search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்டித்து"

    • முன்னாள் அமைச்சருமான கே.வி. ராமலிங்கம் தலைமை தாங்கினார்.
    • ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

    ஈரோடு, 

    தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், சாராயம் மற்றும் போலி மதுபானங்களின் உயிரிழப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும் முதல்- அமைச்சர் பதவி விலக வலியுறுத்தியும் இன்று தமிழக முழுவதும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

    அதன்படி இன்று ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான கே.வி. ராமலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ். தென்னரசு முன்னிலை வகித்தார்.

    முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி. பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ சிவசுப்பிரமணி, மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.டி.தங்கமுத்து, பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஷ், கோவிந்தராஜன்,

    ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், மாணவரணி மாவட்ட இணை செயலாளர் நந்தகோபால், பெரியார் நகர் பகுதி அவை தலைவர் மீன் ராஜா, மாவட்ட வக்கீல் அணி தலைவர் துரை சக்திவேல், சிந்தாமணி இயக்குனர் பொன் சேர்மன், அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் மாதையன், முன்னாள் கவுன்சிலர் கோபால் சூரிய சேகர் பிரதிநிதி கஸ்தூரி உள்பட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தி.மு.க. அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கோபிசெட்டிபாளையம்- மொடச்சூர் ரோட்டில் உள்ள ஜியான் தியேட்டர் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.

    கோபிசெட்டிபாளையத்தில் தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ.பேசியதாவது:-

    இன்றோடு அக்னி நட்சத்திரம் வெயில் நிறைவு பெறபோகிறது. அதே போல தி.மு.க. ஆட்சியும் முடியபோகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே சட்டம், ஒழுங்கு சரி இருப்பது இல்லை. தற்போது கள்ளச்சாராயம் விற்பனையால் 22 பேர் இறந்து உள்ளனர்.

    எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சி 4 ஆண்டுகள் நடைபெற்றது. அந்த ஆட்சியில் திட்டங்கள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டன.

    வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அதே போல 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்பார். இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் கோஷம் எழுப்பினர்.

    இதில் பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ. பண்ணாரி, கோபி நகர அ.தி.மு.க. செயலாளர் பிரினியோகணேசன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் அதிகளவில் திரண்டனர்.

    ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி டவுன் பஸ் நிலையம் அருகே மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ., அருள்ஜோதி கே.செல்வராஜ், வைகைதம்பி என்கிற ரஞ்சித்குமார், பெருந்துறை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் விஜயன், பெட்டிசன் மணி உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
    • 29-ந்தேதி நடைபெறவிருக்கும் ஆர்ப் பாட்டத்தில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    கன்னியாகுமரி:

    குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது மற்றும் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தது தொடர்பாக தமிழக அரசை கண்டித்து 29-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது.

    கூட்டத்துக்கு அவைத்தலைவர் சேவியர் மனோகரன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ், தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன்,மாநகராட்சி கவுன்சிலர்கள் அக் ஷயா கண்ணன், ஸ்ரீலிஜா, அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன், ஒன்றிய செயலாளர்கள் ஜெஸீம், பொன் சுந்தர்நாத், இளையரணி செயலாளர் ஜெயசீலன், மாநகர முன்னாள் செயலாளர் சந்துரு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுகளை தெரிவிப்பது, குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.வில் அதிக ளவில் உறுப்பி னர்களை சேர்க்க வேண்டும், தமிழகத்தில் கள்ளச்சா ராயத்தை ஊக்குவித்த தி.மு.க. அரசை கண்டிப்பது, நடைபெற உள்ள நாடாளு மன்ற தேர்தலில் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டும் வேட்பாளரை வெற்றிபெறச் செய்வது, வருகிற 29-ந்தேதி நடைபெறவிருக்கும் ஆர்ப் பாட்டத்தில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    • தமிழ்நாடு சட்டமன்றத்தில் மரபுகளை மீறி கவர்னர் ஆர்.என்.ரவி செயல்பட்டது கண்டிக்கத்தக்கது.
    • தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் குடந்தை அரசன் பேசும்போது:-

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் மரபுகளை மீறி கவர்னர் ஆர்.என்.ரவி செயல்பட்டது கண்டிக்கத்தக்கது.

    தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவிற்கான அழைப்பிதழ்களில் தமிழ்நாடு அரசின் இலட்சினை (முத்திரை) பதிப்பதை தவிர்த்திருப்பதும், தமிழ்நாடு என்று பதிவு செய்ய மறுத்திருப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்றார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர் வடக்கு மாவட்ட செயலாளர் சித்தாடி ராஜா, மாநில ஊடகப் பிரிவு செயலாளர் சாக்கோட்டை ராஜா, மகளிர் விடுதலைப் பேரமைப்பின் மாநில செயலாளர் வெண்ணிலா, கும்பகோணம் மாநகர செயலாளர் ஜெயசங்கர், தஞ்சை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் குபேந்திரன், திருவாரூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் தெற்கு பட்டம் திருமேனி, இலையூர் கலையரசன், தஞ்சை வடக்கு மாவட்ட ஒருங்கிணைந்த அரசு ஊழியர் பேரவை மாவட்ட செயலாளர் அசுரன், திருவாரூர் மாவட்ட செய்தி தொடர்பாளர்கள் ரமேஷ், ரீகன், திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் துரை.பிரபு, திருப்பனந்தாள் மேற்கு ஒன்றிய செயலாளர் கோவி.இளையபெருமாள், கும்பகோணம் வடக்கு ஒன்றிய செயலாளர் முரளி, குடவாசல் மேற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, கொரடாச்சேரி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம், கொரடாச்சேரி வடக்கு ஒன்றிய செயலாளர் இளையூர் செல்வம், வலங்கைமான் ஒன்றிய செயலாளர் சதீஷ், குடவாசல் மேற்கு ஒன்றிய தலைவர் சாலமன், பாபநாசம் ஒன்றிய தலைவர் தமிழ்மாறன், வலங்கைமான் மேற்கு ஒன்றிய தலைவர் கோபி என்கிற கலியமூர்த்தி, திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், திருவிடைமருதூர் ஒன்றிய துணைச் செயலாளர் அன்புராஜ், குடந்தை ஒன்றிய தொழிலாளர் விடுதலைப் பேரவை ஒன்றிய செயலாளர் முருகராஜ், இளந்தமிழ்ப்புலிகள் பாசறை ஒன்றிய செயலாளர் கௌதமன், திருப்பனந்தாள் ஒன்றிய துணைச் செயலாளர் அஜித், ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • சேலம் மாநகராட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று காலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • சேலம் மாநகர மக்களுக்கு சீராக கூடிநீர் விநியோகம் செய்திட தனியார் நிறுவனத்துடன் இணைந்து புதிய திட்டம் அமல்படுத்த சேலம் மாநகராட்சி முடிவு செய்து உள்ளது.

    சேலம்:

    சேலம் மாநகராட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று காலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாநகரச் செயலாளர் பிரவீன்குமார் தலைமை தாங்கினார். மேற்கு மாநகர செயலாளர் கனகராஜ் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாவட்ட செயலாளர் சண்முகராஜா, செயற்குழு உறுப்பினர்கள் வெங்கடபதி, உதயகுமார், பொன்ரமணி உள்பட பலர் கண்டன உரையாற்றினர். அவர்கள் பேசும்போது, சேலம் மாநகர மக்களுக்கு சீராக கூடிநீர் விநியோகம் செய்திட தனியார் நிறுவனத்துடன் இணைந்து புதிய திட்டம் அமல்படுத்த சேலம் மாநகராட்சி முடிவு செய்து உள்ளது. இதனால் குடிநீர் கட்டணத் வைப்புத் தொகை உயரும். எனவே மாநகராட்சி நிர்வாகமே குடிநீரை விநியோகிக்க வேண்டும் என்றனர்.

    இதில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் ஆசை தம்பி நன்றி கூறினார்.

    • ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணைத் தலைவர் தேவ், முன்னாள் எம்.எல்.ஏ., வேலா யுதம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் வினோத், சுரேஷ், மாநகரப் பார்வை யாளர்கள் அஜித் குமார், நாக ராஜன், பிரசார அணி செயலாளர் எஸ். எஸ். மணி, மாநகராட்சி கவுன்சிலர்கள் அய்யப்பன் ,சுனில், வீரசூர பொருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    • மாவட்ட பொதுச்செய லாளர் ஜெகநாதன் நன்றி கூறி னார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    நாகர்கோவில், அக். 27-

    தி.மு.க. அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பொன்.ராதாகிருஷ்ணன்

    குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பி னர் பொன்ரத்தினமணி முன்னிலை வைத்தார்.

    முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க. அரசு தமிழுக்கும் தமிழர்களுக்கும் துரோகம் செய்து வருகிறது. 1967-ம் ஆண்டு தமிழை சொல்லி தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தனர். 50 ஆண்டு காலமாக தி.மு.க. ஆட்சி செய்துள்ளது. உலக அளவில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆராய்ச்சிக்கு என்று ஒரு இருக்கை அமைக்க தி.மு.க. நடவடிக்கை எடுக்கவில்லை.

    ஆனால் பிரதமர் மோடி காசி பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று தனி இருக்கை அமைத்து தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார். இன்று 3 நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக இருந்து வருகிறது.

    உலகத்திலேயே பழமை யான மொழி தமிழ் மொழி என்று பிரதமர் மோடி கூறினார். சமஸ்கிருதத்தை விட தமிழ் மொழி பழமை யான மொழி என்று அவர் கூறியுள்ளார்.ஆனால் இங்குள்ள தி.மு.க.விற்கு தமிழைப் பற்றி எந்த கவலையும் இல்லை.

    துரோகம்

    இலங்கையில் தமிழர்கள் பலர் படுகொலை செய்யப் பட்டனர். ஆனால் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் கைகுலுக்கியவர்கள் தான் தி.மு.க.,-காங்கிரஸ் எம்.பி., க்கள். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    இது தமிழக மக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம் ஆகும். குமரி மாவட்டத்தில் எதை வேண்டுமானாலும் அரசியலாக்க வேண்டும் என்று நினைத்தால் அது நடக்காது. அது மோச மான விளைவுகளை ஏற்ப

    டுத்தும்.

    குமரி மேற்கு மாவட்ட த்தில் மாணவர் ஒருவர் குளிர்பானத்தில் ஆசிட் கலந்து குடித்த பள்ளியை மீண்டும் திறந்து செயல்படுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்குள்ள மாண வர்கள் தொடர்ந்து அங்கு கல்வி கற்க வேண்டும்.

    குரல் கொடுப்போம்

    தமிழை விட்டுக் கொடுக்க நாம் தயாராக இல்லை. அது எந்த அரசாக இருந்தாலும் சரி. வேறு மொழியை திணிக்கும் நிலை ஏற்பட்டால் அதை எதிர்த்து குரல் கொடுக்கும் முதல் இயக்கமாக பாரதிய ஜனதா கட்சி இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணைத் தலைவர் தேவ், முன்னாள் எம்.எல்.ஏ., வேலா யுதம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் வினோத், சுரேஷ், மாநகரப் பார்வை யாளர்கள் அஜித் குமார், நாக ராஜன், பிரசார அணி செயலாளர் எஸ். எஸ். மணி, மாநகராட்சி கவுன்சிலர்கள் அய்யப்பன் ,சுனில், வீரசூர பொருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொதுச்செய லாளர் ஜெகநாதன் நன்றி கூறி னார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷங் கள் எழுப்பப்பட்டது.

    • சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படிக்கின்றனர்.
    • நேற்று மதியம் பள்ளி எதிரே உள்ள தாரமங்கலம்- வனவாசி சாலையில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படிக்கின்றனர்.

    இப்பள்ளி தலைமை ஆசிரியையாக நங்கவள்ளியை சேர்ந்த கீதாஞ்சலி உள்ளார். அங்கு 6, 7, 8-ம் வகுப்புக்கு அறிவியல் ஆசிரியையாக பொட்டனேரியை சேர்ந்த உமா பணிபுரிகிறார். நேற்று மதியம் பள்ளி எதிரே உள்ள தாரமங்கலம்- வனவாசி சாலையில் உமா திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    சக ஆசிரியைகள் பேச்சு நடத்தி, அவரை பள்ளிக்குள் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தை அடுத்து மக்கள் திரண்டனர். நங்கவள்ளி வட்டார கல்வி அதிகாரிகள் சரோஜா, மாலதி விசாரித்தனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், கீதாஞ்சலிக்கும், உமாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று நடந்த அறிவியல் தேர்வு பொறுப்பை உமாவுக்கு வழங்காமல் வகுப்பு ஆசிரியையிடம் கீதாஞ்சலி வழங்கினார். அதை கண்டித்து உமா தர்ணாவில் ஈடுபட்டார். விசாரணை அறிக்கைைய முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கோபிசெட்டிபாளையம், பவானி, ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு ஆகிய 3 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • நிர்வாகிகள் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கோபிசெட்டிபாளையம், பவானி, ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு ஆகிய 3 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மின் கட்டண உயர்வை கண்டித்து ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தலைமையில் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் பவானிசாகர் எம்.எல்.ஏ. பண்ணாரி, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.ரமணீதரன், ஒன்றிய செயலாளர்கள் தம்பி சுப்பிரமணியம், ஈஸ்வரமூர்த்தி, கோபி நகர செயலாளர் பிரினியோ கணேஷ் உள்பட ஏராளமான பேர் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் தலைமையில் பவானி அந்தியூர் ேராட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ. பவானி நகர அதிமுக செயலாளர் சீனிவாசன்,

    முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.சி.பொன்னுத்துரை, டாக்டர் பொன்னுசாமி, கே.எஸ். பழனிச்சாமி, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், பவானி வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கவேலு, தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீஸ், பவானி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்கோதை வரதராஜ்,

    அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் சோமு, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் மாதையன் என்கிற எம்.ஜி. நாத், இளைஞர் அணி செயலாளர் கரேத்தா பெரியசாமி, ஒன்றிய கவுன்சிலர் வாத்தியார் குப்புசாமி, அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் முனியப்பன், தெற்கு ஒன்றிய செயலாளர் மேகநாதன்,

    ஐ.டி. பிரிவு பிரகாஷ் உட்பட ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    • இதையடுத்து மத்திய அரசை கண்டித்து பெருந்துறை புதிய பஸ் நிலையம் பகுதியில் பெருந்துறை வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்துறை வட்டார காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணி, பெருந்துறை பேரூராட்சி கவுன்சிலர் பஷிரியா பேகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    பெருந்துறை:

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்க துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதையடுத்து மத்திய அரசை கண்டித்து பெருந்துறை புதிய பஸ் நிலையம் பகுதியில் பெருந்துறை வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெருந்துறை தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார்.

    இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கையில் காங்கிரஸ் கொடியை ஏந்தி கோஷம் போட்டு போட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்துறை பேரூராட்சி கவுன்சிலர் பஷிரியா பேகம் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோன்று சிவகிரி புதிய பஸ் நிலையம் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிச்சாமி தலைமை தாங்கினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்துறை வட்டார காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணி, பெருந்துறை பேரூராட்சி கவுன்சிலர் பஷிரியா பேகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    • அதன்படி அ.தி.மு.க. சார்பில் இன்று வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே மின் கட்டண உயர்வை கண்டித்தும், வீட்டு வரி உயர்வை கண்டித்தும், பெண்களைப் பாதுகாக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பா ட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட செயலா ளருமான கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார்.

    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் இன்று அ.தி.மு.க. சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

    அதன்படி அ.தி.மு.க. சார்பில் இன்று வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே மின் கட்டண உயர்வை கண்டித்தும், வீட்டு வரி உயர்வை கண்டித்தும், பெண்களைப் பாதுகாக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பா ட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட செயலா ளருமான கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளருமான கே.எஸ்.தென்னரசு முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிவசுப்பிரமணி, கிட்டுசாமி, பூந்துறை பாலு, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி .பழனிச்சாமி கவுன்சிலர் சூரம்பட்டிஜெகதீஷ், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் தங்கமுத்து, முன்னாள் எம்.பி. செல்வகுமார சின்னையன், முன்னாள் மண்டல தலைவர் பெரியார் நகர் மனோகரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், பகுதி செயலாளர்கள் கேச வமூர்த்தி, கோவிந்தராஜன், ராமசாமி, மாணவரணி மாவட்ட தலைவர் ரத்தன் பிரித்வி, மாணவர் அணி மாவட்ட இணைச்செயலாளர் யுனிவர்சல் நந்தகோபால், வீரப்பன் சத்திரம் பகுதி ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ஜெயராமன், மாவட்ட வக்கீல் அணி தலைவர் துரை சக்திவேல், பெரியார் நகர் பகுதி அமைத்தலைவர் மீன் ராஜா, சிந்தாமணி கூட்டுறவு சங்க இயக்குனர் பொன் சேர்மன், மாணவரணி பொருளாளர் முருகானந்தம், 46 புதூர் தலைவர் பிரகாஷ், நிர்வாகி துரைசேவுகன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச்செயலாளர் மாதையன், மாவட்ட பிரதிநிதி கஸ்தூரி, பெரியார் நகர் பகுதி நிர்வாகி சூரியசேகர், சூரம்பட்டி தங்கவேலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தாமோதர மூர்த்தி, ஐடி விங் செயலாளர் கோபாலகிருஷ்ணன், உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    • சேலம் பெரியார் பல்கலைக் கழக பேராசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாத பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டம்.
    • பல்கலைக்கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தியிருக்கும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்திடவும் போராட்டம் நடத்தப்படும்.

    பரமத்தி வேலூர்:

    பெரியார் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணராஜ் தெரிவித்து இருப்பதாவது-

    சேலம் பெரியார் பல்கலைக் கழக பேராசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாத பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற கோரியும் வருகிற 27-ம்தேதி மாலை 4 மணி அளவில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கபட்டுள்ளது.

    கோரிக்கைகள் நிறைவேறும் வரை தேர்வுத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு, வாயில் முழக்கப் போராட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களை நடத்துவது எனவும் ஆசிரி யர் சங்கங்கள் முடிவு செய்துள்ளது.

    ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு ஒருங்கி ணைப்பாளரை உடனடியாக மாற்றிடவும், நிரந்தர பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் நியமனங்கள் செய்திடவும், பல்கலைக்கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தியிருக்கும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்திடவும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இதையொட்டி ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் இன்று காலை 10 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தலைமை தாங்கி பேசினார்.

    கோபி:

    தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அ.தி.முக. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    இதையொட்டி ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் இன்று காலை 10 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தலைமை தாங்கி பேசினார்.

    இதில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, ஆகியவற்றை கண்டித்தும் தி.மு.க. தேர்தல் அறிக்கைகளில் அறிவிக்கப்பட்ட குடும்ப த்தலைவிக்கானரூ.1000, சிலிண்டருக்கு மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை நிறை வேற்றாததை கண்டி த்தும் கோஷம் எழுப்ப ப்பட்டது.

    தாலிக்கு தங்கம், பெ ண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் போன்ற நலத்திட்டங்களை செயல்படுத்தாததை கண்டித்தும், அரசு ஊழியருக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றாததை கண்டித்தும் இதில் கலந்து கொண்டவர்கள் கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

    இதில் பவானிசாகர் பண்ணாரி எம்.எல்.ஏ, கோபி நகர அ.தி.மு.க. செய லாளர் பிரினியோ கணேஷ், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிர மணியன் மற்றும் முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி, கிளை கழக, நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதையொட்டி எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கருப்பு பலூன்கள் ஆர்ப்பாட்டத்தில் பறக்க விடப்பட்டன. மேலும் அ.தி.மு.க.வினர் பதாகைகளை ஏந்தி கொண்டு மின் கட்டண உயர்வை கண்டித்து தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.

    • தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நாளை (திங்கட்கிழமை) ஆர்ப்பட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • இதில் முன்னாள் அமை ச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் எம்.எல்ஏ. கலந்து கொண்டு தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    கோபி:

    தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நாளை (திங்கட்கிழமை) ஆர்ப்பட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதையொட்டி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்துவரி ஆகியவற்றை குறைக்க கோரியும், குடும்ப தலைவிக்கான ரூ.1000, சிலிண்டர் மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, தாலிக்கு தங்கம், பெண்களுக்கு மானிய ஸ்கூட்டர் மற்றும் அரசு ஊழியருக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறு கிறது.

    கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ.

    இதில் முன்னாள் அமை ச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் எம்.எல்ஏ. கலந்து கொண்டு தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார். இதில் பவானிசாகர் பண்ணாரி எம்.எல்.ஏ. மற்றும் புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர், ஊராட்சி நிர்வாகிகள் உள்பட கலந்து கொள்கிறார்கள்.

    ×