search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Modi government"

    காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நேற்று ஆமதாபாத்தில் நடைபெற்றது. பிரதமர் மோடி மீண்டும் மக்களை முட்டாளாக்க காங்கிரஸ் அனுமதிக்காது என்று கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். #RagulGandhi #Congress
    ஆமதாபாத்:

    காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய காரிய கமிட்டி கூட்டம் நேற்று குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் தேசிய நினைவு அரங்கில் நடைபெற்றது. இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், அகமது பட்டேல் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் 58 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறுகிறது. மகாத்மா காந்தியின் வரலாற்று சிறப்பு மிக்க தண்டி யாத்திரை சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தொடங்கிய நாளில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர் பிரியங்கா கலந்துகொள்ளும் முதல் காரிய கமிட்டி கூட்டம் இது.

    கூட்டத்தின் ஆரம்பத்தில் புலவாமா பயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களுக்காக 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர்கள் காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு சென்று சர்வமத பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

    இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    பிரதமர் தேச பாதுகாப்பை இழிவான முறையில் வெளிப்படுத்துவது கடும் ஏமாற்றத்தை அளிக்கிறது. தனது மாபெரும் தோல்விகள், போலியான அறிவிப்புகள், தொடர் பொய்கள் ஆகியவற்றை மறைக்க இதுபோல திசைதிருப்புகிறார். அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து போராட அனைத்து ஜனநாயக அமைப்புகளும் ஒன்றிணைய வேண்டும்.

    இந்தியாவின் எதிரிகளுக்கு எதிராக நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். இந்தியாவின் துணிச்சலான ஆயுதப்படைகளை நினைத்து பெருமைப்படுகிறோம். வன்முறை அல்லது பயங்கரவாதம் மூலம் இந்திய படைகளை யாராலும் தோற்கடிக்க முடியாது.

    சிறந்த நிர்வாகம், ஜனநாயக ஆட்சி அமைப்பு, பொருளாதார நிலையை சீர்செய்வது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, சமூகநீதி மற்றும் அமைதி ஆகியவற்றை மீண்டும் திருத்தி அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

    இந்த அரசில் அனைத்து பிரிவினரும், தொழில் நிறுவனங்களும் ஒரு அச்சமான சூழ்நிலையில் உள்ளன. இந்த நிலையை போக்க இந்திய மக்களை காங்கிரஸ் பணிவுடன் அணுகி தேர்தலில் ஆதரவு கேட்கிறது.

    காங்கிரஸ் தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதியுடன் இருக்கிறது. ஏற்கனவே அளித்த வாக்குறுதிப்படி சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற மாநிலங்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த தகவலை ஆனந்த் சர்மா தெரிவித்தார். கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, பிரதமர் மோடி மீண்டும் மக்களை முட்டாளாக்கவும், திசைதிருப்பவும் காங்கிரஸ் அனுமதிக்காது என்று கூறியதாக ஆனந்த் சர்மா தெரிவித்தார்.

    வேலையின்மை அதிகரிப்பை ஏற்க மோடி அரசு மறுக்கிறது என ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். #Modi #Government #RahulGandhi
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி பல்கலைக்கழக மாணவர்களுடன் டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு மைதானத்தில் நேற்று கலந்துரையாடினார். அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து ராகுல் காந்தி பேசியதாவது:-

    நாட்டில் வேலையின்மை அதிகரிப்பு பிரச்சினை கவலை அளிக்கிறது. இதை ஒரு பிரச்சினையாக பிரதமர் நரேந்திர மோடி கருதவில்லை. இதை ஏற்க மோடி அரசு மறுக்கிறது.



    சீனாவுடன் ஒப்பிடும் போது வேலைவாய்ப்பை உருவாக்குவதில் இந்தியா மிகவும் பின்தங்கி உள்ளது. 24 மணி நேரத்தில் சீனா 50 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. ஆனால் இந்தியா வெறும் 450 வேலைவாய்ப்புகளை மட்டுமே உருவாக்கி வருகிறது. இதை நான் சொல்லவில்லை. மத்திய நிதி அமைச்சகம் நாடாளுமன்ற மக்களவையில் அளித்த புள்ளிவிவரம் தான் இது.

    முதலில் நம்முடைய தவறை உணர வேண்டும். அதன் பிறகு அதை சரிசெய்ய முயற்சி செய்ய வேண்டும். இதை தான் காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.

    ரபேல் விவகாரம், ஊழல், வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து என்னிடம் நேரடியாக விவாதிக்க மோடிக்கு அழைப்பு விடுத்தேன். ஆனால் அவர் என்னிடம் விவாதிக்க தயாராக இல்லை. நான் மேற்கொண்ட இந்த முயற்சி போல உங்களிடம் மோடி நேரடியாக கலந்துரையாட தயாராக இருப்பாரா? உங்களின் கேள்விகளை எதிர்கொள்ள தயாராக உள்ளாரா? என தெரியவில்லை.

    வேலையின்மை பிரச்சினை குறித்து உங்களிடம் மோடி விவாதிக்க வேண்டும். அவருடைய பார்வையில் பேசுவதை கைவிட்டு, உங்களின் பேச்சை அவர் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

    மாணவர்களின் கல்விக்காக மாநில அரசுகள் அதிகம் செலவிட வேண்டும். பட்ஜெட்டில் கல்விக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கல்வியை தனியார் மயமாக்குவதற்கு காங்கிரஸ் ஒருபோதும் ஆதரவு அளிக்காது. நாட்டின் வளம் அனைத்தும் ஒரு சிலரின் கைகளில் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக புலவாமா தாக்குதலில் இறந்த துணை ராணுவ படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2 நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
    மோடி அரசை எதிர்த்து பாராளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு பெறும் 13-ந்தேதியும், 14-ந்தேதியும் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்த உள்ளனர். #Mamata #Chandrababunaidu
    புதுடெல்லி:

    மேற்கு வங்க மாநிலத்தில் சாரதா சிட்பண்ட்ஸ் மோசடியில் தொடர்புடைய போலீஸ் கமி‌ஷனர் ராஜீவ்குமாரை விசாரிக்க சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்ததற்கு அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    மத்திய அரசு அரசியல் சட்டத்தை அழிப்பதாக கூறி அவர் கொல்கத்தாவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டம் 3 நாட்கள் நடைபெற்றது.

    கொல்கத்தா போலீஸ் கமி‌ஷனர் ராஜீவ்குமார் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகு மம்தா பானர்ஜி அதை ஏற்பதாக கூறினார். என்றாலும் அரசியல் சட்டத்தை பாதுகாக்கவும், கூட்டாட்சி தத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கக் கோரியும் டெல்லியில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்தார்.

    அதன்படி அடுத்த வாரம் மம்தா பானர்ஜி டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளார். அடுத்த வாரம் புதன்கிழமை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைகிறது. அந்த சமயத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார்.

    இந்த போராட்டத்தில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவும் கலந்து கொள்ள இருக்கிறார். மம்தா பானர்ஜிக்கு முன்னதாக நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி சந்திரபாபு நாயுடு டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்துகிறார்.

    இதற்காக 2 ரெயில்களில் ஆந்திராவில் இருந்து தெலுங்குதேசம் தொண்டர்கள் இன்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். டெல்லியை குலுங்க வைக்கும் வகையில் சந்திரபாபு நாயுடுவின் போராட்டம் இருக்கும் என்று தெரிகிறது.

    டெல்லியில் ஆந்திர பவன் வளாகத்தில் இதற்காக சிறப்பு மேடை அமைக்கப்பட்டு வருகிறது. அந்த மேடையில் சந்திரபாபு நாயுடுவும், தெலுங்கு தேச கட்சி மூத்த தலைவர்களும் அமர்ந்து தர்ணா செய்ய உள்ளனர்.

    சந்திரபாபு நாயுடுவின் தர்ணா போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லியில் திரள உள்ளனர். இதனால் அடுத்த வாரம் திங்கட்கிழமை முதல் சில நாட்களுக்கு டெல்லியில் அடுத்தடுத்து பரபரப்பு ஏற்பட உள்ளது.

    பாராளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு பெறும் 13-ந்தேதியும், 14-ந்தேதியும் மம்தா பானர்ஜி டெல்லியில் தர்ணா செய்கிறார். இதற்காக மேற்கு வங்காளத்தில் இருந்து ஆயிரக்கணக்கான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் டெல்லிக்கு வர உள்ளனர்.

    இதனால் கூட்டத்தினரை சமாளிக்க எத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்று டெல்லியில் போலீசார் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். #Mamata #Chandrababunaidu

    பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுத்த 3ம் ஆண்டின் துவக்க நாளை முன்னிட்டு மோடி அரசை கண்டித்து 9ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். #Thirunavukkarasar #Congress #Demonetization
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 8.11.2016 அன்று நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிற வகையில் பயன்பாட்டில் இருந்த ரூபாய் 500, 1000 நோட்டுகள் அனைத்தையும் செல்லாது என சர்வாதிகாரிபோல் பிரதமர் நரேந்திர மோடி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

    இதனால் கடந்த 2 ஆண்டு காலமாக மிகப் பெரிய பொருளாதார பேரழிவை நாடு சந்தித்து வருகிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், சிறு வணிகர்கள், சிறு, குறு தொழில் முனைவர்கள் என அனைத்து தரப்பினரும் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர்.



    பணமதிப்பு நீக்கத்தினால் ஏற்பட்ட பொருளாதார சீரழிவையும், மக்கள் பாதிப்பையும் கருத்தில் கொண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அறிவுறுத்தலின்பேரில் பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுத்த 3-ம் ஆண்டின் துவக்க நாளை முன்னிட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற வேண்டும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளது.

    ஆகவே மாவட்டத் தலைவர்கள் வருகிற 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தங்கள் கட்சி அமைப்பு மாவட்டங்களில் அமைந்துள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டங்களை மிக சிறப்பாக நடத்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பில், எனது தலைமையில் ராஜாஜி சாலையில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வருகிற 9.11.2018 காலை 11 மணியளவில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர். ராமசாமி எம்.எல்.ஏ., அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சஞ்சய்தத், டாக்டர் சிரிவல்ல பிரசாத் மற்றும் முன்னணி தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Thirunavukkarasar #Congress  #Demonetization
    “ரபேல் ஒப்பந்த முறைகேட்டின் மூலம் நாட்டின் போர்த்திறன் மிக்க சொத்தான எச்.ஏ.எல். நிறுவனத்தை மோடி அரசு அழிக்கிறது” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். #Rafalescam #RahulGandhi #HALemployees
    பெங்களூரு:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்து இருப்பதாக மத்திய அரசு மீது குற்றம் சாட்டி வருகிறார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் அரசின் பொதுத்துறை நிறுவனமான எச்.ஏ.எல்.(ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் லிமிடெட்) நிறுவனத்துக்கு வழங்கப்பட வேண்டிய ரபேல் போர் விமான தயாரிப்பு, பணி அனுபவம் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு இருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார்.

    ரபேல் ஒப்பந்தத்திற்கு எதிராக குரல் கொடுத்து வரும் அவர், அதன் ஒரு பகுதியாக நேற்று பெங்களூருவில் எச்.ஏ.எல். நிறுவனத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் தொழிலாளர்களை சந்தித்து உரையாடினார். பின்னர் அவர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசியதாவது:-



    நவீன இந்தியாவின் கோவில்களாக கருதப்படும் பொதுத்துறை நிறுவனங்கள் தாக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எச்.ஏ.எல். நிறுவனம் 78 ஆண்டுகள் அனுபவமிக்க நிறுவனம். நமது நாட்டின் போர்த்திறன் மிக்க சொத்து. விமானம் தயாரிப்புக்கான அனுபவம் உங்களிடம் உள்ளது. ஆனால், விமானம் தயாரிப்புக்கான அனுபவம் எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு இல்லை என்று மத்திய அரசு சொல்வது கேலிக்கூத்து. ரபேல் விமான தயாரிப்பு உங்களின் உரிமை.

    விமான தயாரிப்பில் உங்களுக்கு அனுபவம் இல்லை என்று மத்திய அரசு சொல்வது உங்களை எந்த அளவுக்கு பாதித்து இருக்கும் என்பதை நான் உணர்ந்து உள்ளேன். அதனால் நீங்கள் அடைந்துள்ள வலி, வேதனை எனக்கு தெரியும். இந்த நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்தவர்கள், நாட்டின் நலனில் அக்கறை உள்ள மக்கள் அவமதிக்கப்பட்டு உள்ளனர்.

    மத்திய அரசு இதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்காது என்பது எனக்கு தெரியும். அதனால் அவர்கள் சார்பில் நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இந்த சோதனையான நேரத்தில் நான் உங்கள் பக்கம் நிற்கிறேன்.

    இங்கு பேசிய தொழிலாளர்கள் ரபேல் விமானம் தயாரிக்கும் தகுதி திறமை எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு உள்ளது என்று தெரிவித்தனர். ராணுவத்துக்கான பொதுத்துறை நிறுவனத்தை அழிக்கும் முயற்சி நடந்து கொண்டு இருக்கிறது. நாட்டிற்காக இந்த நிறுவனம் அபரிமிதமான பணிகளை ஆற்றி இருக்கிறது.

    நாட்டை காக்கும் இந்த நிறுவனத்துக்கு நாடு கடமைப்பட்டு இருக்கிறது. வான்வெளி துறையில் எச்.ஏ.எல். நிறுவனம் சாதாரண அல்லது வழக்கமான ஒரு நிறுவனம் கிடையாது. இது நாட்டின் போர்த்திறன் மிக்க சொத்து.

    நாங்கள் இப்போது எதிர்க்கட்சியாக இருக்கிறோம். மத்தியில் ஆட்சி அமைக்கும்போது, எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு தீவிரமாக உதவி செய்வோம்.

    இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

    பின்னர் ராகுல் காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு விமான தயாரிப்பில் அனுபவம் இல்லை என்று கூறுகிறார். ஆனால் அனில் அம்பானி நிறுவனத்தின் அனுபவம் குறித்து எதுவும் பேசவில்லை. இந்த முறைகேட்டை மூடி மறைக்கவே அவர் பிரான்ஸ் நாட்டுக்கு சென்றார். ஆனால், உண்மைகள் வெளிவந்து விட்டதால், மறைக்க முடியாது.

    அனில் அம்பானி வாழ்நாளில் ஒரு விமானம் கூட தயாரித்ததில்லை. எச்.ஏ.எல். நிறுவனத்திற்கு கடன் எதுவும் இல்லை. அனில் அம்பானிக்கு ரூ.45 ஆயிரம் கோடி கடன் உள்ளது. எச்.ஏ.எல். நிறுவனம் 78 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அனில் அம்பானியின் நிறுவனம் 12 நாட்கள் மட்டுமே செயல்பட்டு உள்ளது. அதனால் அதன் அனுபவம் பற்றி அவர் பேசவில்லை.

    தகுதி, அனுபவம் இருந்தும் ரபேல் விமான தயாரிப்பு பணி, ஏன் எச்.ஏ.எல். நிறுவனத்திடம் இருந்து பறிக்கப்பட்டது என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். எச்.ஏ.எல். நிறுவனம் நவீன இந்தியாவின் கோவில். ஊழலால் அது அழிக்கப்படுகிறது. ஊழல் மூலம் நரேந்திர மோடி அனில் அம்பானிக்கு உதவுகிறார். ரூ.30 ஆயிரம் கோடியை எடுத்து, அம்பானியிடம் கொடுத்துள்ளார். இப்பிரச்சினையில், நாடு முழுவதும் தெருதோறும் போராடுவோம்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, வீரப்பமொய்லி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்பால் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். #Rafalescam #RahulGandhi #HALemployees
    பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து மோடி அரசு ஆடும் மோசடி நாடகம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். #Thirumavalavan #PetrolDieselPrice
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பெட்ரோல் டீசல் விலையில் ரூ.2.50 குறைப்பதாக மத்திய அரசு அறிவிப்பு செய்துள்ளது. அதில் ரூ.1.50 மத்திய கலால் வரியில் குறைப்பதாகவும் மீதமுள்ள ஒரு ரூபாயை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளுமாறும் நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.



    இது மக்களை ஏமாற்றும் கண்துடைப்பு நாடகம். மத்திய பா.ஜ.க. அரசு கலால் வரியை முற்றிலுமாக ரத்து செய்வதற்கு முன் வரவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் பத்து ரூபாய் அளவிற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு தனது பங்கிலிருந்து ரூ1.50 குறைப்பதாக சொல்வது மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து ஆடப்படும் மோசடி நாடகம்.

    கர்நாடகா தேர்தலின் போது ஒரு மாதத்துக்கும் மேல் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தாமல் வைத்துவிட்டு தேர்தல் முடிந்ததும் ஒரேயடியாக பாஜக அரசு உயர்த்தியது. அந்த துரோகத்தை மக்கள் மறக்கவில்லை.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரியளவில் உயராமல் இருக்கும் போது மக்களிடம் அநியாய வரிவிதிப்பின் மூலம் மோடி அரசு பகல் கொள்ளை அடிக்கிறது.

    ஏழை-எளிய மக்களிடம் வரி என்ற பெயரில் வழிப்பறி செய்து கார்ப்பரேட்டுகளின் கடன்கள் தள்ளுபடி செய்ய அதைப் பயன்படுத்துகிறது. கடந்த 4 ஆண்டில் மட்டும் பொதுத்துறை வங்கிகளில் 3.16லட்சம் கோடி கடன்கள் கார்ப்பரேட்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

    பெட்ரோல் - டீசல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் எண்ணெய் நிறுவனங்களே விலை நிர்ணயம் செய்து கொள்ளும் கொள்கையைக் கைவிட்டு சர்வதேச விலைக்கு ஏற்றபடி அவ்வப்போது அரசாங்கமே விலை நிர்ணயம் செய்துகொள்ளும் முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Thirumavalavan #PetrolDieselPrice


    மோடி அரசுக்கு எதிராக 2-வது சுதந்திர போராட்டம் நடத்த ராகுல் காந்தி தலைமையில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. #Congress #SecondFreedomStruggle #Modi #ModiGovernment #RahulGandhi
    சேவாகிராம்:

    மராட்டிய மாநிலம் வார்தா மாவட்டம் சேவாகிராமத்தில் உள்ள மகாதேவ் பவனில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நேற்று நடைபெற்றது. 1942-ம் ஆண்டு, மகாத்மா காந்தி அங்கு காரிய கமிட்டி கூட்டத்தை நடத்தினார். அதன்பிறகு இப்போதுதான் அங்கு இக்கூட்டம் நடந்தது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமை தாங்கினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



    கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    இந்திய சிந்தனைக்கும், அதன் ஆன்மாவுக்கும், உடலுக்கும் மகாத்மா காந்தி ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ என்ற கோஷத்தை எழுப்பினார். அது, வெறும் கோஷம் அல்ல, நமது வாழ்க்கை முறை.

    நரேந்திர மோடி அரசு, இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிராக உள்ளது. வெறுப்பு, வன்முறை, பழிவாங்குதல், அச்சுறுத்தல், பிரித்தாளுதல், ஆரோக்கியமான விவாதத்தையும், மாற்றுக்கருத்தையும் நசுக்குதல் ஆகியவை கலந்த அரசியலை நடத்தி வருகிறது. அந்த அரசுக்கு எதிராக 2-வது சுதந்திர போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    காந்தியையும், அவரது சிந்தனைகளையும் சீர்குலைத்தவர்கள், இப்போது காந்தியின் சீடர்கள் போல் வேடம் போடுகிறார்கள். அவர்கள், காந்தியின் மூக்குக்கண்ணாடியை விளம்பர பிரசாரத்துக்காக வாங்கலாம். ஆனால், அவர்களின் இட்டை வேடத்தை காங்கிரஸ் அம்பலப்படுத்தும்.

    டெல்லிக்கு சென்ற விவசாயிகள் மீது தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது. பிரதமர் மோடி அதிகார போதையில் மிதக்கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் சேவாகிராமிலேயே நேற்று மதிய உணவு சாப்பிட்டனர். தாங்கள் சாப்பிட்ட தட்டுகளை, அவர்களே கழுவினர். இந்த வீடியோ காட்சி, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

    முன்னதாக, வார்தாவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தொண்டர்களுடன் பாத யாத்திரை சென்றார். பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட சர்க்கஸ் மைதானம் வரை சென்றார். 50 நிமிட நேரம் நடந்து அந்த இடத்தை அடைந்தார்.

    பொதுக்கூட்டத்தில், ராகுல் காந்தி பேசியதாவது:-

    மகாத்மா காந்தி, நாட்டை ஒன்றுபடுத்தினார். ஆனால், மோடியோ நாட்டை பிளவுபடுத்துகிறார். ஒரு சமுதாயத்துடன் மற்றொன்றை மோத விடுகிறார். ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் குறித்த கேள்விகளுக்கு மோடி பதிலளிக்க வேண்டும்.

    பணக்காரர்களின் ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் கோடி கடன்களை தள்ளுபடி செய்த மோடி அரசு, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.  #Congress #SecondFreedomStruggle #Modi #ModiGovernment #RahulGandhi
    பணமதிப்பு நீக்கம்தான் மோடி அரசின் மிகப்பெரிய ஊழல் என்று ராகுல் காந்தி கூறினார். #Demonestisation #Modi #RahulGandhi
    போபால்:

    மத்தியபிரதேசத்தில் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று அங்கு சென்றார். தேர்தல் பிரசாரத்தை தொடங்கும்வகையில், 15 கி.மீ. தூரத்துக்கு வாகன பேரணியாக சென்று மக்களை சந்தித்தார். பின்னர், போபாலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.



    அதில், ராகுல் காந்தி பேசியதாவது:-

    70 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், நரேந்திர மோடி அரசு பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தது. இந்த திட்டம், பணக்காரர்கள் தங்களது கருப்பு பணத்தை வெள்ளை ஆக்க உதவியது. அதனால், 4 ஆண்டுகால மோடி அரசின் மிகப்பெரிய ஊழல் இதுதான்.

    சிறு வணிகர்களின் கையில் உள்ள பணத்தை பறித்து 15 பெரும் பணக்காரர்களின் பாக்கெட்டில் போடுவதே இந்த திட்டத்தின் நோக்கம். 15 பெரு நிறுவனங்களின் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வாராக்கடனை மோடி அரசு ரத்து செய்தது. ஆனால், வெறும் ரூ.5 ஆயிரம் கடன் வாங்கிய விவசாயிகளின் கடனை ஏன் ரத்து செய்யவில்லை?

    லட்சங்களிலும், கோடிகளிலும் வாங்கப்பட்ட கடன்களை ‘வாராக்கடன்’ என்கிறார்கள். ஆனால், வெறும் ரூ.5 ஆயிரம் கடனை திருப்பிச் செலுத்தாத விவசாயியை ‘கடன் தவறியவர்’ என்று முத்திரை குத்துகிறார்கள்.

    மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, விவசாயிகளின் ஒட்டுமொத்த கடன் களும் ரத்து செய்யப்படும். ஏற்கனவே இதுபோல் ரூ.70 ஆயிரம் கோடி விவசாய கடன்களை ரத்து செய்துள்ளோம்.

    இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.  #Demonestisation #Modi #RahulGandhi
    விலைவாசி உயர்வை விரைவில் கட்டுப்படுத்தாவிட்டால் பா.ஜனதாவுக்கு பாதிப்பு ஏற்படும் என ராம்தேவ் எச்சரிக்கை விடுத்து உள்ளார். #Ramdev #FuelPriceHike
    புதுடெல்லி:

    டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற யோகா குரு ராம்தேவ், இளைஞர்களுடன் கலந்துரையாடினார். அப்போது மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:-

    மோடி அரசின் கொள்கைகளை ஏராளமானோர் பாராட்டி உள்ளனர். ஆனால் சில கொள்கைகளை திருத்தியமைக்க வேண்டிய தேவை இருக்கிறது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் விலைவாசி, மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்து இருக்கிறது. எனவே இதை மோடி உடனடியாக சரிசெய்ய வேண்டும்.



    பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை உடனே தொடங்க வேண்டும். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்து, அதற்கு குறைவான வரி விதிக்க வேண்டும்.

    இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறினால் மோடி அரசு மிகப்பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்படும்.

    நான் வலதுசாரியும் இல்லை, இடதுசாரியும் இல்லை. மாறாக ஒரு நடுநிலைவாதி. வலுவான தேசியவாதியும் கூட. முக்கியமான பிரச்சினைகள் பலவற்றில் நான் மவுனம் சாதித்ததால், நான் யாருக்கும் தேவையில்லை.

    2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன். ஆனால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்யப்போவது இல்லை. அரசியலில் இருந்து விலகிவிட்டேன். அனைத்து கட்சிகளுடனும் நான் இருக்கிறேன். நான் சுதந்திரமாக இருக்கிறேன்.

    ‘தூய்மை இந்தியா’ போன்ற திட்டங்களை செயல்படுத்தியும், பெரிய ஊழல் எதுவும் நடக்க அனுமதிக்காமலும் பிரதமர் மோடி சிறப்பாக செயலாற்றுகிறார். எனினும் அவரை விமர்சிப்பது மக்களின் அடிப்படை உரிமை ஆகும்.

    இவ்வாறு ராம்தேவ் கூறினார். #Ramdev #FuelPriceHike
    இந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க மோடி தலைமையிலான அரசு தூக்கி எறியப்பட வேண்டும் என்று ம.தி.மு.க. மாநில மாநாட்டில் வைகோ பேசினார். #MDMK #Vaiko
    ஈரோடு:

    ம.தி.மு.க. மாநில மாநாடு ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. மதச்சார்பின்மைக்கு ஆபத்து உள்ளது. பல தேசிய இனங்களை கொண்ட நாடு. இந்த ஒருமைப்பாடு நிலைக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. மதவாத, சங்பரிவார இயக்கங்களின் கொட்டம் 2019-ம் ஆண்டுக்கு பிறகும் தொடருமானால் நாடு ஒருமைப்பாட்டுடன் நிலைக்குமா? என்பது கேள்விக்குறிதான். இதை சொல்கிற துணிச்சல் ம.தி.மு.க.வுக்கு உண்டு. இங்கே நீங்கள் இந்த மாநாட்டில் பார்க்கின்ற கூட்டம் தங்கள் கைக்காசுகளை போட்டு வந்திருக்கிறது. மிக நலிந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள். இதுதான் எங்களது வலிமை. எங்களிடம் வாக்கு வங்கியான வலிமை குறைவுதான். தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியவில்லை என்றாலும், வாக்குகளை விற்பனை செய்யாமல் லட்சியத்துடன் நாங்கள் வாழ்கிறோம்.



    1962-ம் ஆண்டு மே மாதம் 1-ந் தேதி ராஜ்ய சபாவில் அறிஞர் அண்ணா பேசும்போது நான் இந்திய யூனியனில் உள்ள திராவிட நாட்டில் இருந்து வருகிறேன். திராவிடன் என்று என்னை அழைப்பதில் பெருமை கொள்கிறேன். திராவிடர்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள் என்று கூறினார்.

    அப்போது அவர் பேச்சை முடித்த பின்பு, பாபு ஜெகஜீவன்ராம் அண்ணாவின் கையை பிடித்து நான் பீகாரில் இருந்து வந்திருக்கும் திராவிடன் என்று கேட்டார். தனி நாடு கோரிக்கையை முன்வைத்து போராடிய அறிஞர் அண்ணா, சீன போரின்போது அந்த கொள்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். அதை அவர் தெளிவாகவும் கூறி இருக்கிறார். அவர் தமிழ்நாட்டின் ஆட்சி பொறுப்பை 1967-ம் ஆண்டு ஏற்றபோது தாய்க்கு பெயர் வைத்ததுபோன்று தமிழ்நாட்டுக்கு பெயர் சூட்டினார். சுயமரியாதை திருமணங்களை சட்டமாக்கினார்.



    1978-ம் ஆண்டு மே மாதம் 2-ந் தேதி ராஜ்யசபையில் எனது கன்னிப்பேச்சை மாநில சுயாட்சிக்காக வழங்கினேன். அந்த பேச்சின் முடிவில் என் லட்சியத்துக்காக நான் கொண்ட கட்சியின் கொள்கைக்காக உயிர் பிரிந்தாலும், உறுதியுடன் இருப்பேன். இந்த வாய்ப்பை தந்த கலைஞருக்கு நன்றியையும் தெரிவித்து பேசினேன்.

    பின்னர் கலைஞரை பார்க்க வந்தேன். அவர் என்னை காரில் அழைத்து சென்றபோது இங்கே சட்டமன்றத்தில் நான் இல்லாதபோது உன்னை பற்றி தவறாக பேசினார்கள். பாராளுமன்றத்தில் மாநில சுயாட்சிக்கு எதிராக நீ பேசியதாக குற்றம் சாட்டினார்கள். உடனே பேராசிரியர் அன்பழகன் அதற்கு பதில்அளித்தார். நான் அந்த வேளையில் அவையில் இல்லை. இருந்திருந்தால் வேறுமாதிரியாக பேசியிருப்பேன், என்றார்.

    நீங்கள் இருந்தால் என்ன அண்ணா பேசியிருப்பீர்கள் என்று கேட்டேன். என் தம்பி மாநில சுயாட்சி வேண்டாமென்று கூறிஇருப்பான். ஆனால் தமிழ்நாட்டை தனி நாடாக கொடுங்கள் என்று கேட்டிருப்பான். அந்த அளவுக்கு என் மீது அன்பு வைத்திருந்தவர். 3 முறை என்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பியவர். அவரை சிறு துரும்புக்கூட தொட அனுமதிக்காமல் மெய்க்காப்பாளர் படையை உருவாக்கியவன் நான். அவரை உயிராக நேசித்தேன்.

    இந்துக்கள் தேசம், இந்துக்களின் நாடு, முஸ்லிம்களை வெளியேறுங்கள் என்று சொல்லும் ஆதிக்க சக்திகள், சங்பரிவார சக்திகளுக்கு முடிவு கட்ட வேண்டும். மதச்சார்பின்மை அழிந்து விட்டது, தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது. மக்களுக்காக போராட வேண்டிய எடுபிடி அரசு ஊழல் அரசாக உள்ளது. அண்ணாவின் பெயரை சொல்லக்கூட தகுதி இல்லாத அ.தி.மு.க.வினர், பா.ஜ.க.வின் எடுபிடியாக இருக்கின்றனர்.

    ஸ்டெர்லைட் ஆலையை எப்படியும் திறப்பதற்காக கபட நாடகம் ஆடுகிறார்கள். ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டனர். நடக்கப்போவதை சொல்கிறேன். எப்படியும் ஸ்டெர்லைட் ஆலையை திறந்துவிடுவார்கள். ஆனாலும் நான் தன்னலமற்று போராடிக்கொண்டு இருக்கிறேன்.

    தமிழக அரசு தூக்கி எறியப்பட வேண்டிய அரசு. மணல், குட்கா, ஒப்பந்த பணிகள் என அனைத்திலும் ஊழல். மத்திய அரசுக்கு குற்றேவல் செய்யும் அரசாக இருக்கிறது. இந்தநிலையில் சமூக நீதி, இடஒதுக்கீடு, மதச்சார்பின்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றை பாதுகாக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். மத்தியில் இருக்கும் நரேந்திரமோடியின் கூட்டம் தூக்கி எறியப்பட வேண்டும்.

    தமிழ் ஈழம் மலர்ந்து ஐ.நா.சபையில் தமிழர் நாட்டுக்கு என்று பிரதிநிதி வேண்டும். என் இதயத்தில் பதிந்த பிரபாகரன் என்ற ஓவியத்தை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. இன்று டெல்லியில் உட்கார்ந்து கொண்டு 7 நாட்டு படைகள் உதவியுடன் விடுதலை புலிகளை அழித்தோம் என்று கொக்கரிக்கிறான் ராஜபக்சே. அந்த 7 நாட்டு படைகள் உதவி இல்லாமல் இருந்தால், சிங்கள படையை வைத்துக்கொண்டு விடுதலை புலிகளை ராஜபக்சேவால் வென்றிருக்க முடியாது. ஹிட்லரை விட கொடுமைகள் செய்தவன் ராஜபக்சே.

    என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு நரேந்திர மோடியுடன் கூட்டணி வைத்தது. ஆனாலும், அவர் பதவியேற்பு விழாவில் ராஜபக்சேவை அழைத்தபோது, அவர் வரக்கூடாது மீறி வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம் என்று உடனடியாக வெளியேறினோம். பதவிகள் கிடைக்குமென்று அங்கே இருக்கவில்லை. பிரபாகரன் தனி மனித ஒழுக்கம் நிறைந்தவர். அவருடைய படையில் உள்ள வீரர்களும் ஒழுக்கம் மிக்கவர்கள். அவர்களால் எந்தவொரு சிங்கள பெண்ணுக்காவது பாலியல் தொல்லை இருந்தது என்று யாரும் சொல்ல முடியாது.

    எனவேதான் எங்கள் ரத்தத்திலும், தொண்டர்களின் ரத்த அணுக்களிலும் ஈழ விடுதலை என்ற உணர்வு கலந்து உள்ளது. மதவாத ஆட்சி அகல வேண்டும். மத்தியில் கூட்டணி தத்துவத்துக்கு வடிவம் கொடுக்கும் கூட்டணி ஆட்சி அமையும்.

    தமிழகத்தில் இந்த அரசு அகற்றப்பட வேண்டும். தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்கிற உறுதியை எடுத்துக்கொண்டு கூட்டணியை அறிவித்தோம். என் மீது விமர்சனங்களை யாரும் கண்டுகொள்ள வேண்டாம். எனக்காக பலர் உயிர்விட்டது போதும். நான் நாணயமாக இருக்கிறேன். நான் நேர்மையாக இருக்கிறேன். எனது லட்சியத்துக்காக வாழ்கிறேன். எனக்கென்று இருக்கின்ற குடும்பம் தொண்டர்களாகிய உங்கள் குடும்பம் தான். உங்கள் மகிழ்ச்சி என் மகிழ்ச்சி. நாம் நல்ல இடத்திற்கு செல்வோம். நீங்கள் மகிழ்கிற நாள்தான் எனக்கும் மகிழ்ச்சியான நாள்.

    இவ்வாறு வைகோ கூறினார். 
    கருப்பு பணம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு மத்திய அரசு ரூ.5 கோடிவரை பரிசு வழங்குகிறது. #BlackMoney #Crackdown #Modi
    புதுடெல்லி:

    வருமான வரி ஏய்ப்பு பற்றி தகவல் அளிப்போருக்கு பரிசு வழங்கும் திட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதன்படி, கணக்கில் காட்டப்படாத வருமானம், சொத்துகள் மற்றும் வரி ஏய்ப்பு விவரங்கள் பற்றி தகவல் அளிப்போருக்கு பரிசு வழங்கப்படுகிறது. இந்த பரிசுத்தொகையை மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த ஜூன் 1-ந் தேதி, ரூ.5 கோடிவரை உயர்த்தியது.



    அதுபோல், பினாமி சொத்துகள் பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.1 கோடிவரை பரிசு வழங்கப்படும்.

    அதற்காக ஒருவரே 2 திட்டங்களின் கீழ், மொத்தம் ரூ.6 கோடி பெற்றுவிட முடியாது. அதிகபட்ச பரிசுத்தொகை ரூ.5 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பதால், அதற்கு மேல் கிடைக்காது.

    இந்த பரிசுத்தொகையை பெற உரிய ஆவணங்களுடன் திட்டவட்டமான தகவல்களை அளிக்க வேண்டும். தகவல் அளிப்பவர், தனிநபராகவோ அல்லது ஒரு குழுவாகவோ இருக்கலாம். ரூ.5 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக்கான வரி ஏய்ப்பு பற்றி துல்லியமான தகவல்களை அளிக்க வேண்டும்.

    இத்தகைய வரி ஏய்ப்பு அல்லது கருப்பு பணம் பற்றி தகவல் தெரிவிக்க வருமான வரி (புலனாய்வு) தலைமை இயக்குனரை அணுக வேண்டும். அங்கு தரப்படும் படிவத்தை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் அளிக்க வேண்டும்.

    ரூ.1 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட அசையும் அல்லது அசையா பினாமி சொத்துகள் பற்றியும் தகவல் அளிக்கலாம். பினாமி சொத்து பற்றி தகவல் அளிப்போர், வருமான வரி இணை ஆணையரை அணுக வேண்டும்.

    தகவல் அளிப்பவர்கள், தங்களது தந்தை பெயர், முகவரி, ஆதார் எண், தொலைபேசி எண் மற்றும் கருப்பு பண விவரம், கருப்பு பண பேர்வழிகள் விவரம், சொத்துகளின் முகவரி உள்ளிட்ட தகவல்களை குறிப்பிட வேண்டும்.

    அளிக்கப்படும் தகவல்கள் மற்றும் சொத்துகளின் மதிப்பு அடிப்படையில், வெவ்வேறு அடுக்கு கொண்ட பரிசுத்தொகையை மத்திய நேரடி வரிகள் வாரியம் நிர்ணயித்துள்ளது. இடைக்கால பரிசு, இறுதி பரிசு என 2 கட்டங்களாக பரிசு வழங்கப்படும்.

    1. கருப்பு பண சட்டத்தின் கீழ், கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு வருமானம் அல்லது சொத்து பற்றி தகவல் அளித்தால், இடைக்கால பரிசாக ரூ.50 லட்சம்வரை வழங்கப்படும். இறுதி பரிசாக ரூ.5 கோடிவரை வழங்கப்படும். இருப்பினும், இறுதி பரிசுத்தொகைக்கு 10 சதவீத கூடுதல் வரி பிடிக்கப்படும்.

    2. வருமான வரி சட்டத்தின் கீழ், கணக்கில் காட்டப்படாத வருமானம் அல்லது சொத்துகள் பற்றி தகவல் தெரிவித்தால், இடைக்கால பரிசாக ரூ.5 லட்சம்வரையும், இறுதி பரிசாக ரூ.50 லட்சம்வரையும் வழங்கப்படும். இறுதி பரிசுத்தொகைக்கு 5 சதவீத கூடுதல் வரி பிடிக்கப்படும்.

    3. வருமான வரி சட்டத்தின் கீழ், கணக்கில் காட்டப்படாத ரூ.1 கோடிக்கு மேற்பட்ட ரொக்கம் பற்றி தகவல் அளித்தால், இடைக்கால பரிசாக ரூ.15 லட்சம் வரையும், இறுதி பரிசாக ரூ.1 கோடி வரையும் வழங்கப்படும். இறுதி பரிசுத்தொகைக்கு 5 சதவீத கூடுதல் வரி பிடிக்கப்படும்.

    தகவல்களை மதிப்பீடு செய்த 4 மாதங்களுக்குள் இடைக்கால பரிசுத்தொகையும், பினாமி சொத்துகளை பறிமுதல் செய்த 6 மாதங்களுக்குள் இறுதி பரிசுத்தொகையும் வழங்கப்படும்.

    அதே சமயத்தில், தவறான தகவல் அளிப்பவர்கள் சிக்கலை சந்திக்க நேரிடும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.  #BlackMoney #Crackdown  #tamilnews 
    நடுத்தர வருவாய் பிரிவினர் வீட்டு கடனுக்கு வட்டி மானியம் பெறுவதற்கான வீட்டின் பரப்பளவை மத்திய அரசு அதிகரித்துள்ளது. #PMAY
    புதுடெல்லி:

    ஏழை மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்க ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ (பிரதமர் வீடு கட்டும் திட்டம்) என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் பெறப்படும் வீட்டு கடனுக்கு வட்டி மானிய சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. ரூ.6 லட்சம் முதல் ரூ.12 லட்சம்வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் நடுத்தர வருவாய் பிரிவினர்-1 என்றும், ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம்வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் நடுத்தர வருவாய் பிரிவினர்-2 என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    அதிகபட்சம் 20 ஆண்டு காலத்துக்கு ரூ.9 லட்சம்வரை வீட்டுக்கடன் வாங்கும் முதல் பிரிவினர் 4 சதவீத வட்டி மானியம் பெறுவதற்கும், ரூ.12 லட்சம்வரை வீட்டுக்கடன் வாங்கும் 2-ம் பிரிவினர் 3 சதவீத வட்டி மானியம் பெறுவதற்கும் தகுதி படைத்தவர்கள் ஆவர். அதாவது, அவர்களுக்கான வட்டியில் மேற்கண்ட சதவீதத்துக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படும்.

    இந்த வட்டி மானியம் பெற தகுதி பெறுவதற்கு வீட்டின் பரப்பளவிலும் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடுத்தர வருவாய் பிரிவினர்-1 வாங்கும் வீட்டின் சுவர்களுக்கு உள்ளடங்கிய உட்புற பரப்பளவு (கார்பெட் ஏரியா) 120 சதுர மீட்டராகவும், நடுத்தர வருவாய் பிரிவினர்-2 வாங்கும் வீட்டின் உட்புற பரப்பளவு 150 சதுர மீட்டராகவும் இருக்க வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், இந்த உச்சவரம்பை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் உயர்த்தி உள்ளது. அதன்படி, நடுத்தர வருவாய் பிரிவினர்-1 வீட்டின் பரப்பளவு 160 சதுர மீட்டர்வரையும், நடுத்தர வருவாய் பிரிவினர்-2 வீட்டின் பரப்பளவு 200 சதுர மீட்டர்வரையும் இருக்கலாம்.

    கடந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல், முன்தேதியிட்டு இது அமலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், இன்னும் அதிகமானோர் வீட்டு கடனுக்கு வட்டி மானிய சலுகை பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த சலுகையால், மெட்ரோ நகரங்களை ஒட்டிய புறநகர்கள் மற்றும் சிறு நகரங்களில் வீடுகள் விற்பனை அதிகரிக்கும் என்று கட்டுமான தொழில் நிறுவன அதிபர்கள் பலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். குறைவான வருமானத்துடன் வாடகை வீட்டில் வசிக்கும் ஏராளமானோருக்கு சொந்த வீடு வாங்கும் எண்ணம் பிறக்கும் என்றும், கட்டுமான தொழில் வளரும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 
    ×