என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தெலுங்கானாவில் ராகுல் 20-ந்தேதி பிரசாரம்
Byமாலை மலர்12 Oct 2018 10:34 AM GMT (Updated: 12 Oct 2018 10:34 AM GMT)
வருகிற 20-ந்தேதி தெலுங்கானாவில் ராகுல் முதல் கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார். அன்று அவர் அடிலாபாத் மற்றும் காமரெட்டி மாவட்டங்களில் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் செய்கிறார். #Congress #Rahulgandhi
தெலுங்கானா:
தெலுங்கானாவில் டிசம்பர் மாதம் 7-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் தீவிரம் காட்ட தொடங்கி உள்ளார். இதற்காக அவர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளார். வேட்பாளர் தேர்வு நடந்து வரும் நிலையில் அங்கு இப்போதே பிரசாரத்தை தொடங்கி விட ராகுல் முடிவு செய்துள்ளார். வருகிற 20-ந்தேதி தெலுங்கானாவில் ராகுல் முதல் கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார். அன்று அவர் அடிலாபாத் மற்றும் காமரெட்டி மாவட்டங்களில் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் செய்கிறார். அடுத்தக்கட்டமாக 27-ந்தேதி மீண்டும் தெலுங்கானாவுக்கு வர உள்ளார். அப்போது கரீம்நகர், வாராங்கல் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
தெலுங்கானாவுக்கு வரும் ஒவ்வொரு முறையும் குறைந்தது 5 பொதுக்கூட்டங்களில் பேச ராகுல் தீர்மானித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் தலைவர்கள் செய்து வருகிறார்கள். அடுத்த மாதம் இறுதியில் சுமார் ஒரு வாரம் தெலுங்கானாவில் தங்கியிருந்து தீவிர பிரசாரம் செய்ய ராகுல் வியூகம் வகுத்துள்ளார். #Congress #Rahulgandhi
தெலுங்கானாவில் டிசம்பர் மாதம் 7-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் தீவிரம் காட்ட தொடங்கி உள்ளார். இதற்காக அவர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளார். வேட்பாளர் தேர்வு நடந்து வரும் நிலையில் அங்கு இப்போதே பிரசாரத்தை தொடங்கி விட ராகுல் முடிவு செய்துள்ளார். வருகிற 20-ந்தேதி தெலுங்கானாவில் ராகுல் முதல் கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார். அன்று அவர் அடிலாபாத் மற்றும் காமரெட்டி மாவட்டங்களில் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் செய்கிறார். அடுத்தக்கட்டமாக 27-ந்தேதி மீண்டும் தெலுங்கானாவுக்கு வர உள்ளார். அப்போது கரீம்நகர், வாராங்கல் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
தெலுங்கானாவுக்கு வரும் ஒவ்வொரு முறையும் குறைந்தது 5 பொதுக்கூட்டங்களில் பேச ராகுல் தீர்மானித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் தலைவர்கள் செய்து வருகிறார்கள். அடுத்த மாதம் இறுதியில் சுமார் ஒரு வாரம் தெலுங்கானாவில் தங்கியிருந்து தீவிர பிரசாரம் செய்ய ராகுல் வியூகம் வகுத்துள்ளார். #Congress #Rahulgandhi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X