search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் அருகே ரெயிலில் தவறி விழுந்து இளம்பெண் பலி
    X

    கோப்பு படம்.

    திண்டுக்கல் அருகே ரெயிலில் தவறி விழுந்து இளம்பெண் பலி

    • இன்று காலை திண்டுக்கல் அருகே உள்ள செல்லமந்தாடி பகுதியில் வந்தபோது ரெயிலில் இருந்து ஒரு இளம்பெண் தவறி விழுந்தார்.
    • அவரது அடையாள அட்டையை வைத்து பார்த்தபோது அவர் ஆந்திராவைச் சேர்ந்த பெண் என தெரிய வந்தது.

    திண்டுக்கல்:

    மும்பையில் இருந்து நாகர்கோவில் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டு இருந்தது. இந்த ரெயில் இன்று காலை திண்டுக்கல் அருகே உள்ள செல்லமந்தாடி பகுதியில் வந்தபோது ரெயிலில் இருந்து ஒரு இளம்பெண் தவறி விழுந்தார்.

    உடனடியாக அருகில் இருந்தவர்கள் இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவரது அடையாள அட்டையை வைத்து பார்த்தபோது அவர் ஆந்திராவைச் சேர்ந்த பெண் என தெரிய வந்தது.

    கைலாஷ் கன்வார் என்ற அந்த பெண்ணின் கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இறந்த பெண்ணின் உடல் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    Next Story
    ×