search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றத்தில் நடந்து கொண்ட விதத்திற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் - நிர்மலா சீதாராமன்
    X

    பாராளுமன்றத்தில் நடந்து கொண்ட விதத்திற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் - நிர்மலா சீதாராமன்

    பாராளுமன்றத்தில் நடந்து கொண்ட விதத்திற்காக நாட்டு மக்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். #Congress #RahulGandhi #NirmalaSitharaman
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மக்களவையில் ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் பேசிய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன், ரபேல் விவகாரத்தில் உண்மைகளை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. ஹெச்.ஏ.எல். நிறுவனத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆர்டர் தந்துள்ளோம் என தெரிவித்தார். 

    இதற்கிடையே, ஹெச்.ஏ.எல். நிறுவனத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆர்டர் தந்ததாக பாராளுமன்றத்தில் பொய் பேசிய நிர்மலா சீதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வலியுறுத்தினார்.

    இந்நிலையில், பாராளுமன்றத்தில் நடந்து கொண்ட விதத்திற்காக நாட்டு மக்களிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், ராகுல்காந்தி அறிக்கையை முழுமையாக படிக்க வேண்டும். பாராளுமன்றத்தில் நடந்து கொண்ட விதத்திற்காக நாட்டு மக்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். நாட்டை தவறாக வழிநடத்தும் விதத்தில் நடந்து கொண்டதற்கு ராகுல் வெட்கப்பட வேண்டும். 

    ஹெச்.ஏ.எல். நிறுவனத்திற்கு எந்த ஒப்பந்தமும் தரப்படவில்லை என ராகுல் கூறியது தவறு. ஹெச்.ஏ.எல் நிறுவனத்திற்கு 26 ஆயிரத்து 570 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்புத்துறை பணி ஒப்பந்தம் வழங்கப்பட்டது. மேலும், ஹெச்.ஏ.எல். நிறுவனத்திற்கு 73 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட உள்ளது என பதிவிட்டுள்ளார். #Congress #RahulGandhi #NirmalaSitharaman
    Next Story
    ×