search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "modi campaign"

    உத்தர பிரதேசத்தை உத்தம பிரதேசமாக மாற்றுவதற்கு பாஜகவுக்கு மீண்டும் ஆதரவு அளிக்கும்படி பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். #ModiCampaign #LokSabhaElections2019
    மீரட்:

    உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரம் செய்தார். பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கு வந்து உங்கள் அன்பையும் ஆசீர்வாதத்தையும் கேட்டேன். என் மீது மிகுந்த அன்பு செலுத்தி ஆதரித்தீர்கள். இந்த அன்பையும் ஆசீர்வாதத்தையும் திரும்ப தருவதாக கூறினேன். நான் செய்த பணிகள் தொடர்பான அறிக்கையை உங்கள் முன் வைப்பதாகவும் கூறினேன்.

    உங்களின் ஆதரவினால் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டோம். நாங்கள் செய்த பணிகளை மக்களுக்கு தெரிவிக்கிறோம். முந்தைய ஆட்சியாளர்கள் செய்ததையும், செய்யாதவற்றையும் எடுத்துக் கூறுகிறோம். நாங்கள் வளர்ச்சிகான பாதையில் செல்கிறோம். ஆனால், மற்றவர்களிடம் அதற்கான கொள்கை எதுவும் இல்லை.

    இதனை கணக்கில் கொண்டு, வரும் தேர்தலில் யாரை பிரதமராக தேர்வு செய்யவேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். மோடி அரசுதான் மீண்டும் வரப்போகிறது என மக்கள் நினைத்துவிட்டனர். இங்கு திரண்டிருக்கும் மக்களே அதற்கு சாட்சி.



    இரண்டாவது முறை எங்களுக்கு ஆதரவு கொடுங்கள். உத்தர பிரதேசத்தை உத்தம பிரதேசமாக மாற்ற எங்களுக்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #ModiCampaign #LokSabhaElections2019
    மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் 6-ம் தேதி சென்னை வர உள்ளார். மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்று பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #LSPolls #Modi #ModiCampaign
    சென்னை:

    மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஆளும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தேமுதிகவை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியும் நடைபெறுகிறது. இதற்கான பேச்சுவார்த்தையை அதிமுக தலைவர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் 1-ம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை தர உள்ளார். கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் 1-ம் தேதி மதியம் நடைபெறும் அரசு விழாவில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார். பின்னர் அருகே அமைக்கப்பட்டுள்ள மற்றொரு மேடையில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இவ்விழாவில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிரதமரின் பிரச்சார திட்டம் குறித்து அவர் கூறியதாவது:-

    தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 1-ம் தேதி கன்னியாகுமரிக்கு வருகிறார். அதன்பின் சென்னைக்கு மார்ச் 6-ம் தேதி அவர் வருகிறார். பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தொண்டர்கள் முன் பேசுகிறார்.



    கூட்டணியில் சேருவதற்கு தே.மு.தி.க.விற்கு உரிய மரியாதை தரப்பட்டது. கூட்டணிக்கு வந்தால் உரிய மரியாதை அளிக்கப்படும் என்று எங்கள் கட்சி தலைவர்களும் கூறியிருக்கிறார்கள். எங்களைப் பொருத்தவரை நல்ல கூட்டணி அமைய வேண்டும். எண்ணிக்கை முக்கியமில்லை. இதற்காக சில இடங்களை விட்டுக்கொடுத்தாலும் பரவாயில்லை என்று நினைக்கிறோம்.

    விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.2 ஆயிரம் நிதியுதவி அவர்களுக்கு பலன் தரும்.  தேவையான வேளாண் பொருட்களை அவர்கள் வாங்குவதற்கு ஏற்ற வகையில் ஊக்க தொகையாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மோடி சென்னை வரும்போது, காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுவார் என்றும், சங்கர மடத்திற்கு சென்று சங்கராச்சாரியாரை சந்தித்து ஆசி பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மோடி பங்கேற்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தை காஞ்சிபுரத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

    பிரதமர் மோடி சென்னை வருவதற்கு முன்னதாகவே கூட்டணி இறுதி செய்யப்படும் என்றும், பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் கூட்டணிக் கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்று பேசுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினமே கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது இறுதி செய்யப்படலாம். #LSPolls #Modi #ModiCampaign

    இன்னும் 25 அல்லது 30 ஆண்டுகளுக்கு பிறகு மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வர காங்கிரசுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி கிண்டலாக கூறினார். #Modicampaign #Telanganapolls #MPpolls
    பில்வாரா:

    முதல்-மந்திரி வசுந்தரா ராஜே தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தற்போது அங்கு தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.

    அங்குள்ள ஆல்வார் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாரதீய ஜனதா தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி காங்கிரசை கடுமையாக தாக்கினார். வேறு பிரச்சினைகள் இல்லாததால் அந்த கட்சி தன் மீது சேற்றை வாரி வீசுவதாக குற்றம்சாட்டினார்.

    நேற்று பில்வாரா, பனேஷ்வர்தாம், கோட்டா ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:-



    காங்கிரஸ் கட்சி தனது ஆட்சிக்காலத்தில் கிராமப்புற மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பெரிய அளவில் எதுவும் செய்துவிடவில்லை. விவசாய விளைபொருட்களுக்கு போதிய குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்கி இருக்கலாம். பயிர் காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் அரசு செய்யவில்லை. காங்கிரஸ் கட்சி 55 ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்டு இருக்கிறது. ஆனால் கிராமங்களுக்கு குடிநீர், மின்சாரம், சாலைகள், கழிவறை வசதிகள் கிடைக்கவில்லை.

    கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் பாரதீய ஜனதா பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது. ஏழைகளுக்கு வங்கி கணக்குகளை தொடங்கி இருக்கிறோம். கிராமப்புறங்களில் கழிவறைகளை கட்டி இருக்கிறோம். வீடுகளுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கி இருக்கிறோம். 36 ஆயிரம் கிலோ மீட்டர் நீள தார்ச்சாலைகளை அமைத்து இருக்கிறோம்.

    இன்னும் 25 அல்லது 30 ஆண்டுகளில் மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வர காங்கிரசுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். (இதை அவர் கிண்டலாக கூறினார்.) அப்படி ஆட்சிக்கு வந்தால், சாலைகளுக்கு தார் கூட போட முடியாத நிலையில்தான் அவர்கள் இருப்பார்கள்.

    2022-ம் ஆண்டில் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது நாட்டில் உள்ள அனைவருக்கும் வீடு கிடைப்பதை எனது அரசாங்கம் உறுதி செய்யும்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் பாரதீய ஜனதா அரசு பல்வேறு மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறது. இந்த மாநிலம் தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் செல்ல மக்கள் பாரதீய ஜனதாவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும்.

    எனது அரசின் தலைமையிலான ராணுவம் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ந் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி நாசப்படுத்தியது. இதில் ஏராளமான பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். ஆனால் இதை நம்பாமல் காங்கிரஸ் ஆதாரம் கேட்கிறது. இதற்காக கமாண்டோ படையினர் கேமராக்களையா, உடன் கொண்டு செல்ல முடியும்?...

    அதேநேரம், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான் 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் மும்பை நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி ஏராளமானோரை கொன்று குவித்தனர். ஆனால் இப்போது காங்கிரஸ் துல்லிய தாக்குதல் பற்றி சந்தேகத்துடன் கேள்வி கேட்கிறது.

    பயங்கரவாதிகளுக்கும், நக்சலைட்டுகளுக்கும் எனது அரசு தக்க பதிலடி கொடுக்கிறது. ஆனால் நக்சலைட்டுகளை காங்கிரஸ் புரட்சியாளர்கள் என்று அழைப்பதுடன் அவர்களை பாராட்டவும் செய்கிறது.

    மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வருவதற்கு முன், மக்கள் நல திட்டங்கள் என்ற பெயரில் அரசுப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது. விதவைகள் ஓய்வூதியம், கல்வி உதவித் தொகை, மானியம், பெண்குழந்தைகள் ஆதரவு திட்டம் போன்ற பல்வேறு வகைகளில் போலியான குழுக்கள், முகமைகள், நிறுவனங்கள் மூலம் ரூ.90 ஆயிரம் கோடியை சுருட்டி இருக்கிறார்கள். பயனாளிகள் என்று போலியான பெயர்களை உருவாக்கி அவர்களுக்கு பணம் வழங்கியதாக மோசடி செய்து உள்ளனர். பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு இந்த மோசடி தடுத்து நிறுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நேற்று காலை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் மும்பை தாக்குதல் பற்றி வேதனையுடன் நினைவுகூர்ந்து இருந்தார்.

    அதில், “மும்பை கொடூர தாக்குதலில் தங்களது உயிரை இழந்தோருக்கு வீர வணக்கம். நமது ஒற்றுமை என்றும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருடனேயே இருக்கும். பயங்கரவாதிகளை எதிர்த்து தீரத்துடன் சண்டையிட்ட போலீசார், பாதுகாப்பு படையினர் ஆகியோருக்கும் இந்த நாடு தலை வணங்குகிறது” என்று குறிப்பிட்டார். #Modicampaign #Telanganapolls #MPpolls 
    சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ள தெலுங்கானா மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாளை இரு பிரசார கூட்டங்களில் பேசி பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். #Modicampaign #Telanganapolls
    ஐதராபாத்:

    119 இடங்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கானா ராஷ்டரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

    சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது. பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

    பா.ஜ.க. தலைவர் அமித் ஷா நேற்று 4  பிரசார கூட்டங்களில் பேசிச் சென்றுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை இரு பிரசார கூட்டங்களில் பேசி பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    டெல்லியில் இருந்து தெலுங்கானாவுக்கு நாளை வருகைதரும் மோடி, முதலில் நிஜாமாபாத் பிரசார கூட்டத்திலும், பின்னர் பிற்பகல் 2.30 மணியளவில் மஹபூப்நகரில் நடைபெறும் பிரசார கூட்டத்திலும் உரையாற்றுகிறார் என அம்மாநில பா.ஜ.க. தலைவர் கே.லக்‌ஷ்மன் தெரிவித்துள்ளார். #Modicampaign #Telanganapolls
    ×