என் மலர்
நீங்கள் தேடியது "Rumours"
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான வரலட்சுமி சரத்குமார் திருமணம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். #Varalakshmi #Rumours
சிம்பு ஜோடியாக போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானாவர் வரலட்சுமி. பாலா இயக்கத்தில் இவர் நடித்த தாரை தப்பட்டை படத்தின் மூலம் கவனிக்கப்பட்டார்.
தொடர்ந்து விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, மிஸ்டர்.சந்திரமௌலி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் வரலட்சுமி சண்டக்கோழி 2, சர்கார் படங்களில் வில்லியாகவும் நடித்தார்.
இவரும் விஷாலும் காதலிப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுத்தார்கள். தொடக்கத்தில் இதுபற்றி பேசாத வரலட்சுமி, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில்,

நடிகர் விஷால் எனக்கு நெருக்கமான நண்பர். எல்லா விஷயங்களையும் இருவரும் பகிர்ந்து கொள்வோம். ஆனால் அவரும் நானும் காதலிப்பதாகவோ, டேட்டிங் செல்வதாகவோ வரும் தகவல்களில் உண்மை இல்லை.
விஷாலுக்கு திருமணத்திற்கு பெண் பார்த்தால் நானே பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க தயார். அவர் திருமணம் செய்தால் மகிழ்ச்சியடையப் போவதும் நான்தான். எதற்காக விஷாலுடன் என்னை இணைத்து பேசுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை என்று கூறியிருந்தார்.
As usual at the end of the year some useless people looking for news has come up with rumours of me getting Married again.. IM NOT GETTING MARRIED.. I’m here to stay.. work and kick everybody’s ass..!!! So dear losers better luck next time..I know who u r.. #cantbringmedown..!! pic.twitter.com/HM3q8CQshv
— varu sarathkumar (@varusarath) December 30, 2018
இந்த நிலையில், வரலட்சுமிக்கு திருமணம் என சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக ட்விட்டரில் கருத்து தெரிவித்த வரலட்சுமி, எப்போதும் போல வருடத்தின் இறுதியில் வேலையில்லாத சிலர் எனக்கு திருமணம் என்ற வதந்தியை பரப்பி வருகிறார்கள். நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. நான் சினிமாவில் தான் கவனம் செலுத்தப் போகிறன். அடுத்த ஆண்டு பார்க்கலாம். வதந்தியை பரப்புவது யார் என்று எனக்கு தெரியும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே விஷாலுக்கு ஆந்திர பெண்ணுடன் திருமணம் நடைபெறவிருக்கும் செய்தி வெளியாகி இருப்பதால், இருவரைப் பற்றிய காதல் கிசுகிசுக்ககளும் முடிவுக்கு வந்துள்ளன. #Varalakshmi #Rumours
வதந்திகளை தடுப்பது சவாலான பணியாக உள்ளதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வாட்ஸ் அப் நிறுவனம் மத்திய அரசிடம் இன்று விளக்கமளித்துள்ளது. #Whatsapp #lynching
புதுடெல்லி:
சமூக வலைத்தளங்களில் முதன்மை இடத்தை வகிக்கும் பேஸ்புக் மற்றும் குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப் ஆகியவற்றின் மூலம் சமீபகாலமாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.
குறிப்பாக, பெண்கள் கற்பழிப்பு, இறைச்சிக்காக பசு மாடுகள் கடத்தல், பிள்ளைகளை கடத்தும் கும்பல் போன்ற விவகாரங்கள் தொடர்பாக பரிமாறப்படும் தவறான தகவல்களும் வதந்திகளும் நாட்டின் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்களுக்கும் உயிரிழப்புகளுக்கும் காரணமாகி விடுகின்றன.
இதனை அடுத்து, வதந்தி சார்ந்த வன்முறைகள் பரவுவதை தடுக்க வேண்டும் என வாட்ஸ் அப் நிறுவனத்தை மத்திய அரசு எச்சரித்தது. ‘வாட்ஸ் அப் செயலியில் பரப்பப்படும் பொறுப்பற்ற, உணர்வுகளை தூண்டிவிடக் கூடிய, ஆத்திரமூட்டும், வதந்தியான தகவல்களால் சமீபகாலமாக பல மாநிலங்களில் படுகொலை சம்பவங்கள் நடந்துள்ளன நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட செயலிகளை சில சமூக விரோதிகள் தவறாக பயன்படுத்தி வன்முறைக்கு வித்திட்டு வருகின்றனர். இதில் தங்களுக்கான பொறுப்பை இந்த செயலி நிறுவனம் தட்டிக் கழித்துவிட முடியாது. இதைப்போன்ற தகவல்கள் பரவுவதை உரிய சாதனங்களின் மூலம் உடனடியாக தடுத்தாக வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளை தடுப்பது சவாலான பணியாக உள்ளதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வாட்ஸ் அப் நிறுவனம் மத்திய அரசிடம் இன்று விளக்கமளித்துள்ளது.
கொள்ளையர்கள் என நினைத்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மரக்கட்டைகளால் தாக்கியதில் 9 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் அடுத்த நாள் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர்.
அவுரங்கபாத்:
மராட்டிய மாநிலம் அவுரங்கபாத் மாவட்டத்தில் உள்ள சந்த்காவன் கிராமத்தில் கொள்ளையர்கள் நடமாட்டம் இருப்பதாக வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இதனால் கிராம மக்கள் விடிய, விடிய காவல் காத்தனர்.
இந்நிலையில் கடந்த 8-ந் தேதி அதிகாலையில் 9 பேர் அந்த கிராமத்தில் உள்ள பண்ணைக்கு வந்தனர். அவர்களை கொள்ளையர்கள் என நினைத்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மரக்கட்டைகளால் தாக்கினர். இதில் 9 பேரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்களில் 2 பேர் அடுத்த நாள் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர். மேலும் 7 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
இது தொடர்பாக அந்த கிராமத்தை சேர்ந்த 400 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஆனால் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த கொடூர சம்பவம் தற்போது வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது.
ஏற்கனவே தெலுங்கானாவிலும் இதேபோல் 2 பேர் அடித்துக்கொல்லப்பட்டனர். அசாமில் குழந்தை கடத்தல் பீதியில் கிராம மக்களால் 2 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மராட்டிய மாநிலம் அவுரங்கபாத் மாவட்டத்தில் உள்ள சந்த்காவன் கிராமத்தில் கொள்ளையர்கள் நடமாட்டம் இருப்பதாக வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இதனால் கிராம மக்கள் விடிய, விடிய காவல் காத்தனர்.
இந்நிலையில் கடந்த 8-ந் தேதி அதிகாலையில் 9 பேர் அந்த கிராமத்தில் உள்ள பண்ணைக்கு வந்தனர். அவர்களை கொள்ளையர்கள் என நினைத்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மரக்கட்டைகளால் தாக்கினர். இதில் 9 பேரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்களில் 2 பேர் அடுத்த நாள் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர். மேலும் 7 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
இது தொடர்பாக அந்த கிராமத்தை சேர்ந்த 400 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஆனால் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த கொடூர சம்பவம் தற்போது வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது.
ஏற்கனவே தெலுங்கானாவிலும் இதேபோல் 2 பேர் அடித்துக்கொல்லப்பட்டனர். அசாமில் குழந்தை கடத்தல் பீதியில் கிராம மக்களால் 2 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.