search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை
    X

    சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை

    • வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
    • கொடுமுடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 2 கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஈரோடு:

    கள்ளக்குறிச்சியில், தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தையடுத்து அது தொடர்பாக பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் சிலர் சமூக வளைதலங்களில் வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.

    இது போன்ற வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். இதேபோல அச்சம்பவம் தொடர்பாக வாட்ஸ் -அப் மூலமாக புதிய குழுக்களை ஆரம்பித்து, மாநில அளவில் இளைஞர்களை ஒன்றிணைத்து போராட்ட ங்களில் ஈடுபட உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் கொடுமுடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 2 கைது செய்யப்பட்டுள்ளனர்.

    எனவே இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் எடுக்கப்படும் என ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில் எச்சரிக்கை விடுக்க ப்பட்டுள்ளது.

    Next Story
    ×