search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "against"

    • தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நாளை (திங்கட்கிழமை) ஆர்ப்பட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • இதில் முன்னாள் அமை ச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் எம்.எல்ஏ. கலந்து கொண்டு தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    கோபி:

    தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நாளை (திங்கட்கிழமை) ஆர்ப்பட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதையொட்டி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்துவரி ஆகியவற்றை குறைக்க கோரியும், குடும்ப தலைவிக்கான ரூ.1000, சிலிண்டர் மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, தாலிக்கு தங்கம், பெண்களுக்கு மானிய ஸ்கூட்டர் மற்றும் அரசு ஊழியருக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறு கிறது.

    கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ.

    இதில் முன்னாள் அமை ச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் எம்.எல்ஏ. கலந்து கொண்டு தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார். இதில் பவானிசாகர் பண்ணாரி எம்.எல்.ஏ. மற்றும் புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர், ஊராட்சி நிர்வாகிகள் உள்பட கலந்து கொள்கிறார்கள்.

    • வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
    • கொடுமுடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 2 கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஈரோடு:

    கள்ளக்குறிச்சியில், தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தையடுத்து அது தொடர்பாக பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் சிலர் சமூக வளைதலங்களில் வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.

    இது போன்ற வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். இதேபோல அச்சம்பவம் தொடர்பாக வாட்ஸ் -அப் மூலமாக புதிய குழுக்களை ஆரம்பித்து, மாநில அளவில் இளைஞர்களை ஒன்றிணைத்து போராட்ட ங்களில் ஈடுபட உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் கொடுமுடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 2 கைது செய்யப்பட்டுள்ளனர்.

    எனவே இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் எடுக்கப்படும் என ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில் எச்சரிக்கை விடுக்க ப்பட்டுள்ளது.

    • பெரியாறு அணைக்கு எதிராக கேரள அரசு பொய் பிரசாரம் செய்து வருவதாக முன்னாள் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
    • ஆவணப்படம் எடுக்க இணைய வழி கையெழுத்து இயக்கத்தை கேரளா நடத்தி வருகிறது.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முல்லைப் பெரியாறு அணையின் தென் மாவட்ட உயிர்நாடி பிரச்சினையில் மக்களின் உரிமையை காக்க அ.தி.மு.க. அரசு எடுத்த முயற்சியை யாராலும் மறுக்க முடியாது. முல்லைப் பெரியாரை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள பல லட்சம் விவசாயி குடும்பங்களும், 80 லட்சம் மக்களுக்கும், பாசனத்திற்கும் குடிநீரையும் நம்பி உள்ளனர்.

    தற்போது கேரளா முல்லைப் பெரியாறுக்கு எதிராக ஆவணப்படம் எடுக்க இணைய வழி கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறது. இதனால் அணை குறித்து அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

    கேரளா முல்லை பெரியாறுக்கு எதிராக ஏற்கனவே ஆவணப்படம் எடுத்து சர்ச்சை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் ஆவணப்படம் எடுக்க மக்களிடம் வசூல் செய்ய இணைய வழி கையெழுத்து இயக்கத்தை செய்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது.

    தற்போது அணையில் நீர்மட்டம் 127 அடிக்கு மேல் உள்ளது. பேபி அணை பழுது பார்க்கப்பட்ட பின் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    மேலும் அணையை தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்து அணை பலமாக உள்ளது என்று உறுதி செய்துள்ளனர். கண்காணிப்பு குழுவும் ஆய்வு செய்து வருகிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை.

    ஆனால் கேரளாவில் உள்ள அரசியல் இயக்கங்கள் சார்பில் பெரியாறு அணைக்கு எதிராக கேரளா பிரசாரம் செய்து வருகிறது. தொழில் நுட்ப வல்லுனர் குழு, கண்காணிப்பு குழு ஆய்வு செய்தும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பின்பும் இந்த சர்ச்சை வருவது வேதனை அளிக்கிறது.

    குறிப்பாக கேரளாவில் மீண்டும் ஆவணப்படம் எடுக்க சமூக வலைதளத்தில் நிதி வசூல் செய்வது மட்டுமல்லாது கேரள நடிகர்களும் அணைக்கு எதிராக பேசுகின்றனர். இதனால் தென் மாவட்ட விவசாயிகள் கொந்தளித்து போய் உள்ளனர்.கேரளாவின் இந்த பொய் பிரச்சாரத்திற்கு சரியான விளக்கங்களை நாம் சொல்ல வேண்டும்.

    கேரளா, முல்லைப்பெரியாறுக்கு எதிராக பொய் பிரசாரம் செய்ய வேண்டாம் . இது இரு மாநில உறவுகளுக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது.

    இது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து உரிமையைநிலை நாட்ட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் தினகரன் முறையாக விடுப்பு எடுக்காமல் உடன் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்களுடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவருக்கு பதிலாக அவரது மகன் அஸ்வின் என்பவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
    • இது குறித்து ஈரோடு சுகாதார துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு, ஜூன். 22-

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராக தினகரன் (57) என்பவர் உள்ளார்.

    இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைமை மருத்துவர் தினகரன் முறையாக விடுப்பு எடுக்காமல் உடன் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்களுடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

    அந்த சமயம் அவருக்கு பதிலாக அவரது மகன் அஸ்வின் என்பவர் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.

    அப்போது கவுந்தபாடி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் சிகிச்சைக்கு வந்தார். மருத்துவர் எங்கே என்று கேட்டபோது தான் பவானி அரசு மருத்துவமனையின் மருத்துவர் என்று கூறி சிகிச்சை அளித்துள்ளார்.

    அதற்கு பின்னர் தான் சிகிச்சை அளித்த அஸ்வின் அரசு தலைமை மருத்துவர் தினகரன் மகன் என தெரியவந்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தலைமை மருத்துவர் தினகரன், பணியில் இல்லாத பெண் மருத்துவர் சண்முகவடிவு ஆகியோரை சஸ்பெண்டு செய்து சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்தது.

    இந்நிலையில் கவுந்தப்பாடி சத்தி சாலையை சேர்ந்த கூலி தொழிலாளியான முருகேசன்(42) என்பவர் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளித்த புகார் மனு அளித்தார்.

    அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

    நான் வயிற்று வலி காரணமாக எனது நண்பர் உதவியுடன் கடந்த 19-ந் தேதி மாலை சுமார் 6.40 மணிக்கு கவுந்தப்பாடி அரசு மருத்துவ மனைக்கு சென்றேன். அங்கு தலைமை மருத்துவர் தினகரனுக்கு பதிலாக வேறொரு வாலிபர் இருந்தார்.

    அவரிடம் டாக்டர் எங்கே என கேட்டபோது, நான் தான் டாக்டர் எனவும், பவானி அரசு மருத்துவ மனை மருத்துவர் என கூறி எனக்கு வெளிநோயாளி சீட்டு பதிவு செய்யாமல் ஊசி செலுத்தி, சீட்டு ஏதும் இன்றி மாத்திரைகளை வழங்கினார்.

    இதையடுத்து அடுத்த நாள் எனக்கு மருத்துவம் பார்த்தது தலைமை மருத்துவர் தினகரனின் மகன் அஸ்வின் என்பதும், அவா் அரசு மருத்துவர் இல்லை என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தேன். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி தலைமை மருத்துவர் தினகரன், பெண் மருத்துவர் சண்முகவடிவு ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    ஆனால், போலியாக அரசு மருத்துவமனையில், மருத்துவர் என நம்ப வைத்து சிகிச்சை அளித்த அஸ்வின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தந்தைக்கு பதிலாக மருத்துவம் பார்த்த தலைமை மருத்துவரின் மகன் அஸ்வின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

    இந்நிலையில் ஈரோடு சுகாதார துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் விசாரணையை முடித்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்க போலீசிடம் புகார் அளிப்பார்கள். அதன் அடிப்படையில் அஸ்வின் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என தெரியவருகிறது.

    மோடி அரசுக்கு எதிராக 2-வது சுதந்திர போராட்டம் நடத்த ராகுல் காந்தி தலைமையில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. #Congress #SecondFreedomStruggle #Modi #ModiGovernment #RahulGandhi
    சேவாகிராம்:

    மராட்டிய மாநிலம் வார்தா மாவட்டம் சேவாகிராமத்தில் உள்ள மகாதேவ் பவனில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நேற்று நடைபெற்றது. 1942-ம் ஆண்டு, மகாத்மா காந்தி அங்கு காரிய கமிட்டி கூட்டத்தை நடத்தினார். அதன்பிறகு இப்போதுதான் அங்கு இக்கூட்டம் நடந்தது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமை தாங்கினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



    கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    இந்திய சிந்தனைக்கும், அதன் ஆன்மாவுக்கும், உடலுக்கும் மகாத்மா காந்தி ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ என்ற கோஷத்தை எழுப்பினார். அது, வெறும் கோஷம் அல்ல, நமது வாழ்க்கை முறை.

    நரேந்திர மோடி அரசு, இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிராக உள்ளது. வெறுப்பு, வன்முறை, பழிவாங்குதல், அச்சுறுத்தல், பிரித்தாளுதல், ஆரோக்கியமான விவாதத்தையும், மாற்றுக்கருத்தையும் நசுக்குதல் ஆகியவை கலந்த அரசியலை நடத்தி வருகிறது. அந்த அரசுக்கு எதிராக 2-வது சுதந்திர போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    காந்தியையும், அவரது சிந்தனைகளையும் சீர்குலைத்தவர்கள், இப்போது காந்தியின் சீடர்கள் போல் வேடம் போடுகிறார்கள். அவர்கள், காந்தியின் மூக்குக்கண்ணாடியை விளம்பர பிரசாரத்துக்காக வாங்கலாம். ஆனால், அவர்களின் இட்டை வேடத்தை காங்கிரஸ் அம்பலப்படுத்தும்.

    டெல்லிக்கு சென்ற விவசாயிகள் மீது தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது. பிரதமர் மோடி அதிகார போதையில் மிதக்கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் சேவாகிராமிலேயே நேற்று மதிய உணவு சாப்பிட்டனர். தாங்கள் சாப்பிட்ட தட்டுகளை, அவர்களே கழுவினர். இந்த வீடியோ காட்சி, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

    முன்னதாக, வார்தாவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தொண்டர்களுடன் பாத யாத்திரை சென்றார். பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட சர்க்கஸ் மைதானம் வரை சென்றார். 50 நிமிட நேரம் நடந்து அந்த இடத்தை அடைந்தார்.

    பொதுக்கூட்டத்தில், ராகுல் காந்தி பேசியதாவது:-

    மகாத்மா காந்தி, நாட்டை ஒன்றுபடுத்தினார். ஆனால், மோடியோ நாட்டை பிளவுபடுத்துகிறார். ஒரு சமுதாயத்துடன் மற்றொன்றை மோத விடுகிறார். ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் குறித்த கேள்விகளுக்கு மோடி பதிலளிக்க வேண்டும்.

    பணக்காரர்களின் ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் கோடி கடன்களை தள்ளுபடி செய்த மோடி அரசு, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.  #Congress #SecondFreedomStruggle #Modi #ModiGovernment #RahulGandhi
    ரூ.6 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி தொடர்பாக, விஜய் மல்லையா மீது சி.பி.ஐ. விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது. #VijayMallya #CBI #Chargesheet
    புதுடெல்லி:

    பொதுத்துறை வங்கிகளிடம் கடன் வாங்கி விட்டு, திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச்சென்ற தொழில் அதிபர் விஜய் மல்லையா மீது சி.பி.ஐ. 2 வழக்குகள் பதிவு செய்துள்ளது.

    ஐ.டி.பி.ஐ. வங்கியில் ரூ.900 கோடி கடன் பெற்று விட்டு திருப்பிச் செலுத்தாதது தொடர்பாக 2015-ம் ஆண்டு ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், கடந்த ஆண்டு சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    தனது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 17 வங்கிகளிடம் ரூ.6 ஆயிரம் கோடி கடன் பெற்றுவிட்டு, திருப்பிச் செலுத்தாதது தொடர்பாக 2016-ம் ஆண்டு ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து சி.பி.ஐ. உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

    ரூ.6 ஆயிரம் கோடி மோசடி பற்றிய வழக்கில், முதல்கட்ட விசாரணை முடிந்து விட்டது. எனவே, ஒரு மாதத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளோம். அதன்பிறகும், விசாரணை தொடர்ந்து நடக்கும்.

    இந்த குற்றப்பத்திரிகையில், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உயர் பதவிகளில் இருந்த விஜய் மல்லையா, ஏ.ரகுநாதன் உள்ளிட்டோர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்படுவர். அதுபோல், கடன் கொடுக்கும் பணிகளை கவனித்த வங்கி உயர் அதிகாரிகள், ஓய்வு பெற்றுவிட்ட வங்கி அதிகாரிகள் ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்படுவர். அவர்கள் தங்கள் பதவியை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக ஏராளமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

    அதுபோல், கடன் கொடுக்குமாறு வங்கி அதிகாரிகளை மத்திய நிதி அமைச்சக உயர் அதிகாரிகள் நிர்பந்தம் செய்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அவர்களின் பங்கு பற்றியும், எந்த அளவுக்கு பங்கு இருந்தது என்றும் ஆய்வு செய்து வருகிறோம்.

    விஜய் மல்லையா எந்த காரணத்துக்காக கடன் வாங்கினாரோ, அதற்கு பணத்தை செலவிடாமல், வேறு காரியங்களுக்கு செலவிட்டதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #VijayMallya #CBI #Chargesheet 
    அசாமில் குடியிருப்போர் விவகாரம் தொடர்பாக வரைவு பதிவேடு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக்கூடாது என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #AssamNRC #SupremeCourt
    புதுடெல்லி:

    அசாம் மாநிலத்தில் வசிப்போர் பற்றிய தேசிய குடிமக்கள் இறுதி வரைவு பதிவேடு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பேர் அசாமை சேர்ந்தவர்கள் அல்ல என்பதும் இவர்கள் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக அசாமில் குடி புகுந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.

    இந்த நிலையில், அசாம் குடிமக்கள் பதிவேட்டின் ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜெலா நேற்று முன்தினம் இறுதி வரைவு பதிவேட்டின் தற்போதைய நிலை குறித்து விரிவான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். இதன் மீது நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் ஆர்.எப்.நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரணை நடத்தியது.



    அப்போது நீதிபதிகள் கூறுகையில், “வரைவு இறுதி பதிவேடு தொடர்பாக மத்திய அரசு நிலையான இயக்க நடைமுறையை உருவாக்கி அதை கோர்ட்டின் ஒப்புதலுக்காக வருகிற 16-ந் தேதி தாக்கல் செய்யவேண்டும். மேலும், விடுபட்டு உள்ளவர்களின் பெயர்களை சேர்க்க மற்றும் இது தொடர்பான ஆட்சேபங்களை தெரிவிக்க உள்ளூர் பதிவாளர் ஒருவர் மூலம் நோட்டீஸ் அளிக்கப்படவேண்டும். இந்த பதிவேடு தொடர்பாக கட்டாய நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது. ஏனென்றால் இது வெறும் ஒரு வரைவு பதிவேடுதான்” என்று உத்தரவிட்டனர்.  #AssamNRC #SupremeCourt
    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து பிரதமருக்கு எதிராக மக்களவையில் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்க தெலுங்குதேசம் கட்சி எம்.பி.க்கள் திட்டமிட்டு உள்ளனர். #TDP #PrivilegeMotion #Modi
    புதுடெல்லி:

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக தெலுங்குதேசம் கட்சி எம்.பி.க்கள் மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானம் மீது கடந்த 20-ந்தேதி நடந்த விவாதத்துக்கு பதிலளித்து பேசிய பிரதமர் மோடி, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கூடாது என 14-வது நிதிக்குழு பரிந்துரைத்து இருப்பதாக கூறினார்.

    ஆனால் அப்படி ஒரு பரிந்துரையை 14-வது நிதிக்குழு வெளியிடவில்லை என தெலுங்குதேசம் கட்சித்தலைவரும், ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருக்கும் தனது கட்சி எம்.பி.க்களுடன் நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியபோது இதை அவர்களிடம் கூறிய சந்திரபாபு நாயுடு, இதன் மூலம் பிரதமரும், மத்திய மந்திரிகளும் மக்களவையை தவறாக வழிநடத்தி இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

    எனவே பிரதமர் மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர பரிசீலிக்குமாறு தெலுங்குதேசம் எம்.பி.க்களுக்கு அவர் அறிவுறுத்தினார். அதன்பேரில் பிரதமருக்கு எதிராக மக்களவையில் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்க அந்த கட்சி எம்.பி.க்கள் திட்டமிட்டு உள்ளனர்.

    முன்னதாக ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உரிமை மீறல் நோட்டீஸ் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.  #TDP #PrivilegeMotion #Modi 
    ரபேல் போர் விமான ஒப்பந்தம் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் வழங்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. #RafaleDeal #PMModi #NirmalaSeetharaman
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்பட உள்ள ரபேல் போர் விமானத்தின் விலை குறித்து மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்காமல் இருப்பதற்கு அதில் ஊழல் நடந்திருப்பதே காரணம் என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் நாடாளுமன்ற மக்களவையில் விளக்கம் அளித்தனர்.

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, ஆனந்த் சர்மா, ரன்தீப் சூரஜ்வாலா ஆகியோர் செய்தியாளர்களிடம் இந்த விவகாரம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டனர்.



    பின்னர் ஏ.கே.அந்தோணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு ரபேல் போர் விமானத்தின் விலை குறித்து ரகசியம் காப்பதுடன், நாட்டு மக்களுக்கு அதை வெளிப்படையாக அறிவிக்காமல் இருப்பது, அதில் தவறு நடந்துள்ளதையே காட்டுகிறது. அவர்கள் தொடர்ந்து அதை மறைப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

    அரசு போர் விமானத்தின் விலையை தொடர்ந்து ரகசியமாக வைத்திருக்க முடியாது. தலைமை கணக்காயர் மற்றும் நாடாளுமன்ற பொது கணக்கு குழு ஆய்வில் அம்பலமாகி விடும். இந்த ஒப்பந்தத்தில் அரசு நிறுவனத்தை புறக்கணித்து விட்டு அனுபவம் இல்லாத தனியார் நிறுவனத்துக்கு விமான பாகங்களை இணைக்கும் ஒப்பந்தம் கொடுத்திருப்பது ஏன் என்பதை அரசு தெரிவிக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதற்கு இதுவே உதாரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் ஆனந்த் சர்மா கூறுகையில், பிரதமர் மோடியும், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனும் ரபேல் போர் விமான விவகாரம் குறித்து பதில் அளிக்கையில், நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியது குறித்து ஏன் என்பதை விளக்க வேண்டும். போர் விமான விலையை வெளியிடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை என பிரான்ஸ் அரசு தெரிவித்து இருக்கிறது. இதை ராகுல் காந்தியிடம், பிரான்ஸ் அதிபர் தெரிவித்து இருக்கிறார். அப்போது மன்மோகன் சிங், நான் (ஆனந்த் சர்மா) உள்ளிட்டோர் உடன் இருந்தோம் என்றார்.

    பின்னர் ரன்தீப் சூரஜ்வாலா கூறும்போது, நாடாளுமன்றத்தில் போர் விமானம் குறித்து மோடி, நிர்மலா சீதாராமன் ஆகியோர் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியது உரிமை மீறல் பிரச்சினை ஆகும். இருவருக்கும் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்குவது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவர் முடிவு எடுப்பார் என்றார்.  #RafaleDeal #PMModi #NirmalaSeetharaman
    வழிப்பறி கொள்ளையர்களிடம் இருந்து தங்க நகைகளை வாங்குபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    போலீசாரின் பணி நேரத்தை வரையறை செய்வது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கவேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டார். ஆனால், இந்த உத்தரவை இதுவரை தமிழக அரசு அமல்படுத்தவில்லை.

    இதுதொடர்பான வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்து வருகிறார். அப்போது தமிழகத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் வீட்டில், வேலை செய்ய பல போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு ஆர்டர்லியாக பணி செய்யும் போலீசார் எத்தனை பேர் உள்ளனர்? என்று அரசுக்கு நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த தமிழக டி.ஜி.பி., ஆர்டர்லி முறை பல ஆண்டுகளுக்கு முன்பே அழிக்கப்பட்டுவிட்டது. இப்போது போலீசார் வீட்டில் ஆர்டர்லியே கிடையாது என்று பதில் மனு தாக்கல் செய்தார்.

    இதன்பின்னர் போலீசாருக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை வழங்கினால் என்ன? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், வார விடுமுறை வழங்குவது குறித்து ஒரு குழுவை அமைத்து அரசு முடிவு எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எச்.அரவிந்த்பாண்டியன் ஆஜராகி, போலீஸ் நிலை ஆணையின்படி, வாரம் ஒருநாள் போலீசாருக்கு விடுப்பு வழங்கப்படுகிறது. சிலர் அந்த விடுப்பு வேண்டாம் என்று கூறி பணிக்கு வந்து, அந்த கூடுதல் பணி நேரத்துக்கு ரூ.200 பெற்றுக்கொள்கின்றனர் என்று கூறினார்.

    அதற்கு நீதிபதி, ‘வாரம் ஒருநாள் விடுப்புக்கு இப்படி ரூ.200 கொடுத்தால், எந்த போலீஸ்காரரும் வாரவிடுப்பு எடுக்க மாட்டார்கள். அதனால், மாதம் ஒரு முறைதான் இவ்வாறு பணி செய்து பணம் பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை அரசு உருவாக்க வேண்டும். இதுகுறித்து அரசு விளக்கம் அளிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

    அப்போது கோர்ட்டில் ஆஜராகி இருந்த வக்கீல் சூரியப்பிரகாசம், “தமிழகத்தில் வழிப்பறி சம்பவம், குறிப்பாக செயின் பறிப்பு சம்பவம் அதிகரித்துள்ளது. படிக்கும் இளைஞர்கள் பலர் இந்த வழிப்பறி செயலில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு பெண்களிடம் இருந்து அறுத்து செல்லும் தங்க செயினை வாங்கும் நபர்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. இதுநாள் வரை ஆயிரக்கணக்கான வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் செயினை வாங்கும் நபர்கள் ஒருவரை கூட போலீசார் கைது செய்வது இல்லை. அதனால், வழிப்பறிச் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது” என்று கூறினார்.

    இதற்கு நீதிபதி, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களுக்கு மதுபானம் மற்றும் போதைப்பொருட்களை உபயோகிப்பதும்தான் காரணம். போலீசார் மீதுதான் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையை பாதுகாக்க வேண்டியது போலீசாரின் கடமை. போலீசார் குற்றவாளிகளுடன் கைகோர்த்தால் நிலைமை மிகவும் மோசமாகிவிடும். அதனால், வழிப்பறி கொள்ளையர்களிடம் இருந்த தங்க நகைகளை வாங்குபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் நல ஆணையம் தொடர்பாக பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பதை தமிழக அரசு தெரிவிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டார். பின்னர், விசாரணையை 19-ந்தேதிக்கு தள்ளிவைத்தார். 
    மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இழிவுபடுத்தும் இணையதள தொடரை நீக்கக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் ஷசாங்க் கார்க் என்ற வக்கீல் மனு தாக்கல் செய்துள்ளார். #RajivGandhi #SacredGames
    புதுடெல்லி:

    ‘நெட்பிளிக்ஸ்’ இணையதளத்தில், ‘சாக்ரட் கேம்ஸ்’ என்ற புதிய தொடர் இடம் பெற்று வருகிறது. பிரபல இந்தி நடிகர்கள் சயீப் அலிகான், நவாசுதின் சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த தொடரின் சில காட்சிகளும், வசனங்களும் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இழிவுபடுத்தும்வகையில் இருப்பதாக டெல்லி ஐகோர்ட்டில் ஷசாங்க் கார்க் என்ற வக்கீல் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அதில், “போபர்ஸ் வழக்கு, ஷா பானோ வழக்கு, பாபர் மசூதி வழக்கு போன்ற வரலாற்று சம்பவங்களை இந்த தொடர் தவறாக குறிப்பிடுகிறது. ராஜீவ் காந்தியையும், அவரது குடும்பத்தையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறிப்பிடும் காட்சிகளையும், வசனங்களையும் நீக்குமாறு நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கும், தொடரின் தயாரிப்பாளருக்கும் உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இம்மனு, நேற்று தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல், நீதிபதி ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு பட்டியலிடப்பட்டது. ஆனால், கீதா மிட்டல் விலகிக் கொண்ட தால், வேறு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.  #RajivGandhi #SacredGames #tamilnews 
    அமெரிக்காவினுள் குழந்தைகளுடன் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக நுழைவோர் மீது குற்ற வழக்குப்பதிவு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. #IllegalMigrants #Children
    வாஷிங்டன்:

    அண்டை நாடான மெக்சிகோ தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவினுள் சட்டவிரோதமாக குடும்பம், குடும்பமாக நுழைவோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.

    இதைத் தடுக்கிற விதத்தில் அவர்கள் மீது கடுமையான கொள்கையை ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகம் பின்பற்றியது. இப்படி நுழைவோரை கைது செய்து, அவர்களையும், குழந்தைகளையும் தனித்தனியாக பிரித்து காவலில் வைத்தது.

    இது அங்கு பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

    பல்வேறு தரப்பினருடன், மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவான்கா டிரம்ப் ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த கொள்கையை டிரம்ப் நிர்வாகம் கடந்த வாரம் திரும்பப்பெற்றது. இதற்கான நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்து போட்டார்.

    இப்போது அமெரிக்காவினுள் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல், சட்டவிரோதமாக குழந்தைகளுடன் நுழைகிறவர்கள் மீது குற்ற வழக்கு போடுவதையும் டிரம்ப் நிர்வாகம் நிறுத்தி விட்டது.

    இதுபற்றி அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு ஆணையர் கெவின் மெக் அலீனன், டெக்சாஸ்சில் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறும்போது, “அமெரிக்காவினுள் சட்ட விரோதமாக குடியேறுகிறவர்கள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்வது கடந்த வாரம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இப்படி குடும்பத்துடன் அமெரிக்காவினுள் நுழைகிறபோது, பெற்றோர்களையும், குழந்தைகளையும் தனியாக பிரிக்கக்கூடாது என டிரம்ப் நிர்வாகம் பிறப்பித்த உத்தரவு பின்பற்றப்படுகிறது” என்று கூறினார்.

    அதே நேரத்தில், அமெரிக்காவினுள் சட்ட விரோதமாக நுழைகிறவர்களை சகித்துக்கொள்ளக்கூடாது என்ற கொள்கை இன்னும் அமலில் இருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

    பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கக்கூடாது என்று கூறுகிற நிலையில், இரு தரப்பினரையும் சேர்த்து ஒரே இடத்தில் காவல் மையங்களில் வைக்க அமெரிக்க சட்டம் இடம் தரவில்லை என்றும் அவர் கூறினார்.

    பெற்றோரிடம் இருந்து குழந்தைகளை தனியாகப் பிரித்தெடுக்காமல், எப்படி பெற்றோர்கள் மீது மட்டும் வழக்கு போடுவது என்பது பற்றி நீதித்துறையும், சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு ஆணையமும் வழிவகை காண வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவினுள் குடும்பமாக சட்டவிரோதமாக நுழைகிறபோது, அவர்களை பிரிக்காமல் கோர்ட்டு சம்மன் வழங்கி, அவர்கள் வழியில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

    இருப்பினும் குழந்தைகள் இன்றி தனியாக அமெரிக்காவில் உரிய ஆவணம் இன்றி நுழைந்தால் அவர்கள் கைது செய்யப்படுவது தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    உரிய ஆவணங்கள் இன்றி அமெரிக்கா வருவோரை வைத்து பராமரிக்க இடம் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தெளிவுபடுத்தி உள்ளார்.  #IllegalMigrants #Children #Tamilnews 
    ×