search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குப்பதிவு எந்திரத்தை தவறாக பயன்படுத்த இயலும்: சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை
    X

    வாக்குப்பதிவு எந்திரத்தை தவறாக பயன்படுத்த இயலும்: சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை

    வாக்குப்பதிவு எந்திரம் சரியாக வேலை செய்யவில்லை என்றால் தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவிக்கலாம் என்று ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ChandrababuNaidu #TelanganaAssemblyElections
    ஐதராபாத் :

    தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    ஐதராபாத் மற்றும் ஹாமம் பகுதிகளில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு சந்திரபாபு நாயுடு பேசுகையில், ‘ஓட்டு போட்டவுடன் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தீர்களோ? அது எந்திரத்தில் தெரியும். இதனை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஆனால் வாக்குப்பதிவு எந்திரத்தை சிலர் தவறாக பயன்படுத்த இயலும். எனவே வாக்காளர்கள் கவனமாக இருக்க வேண்டும். வாக்குப்பதிவு எந்திரம் சரியாக வேலை செய்யவில்லை என்றால் தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவிக்கலாம்’ என்று தெரிவித்தார். ChandrababuNaidu #TelanganaAssemblyElections
    Next Story
    ×