search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வதந்தி"

    • நயன்தாராவின் கன்னத்தில் விக்னேஷ் முத்தம் கொடுப்பது,உள்ளிட்ட பல புகைப்படங்களை நயன்தாரா இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்
    • இணையத்தில் ரசிகர்கள் 'அழகான ஜோடி" என்று வர்ணிக்க தொடங்கி உள்ளனர்

    நயன்தாரா - விக்னேஷ்சிவன் கடந்த 2022 ஜூன்-9 ல் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடி அக்டோபர் 2022 -ல் வாடகைத் தாய் மூலம் 2 மகன்களை பெற்றுக் கொண்டனர்.

    நயன்தாரா அடிக்கடி தனது கேமராவுக்குப் பின்னால் இருக்கும் வாழ்க்கை குறித்த படங்கள், மற்றும் செய்திகளை இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.சமீபத்தில் இணையதளத்தில் கணவரை 'அன்பாலோ' செய்தது பற்றி ரசிகர்கள் பலவித வதந்திகள் பரப்பினர்.

    நயன்தாரா- விக்னேஷ் ஜோடி விவாகரத்து வதந்தி பரவிய நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன் குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருப்பதை அனைவருக்கும் தெரிவிப்பதற்காக ஒரு போட்டோவை இணைய தளத்தில் பகிர்ந்தார்.

    இந்த நிலையில் இன்று விக்னேஷ் சிவனுடன் இருக்கும் அழகான புகைப்படங்களை நயன்தாரா பகிர்ந்துள்ளார்.வெளி நாட்டில்நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடியாக ஒருவரைஒருவர் அன்புடன் பார்ப்பது, நயன்தாராவின் கன்னத்தில் விக்னேஷ் முத்தம் கொடுப்பது,உள்ளிட்ட பல புகைப்படங்களை நயன்தாரா இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

    இதில் நயன்தாராஸ்கின்-பிட் பேண்ட்- கருப்பு நிற கோட் அணிந்து உள்ளார். விக்னேஷ் சாதாரண சிவப்பு டி-சர்ட் மற்றும் கருப்பு பேன்ட் அணிந்து உள்ளார். இந்த படங்கள் இணைய தளத்தில் வெளியானதன் மூலம் விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு நயன்தாரா பெரிய முற்றுப்புள்ளி வைத்து உள்ளார்.

    நயன்தாரா- விக்னேஷ் ஜோடி அழகாக மகிழ்ச்சியாக உள்ள படங்களை இணையத்தில் பார்த்த ரசிகர்கள் 'அழகான ஜோடி" என்று வர்ணிக்க தொடங்கி உள்ளனர்.தற்போது நயன்தாராவும், விக்னஷும் சவுதி அரேபியாவில் விடுமுறைக்கு சென்று உள்ளனர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • மகனை இடுப்பில் வைத்து கொண்டு புன்முறுவலுடன் காணப்படும் அழகான புகைப்படங்களை வெளியிட்டார்
    • நயன்தாரா சிவப்பு இதய 'எமோஜி' அடையாளம் எதுவும் தெரிவிக்கவில்லை

    நயன்தாரா - விக்னேஷ் சிவன் கடந்த 2022 ஜூன்-9 ல் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடி அக்டோபர் 2022 -ல் வாடகைத் தாய் மூலம் தங்கள் இரட்டை மகன்களை பெற்றனர். நயன்தாரா அடிக்கடி தனது சினிமாவுக்குப் பின்னால் இருக்கும் வாழ்க்கை குறித்த படங்கள் மற்றும் செய்திகளை இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.

    இந்நிலையில் நேற்று இரவு அதுபோல் இன்ஸ்டாகிராமில் தனது மகனை இடுப்பில் அமரவைத்து கொண்டு மொட்டைமாடி தோட்டத்தில் புன்முறுவலுடன் காணப்படும் அழகான புகைப்படங்களை வெளியிட்டார். தாய்-மகன் இருவரும் தங்கள் மொட்டை மாடியில் செடிகளை கைகளால் தொட்டுக்கொண்டு இருப்பதை காண முடிந்தது.

    அந்த புகைப்படத்தில் நயன்தாரா சிவப்பு இதய 'எமோஜி' அடையாளம் எதுவும் தெரிவிக்கவில்லை. இதனை பார்த்த ரசிகர்கள் பலவித கருத்துகளை பதிவு செய்தனர். சமீபத்தில், இணையதளத்தில் கணவரை 'அன்பாலோ' செய்தது பற்றி ரசிகர்கள் பலவித வதந்திகள் பரப்பினர்.இதனிடையே, தனது இன்ஸ்டாகிராமில் U mm..I' m Lost ! என்ற ஒரு ரகசிய குறியீட்டையும் நயன்தாரா பகிர்ந்துள்ளார்.

    நயன்தாரா- விக்னேஷ் ஜோடி குறித்து விவாகரத்து வதந்தி பரவிய நிலையில் தற்போது குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருப்பதை அனைவருக்கும் தெரிவிப்பதற்காக இந்த போட்டோவை நயன்தாரா இணையத்தில் பகிர்ந்துள்ளாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    • சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரப்பட்டிருக்கிறது.
    • குழந்தை கடத்தல் குறித்த தகவல்கள் வெளியாவது உண்மை இல்லை. தேவையற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

    குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் குழந்தை கடத்தல் குறித்து தேவையற்ற வதந்திகளை யாரும் பகிர வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், பர்தா அணிந்து பெண் வேடமிட்ட ஆண்கள் சுற்றி வருவதாகவும், இக்கடத்தலுக்காக வடமாநிலங்களில் இருந்து 400 பேர் தமிழகத்தில் குவிந்துள்ளதாகவும், கடத்தப்படும் சிறுவர், சிறுமிகளின் உடல் உறுப்புகளை ஒரு கும்பல் எடுப்பதாக கூறப்படும் தகவல்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அதிவேகமாக பரவி வருகின்றன

    இதற்கு காவல்துறை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், குழந்தைகள் கடத்தல் என்ற வதந்திகளை பரப்புபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சைபர் கிரைம் குறித்த ஹேக்கத்தான் போட்டி நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் சான்றுகளையும் வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இதுபோன்ற ஹேக்கத்தான் போட்டிகளில் பல்வேறு தொழில்நுட்பங்களையும் யுக்திகளையும் கண்டுபிடித்து வருகின்றனர். அவை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். குழந்தை கடத்தல் தொடர்பான தகவல்கள் வெளியாவது உண்மை இல்லை. இது குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டுவிட்டது. தேவையற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். அதே போல் உண்மையில்லாத தகவல்களை யாரும் பகிர வேண்டாம்." என்று அவர் தெரிவித்தார்.

    • கலைஞர் மறைவுக்கு பிறகு தி.மு.க. தலைவராகி கடந்த தேர்தலை சந்தித்து முதலமைச்சர் ஆனார்.
    • வருகிற 21-ந்தேதி சேலத்தில் தி.மு.க. இளைஞர் அணி மாநில மாநாடு நடை பெறுகிறது. அதன் பிறகு பதவி ஏற்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

    சென்னை:

    தமிழக அரசியலில் தி.மு.க. தலைவராக இருந்து மறைந்த கலைஞர் நீண்ட காலம் முதலமைச்சராக பணியாற்றினார்.

    அவரது காலத்திலேயே மு.க.ஸ்டாலின் கட்சியில் இளைஞர் அணி செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்றார். அதன் பிறகு சென்னை மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர் என்று பல பொறுப்புகளை ஏற்று திறம்பட பணியாற்றி தனது ஆளுமை திறனை வெளிப்படுத்தினார்.

    இதையடுத்து அவருக்கு துணை முதலமைச்சர் பதவியை கலைஞர் வழங்கினார். கலைஞர் மறைவுக்கு பிறகு தி.மு.க. தலைவராகி கடந்த தேர்தலை சந்தித்து முதலமைச்சர் ஆனார்.

    தற்போதைய விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸடாலினும் தந்தை வழியில் இளைஞர் அணி செயலாளர் பொறுப்புக்கு வந்தார்.

    அதன் பிறகு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சர் பதவிக்கு வந்துள்ளார்.

    அடுத்த மாதம் (பிப்ரவரி) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாடு செல்கிறார். அதற்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. வருகிற 21-ந்தேதி சேலத்தில் தி.மு.க. இளைஞர் அணி மாநில மாநாடு நடை பெறுகிறது. அதன் பிறகு பதவி ஏற்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

    உதயநிதியின் தீவிரமான கட்சி பணியை பார்த்து அவரை துணை முதலமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருவதாக டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

    இது தொடர்பாக ஒரு ஆங்கில பத்திரிகைக்கு உதயநிதி ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியில், "நானும் என் தந்தை வழியில் துணை முதலமைச்சர் ஆக போகிறேன்" என்பது வதந்தி. இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டியது முதலமைச்சர்தான் என்றார்.

    • வெடிபொருட்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று செல்வதாக சமூக ஊடகங்களில் ஆட்டோ புகைப்படத்துடன் ஒரு வாலிபர் வதந்தி பரப்பி உள்ளார்.
    • உடனடியாக போலீசார் சோதனையை தீவிரப்படுத்தினர்.

    புதுடெல்லி:

    ஜி 20 உச்சி மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து தலைவர்கள் டெல்லி வந்துள்ளனர்.

    இதையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உச்சிமாநாடு நடைபெறும் பிரகதி மைதான பகுதிக்கு துப்பாக்கிகள், வெடிபொருட்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று செல்வதாக சமூக ஊடகங்களில் ஆட்டோ புகைப்படத்துடன் ஒரு வாலிபர் வதந்தி பரப்பி உள்ளார்.

    இதைத்தொடர்ந்து உடனடியாக போலீசார் சோதனையை தீவிரப்படுத்தினர். இதில் அந்த வாலிபர் வதந்தி பரப்பியது உறுதி செய்யப்பட்டது.

    பின்னர் இதுதொடர்பாக நடத்திய விசாரணையில் டெல்லியின் பால்ஸ்வா டெய்ரி பகுதியை சேர்ந்த 21 வயதான சாஹ் என்பவர் இந்த வதந்தியை பரப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொருவருக்கும் ஆட்டோவை நிறுத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததது தெரிய வந்தது. எனவே அந்த நபரை சிக்க வைப்பதற்காக சாஹ் இவ்வாறு வதந்தி பரப்பியது தெரியவந்தது.

    • 200-க்கும் மேற்பட்ட போலீசார் மையனூர், லா.கூடலூர், மாடாம்பூண்டி கூட்டு ரோடு வனப்பகுதி மற்றும் அதைச் சுற்றி உள்ள கிராமங்களில் டிரோன் கேமரா மூலம் ஆய்வு செய்தனர்.
    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விபத்து நடந்ததாக சிலர் வதந்திகளை பரப்பினர்.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வாணாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த சத்தம் கேட்டது.

    இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பலர் அச்சமடைந்தனர். இந்நிலையில் சத்தம் கேட்பதற்கு முன்பு அப்பகுதியில் இரண்டு ராணுவ விமானங்கள் பறந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் விமானங்கள் வெடித்து சிதறி இருக்கலாம் என தகவல் காட்டு தீ போல் பரவியது. இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், பகண்டை கூட்டுரோடு இன்ஸ்பெக்டர் பாலாஜி, வனத்துறை உயர் அதிகாரிகள், வருவாய்த் துறையினர், தீயணைப்பு துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் மையனூர், லா.கூடலூர், மாடாம்பூண்டி கூட்டு ரோடு வனப்பகுதி மற்றும் அதைச் சுற்றி உள்ள கிராமங்களில் டிரோன் கேமரா மூலம் ஆய்வு செய்தனர்.

    ஆனால் எந்தவித தடயமும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இரவு 8 மணி அளவில் சின்னசேலம், கள்ளக்குறிச்சி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதியில் இதேபோல் பலத்த சத்தம் கேட்டதாக தகவல்கள் வந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்தனர்.

    இந்நிலையில், இது குறித்து இந்திய விமானப்படை விமான தளம் சூலூர் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் விசாரித்ததில், இது வழக்கமான விமானப்படை பயிற்சி நடைமுறை என்றும், நேற்று கள்ளக்குறிச்சி பகுதியில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது என்றும், உறுதி செய்யப்பட்டது.

    எனவே பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், வதந்திகள் ஏதும் பரப்ப வேண்டாம் எனவும் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஊட்டியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தின் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விபத்து நடந்ததாக சிலர் வதந்திகளை பரப்பினர். எனவே இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் கூறுகையில், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம், வதந்திகள் பரப்புவோர் மீது சட்டபடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • விடிய விடிய சோதனை நடத்தினர்.ஆனால் இளம்பெண்களை காரில் கடத்தி செல்லும் எந்த சம்பவங்களும் நடைபெறவில்லை.
    • போலீசார் கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொண்ட மா்ம நபரின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தனர்.

    திருப்பூா்:

    திருப்பூா் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா் அவிநாசி சாலை, அனுப்பர்பாளையம் பகுதியில் காரில் 2 இளம்பெண்களை கடத்திச் செல்வதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவிநாசி சாலையில் வாகன சோதனையை தீவிரப்படுத்தினா். விடிய விடிய சோதனை நடத்தினர்.ஆனால் இளம்பெண்களை காரில் கடத்தி செல்லும் எந்த சம்பவங்களும் நடைபெறவில்லை. இதனால் வதந்தி என தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார், கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொண்ட மா்ம நபரின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது திருப்பூா் மத்திய பேருந்து நிலையம் பகுதியை காட்டியுள்ளது.

    இதைத்தொடா்ந்து, போலீசார் அங்கு சென்று நடத்திய விசாரணையில், மதுபோதையில் இருந்த ஓட்டல் தொழிலாளி செந்தில்முருகன் (வயது 42) என்பவா் வதந்தி பரப்பியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை பிடித்து விசாரணைக்காக அனுப்பா்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனா். இதன் பின்னா் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனா். இந்த சம்பவத்தால் திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்த வீண் வதந்திகளை நம்பாதீர்கள் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்
    • வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    பெரம்பலூர்,

    கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதி முதல் தமிழக அரசு வழங்கவுள்ளது. இதனால் இத்திட்டத்திற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு அவர்களின் குடும்ப அட்டை பதிவு செய்துள்ள ரேஷன் கடை பணியாளர் மூலம் வீடு வீடாக விண்ணப்பங்களை வழங்கிடவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை திரும்ப பெறவும் சிறப்பு முகாம்கள் நடத்திடவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 282 ரேஷன் கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்த உகந்ததாக உள்ள சமுதாயக் கூடங்கள், அரசு பள்ளி கட்டிடங்கள், அரங்குகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கோனேரிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே முகாம் நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை மாவட்ட கலெக்டர் கற்பகம் நேரில் பார்வையிட்டு அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறும்டபோது, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் வீண் வதந்திகளை நம்பாதீர்கள். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்படும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • 7 மணி அளவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சமூக வலைதளங்கள் மூலம் தகவல் பரவியது.
    • போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுத்தை நடமாட்டம் வதந்தி என்பது தெரியவந்தது.

    பெருமாநல்லூர், ஜூலை.8-

    திருப்பூரில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில் கூலிபாளையம் அடுத்துள்ளது வெள்ளியம்பாளையம். இப்பகுதியை சுற்றி எஸ்.பெரியபாளையம், கோவி ந்தம்பாளையம், பெட்டிக்கடை, திம்மநாயக்கன்பாளையம், சிவசக்தி நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சமூக வலைதளங்கள் மூலம் தகவல் பரவியது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். உடனே இது குறித்து ஊத்துக்குளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுத்தை நடமாட்டம் வதந்தி என்பது தெரியவந்தது. சமூக வலைதளங்களில் தவறான புகைப்படத்தை பதிவிட்டு சிலர் இது போன்று சமூக வலைதளங்களில் தகவலை பரப்பியது தெரியவந்தது.

    இதையடுத்தே பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த சம்பவத்தால் எஸ்.பெரியபாளையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
    • அவ்வப்போது ஏற்படும் உடைப்பு மற்றும் கசிவால் கடைமடைக்கு தண்ணீா் செல்வதில்லை.

    காங்கயம் :

    கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தரைத்தளம் அமைக்கப்படும் என்ற வதந்தியை விவசாயிகள் நம்ப வேண்டாம் என்று கீழ்பவானி முறை நீா் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு, கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளா்கள் சங்கத்தினா் அறிவுறுத்தியுள்ளனா்.

    இது தொடா்பாக பாசன விசாயிகள் கூட்டமைப்பைச் சோ்ந்த நிா்வாகிகள் கூறியதாவது:- ஈரோடு மாவட்டம், பவானி சாகா் அணையில் இருந்து அமைக்கப்பட்டுள்ள கீழ்பவானி பாசன வாய்க்கால் மூலம் திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த வாய்க்கால், மண் வாய்க்காலாக இருப்பதால் அவ்வப்போது ஏற்படும் உடைப்பு மற்றும் கசிவால் கடைமடைக்கு தண்ணீா் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

    இந்நிலையில், கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தரைத்தளம் அமைக்க அரசு சாா்பில் திட்டமிடப்பட்டது. இதற்கு விவசாயிகளிடையே பெரும் எதிா்ப்பு கிளம்பியதையடுத்து கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது. கான்கிரீட் தளம் அமைக்கப்படாது என்று நீா்வளத் துறை சாா்பில் அதிகாரப்பூா்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தரைத்தளம் அமைக்கப்படுவதாக தற்போது ஒருசிலா் வதந்திகளைப் பரப்பி விவசாயிகளை திசைத்திருப்பி வருகின்றனா். எனவே, இதுபோன்ற வதந்திகளை விவசாயிகள் நம்ப வேண்டாம் என்றனா். 

    • சமூக நல்லிணக்கத்தை குலைக்க முயலுசமூக விரோதிகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தல்
    • தனியார் ஆக்கிரமிப்பை அகற்றிய விவகாரம் திசைதிருப்பபடுவதாக போலீசார் விளக்கம்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்திற்கு சொந்தமான இடத்தை அதே பகுதியை சேர்ந்த கார்த்திக்குமார் என்பவர் ஆக்கிரமித்ததை தொடர்ந்து, கடந்த 7-ந்தேதி அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதனை திசை திருப்பும் விதமாக போலீசார் குறித்து தவறான பிரசாரங்களை பல்வேறு இந்து இயக்கங்கள் மூலம் சிவனடியார் மீது தாக்குதல் என்று தவறாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு சமூக அமைதி மற்றும் சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பொய் பிரசாரங்களை செய்து வருவதாக தெரியவருகிறது. இது போன்ற பதிவுகளை பதிவிடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுபோன்று மதத்தின் பெயரால் மக்களின் கவனத்தை திசை திருப்பி தங்களது சுயலாபத்திற்காக சமூக நல்லிணக்கத்தை குலைக்க முயலும் சமூக விரோதிகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று அரியலூர் மாவட்ட போலீசார் எச்சரித்துள்ளனர்.

    • வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது.
    • பயணிகளின் கவனத்துக்கென போலீசார், ஹிந்தி மற்றும் தமிழில் பதிவு செய்யப்பட்ட ஆடியோ அறிவிப்பு செய்து வருகின்றனர்.

    திருப்பூர்:

    வட மாநில தொழிலா ளர்கள், தமிழர்களால் தாக்கப்படுவது போன்று சித்தரிக்கப்பட்ட போலியான வீடியோவை, சிலர் சமூக வலைதளங்களில் பரப்பியதால், பரபரப்பு ஏற்பட்டது. வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது.

    இச்சூழலில், பல்வேறு மாநில தொழிலாளர்கள், மக்கள் வந்து செல்லும் திருப்பூர் ரெயில், பஸ் நிலை யங்களில், பயணிகளின் கவனத்துக்கென போலீசார், ஹிந்தி மற்றும் தமிழில் பதிவு செய்யப்பட்ட ஆடியோ அறிவிப்பு செய்து வருகின்றனர். அதில் 'வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்; அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரச்சினையை தூண்டும் வகையில், சித்திரிக்கப்பட்ட வீடியோவை, யாரும் பகிரக்கூடாது. அவ்வாறு பகிர்பவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அறிவிக்கப்பட்டு வருகிறது.

    ×