என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வதந்திகள்"

    • அரிசி, கோதுமை, கொண்டைக்கடலை, பயறு, பட்டாணி போன்ற அனைத்தும் உள்ளன.
    • சந்தைகளுக்கு விரைந்து சென்று வதந்திகளை நம்பி அதிகமாக செலவு செய்ய வேண்டாம்.

    நாட்டில் உணவு தானியங்கள் மற்றும் அத்தியவசிய பொருட்களுக்குபற்றாக்குறை இருப்பதாக பரவும் வதந்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

    மக்கள் பீதியடைந்து சந்தைகளில் அதிக அளவில் பொருட்களை வாங்கத் தேவையில்லை என்று மத்திய உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

    ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த அவர், "நாட்டில் உணவு தானியங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை. உண்மையில், போதுமானதை விட அதிகமாக கையிருப்பு உள்ளது. பஞ்சாபிலும் இதுபோன்ற தவறான செய்திகள் பரப்பப்படுவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இதுபோன்ற வதந்திகளை மக்கள் நம்பக்கூடாது என்று தெரிவித்தார்

    நாடு முழுவதும் உணவு தானியங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு குறித்து மத்திய அரசு ஆய்வு நடத்தியுள்ளதாகவும், எல்லா இடங்களிலும் தேவைக்கு அதிகமாக இருப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அரிசி, கோதுமை, கொண்டைக்கடலை, பயறு, பட்டாணி போன்ற அனைத்து வகையான தானியங்களும் பருப்பு வகைகளும் தேசிய தேவைகளுக்கு அப்பாற்பட்ட அளவில் கிடைக்கின்றன என்று விளக்கினார்.

    மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும், சந்தைகளுக்கு விரைந்து சென்று வதந்திகளை நம்பி அதிகமாக செலவு செய்ய வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார். நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் இருப்பதாகவும், விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அமைச்சர் உறுதியளித்தார். 

    வதந்திகளை தடுப்பது சவாலான பணியாக உள்ளதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வாட்ஸ் அப் நிறுவனம் மத்திய அரசிடம் இன்று விளக்கமளித்துள்ளது. #Whatsapp #lynching
    புதுடெல்லி:

    சமூக வலைத்தளங்களில் முதன்மை இடத்தை வகிக்கும் பேஸ்புக் மற்றும் குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப் ஆகியவற்றின் மூலம் சமீபகாலமாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.

    குறிப்பாக, பெண்கள் கற்பழிப்பு, இறைச்சிக்காக பசு மாடுகள் கடத்தல், பிள்ளைகளை கடத்தும் கும்பல் போன்ற விவகாரங்கள் தொடர்பாக  பரிமாறப்படும் தவறான தகவல்களும் வதந்திகளும் நாட்டின் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்களுக்கும் உயிரிழப்புகளுக்கும் காரணமாகி விடுகின்றன.

    இதனை அடுத்து, வதந்தி சார்ந்த வன்முறைகள் பரவுவதை தடுக்க வேண்டும் என வாட்ஸ் அப் நிறுவனத்தை மத்திய அரசு எச்சரித்தது. ‘வாட்ஸ் அப் செயலியில் பரப்பப்படும் பொறுப்பற்ற, உணர்வுகளை தூண்டிவிடக் கூடிய, ஆத்திரமூட்டும், வதந்தியான தகவல்களால் சமீபகாலமாக பல மாநிலங்களில் படுகொலை சம்பவங்கள் நடந்துள்ளன நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட செயலிகளை சில சமூக விரோதிகள் தவறாக பயன்படுத்தி வன்முறைக்கு வித்திட்டு வருகின்றனர். இதில் தங்களுக்கான பொறுப்பை இந்த செயலி நிறுவனம் தட்டிக் கழித்துவிட முடியாது. இதைப்போன்ற தகவல்கள் பரவுவதை உரிய சாதனங்களின் மூலம் உடனடியாக தடுத்தாக வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளை தடுப்பது சவாலான பணியாக உள்ளதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வாட்ஸ் அப் நிறுவனம் மத்திய அரசிடம் இன்று விளக்கமளித்துள்ளது. 
    ×