என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோடி அரசை கண்டித்து 9ந்தேதி காங். ஆர்ப்பாட்டம் - திருநாவுக்கரசர் அறிவிப்பு
Byமாலை மலர்7 Nov 2018 8:41 AM GMT (Updated: 7 Nov 2018 8:41 AM GMT)
பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுத்த 3ம் ஆண்டின் துவக்க நாளை முன்னிட்டு மோடி அரசை கண்டித்து 9ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். #Thirunavukkarasar #Congress #Demonetization
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 8.11.2016 அன்று நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிற வகையில் பயன்பாட்டில் இருந்த ரூபாய் 500, 1000 நோட்டுகள் அனைத்தையும் செல்லாது என சர்வாதிகாரிபோல் பிரதமர் நரேந்திர மோடி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
பணமதிப்பு நீக்கத்தினால் ஏற்பட்ட பொருளாதார சீரழிவையும், மக்கள் பாதிப்பையும் கருத்தில் கொண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அறிவுறுத்தலின்பேரில் பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுத்த 3-ம் ஆண்டின் துவக்க நாளை முன்னிட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற வேண்டும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளது.
ஆகவே மாவட்டத் தலைவர்கள் வருகிற 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தங்கள் கட்சி அமைப்பு மாவட்டங்களில் அமைந்துள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டங்களை மிக சிறப்பாக நடத்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பில், எனது தலைமையில் ராஜாஜி சாலையில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வருகிற 9.11.2018 காலை 11 மணியளவில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர். ராமசாமி எம்.எல்.ஏ., அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சஞ்சய்தத், டாக்டர் சிரிவல்ல பிரசாத் மற்றும் முன்னணி தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Thirunavukkarasar #Congress #Demonetization
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 8.11.2016 அன்று நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிற வகையில் பயன்பாட்டில் இருந்த ரூபாய் 500, 1000 நோட்டுகள் அனைத்தையும் செல்லாது என சர்வாதிகாரிபோல் பிரதமர் நரேந்திர மோடி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
இதனால் கடந்த 2 ஆண்டு காலமாக மிகப் பெரிய பொருளாதார பேரழிவை நாடு சந்தித்து வருகிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், சிறு வணிகர்கள், சிறு, குறு தொழில் முனைவர்கள் என அனைத்து தரப்பினரும் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர்.
பணமதிப்பு நீக்கத்தினால் ஏற்பட்ட பொருளாதார சீரழிவையும், மக்கள் பாதிப்பையும் கருத்தில் கொண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அறிவுறுத்தலின்பேரில் பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுத்த 3-ம் ஆண்டின் துவக்க நாளை முன்னிட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற வேண்டும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளது.
ஆகவே மாவட்டத் தலைவர்கள் வருகிற 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தங்கள் கட்சி அமைப்பு மாவட்டங்களில் அமைந்துள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டங்களை மிக சிறப்பாக நடத்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பில், எனது தலைமையில் ராஜாஜி சாலையில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வருகிற 9.11.2018 காலை 11 மணியளவில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர். ராமசாமி எம்.எல்.ஏ., அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சஞ்சய்தத், டாக்டர் சிரிவல்ல பிரசாத் மற்றும் முன்னணி தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Thirunavukkarasar #Congress #Demonetization
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X