search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bill"

    • பழமுதிர்சோலை முருகன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது.
    • இதில் கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை அழகர் மலையில் உள்ள முருகனின் 6-வது படை வீடான பழமுதிர்சோலை முருகன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி இன்று நடைபெற்றது. கோவில் துணை ஆணையர் ராமசாமி, உதவி ஆணையர் வளர்மதி, தக்கார் நல்லதம்பி, மேலூர் ஆய்வா ளர் அய்யம்பெருமாள் ஆகியோர் உண்டியல் எண்ணும் பணியை கண்காணித்தனர்.

    இதில் கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • நில ஒருங்கிணைப்பு மசோதாவை திரும்ப பெற வேண்டும்.
    • செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை நிறுத்த வேண்டும்.

    வேதாரண்யம்:

    நில ஒருங்கிணைப்பு மசோ தாவை திரும்ப பெற வேண்டும், செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை நிறுத்த வேண்டும், பருவம் தவறி பெய்த மழையால் பாதித்த நிலக்கடலை, உளுந்து, பயறு, எள் பயிர்க ளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வேதாரண்யம் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார்.

    இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன், மாவட்ட நிர்வாகக்குழு நாராயணன், ஒன்றிய துணை செயலாளர் பாலகுரு, பொருளாளா் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • கோவில் உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • உண்டியல் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் அருகே புலவர் நத்தம் கிருஷ்ணாபுரத்தில் சர்வ சித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

    பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர்.

    நேற்று தரிசனம் முடிந்து கோவில் பூட்டப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்தனர்.

    கோவில் உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர்.

    உண்டியல் கடந்த ஓராண்டாக எண்ணப்ப டாமல் இருந்ததால் அதில் பல ஆயிரம் பணம் இருக்கும் என தெரிகிறது.

    இது பற்றிய புகாரின் பேரில், உண்டியல் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது:-

    எங்கள் கிராமத்தில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது.

    மின் மோட்டாரின் காப்பர் வயர்கள் அடிக்கடி திருடு போகிறது.தற்போது கோவில் உண்டியல் பணம் மர்ம நபர்களால் கொள்ளைய டிக்கபட்டு உள்ளது.

    தொடர் திருட்டு சம்பவத்திற்கு போலீசார் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மர்ம நபர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • முதல்வர் கொண்டு வந்த சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி தொடர் போராட்டம் நடத்துவோம்.
    • ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. பட்டியல் அணி தலைவர் கூறியுள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. பட்டியல் அணி தலைவர் ரமேஷ் கண்ணன் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்த கவர்னர் ஆர்.என்.ரவி பரமக்குடி தியாகி இமானு வேல் சேகரன் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இமானுவேல் சேகரனின் குடும்பத்தினருடம் அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வை ராமநாதபுரம் பா.ஜ.க. பட்டியல் அணி வரவேற்பதுடன் கவர்ன ருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.தேவேந்திர குல வேளாளர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும், தியாகி இமானு வேல் சேகரனின் பிறந்த நாளான அக்டோபர் 9-ந் தேதியை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும், பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்.

    பரமக்குடி 5 முனை சந்திப்பில் இமானுவேல் சேகரனுக்கு வெண்கல சிலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கவர்னர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம்.தமிழகத்தில் சாதி, மத பாகு பாடின்றி அனைத்து மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்ட சபையில் கிறிஸ்த வர்களாக மதம் மாறியோரை பட்டியல் இனத்தில் சேர்த்து பட்டியல் இன மக்களுக்கு அரசு வழங்கும் சலுகைகளை பெறுவதற்காக இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி தனி தீர்மானம் கொண்டு வந்தார்.

    இந்த தீர்மானத்தை ராம நாதபுரம் மாவட்ட பா.ஜ.க. பட்டியல் அணி கண்டிக்கிறது. தமிழகத்தில் இரு பிரிவினரிடையே சாதி, மத மோதலை தூண்டும் தி.மு.க. அரசு தொடர்ந்து பட்டியல் இன மக்களுக்கு எதிராக செயல்பட்டு கொண்டி ருப்பதை அந்த மக்கள் நன்றாக அறிந்துள்ளனர். ஓட்டு அரசியலுக்காக இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தி வரும் தி.மு.க. அரசு தனி சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்.

    இல்லாவிட்டால் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அனுமதியுடனும், பட்டியல் அணி மாநில தலைவர் தடா.பெரியசாமி ஒப்புதலுடனும், ராமநாத புரம் மாவட்ட பா.ஜ.க. தலைவர் தரணி முருகே சனின் வழிகாட்டல்படி ராமநாதபுரம் மாவட்டம் பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இறைவன் தானாகவே விரும்பிவந்து எழுந்தருளி தலங்கள் மிகவும் சிறப்புக்குரியவை.
    • பக்தர்கள் உண்டியல்காணிக்கை செலுத்துவதற்காக, சுமார் 6அடிஉயரத்தில் 4 பிரமாண்டமான உண்டியல் வைக்கப்பட்டுள்ளது

    கடலூர்:

    இறைவன் தானாகவே விரும்பிவந்து எழுந்தருளி தலங்கள் மிகவும் சிறப்புக்குரியவை.அப்படிசிவபெருமான்விரும்பிஎழுந்தருளிபிரசித்திப்பெற்றதுதிருவதிகை வீரட்டானேஸ்வரர்கோவில். இங்கு அருள்பாலிக்கும் வீரட்டானேஸ்வரரை தரிசிக்கும் பக்தர்கள் உண்டியல்காணிக்கை செலுத்துவதற்காக, சுமார் 6அடிஉயரத்தில் 4 பிரமாண்டமான உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.

    சாமியை தரிசனம் செய்து விட்டு, வெளியே வரும் வழியில் தான் காணிக்கைஉண்டியல் வைக்கப்பட்டுள்ளது.இந்த காணிக்கை உண்டியல்கள் திறப்பு கோவில் நிர்வாகத்தினர், கிராம பொதுமக்கள், கட்டளைதாரர்கள் முன்னிலையில் இன்று காலை நடந்தது

    • இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
    • உண்டியல் திறப்பானது கோவில் யூடியூப்பிலும் ஒளிபரபரப்பு செய்யப்பட்டது.

    சாத்தூர்,

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் இம்மாதத்திற்கான உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. 8 நிரந்தர உண்டியல் 1 கோசாலை உண்டியல் உள்பட 9 உண்டியல்கள் திறக்கப்பட்டு பொருட்கள் கணக்கீடு செய்யப்பட்டன.

    அதில் ரொக்கம் ரூ.37 லட்சத்து 67 ஆயிரத்து 839-ம், தங்கம்- 179.96 கிராம், வெள்ளி- 551.84 கிராம் ஆகியவை காணிக்கையாக கிடைத்தது.

    இந்து அறநிலைய துறை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உதவி ஆணையர் மற்றும் நேர்முக உதவியாளர் யக்ஞநாராயணன், இருக்கன்குடி கோவில் ஆணையர் கருணாகரன், தலைமையில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி, சவுந்திர ராஜன், ஹரிராம், மகாராஜன், நவரத்தினம், அறங்காவலர் குழுவினர், ஆய்வாளர்கள் உண்டியல் எண்ணும் பணியினை பார்வையிட்டனர்.

    தமிழக அரசு உத்தரவின் படி உண்டியல் திறப்பானது கோவில் யூடியூப்பிலும் ஒளிபரபரப்பு செய்யப்பட்டது.

    • லஞ்சம் வாங்கிய அதிகாரிகளையும், கணக்கிற்கு அதிகமாக சொத்து சேர்த்த விபரங்க ளையும் கண்டுபிடித்து நட வடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • அதன்படி, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

    நாமக்கல்:

    தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக, பல்வேறு அரசு அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தி, லஞ்சம் வாங்கிய அதிகாரிகளையும், கணக்கிற்கு அதிகமாக சொத்து சேர்த்த விபரங்க ளையும் கண்டுபிடித்து நட வடிக்கை எடுத்து வருகின் றனர். அதன்படி, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

    இந்த நிலையில், நாமக்கல் மோகனூர் ரோட்டில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தின், இயக்கமும் பராமரிப்பு செயற்பொறியாளர் அலுவலகம் இயங்கி வரு கிறது. இந்த அலுவலகத்தில் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் துணை காவல் கண்காணிப் பாளர் சுபாஷினி, ஆய்வா ளர் நல்லம்மாள் தலைமை யிலான போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

    போலீசார் வந்தபிறகு, அலுவலகத்தில் இருந்த யாரையும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. அவர் கள் ஒவ்வொரு பிரிவிலும் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் அலுவலக கோப்பு களை துருவித்துருவி விசா ரணை நடத்தினர். அலுவல கத்தில் பணியில் இருந்த அனைத்து பணியாளர் களிடமும் போலீசார் சோதனை நடத்தினர்.

    மாலை தொடங்கிய சோதனை இரவு 10 மணி வரை நடைபெற்றது. சோதனையின் முடிவில் அங்கு கணக்கில் வராத ரொக்கப்பணம் ரூ. 85,900 மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    இது குறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். சம்பந்தப்பட்ட மின்துறை அதிகாரிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

    • அர்த்த நாரீஸ்வரர் மலைக்கோ விலில் சமீபத்தில் நடந்த தைப்பூச தேர்திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் செலுத்திய காணிக்கையால் அர்த்தநாரீஸ்வரர் சன்னதிக்கு எதிரில் உள்ள 2-ம் எண் உண்டியல் நிரம்பியது.
    • இதனையடுத்து கோவில்களில் உள்ள 11 உண்டியல்களை திறந்து எண்ண முடிவு செய்யப்பட்டது. அதன் படி உண்டியல் திறந்து எண்ணும் பணி நடந்தது.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் மலைக்கோ விலில் சமீபத்தில் நடந்த தைப்பூச தேர்திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் செலுத்திய காணிக்கையால் அர்த்தநாரீஸ்வரர் சன்னதிக்கு எதிரில் உள்ள 2-ம் எண் உண்டியல் நிரம்பியது.

    இதனையடுத்து கோவில்களில் உள்ள 11 உண்டியல்களை திறந்து எண்ண முடிவு செய்யப்பட்டது. அதன் படி உண்டியல் திறந்து எண்ணும் பணி நடந்தது . இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இளையராஜா மற்றும் ரமணி காந்தன் மற்றும் போலீஸ் அதிகாரி கள் முன்னிலையில் உண்டி யல்கள் திறக்கப்பட்டன.

    காணிக்கைகளை எண்ணும் பணியில் திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள், தன்னார்வலர்கள் என பலரும் ஈடுபட்டனர். முதல் கட்டமாக பிரதான 4 உண்டியல்கள் திறந்து எண்ணப் பட்டது.

    மீதமுள்ள 7 உண்டி யல்கள் திறந்து எண்ணும் பணி தொடரும் என அறநி

    லையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உண்டியல் எண்ணும் பணியை புதிதாக தேர்வு செய்யப்பட்ட அறங்காவலர் குழு தலை வர் தங்கமுத்து மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஆகியோர் பார்வையிட்டனர்.

    • மீனாட்சி அம்மன் கோவிலில் காணிக்கை உண்டியல் மூலம் ரூ.1.47 கோடி கிடைத்தது.
    • உண்டியல் திறப்பின் போது ரூ.1 கோடியே 47 லட்சத்து 43 ஆயிரத்து 642 கிடைத்தது.

    மதுரை

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் செயல் அலுவலர் அருணாசலம் முன்னிலையில் இந்த கோவில் மற்றும் 11 உப கோவில்களின் காணிக்கை உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடந்தது.

    இதில் திருப்பரங்குன்றம், முருகன் கோவில் துணை ஆணையர், மீனாட்சி அம்மன் கோவிலின் தக்கார் பிரதிநிதி, கண்கா ணிப்பாளர், மதுரை இந்து சமய அறநிலையத்துறை தெற்கு மற்றும் கள்ளிக்குடி ஆய்வர்கள், கோவில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    உண்டியல் திறப்பின் போது ரூ.1 கோடியே 47 லட்சத்து 43 ஆயிரத்து 642 கிடைத்தது. மேலும் பலமாற்று பொன் இனங்கள் 465 கிராமும், வெள்ளி இனங்கள் 890 கிராமும், அயல்நாட்டு ரூபாய் நோட்டுக்கள் 497 எண்ணமும் கிடைத்தன.

    • திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலில் ரூ.26 லட்சம் உண்டியல் வசூலானது.
    • இதில் ரூ. 26 லட்சத்தி 70 ஆயிரத்து 630-ம், 219 கிராம் 300 மில்லி கிராம் தங்கமும், 514 கிராம் வெள்ளியும் கிடைத்தது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள திருவெற்றியூரில், சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட வல்மீகநாதர் சமேத பாகம்பிரியாள் அம்மன் கோவில் உள்ளது. பல்வேறு நோய்களை குணப்படுத்தும் சக்தி வாய்ந்த தெய்வமாகக் கருதப்படும் இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு செய்கின்றனர். செவ்வாய், வியாழக்கிழமைகளில் கோவிலில் தங்கியிருந்து தெப்பக்குளத்தில் நீராடி நேர்த்திக்கடனாக தங்கம், வெள்ளி உலோகத்தில் உருவம் செய்து உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். பக்தர்கள் செலுத்திய உண்டியல்கள் திறந்து எண்ணும் நிகழ்ச்சி, இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையர் தனசேகரன் தலைமையில் நடந்தது. தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் செந்தில்குமார், ஆய்வாளர் சண்முக சுந்தரம், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தரராஜன் முன்னிலையில் உண்டியல் காணிக்கை பணம் எண்ணப்பட்டது. இதில் ரூ. 26 லட்சத்தி 70 ஆயிரத்து 630-ம், 219 கிராம் 300 மில்லி கிராம் தங்கமும், 514 கிராம் வெள்ளியும் கிடைத்தது.

    • சேலம், நாமக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
    • இந்து அறநிலைத் துறையால் முத்திரை இடப்பட்ட உண்டியல் துணியால் மூடப்பட்டு இருந்தது. அதன் அருகே முத்திரை இடாத 2 குட உண்டியல், 2 டிரம் உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது.

    நாமக்கல்:

    சேலம் நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள|

    காளிப்பட்டி கந்தசாமி கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலுக்கு சேலம், நாமக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். திருவிழா காலங்களில் ஏராளமான சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். கோவில் நிர்வாகம், செயல் அலுவலர், பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

    இக்கோவிலில் உண்டி யல் வசூலில் முறைகேடு நடப்பதாக இந்து சமய அறநிலையத் துறை அதி காரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து நேற்று குமாரபாளையம் சரக இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி மற்றும் அதி காரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது இந்து அறநிலைத் துறையால் முத்திரை இடப்பட்ட உண்டியல் துணியால் மூடப்பட்டு இருந்தது. அதன் அருகே முத்திரை இடாத 2 குட உண்டியல், 2 டிரம் உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், 4 உண்டியலுக்கும் முத்திரை இட்டனர். மேலும் அனுமதி இல்லாமல் உண்டியல் வைத்தது தொடர்பாக துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் முடிவு செய்த அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • டார்ச் லைட் வெளிச்சத்தில் மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்.
    • நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2500 நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ,அகில இந்திய விவசாய சங்க அறைகுவல் ஏற்று டார்ச் லைட் வெளிச்சத்தில் மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும், விவசாயிகள் போராட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எழுத்து மூலமாக அளித்துள்ள உறுதி மொழியை நிறைவேற்ற வேண்டும், தமிழ்நாடு அரசு தேர்தல் கால வாக்குறுதி அடிப்படையில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2500 நிர்ணயம் செய்து வழங்க வேண்டும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4000 வழங்க வேண்டும், குறுவை சாகுபடி பாதிப்புக்கு ஏற்ப நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தஞ்சாவூரில் ரயிலடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு தமிழ்நாடு விவசாய சங்க தஞ்சை மாவட்ட தலைவர் வீரமோகன் தலைமை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் டார்ச் லைட்டை அடித்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் ஒன்றிய விவசாய சங்க நிர்வாகிகள் செல்வகு மார், ராமலிங்கம், கணபதி, பிரபாகரன், ஜார்ஜ்துரை , ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட துணை செயலாளர் துரை.மதிவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×