search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muslim League"

    • இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் இருந்த முஸ்லிம் லீக்கின் சிந்தனையுடன் ஒத்துடையதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது - மோடி
    • முஸ்லீம் லீக் கட்சியை தங்களது தேர்தல் அறிக்கையுடன் ஒப்பிட்டு மோடி பரப்புரையில் ஈடுபடுகிறார் - காங்கிரஸ்

    பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில் "காங்கிரஸ் கட்சி நேற்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் இருந்த முஸ்லிம் லீக்கின் சிந்தனையுடன் ஒத்துடையதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது. மேலும் கம்யூனிஸ்டு மற்றும் இடது சாரி சிந்தனைகள் மேலோங்கி உள்ளது" என்று தெரிவித்திருந்தார்.

    இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், காங்கிரஸின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் அறிக்கை போல் இருப்பதாக மோடி கூறிய விமர்சனத்திற்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

    காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சல்மான் குர்ஷித், முகுல் வாஸ்னிக், பவன் கெரா உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    அந்த புகாரில், "பிரதமரின் பேச்சுகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானதாக உள்ளது. முஸ்லீம் லீக் கட்சியை தங்களது தேர்தல் அறிக்கையுடன் ஒப்பிட்டு மோடி பரப்புரையில் ஈடுபடுகிறார். மத அரசியலை முன்வைத்து நாட்டில் பிளவுவாதத்தை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசி வருகிறார். இவ்வாறு மோடி பிரச்சாரம் செய்வதை தடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாளுக்கு நாள் பாஜனதாவின் வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது.
    • இதனால் பா.ஜனதா அவற்றின் நெருங்கிய நண்பரான முஸ்லிம் லீக்கை நினைவு கூறத் தொடங்கியுள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இந்திய சுதந்திர போராட்டத்திற்கு முந்தைய முஸ்லிம் லீக் சித்தாந்தத்தை ஒத்திருப்பதாக பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது-

    பிரதமர் மோடி- அமித் ஷா ஆகியோரின் அரசியல் மற்றும் சித்தாந்த முன்னோடிகள் சுதந்திர போராட்டத்தின் போது பிரட்டிஷ், முஸ்லிம் லீக்கை ஆதரித்தனர். இன்று கூட காங்கிரஸின் தேர்தல் அறிக்கைக்கு எதிராக முஸ்லிம் லீக்கை தூண்டி விடுகின்றனர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை சாமானிய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் உள்ளது

    1942-ல் இந்தியனே வெளியேறு என்ற மகாத்மா காந்தியின் அழைப்பை மோடி- அமித் ஷாவின் சித்தாந்த முன்னோடிகள் எதிர்த்தனர்

    வெள்ளையனே வெளியேறு போராட்டம் எப்படி நடத்தலாம்? காங்கிரஸ் கட்சியை எப்படி அடக்கலாம்? என சியாம பிரசாத் முகர்ஜி பிரிட்டிஷ் கவர்னருக்கு கடிதம் எழுதவில்லையா? மேலும் இந்தியர்கள் பிரிட்டிஷ் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என கூறவில்லையா?

    மோடி மற்றும் அமித் ஷா, அவர்கள் நியமித்த தலைவர்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்.

    பிரதமர் மோடியின் பேச்சில் ஆர்.எஸ்.எஸ். வாடை வீசுகிறது. நாளுக்கு நாள் பா.ஜனதாவின் வாய்ப்பு இறங்கி கொண்டே வருகிறது. இதனால் பா.ஜனதா அவற்றின் நெருங்கிய நண்பர்களான முஸ்லிம் லீக்கை நினைவு கூறத் தொடங்கியுள்ளது.

    காங்கிரஸ் தேர்தலில் அறிக்கை 140 கோடி மக்களின் நம்பிக்கை மட்டும் அபிலாஷைகளை பிரதிபலிக்கிறது. அவர்களின் வலிமை மோடியின் 10 ஆண்டுகால அநீதியை முடிவுக்கு கொண்டு வரும்.

    இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    • கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி குடியுரிமை திருத்த சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
    • பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அவசரமாக குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டது

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அவசரமாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான இச்சட்டதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் 237 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு (DYFI), காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ், திரிணாமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி மஹுவா மொய்த்ரா மற்றும் ஏஐஎம்ஐஎம் தலைவர் ஒவைசி ஆகியோர் ஆகியோரின் மனுக்களும் அடங்கும்.

    இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அதில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (CAA) தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் குறித்து பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ஏப்ரல் 8-ம் தேதிக்குள் ஒன்றிய அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஏப்ரல் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார்.

    இதன்படி, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.

    குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • இஸ்லாமியத்தில் வெள்ளிக்கிழமை ஜும்மா நாளாக (சபை நாள்) அனுசரிக்கப்படுகிறது.
    • இதே நிலை தான் தமிழகத்திலும் உள்ளது. அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் 19-ந்தேதி, வெள்ளிக்கிழமை ஆகும்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதியும், 2-ம் கட்ட தேர்தல் கேரளாவில் 26-ந்தேதியும் நடக்கிறது. இந்த 2 நாட்களும் வெள்ளிக்கிழமை என்பதால், இஸ்லாமிய மக்கள் வாக்களிக்க சிரமத்தை ஏற்படுத்தும் என்ற கருத்து நிலவி வருகிறது.

    இது தொடர்பாக இந்திய முஸ்லிம் லீக் கேரள மாநில பொதுச்செயலாளர் பி.எம்.ஏ.சலாம் கூறியதாவது:-

    கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆகும். இஸ்லாமியத்தில் வெள்ளிக்கிழமை ஜும்மா நாளாக (சபை நாள்) அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் முஸ்லிம்கள், நமாஸ் (பிரார்த்தனை) செய்ய மசூதிகளுக்கு செல்வார்கள். அந்த நாளில் வாக்குப்பதிவு வைத்திருப்பது இஸ்லாமிய மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். இதே நிலை தான் தமிழகத்திலும் உள்ளது. அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் 19-ந்தேதி, வெள்ளிக்கிழமை ஆகும்.

    இந்த நாள் இஸ்லாமிய நம்பிக்கையை பின்பற்றும் வாக்காளர்கள், தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இடையூறாக இருக்கும். இதுகுறித்து உடனடியாக தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இதனை மறுபரிசீலனை செய்ய அவர்கள் தயாராக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
    • பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

    புதுடெல்லி:

    கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி குடியுரிமை திருத்த சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

    இதன்படி, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படவில்லை.

    இதற்கிடையே குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் நேற்று வெளியிடப்பட்டது. இத்துடன் இந்த சட்டம் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்தது.

    குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

    இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடுத்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் விதிகள் மதிப்புமிக்க உரிமைகள் உருவாக்கப்பட்டு குறிப்பிட்ட சில மதங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படுகிறது. அவசர கதியில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தது. எனவே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள விழா நிறைவு மாநாடு டெல்லியில் நவம்பர் மாதம் 16-ந் தேதி நடைபெற உள்ளது.
    • பாராளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையின் போது 2 தொகுதிகளை கேட்போம்.

    சென்னை:

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் அக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் தலைமையில் சென்னையில் நடந்தது.

    கட்சியின் மாநில தலை வராக கே.எம்.காதர் மொய்தீன் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முகம்மது அபூ பக்கர், பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான் உள்பட அடுத்த 4 ஆண்டுகளுக்காக புதிதாக தேர்வான மாநில, சார்பு அணி நிர்வாகிகளின் பெயர்களும் அறிவிக்கப்பட்டன.

    பின்னர் செய்தியாளர்களிடம் காதர் மொய்தீன் கூறியதாவது:-

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள விழா நிறைவு மாநாடு டெல்லியில் நவம்பர் மாதம் 16-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை அழைக்க உள்ளோம். வேப்பூர் அருகே முஸ்லிம் லீக் சார்பில் நவம்பர் 4-ந் தேதி மருத்துவ கல்லூரி தொடங்கப்படுகிறது. தொடக்க விழாவில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இந்தியா கூட்டணி உருவான நாளில் இருந்து பிரதமர் பேச்சில் குழப்பம் அதிகமாக உள்ளது. 5 மாநில சட்டசபை தேர்தலில் தாங்கள் தோல்வியை தழுவப் போவதாக அவர்களே கூறுகிறார்கள். பாராளுமன்ற தேர்தலிலும் அதே நிலை தான் ஏற்படும். முஸ்லிம்களை இந்திய மக்களாக அங்கீகரிக்க மறுக்கிறார்கள். அதனாலேயே பா.ஜனதாவுக்கு முஸ்லிம் மக்களின் ஓட்டு செல்வதில்லை.

    அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி முறிவு ஒரு நாடகம். முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்வதில் தன்னால் இயன்றதை செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்து உள்ளார். விடுதலை செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியல் அவர்களுக்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்து உள்ளது. இது தொடர்பாக கவர்னர், உள்துறை மந்திரியை சந்தித்து வலியுறுத்துவோம்.

    பாராளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையின் போது 2 தொகுதிகளை கேட்போம். தற்போது ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற்றிருப்பதால் அந்த தொகுதி வழங்கப்படும் என்று நம்புகிறோம். அடுத்து திருச்சியை கேட்டுப் பெறுவோம். வேலூர் தொகுதியை இது வரை நாங்கள் கேட்கவில்லை. நாங்கள் கேட்கும் தொகு தியை தி.மு.க. வழங்காமல் இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் முகம்மது அபூபக்கர் தொடக்க உரையாற்றினார்.
    • காயல்பட்டினத்தில் தாலுகா துணை அலுவலகம் அமைக்க வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஆறுமுகநேரி:

    பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் கலவரத்திற்கு காரணமானவர்களை கண்டித்தும் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    நகர தலைவர் நூகு சாகிப் தலைமை தாங்கினார். மாவட்ட நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் அபூசாலிஹ் வரவேற்று பேசினார். மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் முகம்மது அபூபக்கர் தொடக்க உரையாற்றினார். திராவிடர் கழக பிரச்சார அணி மாநில செயலாளர் வக்கீல் அருள்மொழி, தமிழ் மையம் அமைப்பின் நிறுவ னர் ஜெகத் கஸ்பர் ராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் வக்கீல் பெரோஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    முஸ்லிம் லீக் மாநில துணைச்செயலாளர் இப்ராஹீம் மக்கீ, தூத் துக்குடி மாவட்ட தலைவர் மீராசா மரைக்காயர், செய லாளர் மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட பொருளாளர் திரேஸ்புரம் மீராசா, கவுரவ ஆலோசகர் வாவு சம்சுதீன், தேசிய கவுன்சில் உறுப்பினர் முகம்மது ஹசன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியின் பொறுப்பாளர்களான பாவா ஷேக்னா லெப்பை, அகமது ஜருக், மஹ்மூத் லெப்பை, அகமது சலாஹுத்தீன், முகம்மது முஹ்யித்தீன், முகம்மது சித்தீக், சுகைல் இப்ராஹீம் உள்பட பலர் கலந்து கொண்டனர். காயல்பட்டினத்தில் 2-வது குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க கோரியும், ரெயில் நிலையத்தில் நடைபாதையை உயர்த்தக் கோரியும், நகராட்சியின் வார்டு மறுவரையறை குளறுபடிகளை நீக்க கோரியும், காயல்பட்டினத்தில் தாலுகா துணை அலுவலகம் அமைக்க வலியுறுத்தியும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைச்செயலாளர் முகம்மது இஸ்மாயில் புகாரி நன்றி கூறினார்.

    • இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • இதில் பல்வேறு கட்சி நிர்வாகிகள் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஹைதர் அலி அம்பலம் தலைமை வகித்தார்.

    மாவட்ட நிர்வாகிகள் பிலால், அப்துல் கபூர், பகுசியா முன்னிலை வகித்தனர். காஜாமைதீன் ஆலிம் கிராத் ஓதி தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் இனாயத்துல்லா வரவேற்றார். திருப்பத்தூர் நகரில் தமிழர்களின் மொழி, பண்பாடு, மத நல்லிணக்கம் பாதுகாக்கும் வகையில் அண்ணா அறிவாலயம் ஏற்படுத்துதல், "உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின்" என்ற பிரசாரத்தில் பெறப்பட்ட மனுக்களை பரிசீலித்து பாதிக்கப்பட்ட நபருக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றி தர ஆர்ப்பாட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.

    இதில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு, மனிதநேய மக்கள் கட்சி, போன்ற பல்வேறு கட்சி நிர்வாகிகள் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வழக்கறிஞர் முகமது மணிப்புறா நன்றி கூறினார்.

    • பக்ரீத் பெருநாளன்று குர்பானி கொடுப்பதன் மூலம் ஏற்படும் கழிவுகளை உடனே அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • அனைத்து வார்டுகளுக்கும் கல்லாற்று தண்ணீரும், தாமிரபரணி ஆற்று தண்ணீரும் வழங்கிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடையநல்லூர்:

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடையநல்லூர் நகர தலைவர் செய்யது மசூது,இளைஞர் லீக் மாநில துணைத்தலைவர் ஹபிபுல்லா, நகர செயலாளர் அய்யூப்கான்,தொகுதி செயலாளர் ஹைதர் அலி,கவுன்சிலர் அக்பர் அலி,மாநில பிரதிநிதி துராப்ஷா,அப்துல் சமது,அப்துல் ரகுமான் ஆகியோர் கடையநல்லூர் நகராட்சி தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மானை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளுக்கும் கல்லாற்று தண்ணீரும், தாமிரபரணி ஆற்று தண்ணீரும் வழங்கிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பக்ரீத் பண்டிகை விடுமுறை தினத்தில் வருவதால் , பக்ரீத் பெருநாளன்று குர்பானி கொடுப்பதன் மூலம் ஏற்படும் கழிவுகளை உடனே அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்ரீத் பெருநாளை முன்னிட்டு சீரான குடிநீர் வழங்கிட வேண்டும்.

    கடையநல்லூர் முழுவதும் கொசுத்தொல்லை அதிகம் உள்ளது. எனவே அனைத்து பகுதிகளுக்கும் கொசு ஸ்பிரே மருந்து அடித்திட வேண்டும்.

    12 , 17, 19, 24,33 முஸ்லிம் லீக் வெற்றி பெற்ற வார்டு உட்பட நகரின் அனைத்து வார்டுகளுக்கும் பொதுமக்கள் , வார்டு கவுன்சிலர்கள் கோரிக்கையையும் நிறைவேற்றிட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
    • கூட்டத்தில் காயல்பட்டினம் நகர புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நகர நிர்வாகிகள் தேர்தலுக்கான பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. நகர தலைவர் முகமது ஹசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மஹ்மூதுல் ஹசன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் மன்னர் அப்துல் அஸ்ஷப் வரவேற்று பேசினார். சாகுல் ஹமீது இறை வணக்கம் பாடினார். நகர பொருளாளர் சுலைமான் அறிக்கை வாசித்தார்.

    மாவட்ட தலைவர் மீராசா மரைக்காயர் தொடக்க உரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தில் காயல்பட்டினம் நகர புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

    இதன்படி புதிய தலைவராக நூஹ் சாகிப், செயலாளராக அபூ சாலிஹ், பொருளாளராக சுலைமான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் துணை தலைவர்கள், துணை செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் இளைஞர் அணி, மாணவரணி, மகளிர் அணி நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.

    சிறுபான்மை பாதுகாப்பு மற்றும் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தை காயல் பட்டினத்தில் நடத்துவது, கட்சியின் 75 ஆண்டு விழாவை முன்னிட்டு 75 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, நபிகள் நாயகம் குறித்து தரக்குறைவாக பேசிய பா.ஜ.க.வை சேர்ந்த அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.நிறைவில் முகமது உமர் பிரார்த்தனை பாடினார்.

    • காயல்பட்டினத்தில் முஸ்லிம் லீக் கொடியேற்று விழா 18 இடங்களில் நடைபெற்றது.
    • அனைத்து இடங்களிலும் இனிப்பு வழங்கப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தலைவரான காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் சாஹிப் 127-வது பிறந்தநாளை முன்னிட்டு காயல்பட்டினத்தில் 18 இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது.

    முஸ்லிம் லீக் நகர தலைவர் முகமது ஹசன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் மஹ்மூத் ஹசன் முன்னிலை வகித்தார்.

    மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், நகரச் செயலாளர் அபுசாலிஹ், பொருளாளர் சுலைமான், மாவட்ட துணைச்செய லாளர்பெத்தப்பா சுல்தான், மாவட்ட நிர்வாகிகள் முகமது இஸ்மாயில், காதர் சாகிப் மற்றும் முகைதீன் தம்பி, முகமது அலி, லெப்பையப்பா ரஹமத்துல்லா, காயிதே மில்லத் பேரவை செயலாளர் வாவு சம்சுதீன் ஆகியோர் வெவ்வேறு இடங்களில் கொடி ஏற்றினர்.

    அனைத்து இடங்களிலும் இனிப்பு வழங்கப்பட்டது. நகர நிர்வாகிகள் சித்திக், அப்துல் கரீம், கடலூர் ஜாபர், முகமது முகைதீன், அப்துல் ரகுமான், உமர் அப்துல் காதர், சுகைல் இப்ராஹிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை குறித்து உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறிய சர்ச்சைக்குரிய பதிவை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது. #YogiAdiyanath #Twitter #MuslimLeague
    புதுடெல்லி:

    உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை குறித்து சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை தனது டுவிட்டர் தளத்தில் கடந்த 5-ந்தேதி வெளியிட்டு இருந்தார். மேலும் மாநிலம் முழுவதும் பிரசாரத்தின் போதும் இந்த கருத்தை அவர் தெரிவித்து வந்தார்.

    இது தொடர்பாக தேர்தல் கமிஷனில் புகார் செய்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர், ஆதித்யநாத்தின் டுவிட்டர் கணக்கை முடக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து ஆதித்யநாத்தின் சர்ச்சைக்குரியை பதிவை நீக்குமாறு டுவிட்டர் நிறுவனத்துக்கு தேர்தல் கமிஷன் அறிவுறுத்தல் வழங்கியது. இதை ஏற்றுக்கொண்ட டுவிட்டர் நிறுவனம், ஆதித்யநாத்தின் பதிவை நேற்று நீக்கியது.

    முன்னதாக தனது பிரசாரத்தில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வந்த யோகி ஆதித்யநாத்துக்கு 3 நாட்கள் பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. #YogiAdiyanath #Twitter #MuslimLeague 
    ×