search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "HAL"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடி பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனத்துக்கு சென்றார்.
    • அப்போது அவர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானத்தில் ஏறி பறந்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் (எச்.ஏ.எல்.) நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனம் சார்பில் இந்திய விமானப்படைக்கு வேண்டிய விமான உதிரிபாகங்கள், எந்திரங்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகிறது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இலகுரக போர் விமானம் தயாரிப்பில் எச்.ஏ.எல். நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கிடையே, புதிதாக தயாரிக்கப்பட்ட முதல் இலகுரக தேஜாஸ் இரட்டை இருக்கை கொண்ட போர் விமானம் விமானப்படையில் சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    இந்நிலையில், பிரதமர் மோடி பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனத்துக்கு இன்று சென்றார். அங்கு தயாரிக்கப்படும் போர் விமானங்கள் குறித்து ஆய்வு நடத்தினார். அப்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானத்தில் ஏறி பறந்தார்.

    • பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
    • எச்.ஏ.எல். நிறுவனம் தயாரித்த முதல் இலகுரக தேஜஸ் போர் விமானம் விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் (எச்.ஏ.எல்.) நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனம் சார்பில் இந்திய விமானப்படைக்கு வேண்டிய விமான உதிரிபாகங்கள், எந்திரங்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகிறது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இலகுரக போர் விமானம் தயாரிப்பில் எச்.ஏ.எல். நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கிடையே, புதிதாக தயாரிக்கப்பட்ட முதல் இலகுரக தேஜஸ் இரட்டை இருக்கை கொண்ட போர் விமானம் விமானப்படையில் சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    இந்நிலையில், பிரதமர் மோடி நாளை பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனத்துக்குச் செல்கிறார். அங்கு தயாரிக்கப்படும் போர் விமானங்கள் குறித்து ஆய்வு நடத்த உள்ளார்.

    இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவன விவகாரத்தில் காங்கிரஸ் கூறும் குற்றச்சாட்டுகள் தவறானவை என நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். #NirmalaSitharaman #HAL #Congress #RahulGandhi
    புதுடெல்லி:

    பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு ஆர்டர் வழங்கி உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பொய் தகவல் அளித்துள்ளார். அந்த நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் கூட கொடுக்க முடியாமல் பலவீனப்படுத்தி அங்கு பணியாற்றும் ஊழியர்களை அனில் அம்பானி நிறுவனத்துக்கு மாற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

    இது குறித்து ஆதாரங்களை நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவர் பதவி விலக வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

    இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை நேற்று கூடியது. அப்போது காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

    காங்கிரஸ் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. அவை தவறாக வழி நடத்துபவையாக இருக்கின்றன. இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு சுமார் ரூ.26 ஆயிரம் கோடி அளவுக்கு ஆர்டர் வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் ஏற்கனவே கையெழுத்தாகி விட்டன.

    தற்போது ரூ.73 ஆயிரம் கோடி மதிப்பில் கொள்முதல் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. ஆர்டர் பெற்றதற்கான உறுதி பத்திரம் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்திடம் இருந்து வந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #NirmalaSitharaman #HAL #Congress #RahulGandhi 
    பாராளுமன்றத்தில் நடந்து கொண்ட விதத்திற்காக நாட்டு மக்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். #Congress #RahulGandhi #NirmalaSitharaman
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மக்களவையில் ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் பேசிய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன், ரபேல் விவகாரத்தில் உண்மைகளை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. ஹெச்.ஏ.எல். நிறுவனத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆர்டர் தந்துள்ளோம் என தெரிவித்தார். 

    இதற்கிடையே, ஹெச்.ஏ.எல். நிறுவனத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆர்டர் தந்ததாக பாராளுமன்றத்தில் பொய் பேசிய நிர்மலா சீதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வலியுறுத்தினார்.

    இந்நிலையில், பாராளுமன்றத்தில் நடந்து கொண்ட விதத்திற்காக நாட்டு மக்களிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், ராகுல்காந்தி அறிக்கையை முழுமையாக படிக்க வேண்டும். பாராளுமன்றத்தில் நடந்து கொண்ட விதத்திற்காக நாட்டு மக்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். நாட்டை தவறாக வழிநடத்தும் விதத்தில் நடந்து கொண்டதற்கு ராகுல் வெட்கப்பட வேண்டும். 

    ஹெச்.ஏ.எல். நிறுவனத்திற்கு எந்த ஒப்பந்தமும் தரப்படவில்லை என ராகுல் கூறியது தவறு. ஹெச்.ஏ.எல் நிறுவனத்திற்கு 26 ஆயிரத்து 570 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்புத்துறை பணி ஒப்பந்தம் வழங்கப்பட்டது. மேலும், ஹெச்.ஏ.எல். நிறுவனத்திற்கு 73 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட உள்ளது என பதிவிட்டுள்ளார். #Congress #RahulGandhi #NirmalaSitharaman
    ஹெச்.ஏ.எல். நிறுவனத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆர்டர் தந்ததாக பாராளுமன்றத்தில் பொய் பேசிய நிர்மலா சீதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும் என காங். தலைவர் ராகுல் வலியுறுத்தியுள்ளார். #RafaleDeal #NirmalaSitharaman #Congress #RahulGandhi
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மக்களவையில் ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.

    அப்போது அவர், ரபேல் விவகாரத்தில் உண்மைகளை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. தற்போது காங்கிரஸ் அமளியில் ஈடுபடுவது உண்மைகளை மறைப்பதற்காகவே. நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமே பாஜக அரசு முக்கியத்துவம்  கொடுக்கிறது. ஹெச்.ஏ.எல். நிறுவனத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆர்டர் தந்துள்ளோம் என தெரிவித்தார். 



    இந்நிலையில், ஹெச்.ஏ.எல். நிறுவனத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆர்டர் தந்ததாக பாராளுமன்றத்தில் பொய் பேசிய நிர்மலா சீதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பாராளுமன்றத்தில் பேசிய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஹெச்.ஏ.எல். நிறுவனத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஆர்டர் தந்துள்ளோம் என தெரிவித்தார். ஆனால், இதுவரை எந்த ஒரு ஆர்டரும் பெறப்படவில்லை. 

    எனவே, பாராளுமன்றத்தில் பேசிய பாதுகாப்பு துறை மந்திரி ஆர்டர் தந்ததற்கான ஆதாரங்களை காட்ட வேண்டும். இல்லையேல் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். #RafaleDeal #NirmalaSitharaman #Congress #RahulGandhi
    “ரபேல் ஒப்பந்த முறைகேட்டின் மூலம் நாட்டின் போர்த்திறன் மிக்க சொத்தான எச்.ஏ.எல். நிறுவனத்தை மோடி அரசு அழிக்கிறது” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். #Rafalescam #RahulGandhi #HALemployees
    பெங்களூரு:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்து இருப்பதாக மத்திய அரசு மீது குற்றம் சாட்டி வருகிறார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் அரசின் பொதுத்துறை நிறுவனமான எச்.ஏ.எல்.(ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் லிமிடெட்) நிறுவனத்துக்கு வழங்கப்பட வேண்டிய ரபேல் போர் விமான தயாரிப்பு, பணி அனுபவம் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு இருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார்.

    ரபேல் ஒப்பந்தத்திற்கு எதிராக குரல் கொடுத்து வரும் அவர், அதன் ஒரு பகுதியாக நேற்று பெங்களூருவில் எச்.ஏ.எல். நிறுவனத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் தொழிலாளர்களை சந்தித்து உரையாடினார். பின்னர் அவர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசியதாவது:-



    நவீன இந்தியாவின் கோவில்களாக கருதப்படும் பொதுத்துறை நிறுவனங்கள் தாக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எச்.ஏ.எல். நிறுவனம் 78 ஆண்டுகள் அனுபவமிக்க நிறுவனம். நமது நாட்டின் போர்த்திறன் மிக்க சொத்து. விமானம் தயாரிப்புக்கான அனுபவம் உங்களிடம் உள்ளது. ஆனால், விமானம் தயாரிப்புக்கான அனுபவம் எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு இல்லை என்று மத்திய அரசு சொல்வது கேலிக்கூத்து. ரபேல் விமான தயாரிப்பு உங்களின் உரிமை.

    விமான தயாரிப்பில் உங்களுக்கு அனுபவம் இல்லை என்று மத்திய அரசு சொல்வது உங்களை எந்த அளவுக்கு பாதித்து இருக்கும் என்பதை நான் உணர்ந்து உள்ளேன். அதனால் நீங்கள் அடைந்துள்ள வலி, வேதனை எனக்கு தெரியும். இந்த நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்தவர்கள், நாட்டின் நலனில் அக்கறை உள்ள மக்கள் அவமதிக்கப்பட்டு உள்ளனர்.

    மத்திய அரசு இதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்காது என்பது எனக்கு தெரியும். அதனால் அவர்கள் சார்பில் நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இந்த சோதனையான நேரத்தில் நான் உங்கள் பக்கம் நிற்கிறேன்.

    இங்கு பேசிய தொழிலாளர்கள் ரபேல் விமானம் தயாரிக்கும் தகுதி திறமை எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு உள்ளது என்று தெரிவித்தனர். ராணுவத்துக்கான பொதுத்துறை நிறுவனத்தை அழிக்கும் முயற்சி நடந்து கொண்டு இருக்கிறது. நாட்டிற்காக இந்த நிறுவனம் அபரிமிதமான பணிகளை ஆற்றி இருக்கிறது.

    நாட்டை காக்கும் இந்த நிறுவனத்துக்கு நாடு கடமைப்பட்டு இருக்கிறது. வான்வெளி துறையில் எச்.ஏ.எல். நிறுவனம் சாதாரண அல்லது வழக்கமான ஒரு நிறுவனம் கிடையாது. இது நாட்டின் போர்த்திறன் மிக்க சொத்து.

    நாங்கள் இப்போது எதிர்க்கட்சியாக இருக்கிறோம். மத்தியில் ஆட்சி அமைக்கும்போது, எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு தீவிரமாக உதவி செய்வோம்.

    இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

    பின்னர் ராகுல் காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு விமான தயாரிப்பில் அனுபவம் இல்லை என்று கூறுகிறார். ஆனால் அனில் அம்பானி நிறுவனத்தின் அனுபவம் குறித்து எதுவும் பேசவில்லை. இந்த முறைகேட்டை மூடி மறைக்கவே அவர் பிரான்ஸ் நாட்டுக்கு சென்றார். ஆனால், உண்மைகள் வெளிவந்து விட்டதால், மறைக்க முடியாது.

    அனில் அம்பானி வாழ்நாளில் ஒரு விமானம் கூட தயாரித்ததில்லை. எச்.ஏ.எல். நிறுவனத்திற்கு கடன் எதுவும் இல்லை. அனில் அம்பானிக்கு ரூ.45 ஆயிரம் கோடி கடன் உள்ளது. எச்.ஏ.எல். நிறுவனம் 78 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அனில் அம்பானியின் நிறுவனம் 12 நாட்கள் மட்டுமே செயல்பட்டு உள்ளது. அதனால் அதன் அனுபவம் பற்றி அவர் பேசவில்லை.

    தகுதி, அனுபவம் இருந்தும் ரபேல் விமான தயாரிப்பு பணி, ஏன் எச்.ஏ.எல். நிறுவனத்திடம் இருந்து பறிக்கப்பட்டது என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். எச்.ஏ.எல். நிறுவனம் நவீன இந்தியாவின் கோவில். ஊழலால் அது அழிக்கப்படுகிறது. ஊழல் மூலம் நரேந்திர மோடி அனில் அம்பானிக்கு உதவுகிறார். ரூ.30 ஆயிரம் கோடியை எடுத்து, அம்பானியிடம் கொடுத்துள்ளார். இப்பிரச்சினையில், நாடு முழுவதும் தெருதோறும் போராடுவோம்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, வீரப்பமொய்லி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்பால் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். #Rafalescam #RahulGandhi #HALemployees
    ×