search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பகோணத்தில் விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் விடுதலை தமிழ் புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசன் பேசினார்.

    கும்பகோணத்தில் விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

    • தமிழ்நாடு சட்டமன்றத்தில் மரபுகளை மீறி கவர்னர் ஆர்.என்.ரவி செயல்பட்டது கண்டிக்கத்தக்கது.
    • தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் குடந்தை அரசன் பேசும்போது:-

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் மரபுகளை மீறி கவர்னர் ஆர்.என்.ரவி செயல்பட்டது கண்டிக்கத்தக்கது.

    தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவிற்கான அழைப்பிதழ்களில் தமிழ்நாடு அரசின் இலட்சினை (முத்திரை) பதிப்பதை தவிர்த்திருப்பதும், தமிழ்நாடு என்று பதிவு செய்ய மறுத்திருப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்றார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர் வடக்கு மாவட்ட செயலாளர் சித்தாடி ராஜா, மாநில ஊடகப் பிரிவு செயலாளர் சாக்கோட்டை ராஜா, மகளிர் விடுதலைப் பேரமைப்பின் மாநில செயலாளர் வெண்ணிலா, கும்பகோணம் மாநகர செயலாளர் ஜெயசங்கர், தஞ்சை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் குபேந்திரன், திருவாரூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் தெற்கு பட்டம் திருமேனி, இலையூர் கலையரசன், தஞ்சை வடக்கு மாவட்ட ஒருங்கிணைந்த அரசு ஊழியர் பேரவை மாவட்ட செயலாளர் அசுரன், திருவாரூர் மாவட்ட செய்தி தொடர்பாளர்கள் ரமேஷ், ரீகன், திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் துரை.பிரபு, திருப்பனந்தாள் மேற்கு ஒன்றிய செயலாளர் கோவி.இளையபெருமாள், கும்பகோணம் வடக்கு ஒன்றிய செயலாளர் முரளி, குடவாசல் மேற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, கொரடாச்சேரி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம், கொரடாச்சேரி வடக்கு ஒன்றிய செயலாளர் இளையூர் செல்வம், வலங்கைமான் ஒன்றிய செயலாளர் சதீஷ், குடவாசல் மேற்கு ஒன்றிய தலைவர் சாலமன், பாபநாசம் ஒன்றிய தலைவர் தமிழ்மாறன், வலங்கைமான் மேற்கு ஒன்றிய தலைவர் கோபி என்கிற கலியமூர்த்தி, திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், திருவிடைமருதூர் ஒன்றிய துணைச் செயலாளர் அன்புராஜ், குடந்தை ஒன்றிய தொழிலாளர் விடுதலைப் பேரவை ஒன்றிய செயலாளர் முருகராஜ், இளந்தமிழ்ப்புலிகள் பாசறை ஒன்றிய செயலாளர் கௌதமன், திருப்பனந்தாள் ஒன்றிய துணைச் செயலாளர் அஜித், ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×