search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்விகி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொழில் நுட்பத்துறையில் நீடித்த பின்னடைவால் செலவுகளை குறைத்து மறுசீரமைக்க 'பேடிஎம்' மற்றும் 'பிளிப்கார்ட்' போன்றவற்றுடன் 'ஸ்விகி' இணைகிறது.
    • 'ஸ்விகி' நிறுவனம் உணவு விநியோக சந்தையில் அதிரடி மாற்றங்கள் செய்து வருகிறது.

    பிரபல உணவு டெலிவரி நிறுவனமான 'ஸ்விகி'யில் 400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 'ஸ்விகி' நிறுவனம் 380 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது.

    இந்நிலையில் தற்போது 'ஸ்விகி' நிறுவனம் இந்த ஆண்டில் மேலும் சுமார் 400 ஊழியர்களை அதாவது பணியாளர்களில் 7 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் பெங்களூருவை மையமாக கொண்டு இயங்கி வரும் 'ஸ்விகி' நிறுவனம் தற்போது 2-வது முறையாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கி உள்ளது.


    தொழில் நுட்பத்துறையில் நீடித்த பின்னடைவால் செலவுகளை குறைத்து மறுசீரமைக்க 'பேடிஎம்' மற்றும் 'பிளிப்கார்ட்' போன்றவற்றுடன் 'ஸ்விகி' இணைகிறது. இதைத்தொடர்ந்து 'ஸ்விகி' நிறுவனம் உணவு விநியோக சந்தையில் அதிரடி மாற்றங்கள் செய்து வருகிறது. அதன் அடிப்படையில் செலவின குறைப்பு நடவடிக்கையாக மேலும் 400 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர்.

    • ஐ.பி.எல். ஒட்டுமொத்த சீசனில் மட்டும் 1 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமான பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
    • ஒரு சைவ பிரியாணிக்கு சமமாக, 20 அசைவ பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    2 மாத காலமாக நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    ஐ.பி.எல். தொடரில் ஒவ்வொரு போட்டிகளும் ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக இருந்தது. போட்டிகளை வீட்டில் இருந்தே டி.வி., செல்போன்கள், இணையதளங்கள் மூலம் கண்டுகளித்த ரசிகர்கள், தங்களை உற்சாகப்படுத்தி கொள்ள பல்வேறு உணவு பொருட்களையும் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கி உள்ளனர்.

    போட்டிகளை பிரியாணி விருந்துடனும், பல்வேறு சுவையான உணவு பொருட்களை ஆர்டர் செய்து வாங்கி சுவைத்தும், திருவிழா போல கொண்டாடியது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஆன்லைன் உணவு டெலிவரி செயலியான ஸ்விகி டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவல் வைரலாகி வருகிறது.

    அதில், ஐ.பி.எல். ஒட்டுமொத்த சீசனில் மட்டும் 1 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமான பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    அதாவது நிமிடத்திற்கு 212 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு சைவ பிரியாணிக்கு சமமாக, 20 அசைவ பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஸ்விகியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் பிரியாணி முதலிடம் பிடித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இந்த சீசனில் கொல்கத்தாவில் ஒருவர் ஆர்டர் செய்த உணவை 77 வினாடிகளுக்குள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நகரங்களை பொறுத்தவரை பெங்களூருவில் தான் அதிகளவு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. பிரியாணி மட்டுமல்லாமல் சமோசா, ஷாக்கர், தாகி, ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களும் ஸ்விகியில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

    ஸ்விகி இன்ஸ்டா மார்ர்ட் மூலம் 2,423 காண்டங்களும் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 3,641 யூனிட் தாகி மற்றும் 720 யூனிட் ஷக்கர் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த ஒரு ரசிகர் மட்டும் 701 சமோசாக்களை ஆர்டர் செய்துள்ளார்.

    இது, இந்த சீசனில் தனி நபர் ஒருவர் அதிகம் ஆர்டர் செய்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஸ்விகியின் உணவு வினியோகிப்பாளர்கள் மொத்தம் 33 கோடி கிலோ மீட்டர்கள் இந்த சீசன் முழுவதும் பயணம் செய்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தோல்வியடைந்த லக்னோ அணியையும், நவீன் உல் ஹக்கையும் ரசிகர்கர் கிண்டல் செய்து வருகின்றனர்.
    • ரசிகர்கள் மட்டுமின்றி ஸ்விகி வரை லக்னோ அணி வீரர்களை கிண்டல் செய்து டுவிட் செய்துள்ளது.

    சென்னை:

    ஐபிஎல் 2023 சீசன் வரும் 28-ந் தேதியுடன் முடியவடைய உள்ளது. இறுதி போட்டிக்கு முதல் அணியாக சென்னை தகுதி பெற்றது. இதனையடுத்து நாளை நடைபெறவுள்ள குவாலிபையர் 2-ல் மும்பை- குஜராத் அணிகள் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

    இந்த சீசனில் அதிகமாக பேசப்படும் ஒரு விஷயாமாக மாம்பழம் உள்ளது. மாம்பழம் சீசன் கேள்விபட்டிருக்கோம். ஆனால் ஐபிஎல் தொடர்ல இது மாம்பழம் சீசனா மாறியிருக்கு என்று சொல்லலாம்.

    இந்த மாம்பழல் சீசன் தொடங்க முக்கிய காரணமாக இருந்தவர், லக்னோ அண்யின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் ஆவர். அவர் பெங்களூரு அணிக்கு எதிராக மோதிய போது விராட் கோலியுடன் மோதல் ஏற்பட்டது.

    இதையடுத்து லக்னோ அணிக்கு எதிராக சிறப்பாக ஆடிய வீரர்களை இன்ஸ்டாகிராமில் விராட் கோலி பாராட்ட, இன்னொரு பக்கம் விராட் கோலி டக் அவுட்டானதை நவீன் உல் ஹக் மாம்பழங்களுடன் கொண்டாடினார். இது ரசிகர்களிடையே கோபத்தை உண்டாக்கியது. இதன் காரணமாக விராட் கோலி ரசிகர்கள், நவீன் உல் ஹக் எங்கு சென்றாலும் கோலி பெயரை சொல்லி கோஷம் எழுப்பினர்.

    இந்த நிலையில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் நவீன் உல் ஹக் 38 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இறுதியில் மும்பை அணியிடம் தோல்வியடைந்த லக்னோ அணியையும், அந்த அணியின் நவீன் உல் ஹக்கையும் மாம்பழங்கள் மூலமாக ரசிகர்களும் கிண்டல் செய்து வருகின்றனர்.

    ரசிகர்கள் மட்டுமின்றி ஸ்விகி வரை லக்னோ அணி வீரர்களை கிண்டல் செய்து டுவிட் செய்துள்ளது. இந்த டுவிட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    அதில் லக்னோ அணி வீரர்களே டென்சன் வேண்டாம். லக்னோவில் டிஸ்யூ பேப்பர் ரெடி பன்ன ஆரம்பித்து விட்டோம் என பதிவிட்டிருந்தனர். 

    • ஸ்விகி உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு.
    • ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை, வேலூர், ஆரணி, குடியாத்தம் மாவட்டங்களை சேர்ந்த ஸ்விகி மூலம் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.

    உணவு மற்றும் இதர பொருட்கள் வினியோகிக்கும் ஊழியர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக சென்னை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உணவு டெலிவரி சேவை பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

    ஸ்விகி சேவையில் புதிதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் ஸ்லாட் முறையை திரும்ப பெற்று, ஏற்கனவே வழங்கிவந்த "டர்ன் ஒவர்" தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று ஸ்விகி உணவு டெலிவரி ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஸ்விகி ஊழியர்களுக்கு கோடைகாலத்தில் பணியாற்ற ஊக்கத் தொகை வழங்க வேண்டும்.
    • சுகியில் புதிதாக வந்தவர்கள் மட்டும் ஆர்டர்கள் கொடுக்கப்படுகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் ஸ்விகி ஊழியர்கள் உணவு விநியோகம் செய்வதை நிறுத்திவிட்டு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஊழியர்கள் கூறுகையில் ,

    ஸ்விகி ஊழியர்களுக்கு கோடைகாலத்தில் பணியாற்ற ஊக்கத் தொகை வழங்க வேண்டும். மேலும் இரவு நேரத்தில் கிராமப்புற பகுதிகளை சென்றால் வழிப்பறி விபத்து ஏற்படுகின்றனர். இதனால் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு இஎஸ்ஐ பிஎப் பிடித்தல் ஏற்படுத்த வேண்டும்.

    திருவள்ளூர் வட்டாரத்தில் 40 ஊழியர்கள் பணியாற்ற வந்தனர் தற்போது கூடுதலாக 40 பேர் நியமித்துள்ளனர். மேலும் வட்டத்திற்கு தனி மேலாளர்கள் நியமிக்க வேண்டும்.

    சுகியில் புதிதாக வந்தவர்கள் மட்டும் ஆர்டர்கள் கொடுக்கப்படுகின்றனர். பழைய ஊழியருக்கு ஆர்டர்கள் கொடுப்பதில்லை

    மேலும் எவ்வளவு வேலை பார்த்தாலும் சம்பளம் குறைவாகவே வழங்கப்படும். என்றனர்.

    திருவள்ளூர் வட்டாரத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு மூன்று ஆயிரத்துக்கு மேற்பட்ட டெலிவரிகள் செய்யப்பட்டு மூன்று லட்சம் வரை வருவாய் ஈட்டினர்.

    இந்த போராட்டத்தால் 3000க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் டெலிவரி செய்யப்படாமல் இருந்ததால் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகினார்கள்.

    • நாடு முழுவதும் ஒரு நிமிடத்திற்கு 137 பிரியாணி ஆர்டர் செய்யப்படுவதாக ஸ்விகி தெரிவித்துள்ளது.
    • அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட 10 ஸ்நாக்ஸ் பட்டியலில், 4 மில்லியன் ஆர்டர்களுடன் சமோசா முதலிடத்தில் உள்ளது.

    பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி, ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்கள் அதிகம் விரும்பி ஆர்டர் செய்த உணவு வகைகளை பட்டியலிட்டு வெளியிடுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியலை ஸ்விகி வெளியிட்டுள்ளது. அதில் இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்து சாப்பிட்ட உணவுகளில் பிரியாணி முதலிடத்தில் இருக்கிறது. ஸ்விகி பட்டியலில் பிரியாணி 7வது ஆண்டாக முதலிடத்தில் இருக்கிறது.

    ஒரு நிமிடத்திற்கு 137 பிரியாணி (ஒரு நொடிக்கு 2.28 பிரியாணி) நாடு முழுவதும் ஆர்டர் செய்யப்படுவதாக ஸ்விகி தெரிவித்துள்ளது. அதிகம் ஆர்டர் செய்த உணவுகளில் சிக்கன் பிரியாணியைத் தொடர்ந்து, மசாலா தோசை, சிக்கன் ப்ரைடு ரைஸ், பனீர் பட்டர் மசாலா, பட்டர் நான், வெஜ் பிரைட் ரைஸ், வெஜ் பிரியாணி, தந்தூரி சிக்கன் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதன்மூலம் இந்தியர்களிடையே பிரியாணிக்கு உள்ள மவுசு குறையவில்லை என்பது தெரிகிறது.

    அதேபோல் வெளிநாட்டு உணவுகளை வாங்கி உண்பதிலும் இந்தியர்கள் அதிக ஆர்வம் கொண்டிருப்பதை இந்த பட்டியல் காட்டுகிறது. இத்தாலிய பாஸ்தா, பீட்சா, மெக்சிகன் பவுல், ஸ்பைசி ராமென் மற்றும் சுஷி போன்ற உணவுகளை அதிக அளவில் ஆர்டர் செய்ததாக ஸ்விகி கூறியிருக்கிறது. இத்தாலிய உணவான ரவியோலி மற்றும் கொரிய உணவான பிபிம்பாப் ஆகியவை பிரபலமான வெளிநாட்டு உணவு வகைகளையும் நிறைய ஆர்டர் செய்துள்ளனர்.

    இந்த ஆண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட 10 ஸ்நாக்ஸ் பட்டியலில் மொத்தம் 4 மில்லியன் ஆர்டர்களுடன் சமோசா முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து பாப்கார்ன், பாவ் பாஜி, பிரஞ்சு ஃப்ரைஸ், கார்லிக் பிரட்ஸ்டிக்ஸ், ஹாட் விங்ஸ், டாக்கோ, கிளாசிக் ஸ்டஃப்டு கார்லிக் பிரட் மற்றும் மிங்கிள்ஸ் பக்கெட் ஆகியவை உள்ளன. 

    • புதிய விதிகளின்படி வேலை பார்க்கும் நேரம் 16 மணி நேரம் வரை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு
    • பழைய நடைமுறையின்படி ஊக்கக் தொகை மற்றும் சம்பளத்தை வழங்க வேண்டும் என்று கோரிக்கை

    உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகியில் பணிபுரிபவர்களுக்கு வாரம் ஒரு முறை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தற்போது ஸ்விகியின் புதிய நடைமுறையில் இது போன்ற ஊக்கத்தொகைகள் முழுவதுமாக தவிர்க்கப்படுவதாகவும், வேலை பார்க்கும் நேரம் 16 மணி நேரம் வரை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், சென்னையில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஏற்கனவே இருந்த வேலை நேரப்படி 12 மணி நேரம் வேலை பார்த்தால் வாரம் ரூ.14500 வரை கிடைக்கும். ஆனால் தற்போது 16 மணி நேரம் பார்த்தால் கூட12000 ஆயிரம் ரூபையை கூட பெற முடியாது. எங்களுக்கான பெட்ரோல் செலவு, உணவு செலவு, வாகன செலவு போக வாரம் 7 ஆயிரம் ரூபாய் மட்டுமே எங்களுக்கு கிடைக்கும். புதிய விதிகளின் படி எவ்வளவு வேலை பார்த்தாலும் குறிப்பிட்ட அளவு மட்டுமே சம்பளம் வழங்கபட உள்ளதாகவும், மேலும் பழைய நடைமுறையின்படி ஊக்க தொகை மற்றும் சம்பளத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

    சென்னையில் சுவிகி உணவு விநியோகம் செய்யும் பகுதிகள் மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட மண்டலங்களில் இந்த புதிய நடைமுறை அமலுக்கு கொண்டு வந்ததாகவும் தெரிவித்த அவர்கள், மீதமுள்ள மண்டலங்களிலும் புதிய சம்பள நடைமுறையை கொண்டு வருவார்கள் எனவும் தெரிவித்தனர். தற்போது நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய விதிமுறைகளின் படி தங்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பதாகவும் வருமானம் குறைவதாகவும் வருத்தம் தெரிவித்தனர். முன்பு வழங்கப்பட்டது போலவே வார ஊக்கத் தொகையை வழங்கும் வரை தாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தனர்.

    ×