என் மலர்
நீங்கள் தேடியது "ஊரக உள்ளாட்சி"
- பொதுவாக தனி அதிகாரிகளை நியமனம் செய்வதற்கு, சட்டசபையில் மசோதா தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டும்.
- வாக்காளர் பட்டியலும் வெளியிட்டு இருக்க வேண்டும்.
சென்னை:
பாராளுமன்றம், சட்டமன்றம் போன்று உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்த வேண்டும்.
உள்ளாட்சியில் மக்கள் பிரதிநிதிகள் இருந்தால் தான் மத்திய அரசும், அதற்கான மானியங்களை விடுவிக்கும். அதேபோல் மக்களுடைய அடிப்படை பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு தான் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒன்றிணைந்து முழுமையாக தேர்தல் நடத்தப்பட்டது. இதன் பதவி காலம் 2016-ம் ஆண்டு முடிந்தது. அதன்பின் தேர்தல் நடத்தப்படவில்லை. தனி அலுவலர்கள் மூலம் உள்ளாட்சிகள் நிர்வகிக்கப்பட்டன.
2019-ம் ஆண்டு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாதம் 27 மற்றும் 28-ந்தேதி என 2 கட்டங்களாக நடந்தது. இந்த தேர்தல் மூலம் 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 9,624 கிராம ஊராட்சி தலைவர்கள், 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம்91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு தேர்தல் நடந்தன.
இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், 2020-ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் பொறுப்பேற்றனர். இவர்களது பதவிக்காலம் அடுத்த மாதம் (ஜனவரி) 5-ந்தேதியுடன் முடிவடைகிறது.
பதவி காலம் முடிவடையும் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றால், மாநில தேர்தல் ஆணையத்தால் 45 நாட்களுக்கு முன்பு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்க வேண்டும். அதற்கான வாக்காளர் பட்டியலும் வெளியிட்டு இருக்க வேண்டும்.
ஆனால் அதுபோன்ற அறிவிப்புகள் எதுவும் வரவில்லை. அதற்கு போதிய காலமும் இப்போது இல்லை. எனவே ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.
எனவே பதவி காலம் முடியும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமனம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
பொதுவாக தனி அதிகாரிகளை நியமனம் செய்வதற்கு, சட்டசபையில் மசோதா தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் தமிழக சட்டசபை 6-ந்தேதி தொடங்குகிறது. எனவே அதற்கு முன் தினமான 5-ந் தேதி, பதவி முடிவடையும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம் செய்ய வேண்டும். கடந்த 2019-ம் ஆண்டு 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடந்தது. தற்போது நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை பிரிக்கப்பட்டுள்ளதால் 28 மாவட்டங்களுக்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.
எனவே தனி அலுவலர்களை நியமிப்பதற்கான அவசர சட்டத்தை 4-ந்தேதி அல்லது 5-ந்தேதி கொண்டு வரவேண்டும். எனவே இது குறித்து எப்போது வேண்டுமானாலும், அறிவிப்பு வெளியிடப்படலாம்.
இந்த சட்டத்தின்படி, கிராம பஞ்சாயத்துக்களை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் (கிராம ஊராட்சி) மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நிர்வாகம் செய்வார்கள்.
அதேபோல் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களை 2 பகுதியாக பிரித்து, ஒரு பகுதியை உதவி இயக்குனர் (ஊராட்சிகள்), மற்றொரு பகுதியை உதவி இயக்குனர் (தணிக்கை) ஆகியோரும் நிர்வாகம் செய்வார்கள்.
மாவட்ட ஊராட்சியை அந்த மாவட்டத்தில் உள்ள திட்ட அலுவலர் அல்லது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) நிர்வாகம் செய்வார்கள்.
உள்ளாட்சிகளில் கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கு மட்டுமே காசோலை அதிகாரம் உள்ளது. எனவே அவர்கள் செய்யும் டிஜிட்டல் முறையிலான பணப்பரிமாற்றத்தை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இப்போதே கண்காணித்து வருகின்றனர். அவர்கள் 5-ந் தேதிக்கு பிறகு எந்த பரிமாற்றமும் செய்ய முடியாது.
அவசர சட்டம் கொண்டு வரப்பட்டாலும், இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் இதற்கான மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும்.
- இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
- கொரோனோ தொற்று உள்ளவர்கள் 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பல்லடம் :
தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகளில் காலியாக உள்ள ஊரக,நகர,உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் அவினாசியில் 16-வது வார்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் உப்பிலிபாளையம், ராமநாதபுரம் ஆகிய இடங்களிலும், பல்லடத்தில் 1-வது வார்டுக்கு இச்சிப்பட்டியிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஊத்துக்குளி ஒன்றியத்தில் இச்சிப்பாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அவினாசி ஒன்றியத்தில் அய்யம்பாளையம் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர், குடிமங்கலம் ஒன்றியம் குடிமங்கலம் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் டாஸ்மாக் மதுபான கடைகள், பார்கள், மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் உரிமம் பெற்ற பார்கள் மூடப்பட்டன.
பல்லடம் ஒன்றியம் 1-வது வார்டில் ஆண்கள் 3720,பெண்கள் 3796, இதர பிரிவினர் 2 ஆக மொத்தம் 7518 வாக்காளர்கள் உள்ளனர். இறுதி வேட்பாளர் பட்டியல்படி தி.மு.க. கூட்டணி சார்பில் ஈஸ்வரமகாலிங்கம் (காங்கிரஸ்), குமாரவேல்( அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்), சுயேட்சை வேட்பாளர்களாக சதீஸ்குமார்( சாலை உருளை),சின்னசாமி( தண்ணீர் குழாய்),ராஜ்(மறை திருக்கி),ஜெயபிரகாஷ்( தீப்பெட்டி) உள்ளிட்ட 6 பேர் இடைத்தேர்தலில் போட்டியிட்டனர்.
கடந்த 4 நாட்களாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன்படி 4 மையங்களில் 11 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். கொரோனோ தொற்று உள்ளவர்கள் 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என தேர்தல் நடத்தும் அலுவலர் அகமது தெரிவித்தார். அப்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அய்யாசாமி, பல்லடம் ஒன்றிய ஆணையாளர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சன்உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- 27-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் நடக்கிறது.
- வேட்புமனு விவரம், உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
திருப்பூர் :
தமிழகத்தில் காலியாக உள்ள பதவிகளுக்கு உள்ளாட்சி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரகத்தில் 498 பதவிகள், நகர்ப்புறத்தில் 12 என 510 பதவிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி ஒன்றியம் -16வது வார்டு, பல்லடம் ஒன்றியம் - 1வது வார்டு, ஊத்துக்குளி ஒன்றியம் - இச்சிபாளையம் ஊராட்சி தலைவர், அவினாநி- அய்யம்பாளையம் ஊராட்சி (6வது வார்டு), குடிமங்கலம் ஊராட்சி - 1வது வார்டு, காங்கயம் -ஆலாம்பாடி 9வது வார்டு, பொங்கலூர் - வடக்கு அவிநாசிபாளையம் 7 வது வார்டு, உடுமலை - அந்தியூர் 2வது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.நகர உள்ளாட்சியில் பதவிகள் காலியில்லை. மொத்தம் 8பதவிகளுக்கான தேர்தலுக்கு 30 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வார்டு வாரியாக, வாக்காளர் பட்டியலும் தயார்நிலையில் உள்ளன.
தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணியாளர் என 50 பேர் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி, தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.இடைத்தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து பல்லடம், அவிநாசி ஒன்றியங்கள், ஊத்துக்குளி இச்சிப்பாளையம் ஊராட்சி, வார்டு தேர்தல் நடக்கும் ஊராட்சி முழுமைக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மாவட்ட அதிகாரிகளின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கூறுகையில், 27-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் நடக்கிறது. வரும் 28ந்தேதி பரிசீலனை, 30ந் தேதி வரை வாபஸ் பெற அவகாசம் வழங்கப்படும். ஓட்டுப்பதிவு ஜூலை 9ந் தேதி காலை,7மணி முதல், மாலை,6மணி வரை நடக்கும். ஓட்டு எண்ணிக்கை, 12-ந் தேதி நடைபெறும். கிராமங்களில் இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி ஒன்றிய அலுவலகம் மற்றும் வார்டு உறுப்பினருக்கு, அந்தந்த ஊராட்சி அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் நடக்கும். வேட்புமனு விவரம், உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றனர்.