search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குட்கா, கள்ளச்சாராயம், விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்புதிய சூப்பிரண்டு பேட்டி
    X

    போலீஸ் சூப்பிரண்டு

    டாக்டர் சிவகுமார்

    குட்கா, கள்ளச்சாராயம், விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்புதிய சூப்பிரண்டு பேட்டி

    • சேலம் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டாக மாவட்ட காவல் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
    • சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய ஸ்ரீ அபிநவ், கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் போலீஸ் அகடாமிக்கு மாறுதல் செய்யப்பட்டார்.

    சேலம்:

    சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய ஸ்ரீ அபிநவ், கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் போலீஸ் அகடாமிக்கு மாறுதல் செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் சென்னை வண்டலூர் போலீஸ் அகடாமி துணை இயக்குனராக பணியாற்றிய டாக்டர் சிவகுமார் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.

    அதைத்தொடர்ந்து இன்று காலை சேலம் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டாக மாவட்ட காவல் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு ஏடிஎஸ்பிக்கள் செல்ல பாண்டியன், கென்னடி, ராஜ காளீஸ்வரன்,மாவட்டத்தில் உள்ள டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள்,நேரில் வந்து வாழ்த்து தெரிவித்த னர். அதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சிவகுமார் மாவட்டத்திலுள்ள தனிப்பிரிவு போலீசார் உடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி, குட்கா, கள்ளச்சாராயம், விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,ரவுடிகள் ஒடுக்கப்படுவார்கள்,குற்றப் பின்னணி கொண்ட ரவுடிகள் கண்காணிக்கப்ப டுவார்கள்,காவல் நிலையங்களுக்கு வரும் ஏழைகள் தரும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் குற்றவாளி களுடன் கைகோர்க்கும் காவலர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×