search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young girl died"

    • இன்று காலை திண்டுக்கல் அருகே உள்ள செல்லமந்தாடி பகுதியில் வந்தபோது ரெயிலில் இருந்து ஒரு இளம்பெண் தவறி விழுந்தார்.
    • அவரது அடையாள அட்டையை வைத்து பார்த்தபோது அவர் ஆந்திராவைச் சேர்ந்த பெண் என தெரிய வந்தது.

    திண்டுக்கல்:

    மும்பையில் இருந்து நாகர்கோவில் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டு இருந்தது. இந்த ரெயில் இன்று காலை திண்டுக்கல் அருகே உள்ள செல்லமந்தாடி பகுதியில் வந்தபோது ரெயிலில் இருந்து ஒரு இளம்பெண் தவறி விழுந்தார்.

    உடனடியாக அருகில் இருந்தவர்கள் இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவரது அடையாள அட்டையை வைத்து பார்த்தபோது அவர் ஆந்திராவைச் சேர்ந்த பெண் என தெரிய வந்தது.

    கைலாஷ் கன்வார் என்ற அந்த பெண்ணின் கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இறந்த பெண்ணின் உடல் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • சம்பவத்தன்று வேலை க்கு செல்லாமல் வீட்டில் இருந்தவர் தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக சென்றார்.
    • மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது அந்த பெண் மயக்கமடைந்த நிலையில் இருந்ததால் அவரை சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் வ.உ.சி.3-வது தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜ்(37). இவரும் தீபா(31) என்பவரும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஹரிகரசுதன் என்ற மகனும், விகாசினி என்ற மகளும் உள்ளனர். பாண்டியராஜ் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். தீபாவிற்கு கடந்த 2 வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    சம்பவத்தன்று வேலை க்கு செல்லாமல் வீட்டில் இருந்த பாண்டியராஜ் தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக சென்றார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது தீபா மயக்கமடைந்த நிலையில் இருந்தார். உடனடியாக அவரை சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தனது மனைவியின் சாவில் உள்ள மர்மம் குறித்து விசாரிக்க வேண்டும் என அவரது கணவர் கொடுத்த புகாரின்பேரில் சின்னமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • விக்னேஷ் மனைவி அகிலா அய்யப்பன் என்பவருடன் மோட்டார் சைக்கிளிலில் சென்று உள்ளார்.
    • அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அருகே உள்ள மங்களாபுரத்தை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி அகிலா (19).

    தீபாவளியை யொட்டி நேற்று அவர் தென்காசி மங்கம்மா சாலையை சேர்ந்த அய்யப்பன் என்பவருடன் மோட்டார் சைக்கிளிலில் சென்று உள்ளார்.

    கடையநல்லூர் அருகே அச்சம்பட்டியில் மதுரை- தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது கொல்லம் நோக்கி சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடையநல்லூர் போலீசார் 2 பேரின் உடலையும் கைப்பற்றி கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக அரசு பஸ்சை ஓட்டி வந்த ராஜபாளையம் சேத்தூரை சேர்ந்த டிரைவர் லாரன்ஸ் சேவியர் ராஜாவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சமையல் செய்தபோது தீ பிடித்து இளம்பெண் பலியானார்
    • தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் தேவாரம் 4-வது வார்டு நாடார் வடக்குத் தெருவைச் சேர்ந்த கணேசன் மகள் கணேஷ்வரி (வயது 18). சம்பவத்தன்று கணேசன் மற்றும் அவரது மனைவி வேலைக்கு சென்று விட்டனர்.

    வீட்டில் கணேஷ்வரி கியாஸ் அடுப்பை பற்ற வைத்து சமையல் செய்த போது எதிர்பாராதவிதமாக அவரது உடையில் தீ பிடித்தது. பலத்த தீக்காயங்களுடன் உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பின்னர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகே தீ விபத்தில் கணவருடன் கருகிய இளம்பெண் பலியானார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள செங்குளத்துப்பட்டியைச் சேர்ந்த காளீஸ்வரன் மனைவி நாகஜோதி (வயது 24). சென்னையை அடுத்துள்ள கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது நிஷாந்த் (5), நந்தகுமார் (3)என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    நேற்று வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்த போது ஏற்பட்ட தீ விபத்தில் காளீஸ்வரன் மற்றும் நாகஜோதி படுகாயமடைந்தனர். அருகில் இருந்த மகன் நந்தகுமாருக்கும் காயம் ஏற்பட்டது.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் கணவன்-மனைவி 2 பேரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். நேற்று இரவு சிகிச்சை பலனின்றி நாகஜோதி பலியானார். அவரது கணவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெண் மர்மசாவு தொடர்பாக அவரது கணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஊட்டி:

    ஊட்டி அருகே உள்ள கீழ் தொரையட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (37). ஊட்டியில் உள்ள தனியார் ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும் இடுஹட்டி கிராமத்தை சேர்ந்த சோபனா (26) என்பவருக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சச்சின் (5) என்ற மகன் உள்ளார்.

    சோபனா வீட்டில் இருந்த படியே தையல் தொழில் செய்து வந்தார். கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. இதனால் சோபனா கணவரை பிரிந்து இடுஹட்டி கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார்.கடந்த 5 ஆண்டுகளாக அவர் அங்கு தங்கி இருந்தார். இரு வீட்டாரின் பேச்சு வார்த்தைக்கு பிறகு கடந்த 2 நாட்களுக்கு முன் சோபனா தனது கணவர் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.

    இந்த நிலையில் சோபனா வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து சோபனாவின் தந்தை ரவி தேனாடுகம்பை போலீசில் புகார் அளித்தார்.

    அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

    இந்த நிலையில் சோபனாவின் உடல் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. அங்கு திரண்ட சோபனாவின் உறவினர்கள் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறினர்.

    அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். சோபனா மரணம் குறித்து சமூக நலத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்றனர். இதனை ஏற்று கொண்ட உறவினர்கள் சோபனா உடலை பெற்று சென்றனர்.

    இந்த நிலையில் சோபனாவின் கணவர் பிரபு, அவரது தந்தை மணி, தாய் சின்னரோசி, சகோதரர் முருகேஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வரதட்சணை கொடுமை, துன்புறுத்துதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    ×