search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையநல்லூரில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர்- இளம்பெண் பலி
    X

    விபத்தை ஏற்படுத்திய பஸ்சையும், பலியான வாலிபரையும் படத்தில் காணலாம்.

    கடையநல்லூரில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர்- இளம்பெண் பலி

    • விக்னேஷ் மனைவி அகிலா அய்யப்பன் என்பவருடன் மோட்டார் சைக்கிளிலில் சென்று உள்ளார்.
    • அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அருகே உள்ள மங்களாபுரத்தை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி அகிலா (19).

    தீபாவளியை யொட்டி நேற்று அவர் தென்காசி மங்கம்மா சாலையை சேர்ந்த அய்யப்பன் என்பவருடன் மோட்டார் சைக்கிளிலில் சென்று உள்ளார்.

    கடையநல்லூர் அருகே அச்சம்பட்டியில் மதுரை- தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது கொல்லம் நோக்கி சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடையநல்லூர் போலீசார் 2 பேரின் உடலையும் கைப்பற்றி கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக அரசு பஸ்சை ஓட்டி வந்த ராஜபாளையம் சேத்தூரை சேர்ந்த டிரைவர் லாரன்ஸ் சேவியர் ராஜாவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×