search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நாளை பெங்களூரு பயணம்: ஹெச்.ஏ.எல்-ல் ஆய்வு செய்கிறார் பிரதமர் மோடி
    X

    நாளை பெங்களூரு பயணம்: ஹெச்.ஏ.எல்-ல் ஆய்வு செய்கிறார் பிரதமர் மோடி

    • பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
    • எச்.ஏ.எல். நிறுவனம் தயாரித்த முதல் இலகுரக தேஜஸ் போர் விமானம் விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் (எச்.ஏ.எல்.) நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனம் சார்பில் இந்திய விமானப்படைக்கு வேண்டிய விமான உதிரிபாகங்கள், எந்திரங்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகிறது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இலகுரக போர் விமானம் தயாரிப்பில் எச்.ஏ.எல். நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கிடையே, புதிதாக தயாரிக்கப்பட்ட முதல் இலகுரக தேஜஸ் இரட்டை இருக்கை கொண்ட போர் விமானம் விமானப்படையில் சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    இந்நிலையில், பிரதமர் மோடி நாளை பெங்களூருவில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனத்துக்குச் செல்கிறார். அங்கு தயாரிக்கப்படும் போர் விமானங்கள் குறித்து ஆய்வு நடத்த உள்ளார்.

    Next Story
    ×