பதில் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

    முத்துமாலை ராணி மீதான நடவடிக்கைகளை ரத்து செய்கிறேன். அவருக்கு எதிரான புகார் குறித்து புதிதாக விசாரணை நடத்த வேண்டும். அந்த விசாரணைக்கு மனுதாரர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், நர்சுகள் சரியான நேரத்தில் பணிக்கு வருகின்றனரா? நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்பது குறித்து சோதனை நடத்துவதற்காக மண்டல மற்றும் மாவட்ட அளவில் பறக்கும் படைகளை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும்.

    இந்த பறக்கும் படைகள் முறையாக செயல்படுகிறதா? என்பதை உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

    ×