என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கடையநல்லூர் தாலுகாவில் ஜமாபந்தி நிகழ்ச்சி
Byமாலை மலர்25 May 2022 9:19 AM GMT (Updated: 25 May 2022 9:19 AM GMT)
கடையநல்லூர் தாலுகா பகுதியில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் தாலுகாவில் ஜமாபந்தி தொடங்கியது. கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்ப்பாய கணக்கு ஆய்வு (ஜமாபந்தி) நேற்று (செவ்வாய்க்கிழமை) புளியங்குடி குறு வட்டத்திற்கும் இன்று (புதன்கிழமை) ஆய்க்குடி குறுவட்டத்திற்கும் நடந்தது.26-ந் தேதி (வியாழக் கிழமை) கடையநல்லூர் குறு வட்டத்திற்கு நடை பெறுகிறது.
31 கிராமப்பகுதிகளிலுள்ள வருவாய் கணக்குகளை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் கங்காதேவி தலைம தாங்கினார். கடையநல்லூர் தாசில்தார் அரவிந்த், சமூகநல தாசில்தார் அழகப்பராஜா, ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் ராம்குமார்,
கடையநல்லூர் தலைமையிடத்து துணை தாசில்தார் சங்கரலிங்கம் , மண்டல துணை தாசில்தார் ராஜாமணி, ஹெட் சர்வேர் சாகுல் ஹமீது, வருவாய் ஆய்வாளர் காசி லட்சுமி, புளியங்குடி வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், ஆய்குடி வருவாய் ஆய்வாளர் சங்கரஈஸ்வரி ஆகியோர் கணக்கு தீர்வாயப் பணிகளை மேற்கொள்கின்றனர்.
நிகழ்ச்சியில் ஏராளமான மனுக்கள் பெறப்பட்டது. இதில் அதிக அளவு முதியோர் உதவித்தொகை கேட்டு பொதுமக்கள் மனுக்களை கொடுத்தனர். முன்னதாக ஆர்.டி.ஓ. கங்காதேவி தாலுகா அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டார்.
கடையநல்லூர் தாலுகாவில் ஜமாபந்தி தொடங்கியது. கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்ப்பாய கணக்கு ஆய்வு (ஜமாபந்தி) நேற்று (செவ்வாய்க்கிழமை) புளியங்குடி குறு வட்டத்திற்கும் இன்று (புதன்கிழமை) ஆய்க்குடி குறுவட்டத்திற்கும் நடந்தது.26-ந் தேதி (வியாழக் கிழமை) கடையநல்லூர் குறு வட்டத்திற்கு நடை பெறுகிறது.
31 கிராமப்பகுதிகளிலுள்ள வருவாய் கணக்குகளை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் கங்காதேவி தலைம தாங்கினார். கடையநல்லூர் தாசில்தார் அரவிந்த், சமூகநல தாசில்தார் அழகப்பராஜா, ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் ராம்குமார்,
கடையநல்லூர் தலைமையிடத்து துணை தாசில்தார் சங்கரலிங்கம் , மண்டல துணை தாசில்தார் ராஜாமணி, ஹெட் சர்வேர் சாகுல் ஹமீது, வருவாய் ஆய்வாளர் காசி லட்சுமி, புளியங்குடி வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், ஆய்குடி வருவாய் ஆய்வாளர் சங்கரஈஸ்வரி ஆகியோர் கணக்கு தீர்வாயப் பணிகளை மேற்கொள்கின்றனர்.
நிகழ்ச்சியில் ஏராளமான மனுக்கள் பெறப்பட்டது. இதில் அதிக அளவு முதியோர் உதவித்தொகை கேட்டு பொதுமக்கள் மனுக்களை கொடுத்தனர். முன்னதாக ஆர்.டி.ஓ. கங்காதேவி தாலுகா அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X