search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "strict action"

    • ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்க உத்தரவு.
    • தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையை தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர் நதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

    விதிகளை மீறி, குழந்தைகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக புகார்கள் வந்தால், அதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    மேலும், விதிகள் அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    • விவசாயிகள் அதனை குடித்து விட்டு உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகின்றனர்.
    • கள்ளச்சாராயம் குடித்த 10-க்கும் மேற்பட் டோர் பலியான சம்பவம் நடைபெற்றது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பிரம்ம தேசம் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் வேலை செய்வது வழக்கம். பிரம்மதேசம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தினந்தோறும் காலை மாலையில் சாராயம் விற்பனை அேமாகமாக நடைபெறுகிறது. குறைந்த விலைக்கு கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படு வதால் விவசாயிகள் அதனை குடித்து விட்டு உடல் நலக்குறைவால் அவதிப் பட்டு வருகின்றனர்.

    ஏற்கனவே மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 10-க்கும் மேற்பட் டோர் பலியான சம்பவம் நடைபெற்றது. இந்த சாரா யத்தை விற்பனை செய்த வியாபாரிகள் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பிரம்மதேசம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதை போலீசார் தடுத்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களும் சமூக ஆர்வலர்க ளும் கோரிக்கை விடுத்துள்ள னர்.

    • சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து அனைத்து துறை அலுவ லர்களுடன் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது.
    • பஸ் நிலையத்தினுள் பஸ்கள் நிறுத்தத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து அனைத்து துறை அலுவ லர்களுடன் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.

    இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    திண்டுக்கல் மாவட்ட த்தின் சட்டம் ஒழுங்கை பேணி பராமரித்திடவும், பாதுகாப்பான சாலை போக்குவரத்தை உறுதி செய்திடவும், மாநகரின் முக்கிய வீதிகளில் 2 சக்கரம் மற்றும் 4 சக்கர வாக னங்களை பொதுமக்களுக்கு எந்தவித இடையூறுமின்றி நிறுத்துவதற்கும், பஸ் நிலையத்தினுள் பஸ்கள் நிறுத்தத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்துவதை தடுப்பதற்கும், மேலும் வாகனங்களை முறையாக நிறுத்துவதற்கு சங்கிலிகள் அமைத்து தனியாக இடம் ஒதுக்கி வாகனங்கள் நிறுத்துவதை கண்காணி க்கவும், விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் சம்மந்த ப்பட்ட அலுவல ர்கள் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    சாலைகளில் வேகத்தடை கள், வாகனத்தடுப்புகள் இருப்பது வாகன ஓட்டிகளுக்கு எளிதில் தெரியும் வகையில் ஒளிரும் பட்டைகளுடன் அமைக்க வேண்டும். மேலும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் வகையிலும், வாகன ஓட்டிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையிலும், ஒளிரும் ஒட்டுவில்லைகளை முக்கிய இடங்களில் அமைப்பதற்கும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் போக்குவரத்துகளை சீர்படுத்துவதற்கும் துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    பொது மக்களிட மிருந்து பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாகவும், கோரிக்கைகள் மீதான நடவடிக்கையை குறிப்பிட்ட காலத்திற்குள் மேற்கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சம்மந்தப்பட்ட அலுவல ர்களை அனுப்பி வைக்க வேண்டும். அரசு விதிமுறை களை பின்பற்றாமல் உள்ளவர்களை கண்டறிந்து காவல்துறையினர் நடவடி க்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

    • குடிநீர் இணைப்பு பெற்று குடிநீர் பெரும் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவது தெரிய வருகிறது.
    • குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பது சட்டப்படி அபராதத்திற்குரிய குற்றமாகும்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் சுப்ரமணியன் வெளியிடுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    பரமத்தி பேரூராட்சியில் பேரூராட்சி மூலம் குடிநீர் இணைப்பு பெற்று குடிநீர் பெரும் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவது தெரிய வருகிறது. மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவதால் அனைத்து இணைப்புகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

    குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பது சட்டப்படி அபராதத்திற்குரிய குற்றமாகும். எதிர்வரும் வறட்சிக்காலங்களில் இப் பேரூராட்சியில் சீரான குடிநீர் விநியோகம் செய்யும் பொருட்டு பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. எனவே குடிநீர் இணைப்பு பெற்றுள்ள உரிமையாளர்கள் மின்மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பதை உடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    மீறி மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவது கண்டறியப்பட்டால் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 மற்றும் பரமத்தி பேரூராட்சி குடிநீர் திட்ட துணை விதிகளின் கீழ் அபராதம் விதிக்கப்படுவதுடன் மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டு குடிநீர் இணைப்புகள் முன்னறிவிப்பு இன்றி நிரந்தரமாக துண்டிப்பு செய்யப்படும் எனஅதில் கூறியுள்ளார்.

    • வாய்மொழியாக துன்புறுத்துதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர் கல்லூரியில் இருந்து, வெளியேற்றப்படுவர்
    • தொடர்ந்து எந்த கல்லூரியிலும் கல்வி பயில முடியாது.

    திருப்பூர் : 

    திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ராக்கிங் நடவடிக்கையில் ஈடுபட்டால், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என, மருத்துவ கல்வி இயக்கம் மூலம் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் அரசு மருத்துவகல்லூரி கடந்த 2021 முதல் செயல்படுகிறது. 200 மாணவர்கள் படிக்கின்றனர். கல்லூரி வளாகத்தில் தவறான, அநாகரீகமான நடத்தை, மிரட்டல், தவறான கட்டுப்பாடுகளை விதித்தல், ஒருவரை மன, உடல் ரீதியாக, வாய்மொழியாக துன்புறுத்துதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர் கல்லூரியில் இருந்து, வெளியேற்றப்படுவர்,விடுதியில் தங்க முடியாது. கல்வி உதவித்தொகை நிறுத்தப்படலாம், தேர்வுகளை எதிர்கொள்ள முடியாது.

    தொடர்ந்து எந்த கல்லூரியிலும் கல்வி பயில முடியாது. போலீசார் மூலம், கிரிமினல் நடவடிக்கை மற்றும் வழக்கு பதியப்படும். கல்லூரியில் ராக்கிங் வேண்டாம் என்று சொல்லுங்கள், ராக்கிங் தண்டனைக்குரிய குற்றம். ராக்கிங்கில் ஈடுபடாதீர்கள். மேலும் விதிமுறைகளுக்கு www.ugu.ac.in என்ற இணையதளத்தை பாருங்கள். ராக்கிங் நடந்தால் புகார் தெரிவியுங்கள். போலீசாரின் உதவியை நாடுங்கள், என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. 

    • உர விற்பனை நிலையங்களில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
    • தவறும் உர விற்பனை நிலையங்கள் மீது உரக்கட்டுப்பாடு ஆணை படி கடுமையான நடடிவக்கை எடுக்கப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை, ம ஞ்சள், மரவள்ளி, நிலக்கட லை, மக்காச்சோளம் ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்ப ட்டுள்ளன.

    விவசாயிகள் பயிர் சாகு படி பணிகளை தொடர ஏது வாக தற்போது யூரியா உரம் 2936 மெ.டன்னும், டி.ஏ.பி உரம் 4006 மெ.டன்னும், பொட்டாஷ் உரம் 2671 மெ.டன்னும்,

    காம்ப்ளக்ஸ் உரம் 13961 மெ.டன்னும், சூப்பர் பாஸ்பேட் 965 மெ. டன்னும், தொடக்க வேளா ண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    இது குறித்து ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறு ப்பு) முருகேசன் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் உரம் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள், உரங்க ளின் அதிகபட்ச விற்பனை விலை மற்றும் இருப்பு விவ ரங்களை விலைப்பலகையில் தெளிவாக எழுதி கடையின் முன் விவசாயிகளுக்கு தெரி யும்படி வைப்பது,

    விற்பனை ரசீதில் விவசாயிகள் கையொ ப்பம் பெற்று உரங்கள் வழ ங்குவது, அனைத்து விற்ப னைகளையும் விற்பனை மு னைய கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்வது,

    உரிய முதன்மைச்சான்று படிவங்க ளை நிறுவனங்களிடமிருந்து பெற்று உரங்களை கொள்மு தல் செய்வது, உரங்களை அங்கீகரிக்கப்பட்ட இடங்க ளில் மட்டும் இருப்பு வைத்தி ருப்பது ஆகியவற்றை தவறா மல் பின்பற்ற அறிவுறுத்த ப்படுகிறது.

    அத்துடன் உரங்களுடன் சேர்த்து பிற பொருட்களை கட்டாயப்படுத்தி விவசாயி களுக்கு வழங்கக்கூடாது என்றும், பயிர்களின் உண வாகக் கருதப்படும் உரங்களி ல் கலப்படம் செய்து விற்பனை செய்யக்கூடாது என்றும்,

    தவறும் உர விற்பனை நிலையங்கள் மீது உரக்கட்டுப்பாடு ஆணை 1985-ன்படி கடுமையான நடடிவக்கை எடுக்கப்படும்.

    இதில் குறைபாடுகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தி ல், விவசாயிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்கு நர்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

    மேலும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளா ண்மை விரிவாக்க மையங்க ளில் வழங்கப்படும் திரவ உயிர் உரங்களை பெற்று பயன்படுத்துவதோடு,

    திண்டலில் உள்ள வேளா ண்மைத் துறையின் மண் பரிசோதனை நிலையத்தில் மண் பரிசோதனை செய்து அதில் பரிந்துரைக்கப்படு வதற்கு ஏற்ப உரங்களை பெற்று பயன்படுத்தி உர செலவை குறைத்து கொள்ள லாம்.

    இவ்வாறு அவர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • டி.ஜி.பி.யிடம் வர்த்தக சபை நிர்வாகிகள் வலியுறுத்தல்
    • ஓர் அமைப்பை உருவாக்கி இதுபோன்ற பிரச்சனைகள் வருவதை தொடக்கத்திலே தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    உழவர்கரை, விழுப்புரம் சாலையில் ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு மிக அருகில் தனியார் பேக்கரி செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் உழவர்கரை பகுதியில் ஒரு அரசியல் கட்சியின் அலுவலகம் கட்ட மாமூலாக சிமெண்டு மூட்டை வாங்கித் தாராத காரணத்தால் அந்த நிறுவனம் மீதும் ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதையடுத்து வர்த்தக சபையின் தலைவர் குணசேகரன் தலைமையில் வர்த்தக சபை நிர்வாகிகள், வணிகர் சங்கப் பிரதிநிதிகள் புதுச்சேரி காவல்துறை இயக்குநர் டி.ஜி.பி.ஸ்ரீநிவாசை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

    மாமூல் கேட்டு பேக்கரி கடை மீதும் அந்த கடையின் ஊழியரை தாக்கிய சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வணிகர்களுக்கும் அதன் ஊழியர்களுக்கும், நிறுவனத்துக்கும் உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும். மேலும் வணிகர்கள் காவல் துறை அதிகாரிகள் இணைந்த ஓர் அமைப்பை உருவாக்கி இதுபோன்ற பிரச்சனைகள் வருவதை தொடக்கத்திலே தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த சந்திப்பின் போது வர்த்தக சபை துணைத் தலைவர் ரவி, பொதுச் செயலாளர் ஆனந்தன், இணைப் பொதுச் செயலாளர் முகம்மது சிராஜ், பொருளாளர் ரவி, குழு உறுப்பினர்கள் ஞானசம்பந்தம், ஜெகதீசன், ராஜவேல், புதுச்சேரி தொழில் வணிகர் கூட்ட மைப்பு தலைவர் கருணாநிதி, பொதுச்செ யலாளர் சதாசிவம், பேக்கரி உரிமை யாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட வர்கள் உடன் இருந்தனர்.

    • விவசாயிகள், பொதுமக்கள் இத்தகைய மருந்தை எந்த ஒரு காரணத்துக்காகவும் வாங்க வேண்டாம்.
    • இந்த ஆய்வில் ‘ரேட்டால்” மருந்து விற்பனை செய்வது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ராஜகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    "வேளாண் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி அபாயகரமான 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் கலந்த 'ரேட்டால்" என்ற எலி மருந்தானது மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட், மருந்துக்கடைகளில் விற்பதற்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எனவே, விவசாயிகள், பொதுமக்கள் இத்தகைய மருந்தை எந்த ஒரு காரணத்துக்காகவும் வாங்க வேண்டாம். 'ரேட்டால்" மருந்து விற்கக்கூடிய விற்பனையாளர்களை கண்டறிய வேளாண், உணவு பாதுகாப்பு, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றி வரும் அலுவலர்கள் மூலமாக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுவினர் மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த ஆய்வில் 'ரேட்டால்" மருந்து விற்பனை செய்வது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள 'ரேட்டால்" ஈரோடு மாவட்டத்தில் எங்காவது விற்பனை செய்வது தெரியவந்தால் பொதுமக்கள் வட்டார பூச்சிமருந்து ஆய்வாளர்களிடம் புகார் தெரிவிக்கலாம். அதற்கான கைபேசி எண்கள் வேளாண்மை உதவி இயக்குநர்(தகவல் மற்றும் தரக்கட்டுபாடு) - 88702 88416, அம்மாபேட்டை- 99526 97911, அந்தியூர் - 89734 54034 , பவானி - 94430 30302, பவானிசாகர் - 94451 84161,

    சென்னிமலை - 94881 40401, ஈரோடு - 99651 29925, கோபி - 99949 72470 ,கொடுமுடி - 99764 80379 , மொடக்குறிச்சி - 99764 95153, நம்பியூர் - 73735 10591 , பெருந்துறை - 96595 47577, சத்தி - 83445 32481 , தாளவாடி - 63823 42149, டி.என்.பாளையம் - 80752 41292 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

    • மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை
    • ஆய்வாளர்களிடம் புகார் தெரிவிக்கலாம்

    திருப்பத்தூர்:

    தமிழக அரசு 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் கலந்த ரேடால் எலி மருந்து விற்பனையை தடை செய்துள்ளது.

    இதுகுறித்துமாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பாலா வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது;

    வேளாண் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி அபாயகரமான 'ரேடால்' எலிமருந்தானது மாளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்,மருந்து கடைகளில் விற்பதற்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எனவே 'ரேடால்' மருந்து விற்க கூடிய விற்பனையாளர்களை கண்டறிய வேளாண், உணவு பாதுகாப்பு, உள்ளாட்சி அமைப்பு களில் பணியாற்றி வரும் அலுவலர்கள் மூலமாக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அக்குழுவினர் மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    'ரேடால்' மருந்து விற்பனை செய்வதுதெரியவந்தால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    தடை செய்யப்பட்டுள்ள 'ரேடால்' எலி மருந்தை விற்பனை செய்வது தெரியவந்தால் பொதுமக்கள் வட்டார பூச்சி மருந்து ஆய்வாளர்களிடம் புகார் தெரிவிக்கலாம்.

    இது குறித்து திருப்பத்தூர் - 95009 -01367, கந்திலி 63820-09282, ஜோலார்பேட்டை 99941-27177, நாட்றாம்பள்ளி 86678-85729, ஆலங்காயம் 93617-91499, மாதனூர் 94899-23724 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • புதுவை, காரைக்கால் பிராந்தியத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.
    • இதற்கு காரைக்காலில் உள்ள பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் அதிகம் காலியாக உள்ளதுதான் காரணம்.

    புதுச்சேரி:

    வைத்திலிங்கம் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை, காரைக்கால் பிராந்தியத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு காரைக்காலில் உள்ள பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் அதிகம் காலியாக உள்ளதுதான் காரணம்.

     மதுபான கடைகளை திறக்க காட்டும் ஆர்வத்தை அரசு காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப காட்டவில்லை. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர், தலைமை ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். காவிரியில் நீர் திறந்து வந்தாலும் வீணாக சென்று கடலில் கலக்கும் சூழல் உள்ளது. எனவே ஒரு மாதத்திற்குள்ளாக அரசு காரைக்காலில் அனைத்து பாசன வாய்க்கால்களையும் முழுமையாக தூர்வார வேண்டும்.

    மணல் மாபியாவுக்கு அரசு ஆதரவு அளிப்பதை கைவிட்டு மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். கூட்டுறவு விவசாய சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு உடனடி யாக கடன் வழங்க வேண்டும். விவசாயத்திற்கு தேவையான டிராக்டர் உள்ளிட்ட எந்திரங்களை வழங்க வேண்டும்.

    கூட்டுறவு விவசாய சங்கங்களில் வாடிக்கையாளர்களின் நகைகளை திருடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • ஈரோடு மாநகராட்சி பகுதியில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
    • உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று வணிகம் செய்ய வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் மாம்பழ குடோன், மொத்த விற்பனை கடைகள், இதர பழக்குடோன்களில் செயற்கை முறையில் ரசாயனம் மற்றும் கார்பைடு கற்கள் பயன்படுத்தி பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறதா? என்ற ஆய்வு மேற்கொள்ள உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

    இதன்படி ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எட்டிக்கன், செல்வன் ஆகியோர் தலைமையில் ஆய்வு செய்தனர்.

    பழ வியாபாரிகள் செயற்கை முறையில் ரசாயனம் பயன்படுத்தி பழங்களை பழுக்க வைப்பதால் அப்பழங்களை சாப்பிடும் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும். எனவே அவ்வாறு பழுக்க வைப்பதை தவிர்க்க வேண்டும்.

    மேலும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று வணிகம் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டப்படி சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    பொதுமக்கள் உணவு பொருட்கள் தொடர்பான குறைபாடுகளை 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என செய்திக்குறிப்பில் கேட்டு கொண்டனர்.

    • வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்துவது குற்றம்.
    • குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியது கண்டறிந்தால் தண்டனை விதிக்க நேரிடும்.

    ஈரோடு:

    ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் தலைமையில், துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் குறைந்த பட்ச ஊதிய சட்டம், கொத்தடிமை முறை, குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் இம்மாதம் சிறப்பாய்வு மேற்கொண்டனர்.

    குறைந்த பட்ச ஊதிய சட்டத்தில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் என 25 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 4 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது.

    அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியத்தை தொழிலாளர்களுக்கு வழங்காத நிறுவனங்கள் மீது மேல் நடவடிக்கைக்கு இணை ஆணையரிடம் கேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    கொத்தடிமை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ், 16 செங்கல் சூளைகளிலும், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு பணியாக, 31 மோட்டார் வாகன பழுது பார்க்கும் தொழிற்கூடங்களில் கூட்டாய்வு செய்தனர்.

    இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர் திருஞானசம்பந்தம் கூறியதாவது:

    கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்புக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்துவது குற்றம்.

    அவ்வாறு பணிக்கு அமர்த்தியது கண்டறிந்தால், நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நிறுவன உரிமையாளர் மீது 20,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை அபராதம் அல்லது 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 2-ம் சேர்த்து தண்டனையாக விதிக்க நேரிடும்.

    குழந்தை தொழிலாளர் பணி புரிவது கண்டறிந்தால் பொதுமக்கள் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×