search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "allowance"

    • கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. வழங்கினார்
    • புதிதாக சாலைகள் அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது.

    புதுச்சேரி:

    காலாப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட கனக செட்டிக் குளம் முத்தாலம்மன் நகரில் ரூ.20 லட்சம் செலவில் புதிதாக சாலைகள் அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது.

    எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து புதுவை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்ப தலைவி களுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் உதவிதொகை மற்றும் இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கும் விழா நடந்தது.

    விழாவில் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணை மற்றும் அடையாள அட்டை 200 பயனாளிகளுக்கும், மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் அடுப்புடன் கூடிய இலவச சமையல் கியாஸ் சிலிண்டர் 22 பயனாளிகளுக்கும் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    விழாவில் பெரிய காலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு, கனக செட்டிகுளம் மற்றும் பிள்ளை சாவடி ஆகிய கிராமங்களில் இருந்து அனைத்து கிராம பஞ்சாயத் தார்கள், பா.ஜனதா கட்சி பொறுப்பாளர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • இயற்கை சீற்றங்களின்போது பாதிக்கப்படும் குடும்பங்கள் நிலைகுலைந்து விடுகின்றன.
    • இந்த தொகை ரூ.16 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    சுனாமி, கனமழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின்போது பாதிக்கப்படும் குடும்பங்கள் நிலைகுலைந்து விடுகின்றன.

    இவர்களுக்கு பேரிடர் துறை மூலம் நிவாரண உதவித்தொகையை உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. உயிரிழப்பு ஏற்பட்டால் வழங்கப்படும் ரூ.4 லட்சத்தில் எந்த மாற்றமும் இல்லை. கை, கண், உறுப்பு 40 முதல் 60 சதவீத பாதிப்படைந்தால் ரூ.59 ஆயிரத்து 100, 60 சதவீதத்துக்கு மேல் ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.

    இந்த தொகை ரூ.74 ஆயிரம், ரூ.2. ½ லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்து ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றால் ரூ.12 ஆயிரத்து 700 வழங்கப்பட்டது. இந்த தொகை ரூ.16 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    ஒரு வாரத்துக்கு குறைவாக சிகிச்சை பெற்றால் வழங்கப்பட்ட ரூ.4 ஆயிரத்து 300, ரூ.5 ஆயிரத்து 400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    உடைமைகளை இழக்கும் குடும்பத்துக்கு ரூ.ஆயிரத்து 800, வீட்டு பொருட்களை இழந்தால் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இந்த தொகை தலா ரூ.2 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்பட்டு ள்ளது.

     முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.1.20 லட்சம், குடிசை வீடுகளுக்கு ரூ.1.30 லட்சம், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.6 ஆயிரத்து 500, குடிசைகளுக்கு ரூ.4 ஆயிரம், குடில்களுக்கு ரூ.8 ஆயிரம் நிவாரண தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கால்நடை ஷெட் இழந்தால் ரூ.3 ஆயிரம், பசு, எருமை இறந்தால் ரூ.37 ஆயிரத்து 500, ஆடுகளுக்கு ரூ.4 ஆயிரம், இழுவை மாடுகளுக்கு ரூ.32 ஆயிரம், கன்றுகளுக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல தோட்டக்கலை ஓராண்டு பயிர்களுக்கு 2.5 ஏக்கருக்கு ரூ.8 ஆயிரத்து 500, பல்லாண்டு பயிர்களுக்கு ரூ.22 ஆயிரத்து 500, செரிக்கல்சருக்கு ரூ.6 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்பட உள்ளது.

    இந்த உயர்த்தப்பட்ட நிவாரண தொகை உடனடியாக அமலுக்கு வருவதற்கான அரசாணை யும் வெளியிடப்பட்டுள்ளது.

    • மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது.
    • மாணவர்களுக்கு பொது நிதியில் இருந்து, போக்குவரத்து செலவு மற்றும் தினப்படியாக ரூ.125 வரை வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும், மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப்பயிற்சி அளிக்க உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளனர். பள்ளி கல்வித்துறை வாயிலாக குடியரசு தினவிழா மற்றும் பாரதியார் பிறந்த தினவிழா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதேபோல, குறுமைய போட்டியைத் தொடர்ந்து மாவட்ட மற்றும் கல்வி மாவட்ட அளவிலான போட்டிகள், மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது.

    அந்த வகையில் நடப்பு கல்வியாண்டு, குறுமைய போட்டி துவங்கியுள்ளது. மாணவர்களும், ஆர்வத்துடன் போட்டியில் பங்கேற்க தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் போட்டியை நடத்தும் பள்ளி நிர்வாகமே, மாணவர்களுக்கான சிற்றுண்டி, தண்ணீர், டீ மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான உணவு செலவினங்களை ஏற்க வேண்டும். ஆனால் அரசால் அப்பள்ளிக்கான நிதியை விடுவிப்பதில் தாமதம் ஏற்படுவதால், அந்தந்த பள்ளித்தலைமையாசிரியர்களே பொது நிதியில் இருந்து செலவுக்கு அளித்து வருகின்றனர். இதனால் விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுக்கு போக்குவரத்து செலவு மற்றும் தினப்படியை உயர்த்தி வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து பள்ளித்தலைமையாசிரியர்கள் கூறியதாவது:- மாணவர்களுக்கு பொது நிதியில் இருந்து, போக்குவரத்து செலவு மற்றும் தினப்படியாக ரூ.125 வரை வழங்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் அதிகப்படியான மாணவர்கள் கலந்து கொண்டால், தலைமையாசிரியர்கள் சொந்த செலவில் மாணவர்களை அனுப்பி வைக்க வேண்டிய நிலை உள்ளது.

    நடப்பாண்டு போட்டிகள் துவங்க உள்ள நிலையில் அதற்கான தொகையை அரசால் உயர்த்தி வழங்க வேண்டும். இதேபோல போட்டி நடத்தும் பள்ளி நிர்வாகம், இதற்கான அனைத்து தொகையையும் செலவிட வேண்டும். நிதி விடுவிக்க தாமதம் ஏற்படுவதால் மாணவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் பயணப்படி வழங்குவதில் குழப்பம் நிலவுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஆண்டுக்கு 6,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
    • 2,000 ரூபாயை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    தாராபுரம் :

    விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது. 4 மாத இடைவெளியில் மூன்று தவணைகளில் இத்தொகை வழங்கப்படுகிறது. இதில் 13வது தவணையாக 2,000 ரூபாயை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுகின்றனர். திட்டத்தின் கீழ் ஏராளமான போலி விவசாயிகள் பயன் பெறுவதாக எழுந்த புகாரையடுத்து சரியான விவசாயிகளுக்கு மட்டும் நிதியுதவி சென்று சேர வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருந்தது.இதனால் சம்மந்தப்பட்ட விவசாய நிலம் யார் பெயரில் உள்ளதோ அவர்களது வங்கிக் கணக்கிற்கு தான் உதவித் தொகை விடுவிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி இடைப்பட்ட நாட்களில் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் பட்டியல் உறுதி செய்யப்பட்டது.

    இது குறித்து வேளாண்மை துறையினர் கூறுகையில், விவசாய நிலம் வைத்துள்ள பலர் கூட்டு குடும்பமாக வாழ்கின்றனர். தங்களது பெற்றோர் பெயரில் உள்ள நிலத்துக்கு வாரிசுகள் சொந்தம் கொண்டாடும் போது, எந்த வாரிசின் பெயரில் நிலம் உள்ளதோ அவரது வங்கிக் கணக்கிற்கு தான் உதவித் தொகை அனுப்பப்படும். இதனை விண்ணப்பதாரர்களுக்கு தெளிவுப்படுத்தி வருகிறோம் என்றனர்.

    • சேலம், நாமக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
    • இந்து அறநிலைத் துறையால் முத்திரை இடப்பட்ட உண்டியல் துணியால் மூடப்பட்டு இருந்தது. அதன் அருகே முத்திரை இடாத 2 குட உண்டியல், 2 டிரம் உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது.

    நாமக்கல்:

    சேலம் நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள|

    காளிப்பட்டி கந்தசாமி கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலுக்கு சேலம், நாமக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். திருவிழா காலங்களில் ஏராளமான சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். கோவில் நிர்வாகம், செயல் அலுவலர், பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

    இக்கோவிலில் உண்டி யல் வசூலில் முறைகேடு நடப்பதாக இந்து சமய அறநிலையத் துறை அதி காரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து நேற்று குமாரபாளையம் சரக இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி மற்றும் அதி காரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது இந்து அறநிலைத் துறையால் முத்திரை இடப்பட்ட உண்டியல் துணியால் மூடப்பட்டு இருந்தது. அதன் அருகே முத்திரை இடாத 2 குட உண்டியல், 2 டிரம் உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், 4 உண்டியலுக்கும் முத்திரை இட்டனர். மேலும் அனுமதி இல்லாமல் உண்டியல் வைத்தது தொடர்பாக துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் முடிவு செய்த அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கணவரை இழந்த பெண்ணுக்கு உதவி தொகை வழங்குவதாக மாவட்ட கலெக்டர் மோகன்தெரிவித்தார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அருகே அன்னியூர் ஊராட்சியை சேர்ந்தமுருகன் (வயது 40) அவர்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்தபொழுது இறந்தார். இதையொட்டி அவரது குடும்பம் வருமானமின்றி கஷ்டப்படுவதாக அவரது மனைவிநளினி மாதாந்திர உதவித்தொகை வழங்க கேட்டுக்கொண்டதற்கிணங்க அவருக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2 குழந்தைகளின் நன்றாக படிக்க வைக்க தேவையான உதவிகளும் வழங்குவதாக மாவட்ட கலெக்டர் மோகன்,தெரிவித்தார்.

    கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் (பொது) கீழ் பயன்பெற, பள்ளியிறுதி வகுப்பு தோல்வி, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்&2 மற்றும் பட்டப்படிப்பு தகுதியை கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 2018 அக்டோபர் 1&ந் தேதி முதல் டிசம்பர் 31&ந் தேதி வரையிலான காலத்திற்குள், 5 ஆண்டுகள் நிறைவு செய்யும் அனைவரும் தகுதியுடையவர்கள் ஆவர். இதேபோல் வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டத்தின்கீழ் பயன்பெறவும் அதே கால அளவிற்குள், ஓராண்டு பதிவினை நிறைவு செய்தவர்கள் தகுதியுடையவராவர்.

    இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிப்போரின் ஒட்டுமொத்த குடும்ப வருமானம் ஆண்டுக்கு  ரூ.50,000&க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறுவோருக்கு குடும்ப வருமானத்திற்கு உச்ச வரம்பு கிடையாது. விண்ணப்பதாரர் அரசுத்துறை, தனியார் துறையில் எந்தவிதமான ஊதியம் பெறும் பணியிலோ அல்லது சுயவேலைவாய்ப்பில் ஈடுபடுபவராகவோ இருத்தல் கூடாது. இவர்களுக்கு விண்ணப்பபடிவங்கள் வருகிற 10&ந் தேதி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்பட உள்ளது. மேலும் ஏற்கனவே இத்திட்டத்தில் பயன் பெற்று வரும் பயனாளிகள் தங்களது வேலைவாய்ப்பு பதிவு எண்ணுடன் தங்களது ஆதார் அடையாள எண்ணை இணைத்து கொள்ள வேண்டும். 2018& 2019&ம் நிதியாண்டிற்கு சமர்ப்பிக்க வேண்டிய சுய உறுதி மொழி ஆவணப்படிவத்துடன் வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல் மற்றும் கடந்த செப்டம்பர் மாதம் வரை உரிய குறிப்புகள் இடப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகலுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். #tamilnews
    ×