என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![நாமக்கல் மின்வாரிய அலுவலகத்தில் கட்டு கட்டாக சிக்கிய கணக்கில் வராத பணம் நாமக்கல் மின்வாரிய அலுவலகத்தில் கட்டு கட்டாக சிக்கிய கணக்கில் வராத பணம்](https://media.maalaimalar.com/h-upload/2023/03/16/1850230-04.webp)
நாமக்கல் மின்வாரிய அலுவலகத்தில் கட்டு கட்டாக சிக்கிய கணக்கில் வராத பணம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- லஞ்சம் வாங்கிய அதிகாரிகளையும், கணக்கிற்கு அதிகமாக சொத்து சேர்த்த விபரங்க ளையும் கண்டுபிடித்து நட வடிக்கை எடுத்து வருகின்றனர்.
- அதன்படி, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
நாமக்கல்:
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக, பல்வேறு அரசு அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தி, லஞ்சம் வாங்கிய அதிகாரிகளையும், கணக்கிற்கு அதிகமாக சொத்து சேர்த்த விபரங்க ளையும் கண்டுபிடித்து நட வடிக்கை எடுத்து வருகின் றனர். அதன்படி, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், நாமக்கல் மோகனூர் ரோட்டில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தின், இயக்கமும் பராமரிப்பு செயற்பொறியாளர் அலுவலகம் இயங்கி வரு கிறது. இந்த அலுவலகத்தில் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் துணை காவல் கண்காணிப் பாளர் சுபாஷினி, ஆய்வா ளர் நல்லம்மாள் தலைமை யிலான போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டனர்.
போலீசார் வந்தபிறகு, அலுவலகத்தில் இருந்த யாரையும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. அவர் கள் ஒவ்வொரு பிரிவிலும் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் அலுவலக கோப்பு களை துருவித்துருவி விசா ரணை நடத்தினர். அலுவல கத்தில் பணியில் இருந்த அனைத்து பணியாளர் களிடமும் போலீசார் சோதனை நடத்தினர்.
மாலை தொடங்கிய சோதனை இரவு 10 மணி வரை நடைபெற்றது. சோதனையின் முடிவில் அங்கு கணக்கில் வராத ரொக்கப்பணம் ரூ. 85,900 மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இது குறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். சம்பந்தப்பட்ட மின்துறை அதிகாரிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)