search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tariff hike in Erode"

    • அதன்படி அ.தி.மு.க. சார்பில் இன்று வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே மின் கட்டண உயர்வை கண்டித்தும், வீட்டு வரி உயர்வை கண்டித்தும், பெண்களைப் பாதுகாக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பா ட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட செயலா ளருமான கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார்.

    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் இன்று அ.தி.மு.க. சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

    அதன்படி அ.தி.மு.க. சார்பில் இன்று வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே மின் கட்டண உயர்வை கண்டித்தும், வீட்டு வரி உயர்வை கண்டித்தும், பெண்களைப் பாதுகாக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பா ட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட செயலா ளருமான கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளருமான கே.எஸ்.தென்னரசு முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிவசுப்பிரமணி, கிட்டுசாமி, பூந்துறை பாலு, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி .பழனிச்சாமி கவுன்சிலர் சூரம்பட்டிஜெகதீஷ், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் தங்கமுத்து, முன்னாள் எம்.பி. செல்வகுமார சின்னையன், முன்னாள் மண்டல தலைவர் பெரியார் நகர் மனோகரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், பகுதி செயலாளர்கள் கேச வமூர்த்தி, கோவிந்தராஜன், ராமசாமி, மாணவரணி மாவட்ட தலைவர் ரத்தன் பிரித்வி, மாணவர் அணி மாவட்ட இணைச்செயலாளர் யுனிவர்சல் நந்தகோபால், வீரப்பன் சத்திரம் பகுதி ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ஜெயராமன், மாவட்ட வக்கீல் அணி தலைவர் துரை சக்திவேல், பெரியார் நகர் பகுதி அமைத்தலைவர் மீன் ராஜா, சிந்தாமணி கூட்டுறவு சங்க இயக்குனர் பொன் சேர்மன், மாணவரணி பொருளாளர் முருகானந்தம், 46 புதூர் தலைவர் பிரகாஷ், நிர்வாகி துரைசேவுகன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச்செயலாளர் மாதையன், மாவட்ட பிரதிநிதி கஸ்தூரி, பெரியார் நகர் பகுதி நிர்வாகி சூரியசேகர், சூரம்பட்டி தங்கவேலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தாமோதர மூர்த்தி, ஐடி விங் செயலாளர் கோபாலகிருஷ்ணன், உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    ×