search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
    X

    உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தபோது எடுத்த படம்.

    அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

    • அர்த்த நாரீஸ்வரர் மலைக்கோ விலில் சமீபத்தில் நடந்த தைப்பூச தேர்திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் செலுத்திய காணிக்கையால் அர்த்தநாரீஸ்வரர் சன்னதிக்கு எதிரில் உள்ள 2-ம் எண் உண்டியல் நிரம்பியது.
    • இதனையடுத்து கோவில்களில் உள்ள 11 உண்டியல்களை திறந்து எண்ண முடிவு செய்யப்பட்டது. அதன் படி உண்டியல் திறந்து எண்ணும் பணி நடந்தது.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் மலைக்கோ விலில் சமீபத்தில் நடந்த தைப்பூச தேர்திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் செலுத்திய காணிக்கையால் அர்த்தநாரீஸ்வரர் சன்னதிக்கு எதிரில் உள்ள 2-ம் எண் உண்டியல் நிரம்பியது.

    இதனையடுத்து கோவில்களில் உள்ள 11 உண்டியல்களை திறந்து எண்ண முடிவு செய்யப்பட்டது. அதன் படி உண்டியல் திறந்து எண்ணும் பணி நடந்தது . இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இளையராஜா மற்றும் ரமணி காந்தன் மற்றும் போலீஸ் அதிகாரி கள் முன்னிலையில் உண்டி யல்கள் திறக்கப்பட்டன.

    காணிக்கைகளை எண்ணும் பணியில் திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள், தன்னார்வலர்கள் என பலரும் ஈடுபட்டனர். முதல் கட்டமாக பிரதான 4 உண்டியல்கள் திறந்து எண்ணப் பட்டது.

    மீதமுள்ள 7 உண்டி யல்கள் திறந்து எண்ணும் பணி தொடரும் என அறநி

    லையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உண்டியல் எண்ணும் பணியை புதிதாக தேர்வு செய்யப்பட்ட அறங்காவலர் குழு தலை வர் தங்கமுத்து மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஆகியோர் பார்வையிட்டனர்.

    Next Story
    ×