என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "mango"
- கடந்த சில நாட்களாக அதிகளவில் மாம்பழங்கள் விற்பனைக்கு வரத் தொடங்கி உள்ளன.
- தினசரி 70-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சுமார் 250 டன் அளவிலான மாம்பழங்கள் குவிந்து வருகிறது.
போரூர்:
மாம்பழம் சீசன் தற்போது தொடங்கி உள்ளது. இதனால் சென்னையில் சாலையோரங்களில் மாம்பழக்கடைகள் அதிக அளவில் முளைத்து உள்ளன. அதிக அளவில் மாம்பழங்கள் குவித்து வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோயம்பேடு பழ மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் அதிக அளவில் மாம்பழங்கள் வருகிறது. கடந்த சில நாட்களாக அதிகளவில் மாம்பழங்கள் விற்பனைக்கு வரத் தொடங்கி உள்ளன. தினசரி 70-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சுமார் 250 டன் அளவிலான மாம்பழங்கள் குவிந்து வருகிறது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை 150 டன் மாம்பழங்கள் மட்டுமே விற்பனைக்கு வந்த நிலையில் தற்போது அதன் வரத்து 2மடங்காக அதிகரித்து உள்ளது. காலையிலேயே வெயில் வாட்டி எடுத்து வருவதால் மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் மாம்பழம் விற்பனை மந்தமாகவே நடந்து வருவதாக வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் மாம்பழம் விற்பனை விலை விபரம் வருமாறு (கிலோவில்) :-
பங்கனபள்ளி-ரூ.50-ரூ.80வரை, மல்கோவா-ரூ.120, இமாம்பசந்த்-ரூ.130-ரூ.170வரை, ஜவாரி-ரூ.60-ரூ.80வரை, செந்தூரா-ரூ.80, அல்போன்சா-ரூ.170.
- வழக்கமாக மார்ச் மாதம் 15-ந்தேதியில் இருந்து ஆகஸ்டு மாதம் வரை மாம்பழங்கள் வரத்து சேலம் மார்க்கெட்களுக்கு அதிக அளவில் இருக்கும்.
- சேலம் மார்க்கெட்டுக்கு தற்போது நாள் ஒன்றுக்கு 10 டன் அளவிற்கு மாம்பழங்கள் வரத்து உள்ளது.
சேலம்:
சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது தித்திக்கும் மாம்பழங்கள் தான். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் விளையும் மாம்பழங்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது.
குறிப்பாக சேலம் மாவட்டம் ஆத்தூர், வாழப்பாடி, கூட்டாத்துப்பட்டி, வரகம்பட்டி, காரிப்பட்டி, குப்பனூர், அயோத்தியாப்பட்டணம், நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், எடப்பாடி மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் மாம்பழங்கள் சேலம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த மாம்பழங்களுக்கு தனி சுவை உண்டு என்பதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள். மேலும் ஆன்லைன் விற்பனையும் நடைபெறுகிறது.
வழக்கமாக மார்ச் மாதம் 15-ந்தேதியில் இருந்து ஆகஸ்டு மாதம் வரை மாம்பழங்கள் வரத்து சேலம் மார்க்கெட்களுக்கு அதிக அளவில் இருக்கும். ஆனால் இந்தாண்டு பருவம் தவறி பெய்த மழையால் மாங்காய் உற்பத்தி கடுமையாக குறைந்தது. இதனால் சேலம் மார்க்கெட்களுக்கு கடந்த மாதம் மாங்காய் வரத்து மிகவும் குறைவாக இருந்தது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து சேலம் மார்க்கெட்களுக்கு மாம்பழங்கள் வரத்து சற்று அதிகரித்துள்ளது. குறிப்பாக சேலம் பெங்களூரா, சேலம் குண்டு, மல்கோவா, நீலம், இமாம்பசந்த், பங்கணப்பள்ளி உள்பட சில ரகங்கள் மட்டும் மார்க்கெட்களுக்கு வருகிறது.
சேலம் மார்க்கெட்டுக்கு தற்போது நாள் ஒன்றுக்கு 10 டன் அளவிற்கு மாம்பழங்கள் வரத்து உள்ளது. ஆனாலும் சேலம் மாநகர தெருக்களில் மாம்பழ விற்பனை அதிக அளவில் வரவில்லை. இதனால் மாம்பழங்கள் தற்போது ஒரு கிலோ 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால் பொது மக்கள் குறைந்த அளவே மாம்பழங்களை வாங்கி செல்கிறார்கள்.
இது குறித்து சேலத்தை சேர்ந்த மாம்பழ வியாபாரி ஒருவர் கூறுகையில், சேலம் மார்க்கெட்களில் கடந்த ஆண்டு இதே நாளில் 30 முதல் 40 டன் வரை மாம்பழங்கள் வரத்து இருந்தது. ஆனால் இந்தாண்டு தற்போது மாம்பழ வரத்து 10 டன்னாக அதிகரித்துள்ளது. பெரும்பாலான மாமரங்களில் பூத்த பூக்கள் உதிர்ந்துள்ளது. இதனால் தற்போது மாம்பழ வரத்து உடனடியாக அதிக அளவில் அதிகரிக்க வாய்ப்பில்லை, அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து மாம்பழ வரத்து சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்போது விலையும் குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தயிர் ஒரு குளிரூட்டியாக அறியப்படுகிறது.
- மீனுடன் தயிர் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
கோடை காலம் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் உடல் உஷ்ணத்தை குறைப்பதற்கும், உடலில் குளிர்ச்சித்தன்மையை தக்கவைப்பதற்கும் பலரும் மதிய உணவுடன் தயிரையும் சேர்த்து உட்கொள்ள விரும்புவார்கள். தயிரில் உள்ள பாக்டீரியாக்கள் செரிமான செயல்பாட்டுக்கு உதவக்கூடியவை.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் வைட்டமின்களும், தாதுக்களும் தயிரில் நிறைந்துள்ளன. உண்ணும் மற்ற உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்துகளையும் உடல் விரைவாக உறிஞ்சுவதற்கு தயிர் உதவும். அதே வேளையில் தயிருடன் சில உணவுகளை சேர்த்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். தயிருடன் தவிர்க்கவேண்டிய அத்தகைய உணவுகளில் சில உங்கள் கவனத்திற்கு...
மாம்பழம்:
மாம்பழம் வெப்பத்தன்மை கொண்டது. தயிர் குளிரூட்டியாக அறியப்படுகிறது. இவை இரண்டையும் ஒன்றாக சேர்க்கும்போது செரிமான செயல்பாட்டில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும். சரும பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். மேலும் இந்த இரண்டு உணவுகளும் சேர்ந்து உடலில் நச்சுகளை உண்டாக்கும்.
பால்:
பால் மற்றும் தயிரை சேர்த்து உட்கொள்வது அசிடிட்டி, நெஞ்செரிச்சல் மற்றும் வீக்கம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஏனெனில் இந்த இரண்டு பால் பொருட்களிலும் கொழுப்பு மற்றும் புரதம் உள்ளன.
மீன்:
மீனுடன் தயிர் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை இரண்டும் புரதச்சத்து நிறைந்தவை. மீன் விலங்கு வகை புரதமாகவும், தயிர் காய்கறி வகை புரதமாகவும் கருதப்படுகிறது. இந்த இரண்டு புரதங்களும் ஒன்றாக இணைந்தால் அதனை ஜீரணிப்பது உடலுக்கு கடினமாகிவிடும். அத்துடன் இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் வயிறு தொடர்பான பிரச்சினைகளும் ஏற்படும்.
எண்ணெய் உணவுகள்:
பூரி உள்பட எண்ணெயில் பொரித்த உணவுகளுடன் தயிர் சேர்த்து உட்கொள்வது, செரிமான செயல்முறையை மெதுவாக்கும். நாள் முழுவதும் சோம்பலாக உணர வைக்கும். அதனால் எண்ணெய் வகை உணவுகள் மற்றும் தயிரை ஒருபோதும் ஒன்றாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என்று உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
வெங்காயம்:
மாம்பழத்தைப் போலவே, வெங்காயமும் இயற்கையாகவே சூடான பொருளாக அறியப்படுகிறது. இந்த இரண்டு உணவுகளையும் ஒன்றாக சேர்க்கும்போது பலருக்கு ஒவ்வாமை பிரச்சினைகளை உண்டாக்கும். சொறி, தோல் அழற்சி, சொரியாசிஸ் போன்ற தோல் சார்ந்த பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.
- இனி வரும் நாட்களில் மாங்காய் வரத்து படிப்படியாக அதிகரித்து மார்ச் மாத இறுதியில் அதிக அளவில் மாங்காய்கள் வரத்து இருக்கும்
- பூக்கள் குறைவாகவே பூத்துள்ளது. இதனால் மாம்பழ வரத்து கடந்த ஆண்டை விட குறைவாகவே இருக்கும்.
சேலம்:
சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது தித்திக்கும் சுவையுடய மாம்பழங்கள் தான், அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உற்பத்தி யாகும் மாம்ப ழங்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது.
குறிப்பாக சேலம் மாவ ட்டத்தில் வாழப்பாடி, ஆத்தூர், குப்பனூர், காரிப்பட்டி அயோத்தியாப்பட்டனம், ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, எடப்பாடி பகுதிகளில் அதிக அளவில் மாமரங்கள் உள்ளன. இந்த மாம்பழங்கள் சேலம் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வரப்பட்டு உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படும்,
மேலும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இங்கு விளையும் மாம்பழங்களுக்கு தனி சுவை உண்டு என்பதால் உலகம் முழுவதும் உள்ள வியாபாரிகள் அதனை போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள்.
சேலம் மார்க்கெட்டுகளுக்கு வழக்கமாக பிப்ரவரி மாத இறுதியில் மாம்பழ சீசன் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை மாம்பழங்கள் வரத்து இருக்கும், இந்தாண்டு பருவம் தவறிய மழை பெய்ததால் மாம்பழம் வரத்து 20 நாட்கள் காலதாமதமாகி உள்ளது.
தற்போது தான் சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாம்பழ வரத்து தொடங்கி உள்ளது. குறிப்பாக இமாம்பசந்த், சேலம்-பெங்களூரா, சேலம் குண்டு, கிளிமூக்கு பழங்கள் மா ர்க்கெட்டுகளுக்கு வரதொடங்கி உள்ளன. தற்போது நாள் ஒன்றுக்கு 2 டன் வரை மாங்காய்கள் சேலம் மார்க்கெட்களுக்கு வரத்தொடங்கி உள்ளது. இனி வரும் நாட்களில் மாங்காய் வரத்து படிப்படியாக அதிகரித்து மார்ச் மாத இறுதியில் அதிக அளவில் மாங்காய்கள் வரத்து இருக்கும், அப்போது குறிப்பாக சேலம் சின்ன கடை வீதி, பெரிய கடை வீதி, ஏற்காடு ரோடு, செவ்வாய்ப்பேட்டை, கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை உள்பட பல பகுதி களில் மாம்பழங்கள் கடைகளிலும் தள்ளுவண்டிகளிலும் வைத்து விற்கப்படும். இதனால் எங்கு பார்த்தலும் மாம்பழ மனம் வீசும்.
தற்போது கடை வீதி மற்றும் சேலத்தில் உள்ள மார்க்கெட்டுகள், உழவர் சந்தைகள், பழக்கடைகள், தள்ளுவண்டி கடைகளில் மாங்காய்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த மாம்பழங்கள் ஒரு கிலோ 100 முதல் 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. இனி வரும் நாட்களில் மாம்பழ வரத்து படிப்படியாக அதிகரிக்கும்.
இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், நடப்பாண்டில் காலம் கடந்து பெய்த மழையால் 20 நாட்கள் காலதாமதமாக மாம்பழ சீசன் தொடங்கி உள்ளது. இன்னும் 20 நாட்களில் மாம்பழ சீசன் உச்சம் பெறும். ஆனாலும் வழக்கத்தை விட இந்தாண்டு மாந்தளிர் தான் அதிகம் உள்ளது. பூக்கள் குறைவாகவே பூத்துள்ளது. இதனால் மாம்பழ வரத்து கடந்த ஆண்டை விட குறைவாகவே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
- ஊட்டச்சத்துகளை குடல் உடனடியாக உறிஞ்சிவிடும்.
- வாழைப்பழத்தில் பொட்டாசியமும் அதிகம் நிறைந்திருக்கும்.
காலையில் வயிறு காலியாக இருக்கும்போது உண்ணும் உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்துகள் துரிதமாக உறிஞ்சப்பட்டுவிடும். குறிப்பாக பழங்களை வெறும் வயிற்றில் உட்கொள்ளும்போது அதில் இருக்கும் ஊட்டச்சத்துகளை குடல் உடனடியாக உறிஞ்சிவிடும். உடலின் அனைத்து உள் உறுப்புகளுக்கும் சத்துகளை கடத்தி உடலுக்கு தேவையான ஆற்றலை உடனடியாக கொடுப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவிடும். காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 10 பழங்கள் குறித்து பார்ப்போம்.
1. வாழைப்பழம்:
வாழைப்பழம் எளிதில் ஜீரணமாகக்கூடியது. மேலும் இதிலிருக்கும் இயற்கையான சர்க்கரை, உடலுக்கு விரைவான ஆற்றலை அளிக்கும். வாழைப்பழத்தில் பொட்டாசியமும் அதிகம் நிறைந்திருக்கும். அது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
2. தர்பூசணி:
தர்பூசணி அதிக நீர்ச்சத்து கொண்டது. கலோரிகளும் குறைவாகவே இருக்கும். வளர்சிதை மாற்றத்துக்கும் வித்திடும்.
3. பப்பாளி:
பப்பாளியில் பப்பைன் போன்ற நொதிகள் நிறைந்துள்ளன. அவை செரிமானத்திற்கு உதவும். மலச்சிக்கல் பிரச்சினைக்கும் நிவாரணம் தரும். அத்துடன் வைட்டமின்கள் ஏ, சி போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகளும் பப்பாளியில் உள்ளன. அவை ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் வலு சேர்க்கக்கூடியவை.
4. ஆரஞ்சு:
வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் ஆரஞ்சு பழத்தில் மிகுந்திருக்கும். அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், செரிமான செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவிடும். வளர்சிதை மாற்ற செயல்பாடுகளையும் துரிதப்படுத்தும்.
5. ஆப்பிள்:
ஆப்பிளில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவி செய்யும். செரிமானம் சீராக நடைபெறவும் துணை புரியும். மேலும் ஆப்பிளில் இருக்கும் இயற்கை சர்க்கரை, உடலுக்கு தேவையான ஆற்றலை வெளியிடவும் உதவிடும்.
6. அன்னாசி:
அன்னாசி பழத்தில் புரோமெலைன் என்னும் நொதி உள்ளது. இது செரிமானத்திற்கு உதவும். வீக்கத்தையும் குறைக்கும்.
7. மாம்பழம்:
வைட்டமின்கள், நார்ச்சத்துகள் மாம்பழத்தில் மிகுந்திருக்கும். அவை அன்றைய நாளை உற்சாகத்துடன் தொடங்குவதற்கு உதவி செய்யும்.
8. பெர்ரி:
ஸ்ட்ராபெர்ரி, புளூபெர்ரி போன்ற பெர்ரி வகை பழங்களில் ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருக்கின்றன. வைட்டமின்களும், நார்ச்சத்துகளும் அதிகம் நிரம்பியுள்ளன. அறிவாற்றல் திறனுக்கும், இதய நலனுக்கும் வலு சேர்க்கும்.
9. கிவி:
கிவி பழத்தில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளன. இவை செரிமானத்திற்கும் நலம் பயக்கும்.
10. திராட்சை:
திராட்சையில் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. உடலுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கக்கூடியது.
- பலரும் மாம்பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள்
- சில சமயங்களில் செரிமான நொதிகள் சரியாக சுரக்கப்படுவதில்லை.
நாட்டின் பல பகுதிகளில் வெப்ப அலைகள் அதிகரித்து வருவதன் காரணமாக உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். சரியான ஊட்டச்சத்து கொண்ட உணவுகளையும், நீர்ச்சத்துமிக்க உணவுப் பொருட்களையும் உட்கொள்வது உடலில் எலக்ரோலைட் அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும், வெப்பத்தாக்கத்தில் இருந்து பாதுகாக்கவும் உதவும். கோடை காலத்தில் பலரும் செரிமான பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள். தர்பூசணி, முலாம்பழம், மாம்பழம் போன்ற பருவ கால பழங்களை உட்கொள்வது செரிமானத்திற்கு உதவும். நீரிழப்பை தடுக்கும்.
கோடை காலத்தில் பலரும் மாம்பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள். அதனை சரியான நேரத்தில், சரியான அளவில் சாப்பிடுவது முக்கியம். இல்லாவிட்டால் உடல் உபாதை பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும். மதிய உணவுக்கு பிறகு மாம்பழம் சாப்பிடுவதன் மூலம் பல நன்மைகளை பெறலாம்.
இதுகுறித்து உணவியல் நிபுணர் மன்பிரீத் கல்ரா, ''நாம் உண்ணும் உணவு சிக்கலின்றி செரிமானத்திற்கு உள்ளாக வேண்டும். கல்லீரலில் சுரக்கும் ஒரு வகை திரவம், செரிமான நொதிகள் மற்றும் வயிற்றில் சுரக்கப்படும் அமிலம் போன்றவை மூலம் உணவு உடைக்கப்படும்.
சில சமயங்களில் செரிமான நொதிகள் சரியாக சுரக்கப்படுவதில்லை. அதனால் செரிமானம் சரியாக நடைபெறாது. அதன் காரணமாக வாயுத் தொல்லை, வயிறு வீக்கம் போன்ற பிரச்சினைகள் உருவாகும். மாம்பழங்களில் அமிலேஸ், புரோட்டீஸ், லிபேஸ் போன்ற செரிமான நொதிகள் உள்ளன. அவை உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகளை உடைக்கவும், வாயுத் தொல்லை, வயிறு வீக்கம் போன்ற செரிமான கோளாறுகளை தடுக்கவும் உதவுகின்றன.
மேலும் மாம்பழத்தில் நார்ச்சத்து உள்ளது. அது குடல் இயக்கத்தையும், ரத்தத்தில் சர்க்கரை அளவையும் ஒழுங்குபடுத்தும். மலச்சிக்கலையும் தடுக்கும். எனவே உணவு உட்கொண்ட பிறகு மாம்பழம் சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவும்'' என்று தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மாம்பழத்தில் நிறைந்துள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நீரிழிவு நோயை தடுக்க உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும் மாம்பழத்தில் அதிகம் உள்ளன. அவை இதயம் மற்றும் கண் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடியவை.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- பீகாரில் மாம்பழ சீசன் களை கட்டி உள்ள நிலையில் தோட்டக்கலை இயக்குனரகம், வேளாண்மை துறையால் மாம்பழம் உண்ணும் போட்டி நடத்தப்பட்டுள்ளது.
- மேற்கு சம்பாரன் தொட்டியா பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போட்டியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடும் பழங்களில் மாம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. குறிப்பாக கோடை காலத்தில் மாம்பழங்கள் விற்பனை அதிகமாக இருக்கும்.
பீகாரில் மாம்பழ சீசன் களை கட்டி உள்ள நிலையில் தோட்டக்கலை இயக்குனரகம், வேளாண்மை துறையால் மாம்பழம் உண்ணும் போட்டி நடத்தப்பட்டுள்ளது. அங்குள்ள மேற்கு சம்பாரன் தொட்டியா பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த போட்டியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
அவர்கள் முன்பு ஒரு தட்டில் நிறைய மாம்பழங்கள் வைத்திருந்தார்கள். அதை குறிப்பிட்ட நேரத்திற்குள் யார் சாப்பிட்டு முடிக்கிறார்களோ அவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்த போட்டி தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- பெட்டியின் மேல் பிரதமர் மோடி, நம்பர் 7, லோக் கல்யாண்மார்க் என்ற முகவரி பொறிக்கப்பட்டு இருந்தது.
- பிரதமர் மோடிக்கு இந்த ஆண்டு மம்தா பானர்ஜி 3 வகையான மாம்பழங்களை பரிசாக அனுப்பி உள்ளார்.
கொல்கத்தா:
அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக இருந்தாலும் பிரதமர் மோடியும், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் தனிப்பட்ட முறையில் நல்ல நட்புடன் பழகி வருகிறார்கள்.
அரசியலில் மாறுபட்ட கருத்துக்கள் வரும்போது எல்லாம் இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி பேசுவதும், அறிக்கை வெளியிடுவதும் உண்டு. என்றாலும் அவை அவர்களது நட்பை ஒருபோதும் சீர் குலைப்பது இல்லை.
நட்பை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் விளையும் அதிக ருசிக்கொண்ட மாம்பழ வகைகளை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைப்பது வழக்கமாகும். கடந்த பல ஆண்டுகளாக மாம்பழம் அனுப்புவதை மம்தா பானர்ஜி மறக்காமல் செய்து வருகிறார்.
அந்த வகையில் இந்த ஆண்டு நேற்று அவர் பிரதமர் மோடிக்கு மாம்பழம் பரிசு அனுப்பி வைத்தார். 4 கிலோ எடை கொண்ட பெட்டியில் அழகாக அலங்கரிக்கப்பட்டு அந்த மாம்பழங்கள் கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அந்த பெட்டியின் மேல் பிரதமர் மோடி, நம்பர் 7, லோக் கல்யாண்மார்க் என்ற முகவரி பொறிக்கப்பட்டு இருந்தது. அனுப்புபவர் முகவரியில் மம்தா பானர்ஜி , மேற்கு வங்காள முதல்-மந்திரி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
பிரதமர் மோடிக்கு இந்த ஆண்டு மம்தா பானர்ஜி 3 வகையான மாம்பழங்களை பரிசாக அனுப்பி உள்ளார். கிம்சாகர், பஸ்லி, லட்சுமண் பாக் ஆகிய 3 வகை மாம்பழங்கள் இந்த ஆண்டு பரிசு பெட்டியில் இடம் பெற்றுள்ளன.
பிரதமர் மோடிக்கு அனுப்பியது போல ஜனாதிபதி திரவுபதி முர்மு, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் ஆகியோருக்கும் மம்தா பானர்ஜி இந்த ஆண்டு மாம்பழ பெட்டிகளை பரிசாக அனுப்பி உள்ளார். ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது பற்றி கடுமையாக விமர்சனம் செய்த மம்தா பானர்ஜி அடுத்த நாளே மாம்பழம் பரிசு அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மம்தா பானர்ஜி போல வங்கதேச பிரதமர் ஷேக் ஹஜினாவும் ஆண்டு தோறும் இந்திய தலைவர்களுக்கு மாம்பழம் அனுப்புவதை வழக்கத்தில் வைத்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களுக்கு 2,600 கிலோ மாம்பழங்கள் அனுப்பி இருந்தார்.
- தோல்வியடைந்த லக்னோ அணியையும், நவீன் உல் ஹக்கையும் ரசிகர்கர் கிண்டல் செய்து வருகின்றனர்.
- ரசிகர்கள் மட்டுமின்றி ஸ்விகி வரை லக்னோ அணி வீரர்களை கிண்டல் செய்து டுவிட் செய்துள்ளது.
சென்னை:
ஐபிஎல் 2023 சீசன் வரும் 28-ந் தேதியுடன் முடியவடைய உள்ளது. இறுதி போட்டிக்கு முதல் அணியாக சென்னை தகுதி பெற்றது. இதனையடுத்து நாளை நடைபெறவுள்ள குவாலிபையர் 2-ல் மும்பை- குஜராத் அணிகள் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
இந்த சீசனில் அதிகமாக பேசப்படும் ஒரு விஷயாமாக மாம்பழம் உள்ளது. மாம்பழம் சீசன் கேள்விபட்டிருக்கோம். ஆனால் ஐபிஎல் தொடர்ல இது மாம்பழம் சீசனா மாறியிருக்கு என்று சொல்லலாம்.
இந்த மாம்பழல் சீசன் தொடங்க முக்கிய காரணமாக இருந்தவர், லக்னோ அண்யின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் ஆவர். அவர் பெங்களூரு அணிக்கு எதிராக மோதிய போது விராட் கோலியுடன் மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து லக்னோ அணிக்கு எதிராக சிறப்பாக ஆடிய வீரர்களை இன்ஸ்டாகிராமில் விராட் கோலி பாராட்ட, இன்னொரு பக்கம் விராட் கோலி டக் அவுட்டானதை நவீன் உல் ஹக் மாம்பழங்களுடன் கொண்டாடினார். இது ரசிகர்களிடையே கோபத்தை உண்டாக்கியது. இதன் காரணமாக விராட் கோலி ரசிகர்கள், நவீன் உல் ஹக் எங்கு சென்றாலும் கோலி பெயரை சொல்லி கோஷம் எழுப்பினர்.
இந்த நிலையில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் நவீன் உல் ஹக் 38 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இறுதியில் மும்பை அணியிடம் தோல்வியடைந்த லக்னோ அணியையும், அந்த அணியின் நவீன் உல் ஹக்கையும் மாம்பழங்கள் மூலமாக ரசிகர்களும் கிண்டல் செய்து வருகின்றனர்.
ரசிகர்கள் மட்டுமின்றி ஸ்விகி வரை லக்னோ அணி வீரர்களை கிண்டல் செய்து டுவிட் செய்துள்ளது. இந்த டுவிட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Guys tension mat lo, we have started restocking tissues in Lucknow ?
— Swiggy Instamart (@SwiggyInstamart) May 24, 2023
அதில் லக்னோ அணி வீரர்களே டென்சன் வேண்டாம். லக்னோவில் டிஸ்யூ பேப்பர் ரெடி பன்ன ஆரம்பித்து விட்டோம் என பதிவிட்டிருந்தனர்.
- மதுரையில் சீசனையொட்டி மாம்பழம் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.
- கிலோ ரூ. 50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மதுரை
முக்கனிகளில் ஒன்று மாம்பழம். தற்போது மாம்பழ சீசன் தொடங்கி யுள்ள நிலையில் மதுரையில் மாம்பழ வியாபாரம் களை கட்டியுள்ளது.
மாம்பழ உற்பத்தியில் புகழ் பெற்றது சேலம். தற்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதையொட்டி மதுரைக்கு மாம்பழ வரத்து அதிக ரித்துள்ளது.
பெரிய பழக்கடைகள் முதல் சாலையோர கடைகளிலும் மாம்பழம் விற்பனை செய்யப்படுகிறது. இதுமட்டுமின்றி வாகனங்க ளில் கொண்டு சென்று மக்கள் கூறும் பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை அனைத்து தரப்பு மக்களும் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். நடமாடும் வாகனங்களில் 3 கிலோ மாம்பழம் ரூ. 100க்கு விற்பனை செய்யப்படு கிறது. சாலையோர கடை களிலும் கிலோ ரூ. 50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பல ரக மாம்பழங்கள் கிடைப்பதால் அதிக சுவையான மாம்பழம் எது என்பதை அறிந்து அதனை பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை மாம்பழங்களை வாங்கி வருகின்றனர்.
சிலர் ரசாயன கற்கள் வைத்து பழுக்க வைக்கின்ற னர். இதனால் உடல் நல பாதிப்பு ஏற்படும் என்பதால் சிலர் மாம்பழங்களை வாங்கு வதை தவிர்க்கின்றனர்.
- கடந்த மாதம் சீசன் தொடங்கியபோது தினசரி 100 டன் அளவுக்கு மட்டுமே மாம்பழங்கள் விற்பனைக்கு வந்தது.
- வரத்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது 200-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தினசரி 500 டன் வரை மாம்பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகிறது.
போரூர்:
மாம்பழம் சீசன் காரணமாக தற்போது சென்னையில் உள்ள பல்வேறு முக்கிய சாலையோரங்களில் ஏராளமான பழக்கடைகள் முளைத்து உள்ளது.
மேலும் வீடு தேடி தெருக்களில் மூன்று சக்கர தள்ளுவண்டிகளில் மாம்பழங்களை வியாபாரிகள் கூவி கூவி விற்பனை செய்து வருகின்றனர்.
கோயம்பேடு பழ மார்க்கெட்டுக்கு திருவள்ளூர், சேலம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து மாம்பழங்கள் தினசரி விற்பனைக்கு வருகிறது.
கடந்த மாதம் சீசன் தொடங்கியபோது தினசரி 100 டன் அளவுக்கு மட்டுமே மாம்பழங்கள் விற்பனைக்கு வந்தது. பின்னர் படிப்படியாக வரத்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது 200-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தினசரி 500 டன் வரை மாம்பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகிறது. இதனால் மாம்பழம் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. பங்கனப்பள்ளி ரூ.35-க்கும், ஜவாரி ரூ.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைவால் பொதுமக்கள் அதிக அளவு மாம்பழங்களை வாங்கி செல்கிறார்கள்.
கோயம்பேடு மார்க்கெட்டில் மாம்பழம் விற்பனை விலை (கிலோவில்) வருமாறு:- பங்கனப்பள்ளி-ரூ.25 முதல் ரூ.35 வரை, இமாம்பசந்த்-ரூ.80 முதல் ரூ.100 வரை, செந்தூரா-ரூ.20 முதல் ரூ.30 வரை, மல்கோவா-ரூ.60 முதல் ரூ.70 வரை, அல்போன்சா-ரூ.40 முதல் ரூ.60 வரை, ஜவாரி-ரூ.40 முதல் ரூ.50-வரையும் விற்கப்படுகிறது.
இந்தியாவில் மாம்பழ உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மாமரங்கள் அதிக அளவில் உள்ளன.
குறிப்பாக தமிழகத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அல்போன்சா, மல்கோவா, இமாம்பசந்த், பங்கணப்பள்ளி, செந்தூரா சேலம்- பெங்களூரா, சேலம் குண்டு, நடுசாலை, குதாதத் உள்பட பல்வேறு வகையான மாம்பழங்கள் அதிக அளவில் விளைகிறது.
இந்த மாம்பழங்கள் இந்தியாவின் பல பகுதிகளுக்கும், மற்றும் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, துபாய், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பருவம் தவறிய மழையால் நடப்பாண்டு விளைச்சல் சற்று குறைவாக தான் உள்ளது.
ஆனாலும் கடந்த வாரங்களை விட தற்போது சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாங்காய்கள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சேலம் மார்க்கெட்கள், கடைகளில் மாம்பழங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் தள்ளுவண்டி கடைகள், சாலையோர கடைகளிலும் மாம்பழங்கள் குவித்து வைத்து விற்பனை செய்யப்படுகிறது. தற்போது சீசன் உச்சம் அடைந்துள்ளதால் விலையும் சற்று குறைந்துள்ளது. பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள்.
மேலும் ஏற்காடு கோடை விழா தொடங்கி உள்ளதால் வெளியூர்களில் இருந்து ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். இதனால் விற்பனை மேலும் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து சேலத்தை சேர்ந்த வியாபாரிகள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் வரகம்பாடி, அடிமலை புதூர், அயோத்தியாப்பட்டணம், நங்கவள்ளி, தாரமங்கலம், ஜலகண்டாபுரம், மேச்சேரி, பேளூர், நீர்முள்ளிக்குட்டை, கூட்டாத்துப்பட்டி, ஏற்காடு அடிவாரம், தும்பல், கருமந்துறை, வாழப்பாடி, மேட்டூர், காமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் இதைத் தவிர நாமக்கல், மாவட்டம், சேந்தமங்கலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மாமரங்கள் அதிக அளவில் உள்ளன.
இந்த பகுதிகளில் பறிக்கப்படும் மாங்காய்கள் சேலம் மார்க்கெட்டுக்கும், தமிழகத்தில் பிற இடங்களுக்கும் அனுப்பப்படுகிறது. குறிப்பாக சேலத்தில் இருந்து வட மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு மல்கோவா, குண்டு, சேலம் பெங்களூரா, செந்தூரா, குதாதத், கிளிமூக்கு மாங்காய் வரத்து அதிகமாக உள்ளது. மேலும் கடந்த 15-ந் தேதிக்கு மேல் சீசன் உச்சக்கட்டமாக இருப்பதால் மாங்காய் வரத்து 80 முதல் 90 டன்னாக உயர்ந்துள்ளது.
தற்போது சீசன் களை கட்டியுள்ளதால் சேலத்தில் இருந்து வெளி ஊர் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் அதிக அளவில் பார்சல் அனுப்பப்படுகிறது. ஒரு கிலோ மாம்பழம் ரகத்தை பொறுத்து ரூ. 50 முதல் ரூ. 130 வரை விற்கப்படுகிறது.
இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்