search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பால் பொருட்கள்"

    • தயிர் ஒரு குளிரூட்டியாக அறியப்படுகிறது.
    • மீனுடன் தயிர் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    கோடை காலம் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் உடல் உஷ்ணத்தை குறைப்பதற்கும், உடலில் குளிர்ச்சித்தன்மையை தக்கவைப்பதற்கும் பலரும் மதிய உணவுடன் தயிரையும் சேர்த்து உட்கொள்ள விரும்புவார்கள். தயிரில் உள்ள பாக்டீரியாக்கள் செரிமான செயல்பாட்டுக்கு உதவக்கூடியவை.

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் வைட்டமின்களும், தாதுக்களும் தயிரில் நிறைந்துள்ளன. உண்ணும் மற்ற உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்துகளையும் உடல் விரைவாக உறிஞ்சுவதற்கு தயிர் உதவும். அதே வேளையில் தயிருடன் சில உணவுகளை சேர்த்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். தயிருடன் தவிர்க்கவேண்டிய அத்தகைய உணவுகளில் சில உங்கள் கவனத்திற்கு...

     மாம்பழம்:

    மாம்பழம் வெப்பத்தன்மை கொண்டது. தயிர் குளிரூட்டியாக அறியப்படுகிறது. இவை இரண்டையும் ஒன்றாக சேர்க்கும்போது செரிமான செயல்பாட்டில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும். சரும பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். மேலும் இந்த இரண்டு உணவுகளும் சேர்ந்து உடலில் நச்சுகளை உண்டாக்கும்.

     பால்:

    பால் மற்றும் தயிரை சேர்த்து உட்கொள்வது அசிடிட்டி, நெஞ்செரிச்சல் மற்றும் வீக்கம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஏனெனில் இந்த இரண்டு பால் பொருட்களிலும் கொழுப்பு மற்றும் புரதம் உள்ளன.

     மீன்:

    மீனுடன் தயிர் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை இரண்டும் புரதச்சத்து நிறைந்தவை. மீன் விலங்கு வகை புரதமாகவும், தயிர் காய்கறி வகை புரதமாகவும் கருதப்படுகிறது. இந்த இரண்டு புரதங்களும் ஒன்றாக இணைந்தால் அதனை ஜீரணிப்பது உடலுக்கு கடினமாகிவிடும். அத்துடன் இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் வயிறு தொடர்பான பிரச்சினைகளும் ஏற்படும்.

     எண்ணெய் உணவுகள்:

    பூரி உள்பட எண்ணெயில் பொரித்த உணவுகளுடன் தயிர் சேர்த்து உட்கொள்வது, செரிமான செயல்முறையை மெதுவாக்கும். நாள் முழுவதும் சோம்பலாக உணர வைக்கும். அதனால் எண்ணெய் வகை உணவுகள் மற்றும் தயிரை ஒருபோதும் ஒன்றாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என்று உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

     வெங்காயம்:

    மாம்பழத்தைப் போலவே, வெங்காயமும் இயற்கையாகவே சூடான பொருளாக அறியப்படுகிறது. இந்த இரண்டு உணவுகளையும் ஒன்றாக சேர்க்கும்போது பலருக்கு ஒவ்வாமை பிரச்சினைகளை உண்டாக்கும். சொறி, தோல் அழற்சி, சொரியாசிஸ் போன்ற தோல் சார்ந்த பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.

    • மன ஆரோக்கியத்திற்கும், உணவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
    • மன அழுத்தத்தை தூண்டக்கூடிய உணவுகளை தவிர்க்கவும்.

    நமது உடல் நலனில் உணவு எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கிறதோ, அதே அளவு நமது மன ஆரோக்கியத்திற்கும் உணவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மன அழுத்தம் மற்றும் பதட்டம் மீது உணவின் மீதான தாக்கத்தை புரிந்து கொள்வது அவசியம்.

    மன அழுத்தத்தை தூண்டக்கூடிய உணவுகளை தவிர்க்கவும், அதே நேரத்தில் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் பெர்ரி பழங்கள், நட்ஸ் வகைகள், விதைகள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

    சரிவிகித உணவு, உணர்வு சீரமைப்பை ஆதரிக்கக் கூடிய குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் மற்றும் நமது ஒட்டுமொத்த மன ஆரோக்கியம் இந்த காலகட்டத்தின் முக்கியமான தேவையாக அமைகிறது. ஆகவே, மன அழுத்தத்தை குறைக்க உதவும் ஒரு சில உணவுகளின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.

     பெர்ரி பழங்கள்:

    பெர்ரி பழங்களில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட்கள் இருப்பதால் அவை செல் சேதத்தை தவிர்த்து மன அழுத்தத்தை போக்க உதவுகிறது.

     முந்திரி:

    முந்திரிப் பருப்பில் 14-20 சதவீதம் வரையிலான பரிந்துரைக்கப்பட்ட ஜிங்க் அளவு உள்ளது. இது பதட்டத்தை குறைப்பதற்கு பயனுள்ளதாக அமைகிறது.

     மெக்னீசியம் நிறைந்த உணவுகள்:

    சியா விதைகள், பூசணி விதைகள் மற்றும் முட்டைகளில் காணப்படும் மெக்னீசியம் மனநல மேம்பாட்டுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன.

     முட்டை:

    முட்டைகளில் நிறைந்து இருக்கக்கூடிய டிரிப்டோபேன், செரட்டோனின் உற்பத்தியை தூண்டுகிறது. இது நமது மனநிலையை மேம்படுத்துவதற்கு உதவும் ஒரு ஹார்மோன் ஆகும்.

     அவகேடோ:

    அவகேடோ என்று சொல்லப்படும் வெண்ணெய் பழத்தில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து வைட்டமின் சி மற்றும் பி6 நிறைந்துள்ளது. இது மன அழுத்தத்தை குறைப்பதற்கும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதற்கும் உதவுகிறது.

     பச்சை இலை காய்கறிகள்:

    பச்சை இலை காய்கறிகளில் நிறைந்து காணப்படும் ஃபோலேட் சத்து நியூரோ டிரான்ஸ்மிட்டர் உற்பத்திக்கு ஆதரவு தருவதன் மூலமாக பதற்றம் மற்றும் கவலை உணர்வை எதிர்த்துப் போராட உதவுகிறது.

     சால்மன்:

    சால்மன் மற்றும் மத்தி மீன்களில் வைட்டமின் டி சத்து அதிக அளவில் உள்ளது. இது பதட்டம் போன்ற மனநிலை சம்பந்தப்பட்ட கோளாறுகளில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு உதவுகிறது.

     பால் சார்ந்த பொருட்கள்:

    டிரிப்டோபேன், மெலடோனின் மற்றும் பி வைட்டமின்கள் உள்பட பால் சார்ந்த பொருட்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மன அழுத்தத்தை குறைத்து தூக்கத்தை வரவழைக்கிறது.

    • சுவிஸ் நாட்டின் சீஸ் மற்றும் பால் பொருட்கள் உலக புகழ் பெற்றது
    • மணியோசை, கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்றனர் பால் பண்ணையாளர்கள்

    மத்திய ஐரோப்பாவில் உள்ள இயற்கை எழில் நிறைந்த நாடு, சுவிட்சர்லாந்து.

    உலகளவில் புகழ் பெற்ற சுவிஸ் சீஸ் உட்பட பால் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள இந்நாட்டில், அதிகளவில் பால் பண்ணைகளிலும், பசுமாடுகள் வளர்ப்பதிலும் பண்டைய வழிமுறைகளே பின்பற்றப்படுகின்றன. பல கிராமங்களில் பால் பொருட்கள் தயாரிப்பில் பல தலைமுறைகளாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான வழிமுறைகளை தங்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக கருதுகின்றனர்.

    பசுக்களை வயல்வெளிகளிலும், மலைகளிலும் மேய்வதற்கு அனுப்பி விட்டு அவற்றின் நடமாட்டத்தை சரியாக மேற்பார்வை செய்ய பசுக்களின் கழுத்தில் மணிகள் தொங்க விடுவது அவர்களின் பரம்பரை வழக்கம். பசுக்களின் நடமாட்டத்தின் போது மிக மென்மையான ஓசையை எழுப்பும் இந்த மணிகள், இந்நாட்டின் ஒரு அடையாளமாக கருதப்படுகிறது.

    பனிமலை, பசுக்கள், வயல்வெளிகள், கிராமங்கள் என அனைத்து சுவிஸ் நாட்டின் அடையாளங்களும் கொண்டு சுமார் 4700 பேரை கொண்ட அந்நாட்டின் ஆர்வெஞ்சன் (Aarwangen) கிராமத்தில் ஒரு புது சிக்கல் எழுந்துள்ளது.

    சுவிட்சர்லாந்தில் வசிப்பவர்களில் 25 சதவீதத்தினருக்கும் மேல் வெளிநாட்டினர். அந்த கிராமத்தில் வசிக்கும் அவர்களில் சிலர், பல பசுமாடுகளின் கழுத்தில் கட்டியுள்ள மணிகளிலிருந்து ஒன்றாக எழும்பும் ஓசை ஒரே நேரத்தில் ஒலிப்பதால் இரவு உறக்கத்தை கெடுப்பதாக கிராம சபையில் புகாரளித்தனர். இரவு வேளைகளில் மட்டும் மணிகளை கழட்டி வைக்க உத்தரவிடுமாறும் கோரியிருந்தனர்.

    இதற்கு மறுப்பு தெரிவித்த கிராம மக்கள், "சுவிஸ் நாட்டின் தனித்தன்மை இந்த மென்மையான மணியோசை" என கூறி, கையெழுத்து இயக்கம் நடத்தி உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அனைவரின் கையொப்பமிட்ட எதிர்ப்பு கிராம சபையில் அளிக்கப்பட்டது.

    பலமான எதிர்ப்பை கண்ட புகார் அளித்தவர்களில் ஒருவர் புகாரை திரும்ப பெற்றுக்கொண்டார்; மற்றொருவர் வேறு இடத்திற்கு இடம் மாறி விட்டார்.

    உலகெங்கும் உள்ள பணக்காரர்களின் கருப்பு பணத்தை பதுக்க சுவிஸ் நாட்டில் உள்ள வங்கிகள்தான் முதல் புகலிடம் என நம்பப்படுகிறது. அந்த நாட்டில் ஒற்றுமையால் கலாச்சாரத்தை காப்பாற்ற முனைந்த சுவிஸ் பால் பண்ணையாளர்களின் மனஉறுதி சமூக வலைதளங்களில் பாராட்டப்பட்டு வருகிறது.

    ×