search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "officer warning"

    • நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் தை மற்றும் மாசிப் பட்டத்தில் உளுந்து, பருத்தி மற்றும் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்திட தயாராகி வருகின்றனர்.
    • விதை வாங்கும் விவசாயிகள் விதை பொட்டலத்தில் உள்ள உற்பத்தியாளர் விபர அட்டையில் குறிப்பிட்டுள்ள பயிர் ரகம், காலாவதி நாள் விபரங்களை சரிபார்த்து வாங்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை விதை ஆய்வு துணை இயக்கு னர் சுஜாதாபாய் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் தை மற்றும் மாசிப் பட்டத்தில் உளுந்து, பருத்தி மற்றும் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்திட தயாராகி வருகின்றனர். விதை வாங்கும் விவசாயிகள் விதை பொட்டலத்தில் உள்ள உற்பத்தியாளர் விபர அட்டையில் குறிப்பிட்டுள்ள பயிர் ரகம், காலாவதி நாள் விபரங்களை சரிபார்த்து வாங்க வேண்டும். விதை விற்பனையாளரிடமிருந்து பயிர், ரகம், குவியல் எண் விபரம் குறிப்பிட்டு விற்பனைப்பட்டியலை தவறாமல் வாங்கிட வேண்டும்.

    உளுந்து பயிரில் சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தும் முன் அவ்விதை களின் முளைப்புத்திறனை நெல்லை விதை பரிசோதனை நிலையத்தில் மாதிரி ஒன்றுக்கு ரூ.80 கட்டணம் செலுத்தி பரிசோதித்து பின் பயன்படுத்தலாம்.

    விதை விற்பனை யாளர்கள், விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று இயக்குனரின் பதிவுச் சான்று மற்றும் முளைப்புத்திறன் சான்றிதழ் பெற்ற பின்னரே பருத்தி மற்றும் இதர காய்கறி பயிர்களின் விதைகளை விற்பனை செய்திட வேண்டும். விற்பனையாளர்கள் தங்களிடமுள்ள விதை இருப்பு விபரங்களை விபரப் பலகையில் தினசரி குறிப்பிட்டு விவசாயிகள் பார்வைக்கு வைக்க வேண்டும்.

    விதை வாங்கும் விவசாயிகளுக்கு பயிர், ரகம், குவியல் எண், காலாவதி நாள் விபரம் குறிப்பிட்டு விற்பனை பட்டியல் கண்டிப்பாக வழங்கிட வேண்டும். விதைகளை முறைப்படி தனியாக காற்றோட்டமுள்ள இடத்தில் இருப்பு வைக்க வேண்டும். மேற்படி அறிவுரைகளை கடைபிடிக்காத விதை விற்பனையாளர்கள் மீது விதைச்சட்டம் 1966, விதை விதிகள் 1968 மற்றும் விதைக் கட்டுப்பாட்டு ஆணை 1983-ன் கீழ் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பாடப்புத்தகங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் ஜெகன்நாதன் எச்சரிக்கை விடுத்தார். #schoolbooks
    சென்னை:

    தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் ஜெகன்நாதன் கூறியதாவது:-

    சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கு 1-ம் முதல் 9-ம் வகுப்பு வரை தமிழ் பாடம் மட்டும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு மட்டும் அல்ல மற்ற மாணவர்களும் தமிழ்ப்பாடப்புத்தகம் 2, 3, 4, 5, 7, 8 வகுப்பு வரை பாடநூல் கழக ஆன்லைனில் (www.tamilnadufeecomittee.com) கடந்த 15-ந்தேதி முதல் விற்கப்பட்டு வருகிறது. 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டு அதற்கான பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகிறது. அவை வருகிற கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்படுகிறது.



    புதிய பாடப்புத்தகங்கள் அனைத்தும் 23-ந்தேதி ஆன்லைனில் வெளியிடப்படும். தேவைப்படும் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால் புதிய பாடப்புத்தகங்கள் 1, 6, 9, 11 வகுப்பு பாடப்புத்தகங்கள் அனைத்தும் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில் டி.பி.ஐ.வளாகத்திலும், கோட்டூர்புரம் அண்ணாநூற்றாண்டு விழா நூலகத்திலும் மற்றும் தனியார் கடைகளிலும் விற்கப்பட உள்ளன.

    இந்த விற்பனை அனைத்தும் இந்த மாத இறுதிக்குள் நடைபெறும். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சில கடைகளில் பாடப்புத்தகங்களின் விலையை விட கூடுதல் விலைக்கு பாடப்புத்தகம் விற்கப்படுகிறது. அவ்வாறு கூடுதல் விலைக்கு விற்கப்பட்ட பாடப்புத்தகமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது நாங்கள் அச்சடித்த விலை ரூ.110 என்று உள்ளது. ஆனால் முதல் பக்கத்தில் ரூ.150 என்று ரப்பர் ஸ்டாம்பு குத்தப்பட்டுள்ளது. அவ்வாறு கூடுதல் விலைக்கு பாடப்புத்தகங்களை விற்றால் கடைக்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் தொடங்கிய நாளில் இருந்து இதுவரை அச்சடித்த புத்தகங்கள் நூலகத்தில் இடம் பெற உள்ளன. இந்த நூலகம் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகம் உள்ள 10 மாடி கட்டிடத்தின் தரைதளத்தில் தொடங்கப்பட உள்ளது.

    இவ்வாறு ஜெகன்நாதன் தெரிவித்தார்.  #schoolbooks
    ×