search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "services"

    • தஞ்சை தபால் கோட்டத்தில் தேசிய தபால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
    • விழாவில் பல்வேறு சேவைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தபால் கோட்டத்தில் தேசிய தபால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி தஞ்சை அருகே உள்ள நடுக்காவேரி துணை தபால் அலுவலகத்திலும், கோட்டூர் துணை தபால் அலுவலகத்திலும் தபால் சமூக வளர்ச்சி விழா கொண்டாடப்பட்டது.

    நடுக்காவேரி துணை தபால் அலுவலகத்தில் நடந்த விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் ஆரவல்லி ராஜாராமன், தஞ்சை கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் தங்கமணி, உதவி தபால் கண்காணி ப்பாளர்கள் உமாபதி, கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கோட்டூர் துணை தபால் அலுவலகத்தில் நடந்த விழாவில் ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன், தஞ்சை தலைமை தபால் நிலைய முதுநிலை அலுவலர் கார்த்திகேயன் மற்றும் மன்னார்குடி தெற்கு உபகோட்ட தபால் ஆய்வாளர் சரவணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் துறையின் பல்வேறு சேவைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும் தபால் சேமிப்பு கணக்குகளும், ஆயுள் காப்பீடு திட்டங்களும் தொடங்கப்ப ட்டன.

    தஞ்சை கோட்ட அலுவலகத்தில் நிதி வலுவூட்டல் நாளையொட்டி தபால் சேமிப்பு பிரிவு சம்பந் தப்பட்ட வினாடி-வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இதில் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • தற்போது 21 வகையான சேவைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • பட்டு வளர்ப்பு மற்றும் மானியங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் உழவன் செயலி மூலம் கிடைக்கும்.

    நீடாமங்கலம்:

    குடவாசல் மற்றும் வலங்கைமான் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் உழவர் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ள ஒரு முக்கிய செயலி 'உழவன்'. இதில் தற்போது 21 வகையான சேவைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மாநில மற்றும் மத்திய அரசால் வழங்கப்படும் மானிய திட்டங்கள், விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருள்களை எந்த ஒரு தடையும் இன்றி அனைவரும் பெற முன்பதிவு செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு இடுபொருள் முன்பதிவு, பயிர் மகசூல் இழப்பினை தடுத்திடும் பொருட்டு பயிர் காப்பீட்டு விபரம், விவசாயிகள் தாங்கள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தனியார் உரக்கடைகளில் உள்ள உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்கள் தங்கள் கைப்பேசியிலேயே எளிதில் அறிந்து கொள்ள ஏதுவாக உரங்கள் இருப்பு நிலை, மேலும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகள் அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கல் மற்றும் தனியார் துறையில் இருப்பு உள்ளதா? இல்லையா? அவற்றின் விலை என்ன என்று இருந்த இடத்திலேயே அறிந்து கொள்ள உதவுகிறது.மேலும் தொடர்பு கொள்ள வேண்டிய நபரின் கைபேசி எண்ணுடன் கூடிய விதை இருப்பு நிலை, மேலும் விவசாயிகளுக்கு உதவிடும் பொருட்டு குறைந்த விலையில் வாடகைக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் நிறுவனங்களின் வேளாண் இயந்திரங்கள் , பல்வேறு விலைப்பொருட்கள் மாநிலம் முழுவதுமுள்ள சந்தைகள் விலை விபரம் தெரிந்து கொள்வதன் மூலம் விவசாயிகள் தங்கள் பொருட்களுக்கான உண்மை விலை விபரங்களை எளிதில் அறிந்து கொண்டு இடை தரகர்களிடம் ஏமாறாமல் இருக்க உதவும். தமிழகம் முழுவதும் உள்ள அணை நீர்மட்டம், தற்போது உள்ள சூழலுக்கு ஏற்ற பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்களை அளிக்கும் வேளாண் செய்திகள், விவசாயிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க உதவிடும் வேளாண் கருத்துக்கள், பூச்சி நோய் கண்காணிப்பு பரிந்துரை அனைத்து பயிர்களுக்கும் படம் பார்த்து பரிந்துரை வழங்கும் பகுதி, பயிற்சி பெற முன்பதிவு செய்திடவும் உதவிடும் அட்மா பயிற்சி மற்றும் செயல் விளக்கம், உழவன் இ-சந்தை, பட்டு வளர்ப்பு மற்றும் மானியங்கள் விலை விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் உழவன் செயலி மூலம் கிடைக்கும்.

    இந்த உழவன் செயலியை பதிவிறக்கம் செய்ய விவசாயிகள் தங்களது செல்போனில் கூகுளில் ப்ளே ஸ்டோர் சென்று உழவன் என தட்டச்சு செய்து ஒரே கிளிக்கில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருட்களை உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்யும் விவசாயிகளுக்கு 100 சதவீத முன்னுரிமை வழங்கப்படுவதால் இந்த வாய்ப்பினை அனைவரும் தவறாது பயன்படுத்திட வேண்டும்.

    • இஸ்லாமிய மக்களின் ஒவ்வொரு உரிமைகளையும் பறித்து வருகிறது.
    • 2024 தேர்தலில் முஸ்லிம்களின் வாக்கு வங்கியை இவர்கள் கெடுத்து விடுவார்கள்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நிருபர்களை சந்தித்த ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் ஹைதர் அலி கூறியதாவது,

    இந்திய தேசம் ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் சென்று கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது.

    இந்திரா காந்தி அவசரகால சட்டம் கொண்டு வந்த போது கூட சில அடக்குமுறைகளை செய்தாலும் பல்வேறு நல்ல விஷயங்கள் நடைபெற்றது.

    ஆனால் இன்று அது போன்ற அவசர கால சட்டம் இல்லாமல் பல்வேறு அடக்குமுறைகளை பார்த்து வருகிறோம்.

    இந்தியா முழுவதும் 17 மாநிலங்களில் இயங்கி வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா என்கிற இஸ்லாமிய வெகுஜன அமைப்பை பா.ஜனதா அரசு தடை செய்துள்ளது.

    தொடர்ந்து இஸ்லாமிய மக்களின் ஒவ்வொரு உரிமைகளையும் பறித்து வருகிறது. குறிப்பாக காஷ்மீரில் அந்த மக்களுக்கு இருந்த தனி அந்தஸ்து என்கிற சட்டத்தை நீக்கியது.

    பிஎப்ஐ பல்வேறு சமூக சேவைகளை செய்து வந்துள்ளது.

    குறிப்பாக கொரோனா காலங்களிலும் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் சேவைகளை செய்துள்ளனர்.

    இவர்களைத்தான் தேச விரோத சக்திகள் என ஒன்றிய அரசு கூறி தடை செய்துள்ளது அதேபோல் இஸ்லாமியர்களை பழிவாங்கும் விதமாக சி.ஏ.ஏ என்.சி.ஆர் உள்ளிட்ட கருப்பு சட்டங்களை ஒன்றிய அரசு இயற்றியது.

    அதனை எதிர்த்து இந்தியா முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களை பி.எப்.ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளும் வெற்றிகரமாக செய்து முடித்தது என்பதை கருத்தில் கொண்டு 2024 தேர்தலில் முஸ்லிம்களின் வாக்கு வங்கியை இவர்கள் கெடுத்து விடுவார்கள்.

    பாசிச ஆட்சிக்கு எதிராக முஸ்லிம்கள் வாக்கு திரும்பிவிடும் என்பதாலேயே பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா என்கிற இந்த அமைப்பை வீண்பழி சுமத்தி தேச விரோதிகள் எனக்கூறி தடை செய்துள்ளனர்.

    இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

    காந்தி ஜெயந்திக்கும் ஆர்எஸ்எஸுக்கும் என்ன தொடர்பு உள்ளது? காந்தியையும் காந்தி கொள்கையையும் விமர்சித்தவர்கள் ஆங்கிலேயர் ஆட்சியை ஆதரித்தவர்கள் இந்த ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இவர்கள் காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்திலே பேரணி நடத்த உள்ளார்கள்.

    இதற்கு நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது.

    தமிழக அரசு இதில் என்ன செய்யப் போகிறது.

    ஆகவே உடனடியாக தமிழக அரசு மேல்முறையீடு செய்து இந்த பேரணியை தடுத்து நிறுத்த வேண்டும்.

    இதனால் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படும்.

    எடப்பாடி ஆட்சியில் கூட அனுமதி கிடைக்கவில்லை.

    ஆனால் தற்போது அனுமதி கிடைக்கும் என்கிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    அப்போது மாநிலத் துணைத் தலைவர் முசாஹூதீன், மாவட்டத் தலைவர் முதியுதீன், மாவட்ட செயலாளர் ஹாஜா மொய்தீன், மாவட்ட துணை செயலாளர் முகமது மசாயிக், மாநில ஊடக அணி துணை செயலாளர் ப ஷிர் அகமது, நகர தலைவர் ரபீர் ஆகிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே செல்லும் பயணிகள் ரெயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும் என்று காரைக்குடி பொதுநல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி வள்ளல் அழகப்பர் நடையாளர் சங்கம், அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம், தொழில் வணிக கழகம், அரிமா சங்கம், ரெயில் பயணிகள் பாதுகாப்பு கழகம் ஆகிய பொதுநல சங்கத்தினர் திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையேயான அகல ரெயில் பாதை பணி கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ரூ.700கோடி மதிப்பீட்டில் தொடங்கி நிறைவு பெற்றது. இதையொட்டி சுமார் 73 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த ரெயில் பாதையில் கடந்த மார்ச் மாதம் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது.

    பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, பேராவூரணி, காரைக்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்த ரெயிலை அதிகஅளவில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பஸ் கட்டணம் தற்சமயம் அதிகஅளவு உள்ளதால் மேற்கண்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள், கட்டிட தொழிலாளர்கள், மாணவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

    குறிப்பாக காரைக்குடி, தேவகோட்டை, திருவாடானை உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு காரைக்குடியில் இருந்து மதுரைக்கு தினசரி சென்று வருகின்றனர். காரைக்குடியில் இருந்து மதுரைக்கு தினந்தோறும் சுமார் 70 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி ஆகிய பகுதியில் உள்ள மாணவர்கள் காரைக்குடி மற்றும் மதுரைக்கும் கல்லூரி படிப்பிற்கு சென்று வருகின்றனர். தற்போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்பட உள்ளது.

    இந்நிலையில் காரைக்குடியில் இருந்து மதுரைக்கு தனியார் மற்றும் அரசு பஸ்களில் அதிகஅளவு கட்டணம் உள்ளதால் ஏழை, எளிய மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே காரைக்குடி-பட்டுக்கோட்டை பயணிகள் ரெயிலை தினந்தோறும் சிவகங்கை, மானாமதுரை வழியாக மதுரை வரை நீட்டித்து இயக்கினால் அதிகஅளவில் இப்பகுதி மக்கள் பயனடைவார்கள். இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியிருந்தனர். 
    ×