search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kadayanallur"

    கடையநல்லூர் தாலுகா பகுதியில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
    கடையநல்லூர்:

    கடையநல்லூர் தாலுகாவில்  ஜமாபந்தி தொடங்கியது. கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்ப்பாய கணக்கு ஆய்வு (ஜமாபந்தி) நேற்று (செவ்வாய்க்கிழமை) புளியங்குடி குறு வட்டத்திற்கும் இன்று (புதன்கிழமை) ஆய்க்குடி குறுவட்டத்திற்கும் நடந்தது.26-ந் தேதி (வியாழக் கிழமை) கடையநல்லூர் குறு வட்டத்திற்கு  நடை பெறுகிறது.

    31 கிராமப்பகுதிகளிலுள்ள வருவாய் கணக்குகளை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் கங்காதேவி தலைம தாங்கினார். கடையநல்லூர் தாசில்தார் அரவிந்த், சமூகநல தாசில்தார் அழகப்பராஜா,  ஆர்.டி.ஓ.  நேர்முக உதவியாளர் ராம்குமார்,

    கடையநல்லூர் தலைமையிடத்து துணை தாசில்தார் சங்கரலிங்கம் , மண்டல துணை தாசில்தார் ராஜாமணி,  ஹெட் சர்வேர் சாகுல் ஹமீது, வருவாய் ஆய்வாளர் காசி லட்சுமி, புளியங்குடி வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், ஆய்குடி வருவாய்  ஆய்வாளர் சங்கரஈஸ்வரி ஆகியோர் கணக்கு தீர்வாயப் பணிகளை மேற்கொள்கின்றனர்.  

    நிகழ்ச்சியில் ஏராளமான மனுக்கள் பெறப்பட்டது. இதில் அதிக அளவு முதியோர் உதவித்தொகை கேட்டு பொதுமக்கள் மனுக்களை கொடுத்தனர். முன்னதாக ஆர்.டி.ஓ. கங்காதேவி தாலுகா அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டார்.
    கடையநல்லூரில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
    கடையநல்லூர்:

    நெல்லை வன உயிரின சரணாலயம் மற்றும் வனக்கோட்டம் மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின்பேரில் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு வன ரேஞ்சர் சுரேஷ் தலைமை தாங்கினார். மேல்நிலைப்பள்ளி முதல்வர் மங்களத்துரை வரவேற்று  பேசினார். சிறப்பு விருந்தினராக கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் ஹபிபூர் ரஹ்மான்  மரக்கன்றுகளை நட்டு சிறப்புரையாற்றினார். 

    நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் முஹைதீன் கனி, முஹம்மது அலி, முருகன், வனவர் முருகேசன், அம்பலவாணர், வனக் காப்பாளர்கள் அய்யப்பன், ராமச்சந்திரன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள்  உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு கடையநல்லூர் நகராட்சியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சியில் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு மெகா துப்புரவு பணி விழிப்புணர்வு பேரணி கடையநல்லூர் சார் பதிவு அலுவலகம் முன்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சுகாதார அலுவலர் இளங்கோ வரவேற்று பேசினார். 

    நகர்மன்றத் தலைவர் ஹபிபூர் ரஹ்மான் விழிப்புணர்வு உறுதிமொழியை வாசித்தார். அதன் பின்னர்  தமிழக அரசின் மஞ்சள் பை உபயோகம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி உரையாற்றினார் . அதன் பின்னர் பொதுமக்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கினார். சாலையில் கிடந்த குப்பைகளை அகற்றினார்.

     நிகழ்ச்சியில் இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் சக்திவேல், சிவா,   நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ -மாணவிகள், தாருஸ்ஸலாம் பள்ளி மாணவ- மாணவிகள் , நகர்மன்ற உறுப்பினர்கள் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள்,காவல் துறை அதிகாரிகள், தூய்மை இந்திய திட்டம் மேற்பார்வையாளர் மற்றும் பரப்புரையாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள்  பொதுநல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தில் பிரசித்திபெற்ற குறுக்கிட்டான் கருப்பசுவாமி கோவில் கொடை விழாவில் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    கடையநல்லூர்:

    கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தில் பிரசித்திபெற்ற குறுக்கிட்டான் கருப்பசுவாமி கோவில் கொடைவிழா கடந்த 27-ந் தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது. 

    தொடர்ந்து முதல்நாளான நேற்று முன்தினம் காலை   கணபதிஹோமம், வருஷாபிஷேகம் நடந்தது. மாலை  குடியழைப்பு, ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல்,  அபிஷேகம், சிறப்பு தீபாராதனை, வில்லிசை, நள்ளிரவு பூஜை நடந்தது. 

    தொடர்ந்து 2-ம் நாளான நேற்று காலை  பெரியநாயகம் கோவில் மற்றும் குற்றாலம் தீர்த்தம் எடுத்து வர புறப்படுதல், மாலை 3மணிக்கு வாணவேடிக்கை முழங்க முளைப்பாரி, பால்குடம் ரதவீதி ஊர்வலம் நடந்தது. மாலையில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. விரதம் மேற்கொண்டிருந்த பக்தர்கள் பூக்குழிஇறங்கினர். இரவு  12மணிக்கு நள்ளிரவு பூஜை நடந்தது. 

    தொடர்ந்து இன்று  4-ம் தேதிகாலை 7மணிக்கு முளைப்பாரி கரைத்தல், 11 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடக்கிறது. விழாவில் கிருஷ்ணாபுரம், கடையநல்லூர்,  மேலக்கடையநல்லூர்,  புளியங்குடி, செங்கோட்டை, தென்காசி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    • விக்னேஷ் மனைவி அகிலா அய்யப்பன் என்பவருடன் மோட்டார் சைக்கிளிலில் சென்று உள்ளார்.
    • அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அருகே உள்ள மங்களாபுரத்தை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி அகிலா (19).

    தீபாவளியை யொட்டி நேற்று அவர் தென்காசி மங்கம்மா சாலையை சேர்ந்த அய்யப்பன் என்பவருடன் மோட்டார் சைக்கிளிலில் சென்று உள்ளார்.

    கடையநல்லூர் அருகே அச்சம்பட்டியில் மதுரை- தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது கொல்லம் நோக்கி சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடையநல்லூர் போலீசார் 2 பேரின் உடலையும் கைப்பற்றி கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக அரசு பஸ்சை ஓட்டி வந்த ராஜபாளையம் சேத்தூரை சேர்ந்த டிரைவர் லாரன்ஸ் சேவியர் ராஜாவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மக்களின் கோரிக்கைகளை தமிழக முதல்வர் விரைவாக நிறைவேற்றி வருகிறார்.
    • நகராட்சிக்கு தேவைப்படும் அனைத்து திட்டங்களும் படி ப்படியாக நிறைவேற்றப்படும்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மக்களுக்கான அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகி றது. மக்களின் கோரிக்கைகளை தமிழக முதல்வர் விரைவாக நிறை வேற்றி வருகிறார். நமது நகராட்சியில் பல்வேறு திட்டப்பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகின்றன. நகராட்சிக்கு தேவைப்படும் அனைத்து திட்டங்களும் படி ப்படியாக நிறைவேற்றப்படும்.

    நகராட்சிக்கு தேவையான திட்டங்கள் குறித்து துறை அமைச்சர்கள், கலெக்டர் ஆகாஷ் ஆகியோரிடம் மனு அளித்துள்ளேன். கடையநல்லூரில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம், அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி புதிய கட்டிடம் அமைத்தல், தினசரி சந்தை நெருக்கடிகளை குறைத்து மேம்படுத்துதல், அரசு பெண்கள் மேல்நிலை ப்பள்ளியில் இட வசதியை மேம்படுத்தி, சுகாதார வசதியை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.

    தாமிரபரணி குடிநீர்

    கோடை காலங்களிலும் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைத்திட தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது 2 நாளைக்கு ஒரு முறை தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    அனைத்து பகுதிகளுக்கும் தாமிரபரணி தண்ணீரை வழங்க வேண்டும் என பொதுமக்களும், நகர்மன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில் அனைத்து பகுதிகளுக்கும் தாமிரபரணி குடிநீரை வழங்குவதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்து பகுதிகளுக்கும் தாமிபரணி குடிநீர் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஓ.பி.எஸ். அணி சார்பில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உருவப் படங்களுக்கு நகர பொறுப்பாளர் இசக்கி துரை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
    • கடையநல்லூர் அவைத் தலைவர் சுந்தரய்யா உட்பட ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி வடக்கு மாவட்டம் கடையநல்லூர் நகர ஓ.பி.எஸ். அணி சார்பில் பதிவுத்துறை அலுவலகம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உருவப் படங்களுக்கு நகர பொறுப்பாளர் இசக்கி துரை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மேலும் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

    நிகழ்ச்சியில் செங்கோட்டை நகரப் பொறுப்பாளர் மாரியப்பன், சொக்கம்பட்டி ஒன்றிய பொறுப்பாளர் செல்லதுரை, கடையநல்லூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் முத்துப்பாண்டியன், கடையநல்லூர் அவைத் தலைவர் சுந்தரய்யா உட்பட ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

    • கடையநல்லூர் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் சுதந்திரப் போராட்டத் தியாகி வீரன் அழகுமுத்துக்கோனின் புதிய படத்தை திறக்க வேண்டும் என உறுப்பினர்கள் தீர்மானத்தை கொண்டு வந்தனர்.
    • நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் சுதந்திர போராட்ட தியாகி வீரன் அழகுமுத்துக்கோன் உருவப்படத்தை நகர் மன்ற தலைவர் ஹபீபுர் ரஹ்மான் திறந்து வைத்தார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் சுதந்திரப் போராட்டத் தியாகி வீரன் அழகுமுத்துக்கோனின் புதிய படத்தை திறக்க வேண்டும் என கடந்த நகராட்சி கூட்டத்தில் 10-வது வார்டு கவுன்சிலர் முருகன் உட்பட 5-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தீர்மானத்தை கொண்டு வந்தனர்.

    அதன்படி நேற்றைய தினம் நகராட்சி கூட்டம் தொடங்குவதற்கு முன்பு நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் சுதந்திர போராட்ட தியாகி வீரன் அழகுமுத்துக்கோன் உருவப்படத்தை நகர் மன்ற தலைவர் ஹபீபுர் ரஹ்மான் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர், லதா, சுகாதார அலுவலர் இளங்கோவன், நகரமைப்பு அலுவலர் காஜாமைதீன், நகர அமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், நகர மன்ற உறுப்பினர் முருகன், முஹைதீன் கனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


    • தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் அருகே மேக்கரை எருமை சாவடி அருகே செந்நாய் கடித்த மிளாவின் இறைச்சியை சமைத்து சாப்பிடுவதாக மாவட்ட வன அலுவலர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் சேர்ந்து கறியை பங்குபோட்டு சமைத்து சாப்பிட்டது விசாரணையில் தெரியவந்தது.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் அருகே மேக்கரை எருமை சாவடி அருகே செந்நாய் கடித்த மிளாவின் இறைச்சியை சமைத்து சாப்பிடுவதாக மாவட்ட வன அலுவலர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின்பேரில் ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் கடையநல்லூர் மற்றும் மேக்கரை பிரிவு வனவர்கள் முருகேசன், அம்பல வாணன், பண்பொழி பீட் வனகாப்பாளர்கள் முத்துச்சாமி, ராஜா, ஆகிய வனத்துறை அலுவலர்கள் சம்பந்தபட்ட கிராமத்திற்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது, மேக்கரை எருமை சாவடி பகுதியில் செந்நாய் கடித்து இறந்து கிடந்த மிளாவின் இறைச்சியை மேக்கரை எருமை சாவடியை சேர்ந்த செல்லத்துரை மகன்கள் காசிராஜன், ஆறுமுகம் ,இசக்கிமுத்து, அய்யப்பன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் சேர்ந்து கறியை பங்குபோட்டு சமைத்து சாப்பிட்டது விசா ரணையில் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து மிளாவின் கால், தோல் ஆகியவற்றை வனத்துறை யினர் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து வனத் துறையினர் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 (9)ன் கீழ் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர் . பின்னர் மாவட்ட வன அலுவலர் முருகனின் உத்தரவின் பேரில் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி இவர்களுக்கு கடையநல்லூர் வன ரேஞ்சர் சுரேஷ் தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சம் அபதாரம் விதித்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தார்.

    இது போன்று வன உயிரினங்களை யார் வேட்டையாடினாலும் அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்படும் என ரேஞ்சர் சுரேஷ் தெரிவித்தார்.

    • கடையநல்லூரில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
    • 100-க்கும் மேற்பட்ட ஆயுதப்படை போலீசார் மற்றும் கமாண்டோ படை போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

    கடையநல்லூர்:

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதன் காரணமாக தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

    இந்த அணிவகுப்பில் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் தலைமையில் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட ஆயுதப்படை போலீசார் மற்றும் கமாண்டோ படை போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். பேரணி கிருஷ்ணாபுரம் அண்ணா சிலையில் தொடங்கி முத்து கிருஷ்ணாபுரம், கிருஷ்ணாபுரம், போலீஸ் நிலைய தெரு, புதூர் பள்ளிக்கூடம் தெரு, பஜார் ரோடு, மதீனா நகர், பேட்டை, ஆஸ்பத்திரி மேற்கு மலம்பாட்டை ரோடு, தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் முடிந்தது. இந்த அணிவகுப்பில் கடையநல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சப்- இன்ஸ்பெக்டர் கனகராஜன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    • கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • தனுஷ் குமார் எம்.பி. 398 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும்,

    கூட்டுறவு சங்க தலைவருமான செல்லத்துரை தலைமை தாங்கினார். நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், பள்ளி மேலாண்மை குழு டாக்டர் சஞ்சீவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஜின்னி இவாஞ்சலின் ஜோஸ் வரவேற்று பேசினார். தனுஷ் குமார் எம்.பி. 398 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வகுப்பறைகளுக்கு தேவையான 9.5 லட்சம் செலவிலான 60 இருக்கைகளை தலைமை ஆசிரியரிடம் வழங்கினார். நிகழ்ச்சிகள் தி.மு.க. நகர செயலாளர் அப்பாஸ் உட்பட பள்ளியின் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


    • கடையநல்லூர் தாமரைகுளத்தின் அருகே மழைக்காலத்தின் போது நீர்நிலைகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை மீட்பது எப்படி என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது
    • பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தனித்துணை கலெக்டர் குணசேகரன் தலைமையில் இந்த ஒத்திகை நடைபெற்றது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் தாமரைகுளத்தின் அருகே மழைக்காலத்தின் போது நீர்நிலைகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களையும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களையும் மீட்பது எப்படி என்பது குறித்தும், அவர்களுக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. தீயணைப்பு வீரர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், டி.என்.டி.ஜே .சேவை அமைப்பு ஆம்புலன்ஸ், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ,ரெட் கிராஸ் குழுவினர், லயன்ஸ் மகாத்மா காந்தி, செந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக்கல்லூரி, வீராசாமி செட்டியார் என். எஸ். எஸ் . மாணவர்கள் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

    பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தனித்துணை கலெக்டர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் அரவிந்த், மோட்டார் வாகன ஆய்வாளர், கனகவல்லி, வட்டாரப் போக்குவரத்து சூப்பிரண்டு ஜீவானந்தம் ,பொதுப்பணித்துறை அலுவலர் சரவணகுமார், தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் , கடையநல்லூர் வட்டார நடமாடும் மருத்துவ குழு மருத்துவர் நஸ்ரின், இன்ஸ்பெக்டர் விஜயகுமார், நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கந்தசாமி, நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், ரெட் கிராஸ் மனோகரன், தவ்ஹீத் ஜமாத் நல்லூர் சுலைமான், கடையநல்லூர் வருவாய் ஆய்வாளர் சங்கரேஸ்வரி, நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சிவா, கிராம நிர்வாக அலுவலர்கள் ராமச்சந்திரன், நாராயணன், சங்கரநாராயணன், மாடசாமி, சாந்தி , கிராம நிர்வாக உதவியாளர்கள் பாலின்ரமேஷ், ஆரோக்கி யராஜ், மாரியம்மாள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    ×