search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குவிண்டால்"

    • பருத்தியின் மதிப்பு சராசரியாக ரூ.16.79 லட்சம் ஆகும்.
    • குவிண்டாலுக்கு ரூ.5 ஆயிரத்து 739 என்ற விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது.

    பாபநாசம்:

    பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் இரா.தாட்சா யினி தலைமையில் பருத்தி ஏலம் நடைப்பெற்றது.

    பருத்தி ஏலத்தில் பாபநா சத்தை சுற்றியுள்ள கிராம த்தில் இருந்து மொத்தம் 209 லாட் பருத்தி கொண்டு வரப்பெற்றது.

    சராசரியாக 292.60 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர்.

    கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், சேலம்,தேனி, திருப்பூர், சார்ந்த 8 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்ட னர் பருத்தியின் மதிப்பு சராசரியாக 16.79 லட்சம் ரூபாய் ஆகும்.

    இதில் தனியார் வியாபாரிகளின் அதிகபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.6,999/- குறைந்தபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.5,409 /-சராசரி மதிப்பு குவிண்டாலுக்கு ரூ.5,739/- என்ற விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது.

    • சராசரியாக 3 ஆயிரம் குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர்.
    • சராசரி மதிப்பு குவிண்டாலுக்கு ரூ.7 ஆயிரத்து 309-க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்ப னைக்கூட கண்காணிப் பாளர் தாட்சாயினி தலைமையில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

    பருத்தி ஏலத்தில் பாபநாசத்தை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து மொத்தம் 1958 லாட் பருத்தி கொண்டுவரப்பெற்றது. சராசரியாக 3000 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர். கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், சேலம்,தேனி, திருப்பூர், சார்ந்த 10 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.

    பருத்தியின் மதிப்பு சராசரியாக 2 கோடி ரூபாய் ஆகும்.

    இதில்தனியார் வியாபாரிகளின் அதிகபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.7551/- குறைந்தபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.7199/- சராசரி மதிப்பு குவிண்டா லுக்கு ரூ.7309/- என்ற விலைக்கு கொ ள்முதல் செய்யப்பட்டது.

    • தேங்காய் கொப்பரை கிலோ ரூ.200 நிர்ணயம் செய்ய வேண்டும்.
    • நெல் குவிண்டாலுக்கு ரூ. 3 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

    பேராவூரணி:

    பேராவூரணியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க பேராவூரணி ஒன்றிய செயலாளர் ரவி தலைமை வகித்தார்.

    மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் விளக்க உரையாற்றினார்.

    இக்கூட்டத்தில், உரித்த தேங்காய் ஒரு கிலோ ரூ.60, கொப்பரை ஒரு கிலோ ரூ. 200 என மத்திய, மாநில அரசுகள் விலை நிர்ணயம் செய்து தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் காக்க வேண்டும்.

    நெல் குவிண்டாலுக்கு ரூ. 3000 விலை நிர்ணயம் செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் பன்னீர்செல்வம், முருகேசன், தங்கராஜ், தேசகாவலன், ரவி, கருணா மூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி , இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய குழு உறுப்பினர் அண்ணாதுரை நன்றி கூறினார்.

    • செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை கைவிட வேண்டும்.
    • சந்தை விலைக்கு ஏற்ப லாப விலையும் நடப்பு நிதிநிலை அறிக்கையிலே வழங்கி உழவர்களை காக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று காவிரி உரிமை மீட்பு குழு கூட்டம் அதன் ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கூட்டத்தில் பொருளாளர் மணிமொழியன், வெள்ளாம்பெரம்பூர் துரை ரமேஷ், திருவாரூர் கலைச்செல்வன், ரத்தின வேலவன், ராமலிங்கம், சீராலூர் தனபால், பூதலூர் சுந்தரவடிவேல், தமிழ் தேசிய பேரியக்கம் நிர்வாகிகள் வைகறை, விடுதலை சுடர், பழ. ராஜேந்திரன், தென்னவன், ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் நிருபர்களுக்கு மணியரசன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் ரூ.1000 கோடியில் திருச்சியில் இருந்து நாகப்பட்டினம் வரை தொடர் வேளாண் தொழில் பெருந்தடம் உருவாக்கப் போவதாக அறிவித்தது.

    பெரும் தொழில் நிறுவனங்களின் தொழிற்சாலை மண்டலமாக தொழில் பேட்டைகளின் தொடர் சங்கியாக இது அமைக்கப்பட கூடாது.

    பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற சட்ட ஏற்பாட்டிற்கு ஊரு நேரா வண்ணம் உணவுத்துறை சார்ந்த சிறுகுறு தொழில்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி பல ஆண்டுகளாக ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2600 விலை தருகிறது. அதுபோல் தமிழ்நாடு அரசும் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2500, கரும்புக்கு டன்னுக்கு ரூ.4000 வழங்க வேண்டும்.

    2 thousand 500 per quintal should be provided for paddy - Maniarasan interviewமேலும் இதர வேளாண்மை பொருட்களுக்கு சந்தை விலைக்கு ஏற்ப லாப விலையும் நடப்பு நிதிநிலை அறிக்கையிலே வழங்கி உழவர்களை காக்க வேண்டும்.

    நியாய விலை கடைகளில் உயிர்ம வேளாண் உற்பத்தி பொருட்கள், அரிசி தொடங்கி சிறு தானியங்கள், காய்கறிகள் என பலவும் மானிய விலையில் கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    உயிர்ம வேளாண்மை நிலங்களுக்கு இயற்கை எரு கிடைக்க கிடை போட அரசு நிதி உதவிகள் வழங்க வேண்டும்.

    தஞ்சை மாவட்டம் திருமண்டங்ககுடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் 123 நாட்களாக தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளுக்கு வரவேண்டிய கரும்பு பாக்கி தொகையை வட்டியுடன் திருப்பித் தர வேண்டும்.

    தவறான வங்கி கடன்களில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும்.

    பயிர் காப்பீட்டில் வெளிப்படை தன்மை தேவை. செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டார்ச் லைட் வெளிச்சத்தில் மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்.
    • நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2500 நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ,அகில இந்திய விவசாய சங்க அறைகுவல் ஏற்று டார்ச் லைட் வெளிச்சத்தில் மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும், விவசாயிகள் போராட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எழுத்து மூலமாக அளித்துள்ள உறுதி மொழியை நிறைவேற்ற வேண்டும், தமிழ்நாடு அரசு தேர்தல் கால வாக்குறுதி அடிப்படையில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2500 நிர்ணயம் செய்து வழங்க வேண்டும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4000 வழங்க வேண்டும், குறுவை சாகுபடி பாதிப்புக்கு ஏற்ப நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தஞ்சாவூரில் ரயிலடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு தமிழ்நாடு விவசாய சங்க தஞ்சை மாவட்ட தலைவர் வீரமோகன் தலைமை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் டார்ச் லைட்டை அடித்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் ஒன்றிய விவசாய சங்க நிர்வாகிகள் செல்வகு மார், ராமலிங்கம், கணபதி, பிரபாகரன், ஜார்ஜ்துரை , ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட துணை செயலாளர் துரை.மதிவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×