search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Telangana election"

    • வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோது சந்தித்ததால் சஸ்பெண்ட் நடவடிக்கை.
    • அவரது நடத்தை ஜூனியர் அதிகாரிகளை மறைமுகமாக பாதிக்கலாம், தேர்தல் விதிமுறையை மீறியதாக தேர்தல் ஆணையம் கருதியது.

    தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மாதம் 30-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த 3-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வந்தது.

    காங்கிரஸ் கட்சி வெற்றி அதிகாரப்பூர்வமாக ஆட்சியை பிடிக்கிறது என்ற அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே தெலுங்கானா டி.ஜி.பி. அஞ்சனி குமார், காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டவருமான ரேவந்த் ரெட்டியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

    இவரது நடவடிக்கை தேர்தல் நடத்தை விதிமுறையை மீறிய செயல் என தேர்தல் கமிஷன் அவரை சஸ்பெண்ட் செய்தது. இதனால் ஐபிஎஸ் அதிகாரி ரவி குப்தா கூடுதலாக டிஜிபி பொறுப்பை ஏற்றிருந்தார். இந்த நிலையில் அஞ்சனி குமார் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது.

    இவரது சஸ்பெண்ட் நடவடிக்கைக்குப்பின் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மைக்கான இடத்தை பிடித்தது. பின்னர், ரேவந்த் ரெட்டி காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.-க்களால் முதல்வராக தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவரது நடத்தை ஜூனியர் அதிகாரிகளை மறைமுகமாக பாதிக்கலாம் என்று கருதிய தேர்தல் ஆணையம், டிஜிபி-யின் செயல் தெளிவான தேர்தல் விதிமுறை மீறல் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

    • காலை 9 மணி நிலவரப்படி 8.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.
    • 11 மணி நிலவரப்படி 20.64 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பிஆர்எஸ், காங்கிரஸ், பா.ஜனதா இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. என்றபோதிலும், காங்கிரஸ்- பிஆர்எஸ் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

    பிஆர்எஸ் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க தேர்தல் பணியில் முழுக்கவனம் செலுத்தியது. அதேவேளையில் கர்நாடகாவில் ஆட்சியை பிடித்ததுபோன்று, தெலுங்கானாவிலும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது.

    தெலுங்கானாவில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து வாக்காளர்கள், பிரபலங்கள், நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். காலை 9 மணி நிலவரப்படி 8.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. அதன்பின் அதிக அளவில் வாக்குகள் பதிவாகினது. 11 மணி நிலவரப்படி 20.64 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    தொடர்ந்து, 3 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 51.89 சதவீத வாக்குகள் பதிவாகின.

    இந்நிலையில், தெலங்கானாவில் சட்டசபை தேர்வதுலக்கான வாக்குப்பதிவு முடிவடைந்தது. 5 மணி வரை வாக்குச்சாவடியில் இருந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் அளித்து வாக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டது.

    அதன்படி, 5 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 63.94 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பா.ஜனதா கூட்டணியில் ஏற்கனவே தெலுங்கு தேசம் அங்கம் வகித்துள்ளது
    • தெலுங்கானா சட்டசபை தேர்தலை இணைந்து சந்திக்க வாய்ப்பு இருக்கலாம் எனத் தகவல்

    ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷாவை சந்தித்துள்ளார். மேலும், பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டாவையும் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நடந்துள்ளது.

    இந்த சந்திப்பால் தெலுங்கு தேசம் கட்சி பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாம் எனத் தெரிகிறது. இந்த வருடம் இறுதியில் தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்பின் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

    தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    2014 தேர்தலின்போது என்.டி.ஏ. கூட்டணியில் தெலுங்குதேசம் கட்சி ஒரு பகுதியாக இருந்தது. 2019-ம் தேர்தலுக்கு முன் 2018-ல் கூட்டணியில் இருந்து வெளியேறியது. இருந்தாலும், போர்ட் பிளேயர் நகராட்சி தேர்தலின்போது இரண்டு கட்சிகளும் இணைந்து களம் இறங்கின.

    கடந்த மாதம் நடைபெற்ற மன் கி பாத் நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சி நிறுவனரும், முன்னாள் முதல்வருடம் ஆன என்.டி. ராமராவ் குறித்து நினைவு கூர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் கட்சி 88 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.

    ஈரோடு அருகே சித்தோட்டில் கொங்கு மண்டல பா.ஜனதா தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்கிறார். #AmitShah #BJP

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி பாரதிய ஜனதாவினர் தமிழகத்தை குறிவைத்து கூட்டணி தொடர்பாகவும், தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நாளை(ஞாயிற்றுக் கிழமை) திருப்பூர் மாவட்டம் பெருமா நல்லூரில் நடக்க உள்ள பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

    இந்த கூட்டத்தில் பங்கேற்க மோடி வரும் போது அ.தி.மு.க.-பாரதிய ஜனதா இடையே பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றியும் தொகுதி பங்கீடு குறித்தும் பிரதமர் மோடியும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இடையே பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    பிரதமர் பங்கேற்க உள்ள பொதுக்கூட்டம் முடிந்ததும் பாரதிய ஜனதாவின் முக்கிய பிரமுகர்கள் தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

    அந்த வகையில் ஈரோடு அருகே உள்ள சித்தோட்டில் பாரதிய ஜனதா கட்சியின் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் வரும் 14-ந் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த தகவலை கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் பவானியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

    மேலும் வானதி சீனிவாசன் கூறும் போது, பிரசாரத்துக்காக வரும் அமித்ஷா முன்னதாக நெசவாளர்கள் ஆலோசனை கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். அமித் ஷாவின் வருகையால் பாரதிய ஜனதா தொண்டர்களுக்கு புத்துணர்வை ஏற்படுத்தி உள்ளது.

    சித்தோட்டில் நடக்கும் பொதுக்கூட்டம் கொங்கு மண்டல பா.ஜ.க. கூட்டமாக நடக்கும். ஈரோடு, நாமக்கல், திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பிரசார கூட்டமாக இருக்கும் லட்சக்கணக்கான பேர் இதில் கலந்து கொள்வார்கள் என்று கூறினார். #AmitShah #BJP

    இன்னும் 25 அல்லது 30 ஆண்டுகளுக்கு பிறகு மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வர காங்கிரசுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி கிண்டலாக கூறினார். #Modicampaign #Telanganapolls #MPpolls
    பில்வாரா:

    முதல்-மந்திரி வசுந்தரா ராஜே தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தற்போது அங்கு தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.

    அங்குள்ள ஆல்வார் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாரதீய ஜனதா தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி காங்கிரசை கடுமையாக தாக்கினார். வேறு பிரச்சினைகள் இல்லாததால் அந்த கட்சி தன் மீது சேற்றை வாரி வீசுவதாக குற்றம்சாட்டினார்.

    நேற்று பில்வாரா, பனேஷ்வர்தாம், கோட்டா ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:-



    காங்கிரஸ் கட்சி தனது ஆட்சிக்காலத்தில் கிராமப்புற மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பெரிய அளவில் எதுவும் செய்துவிடவில்லை. விவசாய விளைபொருட்களுக்கு போதிய குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்கி இருக்கலாம். பயிர் காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் அரசு செய்யவில்லை. காங்கிரஸ் கட்சி 55 ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்டு இருக்கிறது. ஆனால் கிராமங்களுக்கு குடிநீர், மின்சாரம், சாலைகள், கழிவறை வசதிகள் கிடைக்கவில்லை.

    கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் பாரதீய ஜனதா பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது. ஏழைகளுக்கு வங்கி கணக்குகளை தொடங்கி இருக்கிறோம். கிராமப்புறங்களில் கழிவறைகளை கட்டி இருக்கிறோம். வீடுகளுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கி இருக்கிறோம். 36 ஆயிரம் கிலோ மீட்டர் நீள தார்ச்சாலைகளை அமைத்து இருக்கிறோம்.

    இன்னும் 25 அல்லது 30 ஆண்டுகளில் மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வர காங்கிரசுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். (இதை அவர் கிண்டலாக கூறினார்.) அப்படி ஆட்சிக்கு வந்தால், சாலைகளுக்கு தார் கூட போட முடியாத நிலையில்தான் அவர்கள் இருப்பார்கள்.

    2022-ம் ஆண்டில் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது நாட்டில் உள்ள அனைவருக்கும் வீடு கிடைப்பதை எனது அரசாங்கம் உறுதி செய்யும்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் பாரதீய ஜனதா அரசு பல்வேறு மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறது. இந்த மாநிலம் தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் செல்ல மக்கள் பாரதீய ஜனதாவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும்.

    எனது அரசின் தலைமையிலான ராணுவம் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ந் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி நாசப்படுத்தியது. இதில் ஏராளமான பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். ஆனால் இதை நம்பாமல் காங்கிரஸ் ஆதாரம் கேட்கிறது. இதற்காக கமாண்டோ படையினர் கேமராக்களையா, உடன் கொண்டு செல்ல முடியும்?...

    அதேநேரம், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான் 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் மும்பை நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி ஏராளமானோரை கொன்று குவித்தனர். ஆனால் இப்போது காங்கிரஸ் துல்லிய தாக்குதல் பற்றி சந்தேகத்துடன் கேள்வி கேட்கிறது.

    பயங்கரவாதிகளுக்கும், நக்சலைட்டுகளுக்கும் எனது அரசு தக்க பதிலடி கொடுக்கிறது. ஆனால் நக்சலைட்டுகளை காங்கிரஸ் புரட்சியாளர்கள் என்று அழைப்பதுடன் அவர்களை பாராட்டவும் செய்கிறது.

    மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வருவதற்கு முன், மக்கள் நல திட்டங்கள் என்ற பெயரில் அரசுப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது. விதவைகள் ஓய்வூதியம், கல்வி உதவித் தொகை, மானியம், பெண்குழந்தைகள் ஆதரவு திட்டம் போன்ற பல்வேறு வகைகளில் போலியான குழுக்கள், முகமைகள், நிறுவனங்கள் மூலம் ரூ.90 ஆயிரம் கோடியை சுருட்டி இருக்கிறார்கள். பயனாளிகள் என்று போலியான பெயர்களை உருவாக்கி அவர்களுக்கு பணம் வழங்கியதாக மோசடி செய்து உள்ளனர். பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு இந்த மோசடி தடுத்து நிறுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நேற்று காலை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் மும்பை தாக்குதல் பற்றி வேதனையுடன் நினைவுகூர்ந்து இருந்தார்.

    அதில், “மும்பை கொடூர தாக்குதலில் தங்களது உயிரை இழந்தோருக்கு வீர வணக்கம். நமது ஒற்றுமை என்றும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருடனேயே இருக்கும். பயங்கரவாதிகளை எதிர்த்து தீரத்துடன் சண்டையிட்ட போலீசார், பாதுகாப்பு படையினர் ஆகியோருக்கும் இந்த நாடு தலை வணங்குகிறது” என்று குறிப்பிட்டார். #Modicampaign #Telanganapolls #MPpolls 
    சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ள தெலுங்கானா மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாளை இரு பிரசார கூட்டங்களில் பேசி பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். #Modicampaign #Telanganapolls
    ஐதராபாத்:

    119 இடங்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கானா ராஷ்டரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

    சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது. பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

    பா.ஜ.க. தலைவர் அமித் ஷா நேற்று 4  பிரசார கூட்டங்களில் பேசிச் சென்றுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை இரு பிரசார கூட்டங்களில் பேசி பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    டெல்லியில் இருந்து தெலுங்கானாவுக்கு நாளை வருகைதரும் மோடி, முதலில் நிஜாமாபாத் பிரசார கூட்டத்திலும், பின்னர் பிற்பகல் 2.30 மணியளவில் மஹபூப்நகரில் நடைபெறும் பிரசார கூட்டத்திலும் உரையாற்றுகிறார் என அம்மாநில பா.ஜ.க. தலைவர் கே.லக்‌ஷ்மன் தெரிவித்துள்ளார். #Modicampaign #Telanganapolls
    சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ள தெலுங்கானா மாநிலத்தில் நாளை சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா 4 பொதுக்கூட்டங்களில் பேசி வாக்கு சேகரிக்கிறார். #AmitShah #Telanganaelection
    ஐதராபாத்:

    119 இடங்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கானா ராஷ்டரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

    சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது. கலைக்கப்பட்ட சட்டசபையில் 5 உறுப்பினர்களை மட்டுமே பெற்றிருந்த பா.ஜ.க. இந்த தேர்தலில் தனித்து களமிறங்கியுள்ளது.

    வாக்குப்பதிவுக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.


    இந்நிலையில்,  நாளை (ஞாயிற்றுக்கிழமை ) இங்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா  பொதுக்கூட்டங்களில் பேசி வாக்கு சேகரிக்கிறார்.

    பரக்கலா, நிர்மல், நாராயணகெட் மற்றும் டுபாக்கா பகுதிகளில் நடைபெறும் பிரசார கூட்டங்களில் பங்கேற்று பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார்.

    கடந்த மாதம் 15-ம் தேதி இங்குள்ள மஹபூப்நகர் பகுதியில் தனது முதல்கட்ட பிரசாரத்தை தொடங்கிய அமித் ஷா, வரும் 28 மற்றும் டிசம்பர் 2-ம் தேதி மேலும்  சில பகுதிகளில் பிரசாரம் செய்து ஆதரவு திரட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #AmitShah  #Telanganaelection
    தெலுங்கானாவில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஐதராபாத் பெயரை பாக்யா நகர் என்று மாற்றுவோம் என தேர்தல் பிரசாரத்தில் ராஜாசிங் தெரிவித்துள்ளார். #BJP #TelanganaElection2018
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 7-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    இதில், பாரதிய ஜனதா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. மாநில பா.ஜ.க. மூத்த தலைவரும், கலைக்கப்பட்ட சட்டசபையின் எம்.எல்.ஏ.வுமான ராஜாசிங் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    தெலுங்கானாவில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தின் வளர்ச்சி பணிக்கு முதல் முக்கியத்துவம் கொடுப்போம்.

    அடுத்து 2-வது முக்கியத்துவமாக மாநிலத்தின் பல்வேறு நகரங்களின் பெயர்களும் மாற்றப்படும்.

    ஐதராபாத் பெயரை பாக்யா நகர் என்று மாற்றுவோம். இந்த நகரத்துக்கு 16-ம் நூற்றாண்டுக்கு முன்பு பாக்யா நகர் என்றுதான் பெயர் இருந்தது.

    அப்போது இந்த பகுதியை கைப்பற்றி ஆட்சி நடத்திய குதிப் ‌ஷகாதீஸ், நகரத்தின் பெயரை ஐதராபாத் என்று மாற்றினார். எனவே, பழைய பெயரையே மீண்டும் சூட்டுவோம்.

    இதேபோல் செகந்திரா பாத், கரீம்நகர் மற்றும் பல்வேறு நகரங்களின் பெயர்களும் மாற்றப்பட்டு இந்த மாநிலத்துக்காகவும், நாட்டுக்காகவும் உழைத்த தலைவர்கள் பெயரை சூட்டுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #TelanganaElection2018
    தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் விவசாயிகள் கடனை ஒரே மூச்சில் தள்ளுபடி செய்வோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். #RahulGandhi #Congress
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநில சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க அம்மாநில முதல் மந்திரி சந்திரசேகர ராவ் தீர்மானித்தார். இதையொட்டி, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநில தேர்தலுக்கான அறிவிப்புடன் தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்தது.
     
    டிசம்பர் மாதம் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக உள்ளன.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தெலுங்கானா மாநிலத்தில் இரு இடங்களில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பங்கேற்று ஆதரவு திரட்டினார்.

    அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள பைன்ஸா நகரம் மற்றும் காமாரெட்டி மாவட்டத்தில் சார்மினார் அருகே நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார்.

    நிர்மல் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி தெலுங்கானாவில் விரைவில் மாற்றம் வரும். டெல்லியில் மோடியின் ஆட்சியும், தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆட்சியும் தூக்கி எறியப்படும் என்று குறிப்பிட்டார்.



    நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. தங்களது விளைபொருள்களுக்கன ஆதார விலை கிடைக்காததால் தெலுங்கானா மாநிலத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.

    நான் போலியான பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பதற்காக இங்கு வரவில்லை. பொய்யான வாக்குறுதிகளை கேட்க வேண்டும் என்றால் நீங்கள் மோடி அல்லது சந்திரசேகர ராவ் பேசும் கூட்டத்துக்கு செல்ல வேண்டும்.

    இந்த தேர்தலில் நாங்கள் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் விவசாயிகள் கடன் 2 லட்சம் ரூபாயை ஒரே தவணையில் தள்ளுபடி செய்வோம். அதுமட்டுமின்றி, பருத்தி கொள்முதல் விலை குவின்ட்டாலுக்கு 7 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பழங்குடியினரின் நிலங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். பழங்குடியினர் மற்றும் வனப்பகுதிகளில் வாழ்பவர்களுக்கான உரிமைகளை பாதுகாக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்படும். வேலையில்லாத வாலிபர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படும் என ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார்.

    தெலுங்கானாவில் அம்பேத்கர் பெயரால் உருவாக்கப்பட்ட திட்டத்தை  சந்திரசேகர ராவ் மாற்றி விட்டார். 38 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தீட்டப்பட்ட இந்த திட்டம் ஊழல் செய்யும் நோக்கத்தில் தற்போது ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் ராஜீப் சாகர், இந்திரா சாகர் திட்டங்களின் மதிப்பும் உயர்த்தப்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் முதல் மந்திரி சந்திரசேகர ராவின் ஊழல்தான் பெரிதாக தெரிகிறது. இதன் பலன்களை அவரது குடும்பத்தாரும், நண்பர்களும், உறவினர்களும் அனுபவித்து வருகின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

    இதைதொடர்ந்து, ஐதராபாத் கூட்டத்தில் பேசிய ராகுல், நாட்டை பிளவுப்படுத்த முதல்முறையாக ஒரு பிரதமர் முயற்சித்து வருகிறார். இன்று நாடு இருக்கும் நிலையில் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதற்கு பயப்படுகின்றனர். பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார். #RahulGandhi #Congress
    வருகிற 20-ந்தேதி தெலுங்கானாவில் ராகுல் முதல் கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார். அன்று அவர் அடிலாபாத் மற்றும் காமரெட்டி மாவட்டங்களில் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் செய்கிறார். #Congress #Rahulgandhi
    தெலுங்கானா:

    தெலுங்கானாவில் டிசம்பர் மாதம் 7-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் தீவிரம் காட்ட தொடங்கி உள்ளார். இதற்காக அவர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளார். வேட்பாளர் தேர்வு நடந்து வரும் நிலையில் அங்கு இப்போதே பிரசாரத்தை தொடங்கி விட ராகுல் முடிவு செய்துள்ளார். வருகிற 20-ந்தேதி தெலுங்கானாவில் ராகுல் முதல் கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார். அன்று அவர் அடிலாபாத் மற்றும் காமரெட்டி மாவட்டங்களில் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் செய்கிறார். அடுத்தக்கட்டமாக 27-ந்தேதி மீண்டும் தெலுங்கானாவுக்கு வர உள்ளார். அப்போது கரீம்நகர், வாராங்கல் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    தெலுங்கானாவுக்கு வரும் ஒவ்வொரு முறையும் குறைந்தது 5 பொதுக்கூட்டங்களில் பேச ராகுல் தீர்மானித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் தலைவர்கள் செய்து வருகிறார்கள். அடுத்த மாதம் இறுதியில் சுமார் ஒரு வாரம் தெலுங்கானாவில் தங்கியிருந்து தீவிர பிரசாரம் செய்ய ராகுல் வியூகம் வகுத்துள்ளார். #Congress #Rahulgandhi 
    நடிகை விஜயசாந்தி தெலுங்கானா பிரசார களத்தில் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்துடன் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று ராகுல் அறிவித்துள்ளார். #Congress #RahulGandhi #Vijayashanti
    ஐதராபாத்:

    தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் ஆட்சி நடந்து வந்தது.

    அங்கு முன் கூட்டியே தேர்தலை சந்திக்கும் வகையில் சமீபத்தில் சட்டசபையை சந்திரசேகரராவ் கலைத்தார். இதனால் தெலுங்கானா மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடத்த தலைமை தேர்தல் கமி‌ஷன் தயாராகி வருகிறது.

    தெலுங்கானாவில் இப்போது தேர்தல் நடந்தால் சந்திரசேகரராவ் அமோக வெற்றி பெறுவார் என்று அடுத்தடுத்து வந்த கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்தது. தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சிக்கு பா.ஜ.க. ஆதரவு அளிக்கும் என்று தெரிகிறது.


    இதையடுத்து காங்கிரஸ் கட்சியும் தெலுங்கானா தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. தெலுங்கானா காங்கிரசாரை உற்சாகப்படுத்தும் வகையில் புதிய கமிட்டிகளை உருவாக்கி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அறிவித்துள்ளார்.

    மொத்தம் 10 குழுக்களை ராகுல்காந்தி உருவாக்கி இருக்கிறார். பிரசார கமிட்டி தலைவராக மல்லுப்பட்டி விக்ரமர்கா அறிவிக்கப்பட்டுள்ளார்.

    தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் உத்தம்குமார் ரெட்டி தலைமையில் 14 பேர் கொண்ட தேர்தல் கமிட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பொறுப்பை முன்னாள் துணை முதல்-மந்திரி ராஜ நரசிம்மாவிடம் ராகுல் ஒப்படைத்துள்ளார்.

    தேர்தல் பிரசார ஒருங்கிணைப்பு குழுவில் மொத்தம் 50 தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். யார்-யார் பிரசாரம் செய்ய வேண்டும் என்ற பட்டியலையும் ராகுல் அறிவித்துள்ளார்.

    நடிகை விஜயசாந்திக்கு பிரசாரத்தில் முக்கியத்துவம் அளிக்க ராகுல் உத்தரவிட்டுள்ளார். விஜயசாந்தி தெலுங்கானா பிரசார களத்தில் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்துடன் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று ராகுல் அறிவித்துள்ளார்.

    இதனால் தெலுங்கானா காங்கிரசார் உற்சாகம் அடைந்துள்ளனர். #Congress #RahulGandhi #Vijayashanti
    ×