என் மலர்
நீங்கள் தேடியது "வாக்கு"
- ராகுல் காந்தி அவர்களின் குற்றச்சாட்டு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
- தேர்தல் ஆணையம் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகிறது.
காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்திய ஜனநாயகத்தின் அடித்தளம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களே. வாக்குரிமை என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. அந்த உரிமை பறிக்கப்படுவதும், வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நிகழ்வதும் இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாகும்.
உத்தரப் பிரதேசம், பிகார், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் வாக்காளர்களுக்கே தெரியாமல் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் ஒரு தொகுதியில் மட்டும் 9,850 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டிருப்பது தேர்தல் ஆணையத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குகிறது.
தமிழர்களுக்கே தெரியாமல் டெல்லியில் அமர்ந்துள்ள ஒருவர் தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர்களின் வாக்குகளை அழிக்கிறார் என்ற தலைவர் ராகுல் காந்தி அவர்களின் குற்றச்சாட்டு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இவ்வாறான முறைகேடுகள் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்தாலும், தேர்தல் ஆணையம் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகிறது.
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் S.Y. குரேஷி அவர்கள் கூட, 'வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளை விசாரிக்காமல் புறக்கணிப்பது தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை சேதப்படுத்தும்' என வெளிப்படையாக கூறியிருப்பது தேர்தல் ஆணையத்திற்கு மிகப்பெரிய அவமானம்.
இந்திய தேர்தல் ஆணையம் தனது கடமைகளை புறக்கணிப்பதால், மக்களின் வாக்குரிமை பறிக்கப்படுகிறது. இது இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். மேலும், மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய நேரத்தில் செயலற்ற போக்கைத் தொடர்வது ஜனநாயகத்தின் மீது நேரடி தாக்குதலாகும்.
வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் மற்றும் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக உடனடியாக, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும். வாக்குரிமையை பறிக்க முயன்றவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அலட்சியம் காட்டிய தேர்தல் ஆணைய அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன்.
மக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் நிலையில் காங்கிரஸ் கட்சி அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. ஜனநாயகத்தை காப்பதற்கான எங்கள் போராட்டம் தீவிரமாக தொடரும்.தேர்தல் ஆணையத்தின் அலட்சியம் – ஜனநாயகத்தின் மீது தாக்குதல்
இந்திய ஜனநாயகத்தின் அடித்தளம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களே. வாக்குரிமை என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. அந்த உரிமை பறிக்கப்படுவதும், வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நிகழ்வதும் இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாகும்.
உத்தரப் பிரதேசம், பிகார், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் வாக்காளர்களுக்கே தெரியாமல் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் ஒரு தொகுதியில் மட்டும் 9,850 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டிருப்பது தேர்தல் ஆணையத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குகிறது. தமிழர்களுக்கே தெரியாமல் டெல்லியில் அமர்ந்துள்ள ஒருவர் தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர்களின் வாக்குகளை அழிக்கிறார் என்ற தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களின் குற்றச்சாட்டு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இவ்வாறான முறைகேடுகள் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்தாலும், தேர்தல் ஆணையம் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகிறது.
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் S.Y. குரேஷி அவர்கள் கூட, 'வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளை விசாரிக்காமல் புறக்கணிப்பது தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை சேதப்படுத்தும்' என வெளிப்படையாக கூறியிருப்பது தேர்தல் ஆணையத்திற்கு மிகப்பெரிய அவமானம்.
இந்திய தேர்தல் ஆணையம் தனது கடமைகளை புறக்கணிப்பதால், மக்களின் வாக்குரிமை பறிக்கப்படுகிறது. இது இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். மேலும், மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய நேரத்தில் செயலற்ற போக்கைத் தொடர்வது ஜனநாயகத்தின் மீது நேரடி தாக்குதலாகும்.
வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் மற்றும் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக உடனடியாக, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும். வாக்குரிமையை பறிக்க முயன்றவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அலட்சியம் காட்டிய தேர்தல் ஆணைய அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன்.
மக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் நிலையில் காங்கிரஸ் கட்சி அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. ஜனநாயகத்தை காப்பதற்கான எங்கள் போராட்டம் தீவிரமாக தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாக்குரிமை என்ற ஜனநாயக அமைப்பையே சிதைத்து இருக்கிறார்கள்.
- மாநாடு நடத்துவதற்கான இடத்தை இன்று பார்வையிட்டு தேர்வு செய்ய இருக்கிறோம்.
பாஜக அரசு வாக்கு திருட்டில் ஈடுபட்டு வருவதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். இது பற்றி நாடு முழுவதும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரசாரம் மேற்கொண்டுள்ளன.
தமிழ்நாட்டில் இந்த பிரச்சினையை மக்கள் மத்தியில் எடுத்து செல்ல காங்கிரஸ் சார்பில் மாநில மாநாடு நடத்தப்படுகிறது.
இது பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது:-
வாக்கு திருட்டு மூலம் பாஜக ஆட்சியை பிடித்து வருவதை ராகுல் காந்தி ஆதாரத்துடன் வெளிப்படுத்தியதால் மோடி அரசு ஆடிப் போய் இருக்கிறது. பதில் சொல்ல முடியாமல் திணறுகிறது.
வாக்குரிமை என்ற ஜனநாயக அமைப்பையே சிதைத்து இருக்கிறார்கள். மக்களின் நம்பிக்கையை பெற முடியாமல் குறுக்கு வழியில் ஆட்சி அதிகாரத்தை தட்டிப் பறிக்க முயற்சிக்கிறார்கள்.
விரைவில் தேர்தல் நடைபெற உள்ள பீகாரில் வாக்குத் திருட்டுக்காக வாக்காளர் பட்டியலில் நடத்தப்பட்டுள்ள சதித்திட்டங்கள் அம்பலமாகி உள்ளது.
எப்படியெல்லாம் பானக மக்களை ஏமாற்றுகிறது என்பதை மக்கள் மத்தியில் எடுத்து சொல்வதற்காக வாக்குத் திருட்டுகள் விளக்க மாநில மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளோம்.
இந்த மாநாடு அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) கன்னியாகுமரியில் நடக்கிறது. இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதிலும் இருந்து ஒரு லட்சம் பேரை திரட்ட முடிவு செய்துள்ளோம். மாநாடு நடத்துவதற்கான இடத்தை இன்று பார்வையிட்டு தேர்வு செய்ய இருக்கிறோம்.
அதேபோல் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 130-வது சட்டத் திருத்தத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்க்க காரணம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் 10-க்கும் குறைவான மாநிலங்களில் தான் ஆட்சியில் உள்ளன.
அந்த மாநிலங்களில் அமைச்சர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு 30 நாட்கள் ஜெயிலில் அடைத்து எதிர்கட்சி தலைவர்களை ஒழிக்க பாஜக அரசு முயல்கிறது. எனவே எதிர்க்கிறோம்.
அரசியல் அமைப்பு சட்டப்படி சுப்ரீம் கோர்ட்டு தண்டனையை உறுதி செய்தால் மட்டுமே அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. இந்த நடைமுறைகள் முடிவுக்கு வர பல ஆண்டுகள் வரை ஆகலாம்.
எனவே அதை முறியடித்து தண்டனை கிடைத்ததும் பதவி நீக்கம் செய்வதை அமல்படுத்தியது காங்கிரஸ். இந்த சட்டம் அமலில் இருக்கும்போது அதில் புதிய திருத்தம் ஏன் செய்ய வேண்டும். இதில் இருந்தே அவர்களின் உள் நோக்கம் புரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாக்குகளை ரூ.1,000, ரூ.500 என பணத்துக்கு விற்றால் அது மனித குலத்துக்கு அவமானம்.
- அப்படி வாக்களிப்பவர்கள் அடுத்த ஜென்மத்தில் விலங்குகளாக பிறப்பார்கள் என்றார்.
இந்தூர்:
மத்திய பிரதேசத்தின் மோவ் சட்டசபை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் உஷா தாகூர். முன்னாள் மந்திரியுமான இவர், தனது தொகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் பேசியதாவது:
பா.ஜ.க. அரசின் ஏராளமான திட்டங்களால் பயனாளிகளுக்கு ஆயிரக்கணக்கான பணம் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. அப்படியிருந்தும் கூட தங்கள் வாக்குகளை ரூ.1,000, ரூ.500 என பணத்துக்கு விற்றால், அது மனித குலத்துக்கு அவமானம் ஆகும்.
அப்படி பணம், சேலை, மது போன்றவற்றை வாங்கிக் கொண்டு வாக்களிப்பவர்கள், அடுத்த ஜென்மத்தில் நிச்சயமாக ஒட்டகம், செம்மறி, வெள்ளாடு, நாய், பூனையாகத் தான் பிறப்பார்கள் என்பதை உங்கள் டைரியில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஜனநாயகத்தை விற்பவர்கள் இப்படித்தான் பிறப்பார்கள். நீங்கள் வாக்களிப்பது ரகசியமானது என்றாலும், கடவுள் அதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். நான் கடவுளுடன் நேரடி தொடர்பு வைத்திருக்கிறேன். என்னை நம்புங்கள் என தெரிவித்தார்.
பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் இந்தப் பேச்சு அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. இது நாடுமுழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
- புதுக்கோட்டையில் மாதிரி வாக்கு பதிவு நடைபெற்றது
- கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் நடத்தினார்
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்கு பதிவு எந்திரம் வைப்பறையில் வைக்கப்பட்டுள்ள வாக்கு பதிவு எந்திரங்களை கொண்டு, மாதிரி வாக்கு பதிவு நடத்தி பார்க்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த மாதிரி வாக்கு பதிவை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா நடத்தினார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பஞ்குடியினர் நல அலுவலர் ஸ்ரீதர், தேர்தல் தனி வட்டாட்சியர் சோனை கருப்பையா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
- 160 தொகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்த பா.ஜ.க. மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
- அயோத்தி ராமர் பிரதிஷ்டை தினத்துக்கு முன்பாக 10 கோடி பேரை சந்தித்து பேச புதிய வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
பா.ஜனதா கட்சி இந்த தடவை 350-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்பதை இலக்காக வைத்திருக்கிறது. இதற்காக மொத்தம் உள்ள 543 தொகுதிகளையும் தீவிரமாக பா.ஜ.க. தலைவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
கடந்த தேர்தல் முடிவுகளை ஒப்பிட்டு பார்த்து 160 தொகுதிகளில் பா.ஜனதா மிக மிக பலவீனமாக இருப்பதாக பா.ஜனதாவினர் அறிந்துள்ளனர். எனவே அந்த 160 தொகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்த பா.ஜ.க. மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் 55 சதவீதம் வாக்குகளை பெற்றால் மட்டுமே 350 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்ற முடியும். இதை கருத்தில் கொண்டு கூடுதலாக 10 சதவீதம் வாக்குகளை பெற வேண்டும் என்று நிர்வாகிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பலவீனமாக உள்ள 160 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகள் தென்னிந்தியாவில் உள்ளன. அந்த 160 தொகுதிகளையும் 7 மண்டலங்களாக பிரித்து தேர்தல் ஏற்பாடுகளை செய்ய பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. எனவே வரும் நாட்களில் பா.ஜ.க. நிர்வாகிகள் அதிகளவில் தென் மாநிலங்களுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
10 சதவீத வாக்குகளை கூடுதலாக பெறுவதற்காக ஒவ்வொரு பகுதியிலும் அடிமட்ட அளவில் கட்சியை வலுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு வசதியாக வருகிற 22-ந் தேதி அயோத்தி ராமர் பிரதிஷ்டை தினத்துக்கு முன்பாக 10 கோடி பேரை சந்தித்து பேச புதிய வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
மேலும் பா.ஜனதா ஆட்சியின் 10 ஆண்டு சாதனைகள் பற்றி துண்டு பிரசுரங்களை நாடு முழு வதும் வீடுதோறும் கொடுப்பதை தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அயோத்தி கோவில் விழாவுக்கு பிறகு ஜனவரி கடைசி வாரம் முதல் பா.ஜக. தலைவர்களின் நாடு தழுவிய பிரசாரம் தொடங்க இருப்பதாகவும் டெல்லி வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது.
- இஸ்லாமிய மக்களின் ஒவ்வொரு உரிமைகளையும் பறித்து வருகிறது.
- 2024 தேர்தலில் முஸ்லிம்களின் வாக்கு வங்கியை இவர்கள் கெடுத்து விடுவார்கள்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நிருபர்களை சந்தித்த ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் ஹைதர் அலி கூறியதாவது,
இந்திய தேசம் ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் சென்று கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது.
இந்திரா காந்தி அவசரகால சட்டம் கொண்டு வந்த போது கூட சில அடக்குமுறைகளை செய்தாலும் பல்வேறு நல்ல விஷயங்கள் நடைபெற்றது.
ஆனால் இன்று அது போன்ற அவசர கால சட்டம் இல்லாமல் பல்வேறு அடக்குமுறைகளை பார்த்து வருகிறோம்.
இந்தியா முழுவதும் 17 மாநிலங்களில் இயங்கி வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா என்கிற இஸ்லாமிய வெகுஜன அமைப்பை பா.ஜனதா அரசு தடை செய்துள்ளது.
தொடர்ந்து இஸ்லாமிய மக்களின் ஒவ்வொரு உரிமைகளையும் பறித்து வருகிறது. குறிப்பாக காஷ்மீரில் அந்த மக்களுக்கு இருந்த தனி அந்தஸ்து என்கிற சட்டத்தை நீக்கியது.
பிஎப்ஐ பல்வேறு சமூக சேவைகளை செய்து வந்துள்ளது.
குறிப்பாக கொரோனா காலங்களிலும் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் சேவைகளை செய்துள்ளனர்.
இவர்களைத்தான் தேச விரோத சக்திகள் என ஒன்றிய அரசு கூறி தடை செய்துள்ளது அதேபோல் இஸ்லாமியர்களை பழிவாங்கும் விதமாக சி.ஏ.ஏ என்.சி.ஆர் உள்ளிட்ட கருப்பு சட்டங்களை ஒன்றிய அரசு இயற்றியது.
அதனை எதிர்த்து இந்தியா முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களை பி.எப்.ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளும் வெற்றிகரமாக செய்து முடித்தது என்பதை கருத்தில் கொண்டு 2024 தேர்தலில் முஸ்லிம்களின் வாக்கு வங்கியை இவர்கள் கெடுத்து விடுவார்கள்.
பாசிச ஆட்சிக்கு எதிராக முஸ்லிம்கள் வாக்கு திரும்பிவிடும் என்பதாலேயே பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா என்கிற இந்த அமைப்பை வீண்பழி சுமத்தி தேச விரோதிகள் எனக்கூறி தடை செய்துள்ளனர்.
இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
காந்தி ஜெயந்திக்கும் ஆர்எஸ்எஸுக்கும் என்ன தொடர்பு உள்ளது? காந்தியையும் காந்தி கொள்கையையும் விமர்சித்தவர்கள் ஆங்கிலேயர் ஆட்சியை ஆதரித்தவர்கள் இந்த ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இவர்கள் காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்திலே பேரணி நடத்த உள்ளார்கள்.
இதற்கு நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது.
தமிழக அரசு இதில் என்ன செய்யப் போகிறது.
ஆகவே உடனடியாக தமிழக அரசு மேல்முறையீடு செய்து இந்த பேரணியை தடுத்து நிறுத்த வேண்டும்.
இதனால் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படும்.
எடப்பாடி ஆட்சியில் கூட அனுமதி கிடைக்கவில்லை.
ஆனால் தற்போது அனுமதி கிடைக்கும் என்கிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அப்போது மாநிலத் துணைத் தலைவர் முசாஹூதீன், மாவட்டத் தலைவர் முதியுதீன், மாவட்ட செயலாளர் ஹாஜா மொய்தீன், மாவட்ட துணை செயலாளர் முகமது மசாயிக், மாநில ஊடக அணி துணை செயலாளர் ப ஷிர் அகமது, நகர தலைவர் ரபீர் ஆகிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- ஆண்கள் 3720,பெண்கள் 3796, இதர பிரிவினர் 2 ஆக மொத்தம் 7518 வாக்காளர்கள் உள்ளனர்.
- தேர்தலில் 2425 ஆண் வாக்காளர்களும், 2316 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 4741 வாக்காளர்கள் வாக்களித்தனர்.
பல்லடம் :
தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகளில் காலியாக உள்ள ஊரக,நகர,உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி பல்லடம் ஒன்றியத்தில் 1வது வார்டு உறுப்பினர் பதவி காலியாக உள்ளது.இதற்கான வேட்புமனு தாக்கல் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த ஜூன்.20ந்தேதி துவங்கியது.
இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல்படி தி.மு.க. கூட்டணி சார்பில் ஈஸ்வரமகாலிங்கம் (காங்கிரஸ்), குமாரவேல்( அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்), சுயேட்சை வேட்பாளர்களாக சதீஸ்குமார்( சாலை உருளை),சின்னசாமி( தண்ணீர் குழாய்),ராஜ்(மறை திருக்கி),,ஜெயபிரகாஷ்( தீப்பெட்டி) உள்ளிட்ட 6 பேர் இடைத்தேர்தலில் போட்டியிட்டனர். இதில் ஆண்கள் 3720,பெண்கள் 3796, இதர பிரிவினர் 2,ஆக மொத்தம் 7518 வாக்காளர்கள் உள்ளனர்.இந்த நிலையில் கடந்த 9 ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தேவராயன்பாளையம்,அரசு துவக்கப்பள்ளி, கோம்பக்காட்டுபுதுார் ஆர்.சி. துவக்கப்பள்ளி, பெத்தாம்பூச்சிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளி, இச்சிப்பட்டி அரசு துவக்கப்பள்ளி ஆகிய 4 பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள 11 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.தேர்தலில் 2425 ஆண் வாக்காளர்களும், 2316 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 4741 வாக்காளர்கள் வாக்களித்தனர்.இந்த நிலையில் இன்று பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில், வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது.
தேர்தல் நடத்தும் அலுவலர் அகமது, உதவி அலுவலர் அய்யாசாமி, பல்லடம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சன், உள்ளிட்ட அதிகாரிகள் வாக்கு எண்ணும் பணியை ஒருங்கிணைத்து நடத்தினர். பல்லடம் போலீஸ் டி.எஸ்.பி. வெற்றி செல்வன் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






