search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "is sold"

    • விவசாயிகள், பொதுமக்கள் இத்தகைய மருந்தை எந்த ஒரு காரணத்துக்காகவும் வாங்க வேண்டாம்.
    • இந்த ஆய்வில் ‘ரேட்டால்” மருந்து விற்பனை செய்வது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ராஜகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    "வேளாண் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி அபாயகரமான 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் கலந்த 'ரேட்டால்" என்ற எலி மருந்தானது மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட், மருந்துக்கடைகளில் விற்பதற்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எனவே, விவசாயிகள், பொதுமக்கள் இத்தகைய மருந்தை எந்த ஒரு காரணத்துக்காகவும் வாங்க வேண்டாம். 'ரேட்டால்" மருந்து விற்கக்கூடிய விற்பனையாளர்களை கண்டறிய வேளாண், உணவு பாதுகாப்பு, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றி வரும் அலுவலர்கள் மூலமாக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுவினர் மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த ஆய்வில் 'ரேட்டால்" மருந்து விற்பனை செய்வது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள 'ரேட்டால்" ஈரோடு மாவட்டத்தில் எங்காவது விற்பனை செய்வது தெரியவந்தால் பொதுமக்கள் வட்டார பூச்சிமருந்து ஆய்வாளர்களிடம் புகார் தெரிவிக்கலாம். அதற்கான கைபேசி எண்கள் வேளாண்மை உதவி இயக்குநர்(தகவல் மற்றும் தரக்கட்டுபாடு) - 88702 88416, அம்மாபேட்டை- 99526 97911, அந்தியூர் - 89734 54034 , பவானி - 94430 30302, பவானிசாகர் - 94451 84161,

    சென்னிமலை - 94881 40401, ஈரோடு - 99651 29925, கோபி - 99949 72470 ,கொடுமுடி - 99764 80379 , மொடக்குறிச்சி - 99764 95153, நம்பியூர் - 73735 10591 , பெருந்துறை - 96595 47577, சத்தி - 83445 32481 , தாளவாடி - 63823 42149, டி.என்.பாளையம் - 80752 41292 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

    ×