என் மலர்
நீங்கள் தேடியது "tag 219304"
உடுமலை:
உடுமலை வட்டாரத்தில் அரசு தொடக்கப்பள்ளிகள் 93-ம், நடுநிலைப்பள்ளிகள் 25-ம் உள்ளன. இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 2022-2023-ம் கல்வி ஆண்டிற்கான புத்தகங்கள், உடுமலை சர்தார் வீதியில் உள்ள நகராட்சி எக்ஸ்டன்சன் நடுநிலைப்பள்ளிக்கு (பூங்காபள்ளி) வந்துள்ளது.
1-ம் வகுப்பிற்கு 1,435 மாணவர்களுக்கான பாடபுத்தகங்களும், 2-ம் வகுப்பிற்கு 1,437 மாணவர்களுக்கான பாடபுத்தகங்களும், 3-ம் வகுப்பிற்கு 1,295 மாணவர்களுக்கான பாடபுத்தகங்களும், 4-ம் வகுப்பிற்கு 1,380 மாணவர்களுக்கான பாடபுத்தகங்களும், 5-ம் வகுப்பிற்கு 1,522 மாணவர்களுக்கான பாடபுத்தகங்களும் என 5-ம் வகுப்பு வரையிலான 7,069 மாணவர்களுக்கான பாடபுத்தகங்கள் வந்துள்ளன.
அதேபோன்று 6-ம் வகுப்பிற்கு 575 மாணவர்களுக்கான பாட புத்தகங்களும், 7-ம் வகுப்பிற்கு 575 மாணவர்களுக்கான பாடபுத்தகங்களும், 8-ம் வகுப்பிற்கு 530 மாணவர்களுக்கான பாடபுத்தகங்களும் என 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான 1,680 மாணவர்களுக்கான பாடபுத்தகங்களும் வந்துள்ளன.
இதில் முதல்கட்டமாக 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கான பாடபுத்தகங்கள், அந்தந்த பள்ளிகளுக்கு எந்த அளவிற்கு தேவையோ அந்த அளவிற்கு அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்த பணிகள் உடுமலை வட்டார கல்வி அலுவலர்கள் மனோகரன், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் நடந்து வருகிறது. அடுத்த கட்டமாக 6-ம் வகுப்பு முதல்8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பாடபுத்தகங்களை வருகிற 6-ந்தேதி முதல் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.
தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் ஜெகன்நாதன் கூறியதாவது:-

புதிய பாடப்புத்தகங்கள் அனைத்தும் 23-ந்தேதி ஆன்லைனில் வெளியிடப்படும். தேவைப்படும் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால் புதிய பாடப்புத்தகங்கள் 1, 6, 9, 11 வகுப்பு பாடப்புத்தகங்கள் அனைத்தும் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில் டி.பி.ஐ.வளாகத்திலும், கோட்டூர்புரம் அண்ணாநூற்றாண்டு விழா நூலகத்திலும் மற்றும் தனியார் கடைகளிலும் விற்கப்பட உள்ளன.
இந்த விற்பனை அனைத்தும் இந்த மாத இறுதிக்குள் நடைபெறும். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சில கடைகளில் பாடப்புத்தகங்களின் விலையை விட கூடுதல் விலைக்கு பாடப்புத்தகம் விற்கப்படுகிறது. அவ்வாறு கூடுதல் விலைக்கு விற்கப்பட்ட பாடப்புத்தகமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது நாங்கள் அச்சடித்த விலை ரூ.110 என்று உள்ளது. ஆனால் முதல் பக்கத்தில் ரூ.150 என்று ரப்பர் ஸ்டாம்பு குத்தப்பட்டுள்ளது. அவ்வாறு கூடுதல் விலைக்கு பாடப்புத்தகங்களை விற்றால் கடைக்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் தொடங்கிய நாளில் இருந்து இதுவரை அச்சடித்த புத்தகங்கள் நூலகத்தில் இடம் பெற உள்ளன. இந்த நூலகம் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகம் உள்ள 10 மாடி கட்டிடத்தின் தரைதளத்தில் தொடங்கப்பட உள்ளது.
இவ்வாறு ஜெகன்நாதன் தெரிவித்தார். #schoolbooks






