என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Assembly Election"
- பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்தது.
- பிரசாரத்துக்கு செலவழித்த தொகை தொடர்பான அறிக்கையை தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பித்துள்ளன.
புதுடெல்லி :
கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்தது.
அவற்றில் தேர்தல் பிரசாரத்துக்கு செலவழித்த தொகை தொடர்பான அறிக்கையை பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பித்துள்ளன.
உத்தரபிரதேசத்தில் ரூ.221 கோடி, உத்தரகாண்டில் ரூ.43 கோடியே 67 லட்சம், பஞ்சாப் மாநிலத்தில் ரூ.36 கோடி, கோவா மாநிலத்தில் ரூ.19 கோடி, மணிப்பூரில் ரூ.23 கோடி என மொத்தம் ரூ.340 கோடி செலவழித்துள்ளதாக பா.ஜனதா கூறியுள்ளது.
காங்கிரஸ் கட்சி ரூ.194 கோடி செலவிட்டதாக தெரிவித்துள்ளது.
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா இடைத்தேர்தல் முடிவு குறித்து பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் சொந்த மாவட்டத்தில் உள்ள ஹனகல் தொகுதியில் பா.ஜனதா தோல்வி அடைந்துள்ளது. அவர் மண்ணின் மகன் என்று உணர்வுபூர்வமாக பேசினார். ஆனால் மக்கள் அவரது பேச்சை நிராகரித்துவிட்டனர். அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைத்துள்ளனர். எடியூரப்பா மற்றும் அவரது மகன் ஆகியோர் 2 தொகுதிகளிலும் தீவிரமாக பிரசாரம் செய்தனர்.
அனைத்து மந்திரிகளும் அந்த தொகுதியில் தங்கி ஓட்டு சேகரித்தனர். ஆனால் மக்கள் காங்கிரசை ஆதரித்துள்ளனர். இதன் மூலம் கர்நாடகத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது தெளிவாக தெரிய வந்துள்ளது. எடியூரப்பா ஆட்சியில் நீடித்து இருந்தாலும் இடைத்தேர்தல் முடிவு இவ்வாறு தான் வந்திருக்கும். பிரதமர் மோடியின் மக்கள் செல்வாக்கு குறைந்து வருகிறது.
பா.ஜனதா எந்தவிதமான வளர்ச்சி பணிகளையும் மேற்கொள்ளவில்லை. வருகிற 2023-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி. நான் முதல்-மந்திரியாக வேண்டும் என்று கட்சியின் தலைவர்கள் யார் வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் கட்சி எம்.எல்.ஏ.க்கள் முடிவு மற்றும் மேலிடத்தின் முடிவே இறுதியானது.
ஹனகல் தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி டெபாசிட் இழந்துள்ளது. தேவேகவுடா 10 நாட்கள் 2 தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டார். அவர் அனுபவம் வாய்ந்த தலைவர். அவரது கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கான காரணம் என்ன என்பதை அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். சிறுபான்மையின மக்கள் ஜனதா தளம் (எஸ்) கட்சியை நம்பவில்லை. அந்த கட்சி ஒரு சந்தர்ப்பவாத கட்சி என்பது அவர்களுக்கு தெரியும்.
மக்களின் பிரச்சினைகள்
இந்த மாத இறுதிக்குள் பெலகாவியில் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரை கூட்ட வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக அங்கு சட்டசபை கூட்டத்தொடர் நடக்கவில்லை. வட கர்நாடக மக்களின் பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அங்கு சுவா்ண சவுதா கட்டப்பட்டது. பிட்காயின் வழக்கில் ஸ்ரீகிருஷ்ணா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் தொடர்புடைய அரசியல்வாதிகள் யார் என்பதை முதல்-மந்திரி கூற வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
ரஜினிகாந்தின் ரசிகர்கள் அவரை அரசியலுக்கு வர சொல்லி அழைப்பதும் அவர் இழுத்தடிப்பதும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது. கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி ரஜினி தன் அரசியல் வருகையை உறுதிப்படுத்தினார்.
தனக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்த ரஜினி ‘அரசியல் கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்தார். இது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி அரசியல் கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கும் பணிகளில் ரஜினி தீவிரம் காட்டினார்.
பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ரஜினி களம் இறங்குவார் என்று எல்லோரும் எதிர் பார்த்தார்கள். ஆனால் அவர் வழக்கம்போல் ‘இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை. அடுத்து வரவுள்ள சட்டசபை தேர்தலில் பார்த்துக்கொள்வோம்’ என்று அறிவித்தார். இது ரஜினி ரசிகர்களிடையே கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
எனவே அடுத்த ஓட்டு ரஜினிக்கே என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்களில் உருவாக்கி டிரெண்ட் செய்ய தொடங்கினார்கள். நேற்று இரவு வரை இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் டிரெண்டிங்கில் இருந்தது.
இந்த முறை வாக்களித்து விட்டேன், அடுத்த முறை கண்டிப்பாக ரஜினிக்குத் தான் என் வாக்கு என்று ரஜினி ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். திடீர் என்று உருவாக்கப்பட்ட இந்த ஹேஷ்டேக், இந்திய அளவில் முதலிடத்துக்கு சென்றது ரஜினி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. #அடுத்த_ஓட்டு_ரஜினிக்கே #Rajinikanth
திருமலை:
திருப்பதியில் உள்ள தாரகராமா விளையாட்டு மைதானத்தில் தெலுங்கு தேசம் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார்.
எப்போது தேர்தல் வந்தாலும் நான் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த பின், தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவது வழக்கம். அதன்படி நான் திருமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தேன். இந்தத் தேர்தலில் மக்கள் ஆதரவோடு நான் வெற்றி பெறுவேன். தேர்தல் தொடர்பாக நான் தினமும் நமது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு வாரிய தலைவர் பதவி, கமிட்டி தலைவர் பதவிகளில் இருப்பவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும். இதுபோல கட்சியின் கடைக்கோடி உறுப்பினர்களுக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் 18 கோரிக்கைகளை முன் வைத்தேன். அதில் அவர் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. போராட்டம் செய்தாலும், மத்திய அரசு தெலுங்கு தேசம் கட்சி மீது அடக்குமுறைகளை கையாள்கிறது. பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்தாலும் தெலுங்கு தேசம் கட்சி அரசு பயப்படாது. தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியின்போது, ஐதராபாத் நகரத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டேன். தற்போது அங்கு முதல்-மந்திரியாக இருக்கும் சந்திரசேகரராவ், என்னை விமர்சனம் செய்து வருகிறார். தெலுங்கு தேசம் கட்சியை எதிர்த்தால், அவருக்கு தகுந்த பாடம் புகட்டுவோம்.
போலவரம் அணை திட்டப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அந்தப் பணிகள் விரைவில் முடியும். போலவரம் அணை திட்டப்பணிகளை எதிர்த்து கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். எனினும் அந்தத் திட்டத்தை முடித்து விரைவில் மக்களுக்குக் குடிநீர் வினியோகம் செய்யப்படும். போலவரம் அணை திட்டப்பணிகள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கும். அமராவதி தலைநகரம் அமைய எங்களை நம்பி விவசாயிகள் 32 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்கினார்கள். ஏழுமலையான் அருளால் தற்போது தலைமைச் செயலகம் கட்டும் பணிகள் உள்பட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.
திருப்பதி ஏழுமலையான் எங்களின் குலதெய்வம். நான் திருப்பதியில் படிக்கும்போதே அரசியலில் குதித்து விட்டேன். அன்று தொடங்கிய எனது அரசியல் பணி, இன்னும் தொடர்கிறது. நான் எப்போதும் ஏழுமலையானை நினைத்துத்தான் எந்தச் செயலையும் செய்வேன். ஏழுமலையானின் அருள் எனக்கு எப்போதும் கிடைக்கும். வெடிகுண்டு வைத்து என்னை கொலை செய்ய முயன்றனர். அதில் நான் ஏழுமலையானின் அருளால் உயிர் தப்பினேன். அவர், என்னை காப்பாற்றி விட்டார். எனினும் நான் ஆந்திராவின் முன்னேற்றத்துக்காகவே பாடுபட்டு வருகிறேன்.
ஆந்திராவில் வயது முதிர்ந்த தம்பதியர் என்னை அவர்களுடைய வீட்டில் ஒரு மூத்த மகனாக கருதுகிறார்கள். எனவே அவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆந்திர மாநில அரசு, அவர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கி வருகிறது. பெண்கள், என்னை ஒரு சகோதரனாக பார்க்கிறார்கள். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு மஞ்சள்-குங்குமம் திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மாநிலத்தில் வேளாண் கடன் ரூ.24 ஆயிரத்து 500 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுபோல எந்த ஒரு மாநிலத்திலும் யாரும் செய்ததில்லை. விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் அண்ணா கேண்டீன் திறக்கப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதத்தில் இருந்து மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவச் சிகிச்சைக்காக அளிக்கப்பட உள்ளது.
மாநிலத்தில் தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாத உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின் கட்டணமும் உயர்த்தப்படவில்லை. மாநிலத்தில் ஏழை எளிய மக்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடியில் வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளது.
ஆந்திர மக்கள் அனைவரும் இணைந்து வாக்களித்து தெலுங்கு தேசம் கட்சியை 150-க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதியிலும், 25 மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற செய்ய வேண்டும். இதுவே என் லட்சியம் என்றார்.
இவ்வாறு அவர் பேசினார்.
நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் குதித்து மக்கள் பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். அரசியல் ரீதியாக விமர்சனமும் செய்து வந்தார்.
அரசியல் ஈடுபாடு காரணமாக தனது ரசிகர்கள் மன்றங்களை ஒருங்கிணைத்து ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி நிர்வாகிகளை நியமித்தார்.
அடிக்கடி மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். ஆனால் முறைப்படி கட்சி தொடங்காமல் தாமதித்து வந்தார்.
அரசியல் ஈடுபாட்டுடன் புதியதாக சினிமா படங்களையும் ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார்.
பாராளுமன்ற தேர்தல் விரைவில் வர இருப்பதால் ரஜினிகாந்த் என்ன நிலைப்பாடு எடுப்பார் என்று எதிர் பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் அவசர ஆலோசனை நடத்தினார். இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடவில்லை, எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை, சட்டசபை தேர்தலே இலக்கு என்று கூறி உள்ளார்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. தமிழக சட்டமன்ற தேர்தல் தான் எங்களது இலக்கு.
நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அதனால் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் என்னுடைய படமோ மன்றத்தின் கொடியோ, எந்தக் கட்சிக்கும் ஆதரவாகவோ, பிரசாரம் செய்வதற்காகவோ யாரும் பயன்படுத்தக்கூடாது.
தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனை தண்ணீர். வர இருக்கும் தேர்தலில், மத்தியில் நிலையான, வலுவான ஆட்சி அமைத்து யார் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனையை நிரந்தரமாக தீர்த்து வைக்கக் கூடிய திட்டங்களை வகுத்து அதை உறுதியாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறீர்களோ, அவர்களுக்கு நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து தவறாமல் வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.#Rajinikanth #RajiniMakkalMandram #LSPolls
ஈரோடு:
பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி பாரதிய ஜனதாவினர் தமிழகத்தை குறிவைத்து கூட்டணி தொடர்பாகவும், தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
நாளை(ஞாயிற்றுக் கிழமை) திருப்பூர் மாவட்டம் பெருமா நல்லூரில் நடக்க உள்ள பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்க மோடி வரும் போது அ.தி.மு.க.-பாரதிய ஜனதா இடையே பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றியும் தொகுதி பங்கீடு குறித்தும் பிரதமர் மோடியும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இடையே பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிரதமர் பங்கேற்க உள்ள பொதுக்கூட்டம் முடிந்ததும் பாரதிய ஜனதாவின் முக்கிய பிரமுகர்கள் தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.
அந்த வகையில் ஈரோடு அருகே உள்ள சித்தோட்டில் பாரதிய ஜனதா கட்சியின் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் வரும் 14-ந் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது.
இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
இந்த தகவலை கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் பவானியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
மேலும் வானதி சீனிவாசன் கூறும் போது, பிரசாரத்துக்காக வரும் அமித்ஷா முன்னதாக நெசவாளர்கள் ஆலோசனை கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். அமித் ஷாவின் வருகையால் பாரதிய ஜனதா தொண்டர்களுக்கு புத்துணர்வை ஏற்படுத்தி உள்ளது.
சித்தோட்டில் நடக்கும் பொதுக்கூட்டம் கொங்கு மண்டல பா.ஜ.க. கூட்டமாக நடக்கும். ஈரோடு, நாமக்கல், திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பிரசார கூட்டமாக இருக்கும் லட்சக்கணக்கான பேர் இதில் கலந்து கொள்வார்கள் என்று கூறினார். #AmitShah #BJP
தெலுங்கானாவில் முதல்- மந்திரி சந்திரசேகரராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு 119 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு முடிகிறது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த 13 தொகுதிகளில் மட்டும் ஓட்டுப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது.
இங்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ்-தெலுங்குதேசம், பாரதீய ஜனதா கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இந்த மாநிலத்தில் இன்று நடக்கிற ஓட்டுப்பதிவுக்கு மாநில போலீசார், துணை ராணுவம், பிற மாநில போலீஸ் படையினர் என சுமார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 446 பறக்கும் படைகள் அமைக் கப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவு முடிகிற வரையில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு கணக்கில் வராத ரூ.129 கோடி, மது சிக்கியது குறிப்பிடத்தக்கது.
முதல்முறையாக இங்கு வாக்காளர்கள், தாங்கள் யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை தெரிந்து கொள்வதற்கான ஒப்புகைச்சீட்டு முறை அமல்படுத்தப்படுகிறது.
2 கோடியே 80 லட்சம் வாக்காளர்களுக்காக 32 ஆயிரத்து 815 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் ஒரு திருநங்கை உள்பட 1,821 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது.
ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. 200 இடங்களை கொண்ட சட்டசபையில், ஒரே ஒரு இடத்தை தவிர 199 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. ராம்கார் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மரணம் அடைந்து விட்டதால் தேர்தல் ஒத்தி போடப்பட்டுள்ளது.
இங்கு தேர்தல்தோறும் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது. எனவே ஆட்சியை தக்க வைக்க பாரதீய ஜனதாவும், கைப்பற்ற காங்கிரசும் கடும் போட்டியில் உள்ளன.
பாரதீய ஜனதாவுக்கு பிரதமர் மோடி, கட்சித்தலைவர் அமித் ஷா, காங்கிரசுக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தானில் 2,274 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி 5 மணிக்கு முடிகிறது.
4 கோடியே 74 லட்சம் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற உள்ளனர். அவர்களுக்காக 51 ஆயிரத்து 687 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
1 லட்சத்து 44 ஆயிரத்து 941 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இரு மாநிலங்களிலும் ஓட்டுச்சாவடிகளுக்கு மின்னணு வாக்கு எந்திரங்கள் போய்ச் சேர்ந்துள்ளன. வாக்குப்பதிவு அதிகாரிகள், ஊழியர்களும் சென்று விட்டனர்.
மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் மாநிலங்களுடன் தெலுங்கானா, ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் 11-ந் தேதி எண்ணப்படுகின்றன. அன்று பிற்பகலில் 5 மாநிலங்களையும் ஆளப்போவது யார் என தெரிய வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. #AssemblyElection #Rajasthan #Telangana
சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல் நிறைவடைந்திருக்கும் நிலையில், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் சட்டசபை தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. 2 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுவதால், இன்று மாலை 5.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் கமிஷன் தடை விதித்து உள்ளது.
அந்தவகையில், மின்னணு அல்லது அச்சு ஊடகங்கள் வாயிலாக எந்தவிதமான கருத்துக்கணிப்பும் வெளியிடக்கூடாது என தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதைப்போல கருத்துக்கணிப்பு தொடர்பாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் நடைபெறும் தேர்தல் தொடர்பான போராட்டங்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஐதராபாத் மற்றும் ஹாமம் பகுதிகளில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு சந்திரபாபு நாயுடு பேசுகையில், ‘ஓட்டு போட்டவுடன் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தீர்களோ? அது எந்திரத்தில் தெரியும். இதனை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் வாக்குப்பதிவு எந்திரத்தை சிலர் தவறாக பயன்படுத்த இயலும். எனவே வாக்காளர்கள் கவனமாக இருக்க வேண்டும். வாக்குப்பதிவு எந்திரம் சரியாக வேலை செய்யவில்லை என்றால் தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவிக்கலாம்’ என்று தெரிவித்தார். ChandrababuNaidu #TelanganaAssemblyElections
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்