search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rumors"

    • 7 மணி அளவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சமூக வலைதளங்கள் மூலம் தகவல் பரவியது.
    • போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுத்தை நடமாட்டம் வதந்தி என்பது தெரியவந்தது.

    பெருமாநல்லூர், ஜூலை.8-

    திருப்பூரில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில் கூலிபாளையம் அடுத்துள்ளது வெள்ளியம்பாளையம். இப்பகுதியை சுற்றி எஸ்.பெரியபாளையம், கோவி ந்தம்பாளையம், பெட்டிக்கடை, திம்மநாயக்கன்பாளையம், சிவசக்தி நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சமூக வலைதளங்கள் மூலம் தகவல் பரவியது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். உடனே இது குறித்து ஊத்துக்குளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுத்தை நடமாட்டம் வதந்தி என்பது தெரியவந்தது. சமூக வலைதளங்களில் தவறான புகைப்படத்தை பதிவிட்டு சிலர் இது போன்று சமூக வலைதளங்களில் தகவலை பரப்பியது தெரியவந்தது.

    இதையடுத்தே பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த சம்பவத்தால் எஸ்.பெரியபாளையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
    • கொடுமுடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 2 கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஈரோடு:

    கள்ளக்குறிச்சியில், தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தையடுத்து அது தொடர்பாக பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் சிலர் சமூக வளைதலங்களில் வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.

    இது போன்ற வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். இதேபோல அச்சம்பவம் தொடர்பாக வாட்ஸ் -அப் மூலமாக புதிய குழுக்களை ஆரம்பித்து, மாநில அளவில் இளைஞர்களை ஒன்றிணைத்து போராட்ட ங்களில் ஈடுபட உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் கொடுமுடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 2 கைது செய்யப்பட்டுள்ளனர்.

    எனவே இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் எடுக்கப்படும் என ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில் எச்சரிக்கை விடுக்க ப்பட்டுள்ளது.

    ×