search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெலுங்கானாவில் பிரதமர் மோடி நாளை பிரச்சாரம்
    X

    தெலுங்கானாவில் பிரதமர் மோடி நாளை பிரச்சாரம்

    தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி நாளை பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். #TelanganaAssemblyElections #BJP #PMModi
    ஐதராபாத்:

    119 இடங்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

    சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது. பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. வாக்குப்பதிவுக்கு சில நாட்களே உள்ள நிலையில் இங்கு தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.

    பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் உத்தரப்பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் இன்று தெலுங்கானா மாநிலத்தில் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஐதராபாத்தில் நடைபெறவுள்ள பிரச்சார கூட்டத்தில் பேசி பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    டெல்லியில் இருந்து தெலுங்கானா மாநிலம் பேகம்பேட் விமான நிலையத்துக்கு நாளை வருகை தரும் மோடி, ஐதராபாத்தில் உள்ள லால் பகதூர் சஸ்திரி மைதானத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகிறார் என அம்மாநில பாஜக செய்தி தொடர்பாளர் கிருஷ்ண சாகர் ராவ் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே, கடந்த வாரம் தெலுங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் மற்றும் மஹபூப்நகரில் நடைபெற்ற பிரச்சார கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியது குறிப்பிடத்தக்கது. #TelanganaAssemblyElections #BJP #PMModi
    Next Story
    ×