search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்வம்"

    • ஊட்டியில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலையில் பைகாரா படகு இல்லம் மற்றும் நீர் வீழ்ச்சி ஆகியவை உள்ளன.
    • ஒரு புனித நதி என்று உள்ளூர் மக்களால் போற்றப்படுகிறது.

    ஊட்டி,

    ஊட்டியை அடுத்துள்ள பைகாரா அணையில் படகு சவாரி மேற்கொள்ளப்படுகிறது.

    இயற்கை எழில் கொஞ்சும் மலைகளின் நடுவே உள்ள இந்த அணையில் சீறிப் பாய்ந்து செல்லும் படகுகளில் ஏறிச் செல்ல சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்ற னர்.

    ஊட்டியில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலையில் பைகாரா படகு இல்லம் மற்றும் நீர் வீழ்ச்சி ஆகியவை உள்ளன. பைக்காரா பகுதிகளில் இதமான காலநிலை நிலவி வருகிறது.

    நிரம்பித் தளும்பி ரம்மியமாகக் காட்சியளிக்கும் பைக்காரா அணையில் படகு சவாரி செய்ய சுற்றுலாப்பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    முக்கூர்த்தி மலை உயரத்தில் இருந்து உருவாகும் பைகாரா நதி நீலகிரியின் மூடுபனி உயரங்களைத் துண்டித்து, பசுமையான மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளுக்குச் செல்கிறது.

    ஒரு புனித நதி என்று உள்ளூர் மக்களால் போற்றப்படுகிறது. செங்குத்தான சரிவுகளில் பயணிக்கும்போது, பைகாரா அழகான நீர்வீழ்ச்சியாக மாறுகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் நடத்தப்படும் படகு இல்லம் மூலம் பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

    இந்த ஏரி ஊட்டியில் சிறந்த படகு சவாரி வசதிகளைக் கொண்டுள்ளது. அமைதியான சூழல், வசீகரிக்கும் காட்சிகள் மற்றும் படகு சவாரி வசதிகளுடன், குடும்பத்துடன் ஒரு நாளைக் கழிக்க ஊட்டியில் பைகாரா ஏரி சரியான இடமாகும்.

    • இப்போட்டியில் 13, 15, 17 வயது என 3 பிரிவுகளின் கீழ் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது
    • 4 முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா 250 ரூபாயும் வழங்கப்பட்டது.

    கடலூர்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சைக்கிள் போட்டி கடலூரில் நடைபெற்றது. இப்போட்டியை கலெக்டர் அருண் தம்புராஜ், மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா வரவேற்றார். இப் போ ட்டியில் 13, 15, 17 வயது என 3 பிரிவுகளின் கீழ் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது.

    இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 5 ஆயிரம், இரண்டாம் பரிசாக 3 ஆயிரம், மூன்றாம் பரிசாக 2 ஆயிரம் ரூபாயும், 4 முதல் 10 இடங்களை பிடித்த வர்களுக்கு தலா 250 ரூபாயும் வழங்கப்பட்டது. மேலும் இப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழும் வழங்கப்பட்டன. இதில் ஏராள மானவர்க ள்ஆர்வ முடன் கலந்து கொண்டனர். 

    • இந்தியாவிலேயே முதல் முறையாக கோத்தகிரியில் அதிக சாகுபடி செய்து சாதனை
    • வெளி மாநிலங்களில் அதிக வரவேற்புடன் லாபமும் கொட்டுவதால் விவசாயிகள் உற்சாகம்

    அரவேணு,

    இந்தியாவிலேயே முதல் முறையாக கோத்தகிரி பகுதியில் கடந்த 2 ஆண்டுக ளுக்கு முன்பு ஐட்ரோ ஜென்யா கொய்மலர் சாகுபடி தொடங்கப்பட்டது. இது கென்யா மற்றும் ஆலந்து உள்ளிட்ட நாடுக ளில் மட்டுமே வளரும் மலர்ச்செடிகள் ஆகும். அதனை இங்கு உள்ள விவசாயிகள் சாகுபடி செய்து, கடந்த ஓராண்டாக அதிக சாகுபடியும் செய்து வெற்றி பெற்று உள்ளனர்.

    ஒரே செடியில் வெள்ளை, ஊதா, இளஞ்சி வப்பு என 3 நிறங்களில் பூக்கும் இந்த மலர்களுக்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் அதிக வரவேற்பு உள்ளது. லாபமும் கொட்டுவதால் விவசாயிகள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

    நீலகிரியில் கொரோனா பேரிடர் காலத்தில் சுப நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதால் கொய்மலர் விற்பனை கடும் வீழ்ச்சிய டைந்தது. எனவே பொருளாதார நெருக்கடியில் இருந்து வந்த விவசாயிகளில் ஒரு சிலர், பந்துபோல கொத்துக் கொத்தாக வளரும் ஐட்ரோ ஜென்யா மலர்களை சாகுபடி செய்து தற்போது நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலைக்கு மாற்று பயிராக கொய்மலர் சாகுபடி செய்யபட்டு வருகி றது. அதிலும் குறிப்பாக ஊட்டி, குன்னூர், கோத்த கிரி பகுதிகளில் பசுமை குடில் அமைத்து, இங்கு கார்னீசியன், ஜர்பரா, லில்லியம் ஆகிய கொய்மலர்கள் பயிரிடபட்டு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    பெரிய பெரிய நட்சத்திர ஓட்டல்கள், திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் அலங்காரம் செய்ய ஐட்ரோஜெனியா மலர்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த மலர் செடிகள் வளர ஏற்ற காலநிலை நீலகிரி மாவட்டத்தில் உள்ளது. எனவே இங்கு தற்போது மலர் சாகுபடி வெகுவாக அதிகரித்து வருகிறது.

    இதுகுறித்து கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த கொய்மலர் விவசாயி மேகநாதன் கூறுகையில், விவசாய நிலத்தில் பசுமைக்குடில் அமைத்து அங்கு மண்ணுக்கு பதிலாக, தேங்காய் நார் மற்றும் உரங்கள் அடங்கிய கலவை போட்டு, இறக்குமதி செய்யப்பட்ட ஐட்ரோ ஜெனியா மலர் நாற்றுகளை நடவு செய்து, உரிய முறையில் பராமரித்து வருகிறோம். அப்படி செய்து வந்தால் ஓராண்டில் பூக்கள் மலர துவங்கும். ஒரு முறை பயிரிட்டால் 20 ஆண்டுகள் வரை மலர்கள் தொடர்ந்து வளர்ந்து பலன் அளிக்கும்.

    ஆவணி மாதத்தில் சுப முகூர்த்தங்கள் அதிகம் இருப்பதால் இந்த மலர்களின் தேவை அதிகரித்து உள்ளது. ஒரு மலருக்கு 100 முதல் 150 ரூபாய் வரை கொள்முதல் விலை கிடைத்து வருகிறது. ஒரே செடியில் வெள்ளை, இளஞ்சிவப்பு, ஊதா என 3 நிறங்களில் பூக்களை வளர வைத்து பறிக்க முடியும்.

    வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் இவ்வகை மலர், 400 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆனால் இங்கு சாகுபடி யாகும் மலர்கள் மிக குறைந்த விலையில் கிடைப்பதால் கோத்தகிரி கொய்மலருக்கு வெளிநாடு களில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. மேலும் இந்த மலரை சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு கணிசமான லாபமும் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

    • பிரதான சாகுபடியாக தென்னை 18,252 ெஹக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • பழப்பயிர் சாகுபடியில், ஈடுபடும் விவசாயிகளுக்கு துறை சார்பில் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.

    உடுமலை:

    உடுமலை வட்டாரத்தில் விளைநிலங்களில் கிணறு மற்றும் போர்வெல் அமைத்து பல ஆயிரம் ெஹக்டேரில், நீண்ட கால பயிரான தென்னை மற்றும் இதர காய்கறி சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.அவ்வகையில் உடுமலை வட்டாரத்தில் பிரதான சாகுபடியாக தென்னை 18,252 ெஹக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னைக்கு அடுத்தபடியாக காய்கறி சாகுபடி பரப்பு இந்த வட்டாரத்தில் அதிகமுள்ளது.

    குறிப்பாக ஆண்டு முழுவதும் தக்காளி, கத்தரி, பச்சை மிளகாய் சாகுபடியாகிறது. மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய தக்காளி உற்பத்தியில் உடுமலை வட்டாரம் முன்னிலை வகிக்கிறது.கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 171 ெஹக்டேர் பரப்பில் தக்காளி சாகுபடிக்கு நாற்று நடவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக சின்னவெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் நடவு செய்துள்ளனர்.இவ்வாறு காய்கறி சாகுபடி ஆதிக்கம் செலுத்தி வந்த பகுதியில் தற்போது படிப்படியாக பழப்பயிர் சாகுபடி பரப்பு மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது.காய்கறி சாகுபடியில் நடவு, களையெடுத்தல், மருந்து தெளித்தல், குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை அறுவடை என தொழிலாளர்கள் தேவை அதிகமாகும்.

    சீசன் சமயங்களில் போதிய தொழிலாளர்கள் கிடைக்காமல் பல்வேறு பணிகள் பாதித்து விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர். அறுவடையின் போது விலை வீழ்ச்சி ஏற்பட்டு நஷ்டத்தை சந்திக்கின்றனர்.

    எனவே மாற்றி யோசிக்க துவங்கியுள்ள விவசாயிகள், தற்போது பழப்பயிர் சாகுபடியில் ஈடுபட துவங்கியுள்ளனர்.அவ்வகையில் உடுமலை வட்டாரத்தில் மா சாகுபடி, 690 ெஹக்டேர், மரநெல்லி 82.68, கொய்யா 31.38,சப்போட்டா 25.98, மாதுளை 2.69, எலுமிச்சை 10;48, பேரீட்சை 2.69 என 962 ெஹக்டேர் பழங்கள் உற்பத்திக்கான செடி மற்றும் மரங்கள் சாகுபடி செய்யப்பட்டு பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இச்சாகுபடி பரப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    பழப்பயிர் சாகுபடிக்கு தொழிலாளர் தேவை குறைவு. சொட்டு நீர் பாசனம் அமைத்துக்கொள்வதால் தண்ணீரை சிக்கனப்படுத்துவதுடன் எளிதாகவும் பாய்ச்சி க்கொள்ளலாம். சந்தை வாய்ப்புகளை உள்ளூரிலேயே ஏற்படுத்திக்கொடுத்தால் இன்னும் பழப்பயிர் சாகுபடி பரப்பு அதிகரிக்கும் என்றனர்.

    உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகனரம்யா கூறுகையில், பழப்பயிர் சாகுபடியில், ஈடுபடும் விவசாயிகளுக்கு துறை சார்பில் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.

    மேலும் அரசின் சிறப்புத்திட்டங்களின் கீழ் தோட்டக்கலைத்துறை நாற்றுப்பண்ணை வாயிலாக விவசாயிகளுக்கு நாற்றும் வினியோகிக்கப்பட்டு வருகிறது என்றார்.தென்னைக்கு மாற்றாக

    பழப்பயிர் சாகுபடியில் ஆர்வம் காட்டும் உடுமலை விவசாயிகள் 

    • காட்டு கருவேல மரங்களை அகற்றி மிளகாய் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • விவசாயி களுக்கு மானியம் வழங்கப் படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்தான் நாங்கள் மிளகாய் பயிர் செய்து வருகிறோம் என்றார்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வறட்சி, வானம் பார்த்த பூமி. காட்டு கருவேல மரங்கள் நிறைந்த பகுதி என்ற நிலை, இன்றளவும் இருந்து வருகிறது. இந்த நிலையில்தான் கமுதி வட்டம்.அபிராமம் பகுதியில் காட்டு கருவேல மரங்களை அகற்றிவிட்டு மிளகாய் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    கடந்த ஆண்டு போதிய மழை இல்லததால் நெல் விவசாயிகள் விரக்தியடைந் தனர். இந்த நிலையில் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் மிளகாய் பயிர் செயய்பவர்களுக்கு அதிலும் குறிப்பாக காட்டு கருவேல மரங்களை அகற்றி மிளகாய் பயிர்செய்யும் விவசாயி களுக்கு மானியம் வழங்கப் படும் என்று அறிவிக்கப் பட்டது.

    இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அபிராமம் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட் கிரா மத்தை சேர்ந்த விவசாயிகள் காட்டு கருவேல மரங்களை அகற்றிவிட்டு மிளகாய் விவசாயத்தில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர்.

    இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள விவசாயி கூறுகையில், அபிராமம் பகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாகும். முழுக்க முழுக்க வானம் பார்த்த பூமியாக இருப்பதால் விவசாய நிலங்களில் காட்டு கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது . கடந்த சில நாட்களுக்கு முன் வேளாண்மை தோட்ட கலைத்துறை மூலம் கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்யும் விவசாயி களுக்கு மானியம் வழங்கப் படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்தான் நாங்கள் மிளகாய் பயிர் செய்து வருகிறோம் என்றார்.

    • திருவாடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீலஸ்ரீசுப்ரமணிய தேசிகர் ஜீவ அதிர்ஷ்டானம் எனும் சித்தர் கோவில் உள்ளது.
    • த்தர் யார் என்பது குறித்து அறிந்து கொள்ள பக்தர்கள் ஆர்வமாக உள்ளனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் மேற்கு மாட வீதியில் திருவாடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீலஸ்ரீசுப்ரமணிய தேசிகர் ஜீவ அதிர்ஷ்டானம் எனும் சித்தர் கோவில் உள்ளது. இங்கு ஏராளமான பொரு ட்செலவில் பக்தர்களின் பங்களிப்புடன் மகா மண்டபம் அமைக்கும் பணி நடந்துவருகிறது. இதற்காக நேற்று காலை பள்ளம் தோண்டும் பணி நடந்தது. அப்போது அங்கு ஜீவசமாதி இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து பள்ளம் தோண்டும் பணியை நிறுத்திவிட்டு ஜீவசமாதிக்கு பூஜை செய்ய ஆரம்பித்தனர். இந்த செய்தி காட்டுத்தீ போல பரவியது.

    ஏராளமான சிவனடியார்கள், சிவ தொண்டர்கள் அங்கு குவிந்தனர். இங்கு சுப்ரமணிய தேசிகர் சமாதியும், அதே வளாகத்தில் திருவதிகை குமாரசாமி தம்பிரான் எனும் சடைச்சாமியார் ஜீவசமாதியும் உள்ளது. மேலும் சிவஞான தம்பிரான் சுவாமிகள், குண்டலபரதேசி சுவாமி ஆகிய சித்தர்களின் ஜீவ சமாதிகளும் இங்கு உள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு ஜீவசமாதி இருந்ததால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர். இந்த ஜீவசமாதி எந்த காலத்தை சேர்ந்தது. இங்கு ஜீவ சமாதி நிலையில் உள்ள சித்தர் யார் என்பது குறித்து அறிந்து கொள்ள பக்தர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த ஜீவசமாதிக்கு கல்வெட்டு ஆராய்ச்சி யாளர்கள், தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்ய கோவில் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளது.

    • மதுரையில் சீசனையொட்டி மாம்பழம் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.
    • கிலோ ரூ. 50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மதுரை

    முக்கனிகளில் ஒன்று மாம்பழம். தற்போது மாம்பழ சீசன் தொடங்கி யுள்ள நிலையில் மதுரையில் மாம்பழ வியாபாரம் களை கட்டியுள்ளது.

    மாம்பழ உற்பத்தியில் புகழ் பெற்றது சேலம். தற்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதையொட்டி மதுரைக்கு மாம்பழ வரத்து அதிக ரித்துள்ளது.

    பெரிய பழக்கடைகள் முதல் சாலையோர கடைகளிலும் மாம்பழம் விற்பனை செய்யப்படுகிறது. இதுமட்டுமின்றி வாகனங்க ளில் கொண்டு சென்று மக்கள் கூறும் பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

    ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை அனைத்து தரப்பு மக்களும் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். நடமாடும் வாகனங்களில் 3 கிலோ மாம்பழம் ரூ. 100க்கு விற்பனை செய்யப்படு கிறது. சாலையோர கடை களிலும் கிலோ ரூ. 50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பல ரக மாம்பழங்கள் கிடைப்பதால் அதிக சுவையான மாம்பழம் எது என்பதை அறிந்து அதனை பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை மாம்பழங்களை வாங்கி வருகின்றனர்.

    சிலர் ரசாயன கற்கள் வைத்து பழுக்க வைக்கின்ற னர். இதனால் உடல் நல பாதிப்பு ஏற்படும் என்பதால் சிலர் மாம்பழங்களை வாங்கு வதை தவிர்க்கின்றனர்.

    • போதை பொருள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பாக கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் பிரமிக்கும் வகையில் இருந்தது.
    • இந்த ஓவியங்களை ஒரு வார காலத்திற்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்க போலீசார் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் போதை பொருள் விற்பனையை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவிய போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து அனுப்பி இருந்தனர்.

    அந்த ஓவியங்கள் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவில் டதி பள்ளியில் உள்ள வகுப்பறையில் மாணவ-மாணவிகள் வரைந்து அனுப்பிய ஓவியங்கள் பொது மக்கள், மற்றும் மாணவ மாணவிகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இதனை நெல்லை சரக போலீஸ் டி.ஜ.ஜி. பிரவேஷ்குமார் திறந்து வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகரன் பிரசாத் மற்றும் போலீ சார் அந்த ஓவியங்களை பார்வையிட்டனர்.

    இன்று பள்ளி மாணவ, மாணவிகள் அந்த ஓவியங்களை நேரில் சென்று பார்வையிட்ட னர். நாகர்கோவில் நகரில் உள்ள பல்வேறு பள்ளி களில் இருந்து மாணவ-மாணவி கள் இந்த ஓவியத்தை பார்த்து சென்றனர்.

    போதை பொருள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பாக கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் பிரமிக்கும் வகையில் இருந்தது. இந்த ஓவியங்களை ஒரு வார காலத்திற்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்க போலீசார் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

    • ஒவ்வொரு வர்ணஜாலங்களில் கோலமெட்டு வருவதை அவ்வழியே செல்பவர்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
    • கோலம் போடுவதில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்து வருகிறது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ரெயில்வே சாலையை சேர்ந்தவர் கயல்விழி வினோதினி.

    இவர் மார்கழி மாதம் பிறந்த நாளிலிருந்து தினந்தோறும் வகை வகையான வண்ண வண்ண கோலங்கள் போட்டு அவ்வழியே செல்பவர்களை கவரும் வகையில் கோலமிட்டு வருகிறார்.

    மார்கழி மாதம் தொடங்கிய முதல் நாள் அதிகாலை மார்கழி மாதத்தை வரவேற்கும் விதமாக வரைந்திருந்த கோலம் அனைவரையும் கவர்ந்தது.

    இதே போல் ஒவ்வொரு நாளும் அதிகாலை வேளையில் ஒவ்வொரு வர்ணஜாலங்களில் கோலமெட்டு வருவதை அவ்வழியே செல்பவர்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

    தொடர்ந்து அதிகாலை வேளையில் கோலமிட்டு வரும் கயல்விழி வினோதினி புத்தாண்டை வரவேற்கும் விதமாக வாசலில் அழகிய கோலமிட்டு இருந்தார்.

    இதேபோல் தைப்பொங்கல் அன்று வாசல் முன்பு போட்ட கோலமும் பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்ததாக அமைந்தது.

    இந்நிலையில் மாட்டுப்பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று காலை கயல்விழி வினோதினி போட்ட கோலம் வித்யாசமாக அமைந்திருந்தது.

    பட்டுப் புடவையை தரையில் விரித்து வைத்தது போல் போடப்பட்ட கோலம் அதில் அந்தப் புடவையின் விலையையும் குறிப்பிட்டு இருப்பது அனைவரையும் கவர்ந்தது.

    இதை பார்ப்பவர்கள் கோலம் என்பதற்கு பதிலாக பட்டுப் புடவை தரையில் கிடப்பதாக எண்ணி ஏமாந்து பின்னர் தான் அது கோலம் என்று கண்டுபிடித்தனர்.

    அந்த அளவுக்கு பட்டுப் புடவை கோலம் அமைந்திருந்தது.

    இதுகுறித்து கயல்விழிவினோதினி கூறுகையில், கோலம் போடுவதில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்து வருகிறது.

    எனது கோலங்கள் அழகாக இருப்பதால் அரசு விழாக்கள் நடக்கும் இடங்களுக்கும் நான் சென்று கோலம் போட்டு வருகிறேன். தொடர்ந்து வருடத்தில் உள்ள அனைத்து நாட்களிலும் கோலம் போடுவதற்கு ஆசை தான்.

    ஆனால் விருப்பம் இருந்தாலும் அந்த முழு கலை திறனை மார்கழி மாதத்தில் மட்டுமே சிறப்பாக வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு அமைந்துள்ளது.

    இதனால் கோலங்களை ஆர்வத்துடன் வாசலில் போட்டு வருகிறேன்.

    இந்த கோலத்தை பார்ப்பவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து வாழ்த்தி விட்டுச் செல்கின்றனர். வாசலில் கோலம் போடுவது ஒரு கலையாக இருந்து வருகிறது.

    • கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள்
    • திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் நிலைய வளாகத்தில் உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடந்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் வேளாண் அறி வியல் மையம் இணைந்து திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் நிலைய வளாகத்தில் உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியை கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பல்வேறு பயிர்களில் விரும்பத்தக்க குணங்களை யுடைய பாரம்பரியமிக்க பல்வேறு உள்ளூர் ரகங்களை கண்டறிந்து ரக மேம்பாட்டுக்கான ஆய்வு களில் பயன்படுத்தினால் பகுதிகேற்ற சிறந்த ரக ங்களை உருவாக்க முடியும்.

    இதனால் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் ஆண்டுக்கு மூன்று முறை இக்கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் பல்வேறு பயிர்களில் பாரம்பரிய ரகங்களை பயிரிடும் விவசாயிகளை ஒருங்கிணைத்து அவர்களின் கருத்துக்கள் வேளாண் விஞ்ஞானிகளுக்கு எடுத்து ரைக்கப்பட்டது.

    மேலும், குமரி மாவட்ட த்தில் பல்வேறு ரக வாழை இனங்கள் கண்டறியப்பட்டு, வாழை இனங்கள் நடவு செய்யப்பட்டு பரா மரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவைகளில் பல்வேறு ரகங்களை விரிவுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

    இந்த கண்காட்சியில் விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்டுள்ள உள்ளூர் பயிர் ரகங்களும் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டது. விவசாயிகள் தாங்கள் பயிரிடும் பல்வேறு பயிர்களின் உயர்தர உள்ளூர் ரகங்களின் விளைபொருட்க ளையும், இதர விளைபொருட்களையும் காட்சிப்படுத்தினர்.

    உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களால் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களும் காட்சிப் படுத்தப்பட்டது. மேலும் வேளாண் துறையின் மூலம் வேளாண் எந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளான சுரேஷ், லதா, கவிதா, செல்வராணி ஆகியோர் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்கள்.

    இதைத் தொடர்ந்து வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் அங்கக வேளாண்மை வழிகாட்டி கையேட்டினை கலெக்டர் அரவிந்த் வெளியிட்டார்.

    நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ், வேளாண்மை இணை இயக்குனர் ஹனிஜாய் சுஜாதா, திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைவர் சொர்ணபிரியா, வேளாண்மை துணை இயக்குனர் ஆல்பர்ட் ராபின்சன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கீதா,

    தோட்டக்கலை துணை இயக்குனர் ஷீலா ஜாண், வேளாண்மை துணை இயக்குனர் ஊமைத்துரை, வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) சுந்தர் டேணியல் பாலஸ், வேளாண்மை உதவி இயக்குனர் (தோவாளை) சுரேஷ், விதைச்சான்று உதவி இயக்குனர் ஷீபா, உதவி செயற்பொறியாளர் வர்கீஸ், வேளாண்மை அலுவலர் (உழவர் பயிற்சி நிலையம்) பொன்ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதலைக்குளம் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடந்தது.
    • பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மீன்களை பிடித்தனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம், முதலைக்குளம் கிராமத்திற்கு பாத்தியப்பட்டதும், பதினெட்டாம்படி கருப்புசாமி கோவில் நிர்வாகத்தின் கீழ் 450 ஏக்கர் பரப்பளவு கொண்டதுமான கண்மாயில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் கடைசியில் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த வருடமும் முதலைக் குளம் கம்ப காமாட்சி, பதினெட்டாம்படி கருப்புசாமி கோவிலில் கிராம மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறவும், நோயின்றி வாழவும், விவசாயம் செழிக்கவும், தொழில் வளம் பெருகவும், கண்மாயில் நேர்த்தி கடனாக பலவகையான மீன்குஞ்சுகள் வாங்கி விடுவது வழக்கம்.

    அப்படி விடப்படும் மீன்களை வளர்ந்த ஒராண்டு பின்னர் ஊர் மக்கள் ஒன்று திரண்டு பிடிப்பார்கள். கோவில் பூசாரி பொன்ராம், 2 தேவர் வகையறா பங்காளிகள், கிராமமக்கள் முன்னிலையில் விவசாய பாசன கமிட்டி தலைவர் எம்பி.ராமன், மேற்பார்வையில் அதிகாலை 5 மணிக்கு கண்மாயின் கரையில் நின்று கிராம கமிட்டியினர் பட்டாசு வெடித்து வெள்ளை கொடி அசைக்க உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் கண்மாயில் இறங்கி மீன் பிடித்தனர்.

    இதில் கட்லா, ரோகு உள்ளிட்ட பல வகையான மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். இதில் பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மீன்களை பிடித்தனர். விக்கிரமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.

    • ஒருமுறை பந்தல் அமைத்தால் தொடர்ந்து, ஐந்து முதல், ஏழு ஆண்டுகள் வரைக்கும் பலன் தருகிறது.
    • ஏக்கருக்கு குறைந்தபட்சம் 20 டன் வரைக்கும் மகசூல் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    உடுமலை:

    உடுமலையில் தென்னைக்கு அடுத்தபடியாக காய்கறி விவசாயமே பிரதானமாக உள்ளது. குறிப்பாக, தக்காளி, வெங்காயம், கத்தரி மற்றும் பீட்ரூட் போன்ற காய்கறிகளே அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.கடந்த சில ஆண்டுகளாக, விளைநிலங்களில் தோட்டக்கலைத்துறை மானிய திட்டத்தின் கீழ் பந்தல் அமைத்து, சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    ஒருமுறை பந்தல் அமைத்தால் தொடர்ந்து, ஐந்து முதல், ஏழு ஆண்டுகள் வரைக்கும் பலன் தருகிறது. மகசூலும் கூடுதலாக கிடைக்கிறது. பாகற்காய், சுரைக்காய், புடலை, பீர்க்கங்காய் மற்றும் கோவைக்காய் இம்முறையில் சாகுபடி செய்யலாம். பாகற்காய் சாகுபடியில் பத்து அடி இடைவெளி விட்டு, மேட்டுப்பாத்திகள் அமைக்க வேண்டும். ஒவ்வொரு செடிக்கும் 5 அடி இடைவெளியில், ஏக்கருக்கு 4 ஆயிரம் செடிகள் வரையும் நடவு செய்யலாம்.சிறந்த பராமரிப்பு மற்றும் மழை கிடைத்தால் தொடர்ந்து, 75 முதல் 90 நாட்கள் வரைக்கும், காய்ப்பு இருக்கும். ஏக்கருக்கு குறைந்தபட்சம் 20 டன் வரைக்கும் மகசூல் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.

    ×