search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எண்ணிக்கை"

    • பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் லட்சத்தீவு சென்றிருந்த போது அவரது பயணத்தை மாலத்தீவு மந்திரிகள் கேலி செய்து கருத்துக்களை பதிவிட்டனர்.
    • இந்தியர்கள் வருகை தற்போது குறைந்துள்ளதால் தற்போது 5 - வது இடத்துக்கு சென்றுவிட்டது. இதனால் மாலத்தீவு அரசு கவலை அடைந்துள்ளது.

    மாலே:

    நமது அண்டை நாடான மாலத்தீவு சிறந்த சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. இயற்கை அழகு கொட் டிக்கிடக்கும் மாலத்தீவுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம்.

    அதிலும் குறிப்பாக இந்தியாவில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் செல்வார்கள்.சுற்றுலா துறை மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பி தான் அந்த நாடு உள்ளது.ஆனால் சமீபத்தில் மாலத்தீவு அதிபராக சீன ஆதரவாள ரான முகமது முஸ்சு பதவி ஏற்ற பிறகு இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டது.

    மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்களை வெளியேற்றும் முயற்சியில் அவர் ஈடுபட்டார்.

    மேலும் பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் லட்சத்தீவு சென்றிருந்த போது அவரது பயணத்தை மாலத்தீவு மந்திரிகள் கேலி செய்து கருத்துக்களை பதிவிட்டனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியதால் 3 மந்திரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    இந்த பிரச்சினைக்கு பிறகு மாலத்தீவு செல்லும் இந்திய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. கடந்த ஆண்டு மாலத்தீவுக்கு மொத்தம் 17 லட்சம் சுற்றுலா பயணிகள் சென்றனர். இதில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 198 பேர் இந்தியர்கள் ஆவார்கள்.

    அதற்கு அடுத்த இடத்தில் ரஷியா மற்றும் சீனர்கள் இருந்தனர். இந்த நிலையில் இந்தியர்கள் வருகை தற் போது குறைந்துள்ளதால் தற்போது 5 - வது இடத் துக்கு சென்று விட்டது. இதனால் மாலத்தீவு அரசு கவலை அடைந்துள்ளது.

    இதையடுத்து இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்க்க மாலத்தீவை சேர்ந்த சுற்றுலா அமைப்பு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் முக்கிய நகரங்களில் வாகனங்களில் ரோடு ஷோ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாலத்தீவு சுற்றுலா குறித்த முக்கிய அம்சங்கள் மற்றும் பயணங்களை எளிதாக்கும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் இடம் பெறும் வகையில் இந்த ரோடு ஷோ நடத்தப்பட உள்ளது.

    இது தொடர்பாக அவர்கள் மாலத்தீவு தலைநகர் மாலேவில் இந்திய அதிகாரி முனு மஹாவரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள் இந்தியர்கள் வருகையை அதிகரிக்க எடுக்கப்படும் முயற்சிக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    • தீயில் 2 நகரங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தது.
    • காட்டுத்தீயையொட்டி அங்கு வெப்பம் அதிகரிப்பதற்கான சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

    சாண்டியாகோ:

    தென் அமெரிக்கா நாடான சிலியில் உள்ள கடற்கரை நகரமான வினாடெல்மர் மற்றும் வாலடரைகோ மலைபகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. தீ மளமளவென வனப்பகுதிக்குள் வேகமாக பரவியது.

    பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிந்ததால் ஏராளமானோர் சிக்கி தீயில் கருகி இறந்தனர். பலியானவர்கள் உடல்கள் ரோட்டில் கருகிய நிலையில் கிடந்தது. பலர் தீக்காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர்.

    இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஹெலிகாப்டர்கள் மூலமும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. ஆனாலும் தீ கட்டுக்குள் வரவில்லை. தெடர்ந்து தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.

    காட்டுத்தீயில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

    காட்டுத்தீயில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. அவர்கள் கதி என்ன வென்று தெரியவில்லை. தீயில் 2 நகரங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தது. ரோட்டில் நிறுத்தப்பட்டு இருந்த ஏராளமான வாகனங்கள் தீக்கிரையானது. தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு மிகப்பெரிய சோகத்தை எதிர்கொண்டுள்ளது என சிலி அதிபர் கேப்ரியல் போரிஸ் தெரிவித்துள்ளார்.

    சிலிநாட்டில் கடந்த 2010-ம் ஆண்டு கடுமையான பூகம்பம் ஏற்பட்டு 500 பேர் இறந்தனர். அதற்கு பிறகு நடந்த மோசமான சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. காட்டுத்தீயையொட்டி அங்கு வெப்பம் அதிகரிப்பதற்கான சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

    • மகாராஷ்டிரா, டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி பாதிப்பு 3 இலக்கத்தில் பதிவாகி வருகிறது.
    • கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர் .

    திருப்பூர்:

    தமிழகத்துக்கு வேலைவாய்ப்புக்களை தேடி, பீகார், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வடமாநிலத்தினர் ரெயில் மூலம் வருகின்றனர்.தமிழகத்தில் இயங்கும் சூப்பர்பாஸ்ட், எக்ஸ்பிரஸ் ெரயில்களில் பெரும்பாலும் பயணிப்பவராக வட மாநிலத்தவரே உள்ளனர். நாட்டில் ஆயிரத்துக்கும் கீழ் குறைந்திருந்த ஒரு நாள் தொற்று, மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    குறிப்பாக மகாராஷ்டிரா, டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி பாதிப்பு 3 இலக்கத்தில் பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 8,582 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இது கடந்த 93 நாட்களில் இல்லாத அளவாகும்.இருப்பினும் ரெயில்களில் வடமாநிலத்தினர் எண்ணிக்கை சற்றும் குறையவில்லை. நேற்று முன்தினம் திருப்பூர் ரெயில் நிலையம் வந்த ரப்திசாகர், ஆலப்புழா, கேரளா எக்ஸ்பிரஸ் ரெயிலில் 1,500க்கும் அதிகமான வடமாநிலத்தினர் வந்திறங்கினர்.

    ரெயில் டிக்கெட் முன்பதிவு மைய அதிகாரிகள் கூறுகையில், வடமாநிலத்தினர் ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இங்கிருந்து முன்பதிவு செய்து தினமும் பலர் பயணிக்கின்றனர்.கொரோனா மூன்றாவது அலை முடிவுக்கு வந்த பின் நடப்பாண்டு துவக்கத்தில் இருந்த நிலை தற்போதும் தொடர்கிறது. வடமாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பால், ரெயிலில் பயணிப்போர் எண்ணிக்கை குறையவில்லை. வழக்கம்போல் உள்ளது என்றனர். இதனிடையே கொரோனா பரவலை தடுக்க திருப்பூர் ரெயில் நிலையத்தில் வடமாநில பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×