search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலியான உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல்     சேலம் ஒன்றிய கவுன்சிலர் உள்பட  6 பதவிகளுக்கு  நாளை வாக்கு எண்ணிக்கை
    X

    காலியான உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் சேலம் ஒன்றிய கவுன்சிலர் உள்பட 6 பதவிகளுக்கு நாளை வாக்கு எண்ணிக்கை

    • 6 ஆயிரத்து 598 வாக்காளர்கள் வாக்கு சீட்டு மூலம் வாக்களித்தனர். இங்கு பதிவான வாக்குகள் சேலம் ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
    • நாளை (12-ந் தேதி) காலை 8 மணி முதல் சேலம் ஒன்றிய அலுவலகம், காடையாம்பட்டி ஒன்றிய அலுவலகம், தலைவாசல் ஒன்றிய அலுவலகம் மற்றும் மேச்சேரி ஒன்றிய அலுவலகத்திலும் இந்த வாக்குகள் வாக்குகள் எண்ணப்பட உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள சேலம் யூனியன் வார்டு உறுப்பினர் மற்றும் 11 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் தெத்திகிரிப்பட்டி, மின்னாம்பள்ளி, பூவனூர், புள்ள கவுண்டம்பட்டி, இலவம்பட்டி, நீர்முள்ளிக்குட்டை பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    6 பதவிகள்

    மீதம் உள்ள சேலம் ஒன்றிய 8-வது வார்டு கவுன்சிலர், கிராம ஊராட்சிகளில் காடையாம்பட்டி ஒன்றியம் நடுப்பட்டி 7-வது வார்டு, தலைவாசல் ஒன்றியம் தேவியாக்குறிச்சி 2-வது வார்டு, கிழக்கு ராஜபாளையம் 9-வது வார்டு, மேச்சேரி ஒன்றியம் கூணான்டியூர் 7-வது வார்டு, பொட்டனேரி 6-வது வார்டு ஆகிய–வற்றிற்கு நேற்று முன்தினம் வாக்கப்பதிவு நடந்தது.

    சேலம் யூனியன் வார்டு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க வேட்பாளராக முருகன் போட்டியில் உள்ளார். அ.தி.மு.க.ைவ சேர்ந்த வெங்கடேஷ் கட்சியில் ஏற்பட்ட பிரச்சினையால் இரட்டை இலை சின்னம்

    கிடைக்காதால் சுயேட்சை–யாக போட்டியிட்டு உள்ளார். இங்கு 6 ஆயிரத்து 598 வாக்காளர்கள் வாக்கு சீட்டு மூலம் வாக்களித்தனர். இங்கு பதிவான வாக்குகள் சேலம் ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    நடுப்பட்டி ஊராட்சி 7-வது வார்டில் 346வ ாக்குகளும், தேவியாக்குறிச்சி 2-வது வார்டில் 202 வாக்குகளும், கிழக்கு ராஜபாளையம் 9-வது வார்டில் 198 வாக்குகளும், கூணான்டியூர் 7-வது வார்டில் 370 வாக்குகளும் , பொட்ட னேரி 6-வது வார்டில் 275 வாக்குகளும் பதிவானது. இந்த வாக்கு சீட்டுகள் அந்தந்த ஒன்றிய அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது .

    நாளை வாக்கு எண்ணிக்கை

    இதையடுத்து நாளை (12-ந் தேதி) காலை 8 மணி முதல் சேலம் ஒன்றிய அலுவலகம், காடையாம்பட்டி ஒன்றிய அலுவலகம், தலைவாசல் ஒன்றிய அலுவலகம் மற்றும் மேச்சேரி ஒன்றிய அலுவலகத்திலும் இந்த வாக்குகள் வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் அதிகாரிகள்ஈடுபட்டு உள்ளனர். ஓட்டு எண்ணிக்கை தொடங்கி ஒரு மணி நேரத்தில் முடிவு தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×