search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காசி விஸ்வேஸ்வரர் கோவில் உண்டியல் திறப்பு
    X

    காசி விஸ்வேஸ்வரர் கோவில் உண்டியல் திறப்பு

    • குமாரபாளையம் காசி விஸ்வேஸ்வரர் கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டது.
    • பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்பட்ட பணம் மற்றும் நாணயங்களை எண்ணப்பட்டது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வரும் குமாரபாளையம் அக்ரஹாரம் லட்சுமிநாராயண சுவாமி மற்றும் காசி விஸ்வேஸ்வர சுவாமி கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் இருந்த, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்பட்ட பணம் மற்றும் நாணயங்கள் எண்ணப்பட்டது. தக்கார் நவீன்ராஜா, ஆய்வர் வடிவுக்கரசி, செயல் அலுவலர் சின்னசாமி, கோவில் எழுத்தர் ஸ்ரீ சைல வெங்கடேச முருகன், அர்ச்சகர் சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் ரொக்கம் மற்றும் நாணயங்கள் சேர்த்து ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 995 ரூபாய் இருந்தது. இந்த தொகையை முறைப்படி அரசிடம் சேர்க்கப்பட்டது.

    Next Story
    ×